Untitled Document
May 9, 2024 [GMT]
அமெரிக்க நிறுவனத்தின் ராக்கெட் கீழே விழுந்து நொறுங்கியது!
[Monday 2016-01-18 16:00]

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் 'ஜேசன் 3' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை தனியாருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தின் கேப் கனவெரல் விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து 23 பிரிவுகளை கொண்ட ஒன்பது நிலைகளில் இயங்கும்

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் 'ஜேசன் 3' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை தனியாருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தின் கேப் கனவெரல் விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து 23 பிரிவுகளை கொண்ட ஒன்பது நிலைகளில் இயங்கும் "ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9" ராக்கெட் கடந்த மாதம் புறப்பட்டு சென்றது. அதில் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான 11 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன.

  

பூமியில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற அந்த ராக்கெட்டின் 156 அடி நீளம்கொண்ட முதல்நிலை உந்து இயந்திரம் (first stage rocket) ராக்கெட்டில் இருந்து கழன்று, பிரிந்து, பத்தே நிமிடங்களில் பூமியை நோக்கி பத்திரமாக திரும்பி வந்தது. இதைக்கண்ட ஆர்ப்காம் நிறுவன பொறியாளர்களும், பணியாளர்களும் உற்சாகமிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து துள்ளிக்குதித்தனர். ஆரஞ்சுநிற தீப்பந்தாக ஒளியை உமிழ்ந்தபடி பூமியை நோக்கி திரும்பிய "ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9" தானாகவே தரையிறங்கும் கால்களை விரித்தபடி, ஏவப்பட்ட இடத்தில் இருந்து தெற்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் பத்திரமாக வந்து அமர்ந்தது. இந்த நிகழ்ச்சியை மேற்கத்திய ஊடகங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லாக குறிப்பிட்டன.

அதேவகையிலான "ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9" ராக்கெட் மூலம் பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியா அருகேயுள்ள வான்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் செயற்கைக்கோளை சுமந்தபடி திட்டமிட்ட இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 'ஜேசன் 3' செயற்கைகோளை சுமந்து செல்லும் "ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9" ராக்கெட்டை பத்திரமாக கடலில் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கலிபோர்னியா கடல் பகுதியில் தயாராக நிற்க வைக்கப்பட்டிருந்த கப்பலில் அந்த ராக்கெட் திரும்பிவந்து தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு கடலுக்கு திரும்பிய அந்த ராக்கெட், கப்பலின் மீது செங்குத்தாக இறங்கியது. ஆனால், சென்ற முறையைப்போல் இல்லாமல் எதிர்பாராதவிதமாக அந்த ராக்கெட் ஒருபுறமாக சாய்ந்து, கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது.

  
   Bookmark and Share Seithy.com



ரஃபா மீது தாக்குதல்: ஜோபைடன் பகிரங்க எச்சரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

காசாவின் ரஃபாமீது , இஸ்ரேல் பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார். ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்!
[Thursday 2024-05-09 18:00]

காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது.



கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண்!
[Thursday 2024-05-09 18:00]

கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த டோனா, நேற்று முன்தினம் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.



ஐநா அழுத்தம் காரணமாக காசா பாதை திறப்பு!
[Thursday 2024-05-09 18:00]

இஸ்ரேல், காசா போரால் பாதிக்கப்பட்டு, காசா பகுதியில் சுமார் 23 லட்சம் பேர் நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கியுள்ளனர். எகிப்து மற்றும் காசா எல்லை என இரண்டு சாலைகள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.



உளவு குற்றச்சாட்டு தொடர்பில் ரஷ்ய அதிகாரியை வெளியேற்றும் பிரித்தானியா!
[Thursday 2024-05-09 06:00]

ரஷ்ய தூதரக அதிகாரியை உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானியா வெளியேற்றுகிறது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல், ரஷ்ய நலன்களுக்கு சேவை செய்ய முக்கிய தகவல்களை கசியவிடுவது உட்பட, அதன் முகவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மற்றும் உளவு பார்த்தல் போன்றவற்றை குற்றம்சாட்டி, பிரித்தானியா பல ஆண்டுகளாக ரஷ்யாவுடன் ஒரு அமைதியற்ற உறவையே கொண்டுள்ளது.



பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை பணியமர்த்த மாட்டோம்: அமெரிக்க நீதிபதிகள் திட்டவட்டம்!
[Thursday 2024-05-09 06:00]

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்ட மாணவர்களை, எழுத்தர்கள் பணிக்கு அமர வைக்கமாட்டோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்ட கன்சர்வேடிவ் பெடரல்சின் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை இடைநிறுத்திய அமெரிக்கா!
[Thursday 2024-05-09 06:00]

இஸ்ரேலின் தீவிரமான தரைப்படைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை அமெரிக்கா இடை நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் ஆனது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விடாமல் நடைபெற்று வருகிறது.



நோர்வேயில் பயங்கரம்: காரில் எரிந்த நிலையில் யாழ் தமிழரின் சடலம்!
[Wednesday 2024-05-08 18:00]

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பட்டுள்ளதாக கூற்றப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



ஹமாஸ் நிபந்தனையை ஏற்க மறுத்த இஸ்ரேல்!
[Wednesday 2024-05-08 18:00]

காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸ் விதித்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கூட்டு பிரார்த்தனை செய்துவிட்டு ரஃபா நகருக்குள் நுழைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அறிவித்திருந்தது.



அமெரிக்காவில் அதிர்ச்சி: 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை!
[Wednesday 2024-05-08 18:00]

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32). இவருடைய மகன் கெய்தன் (வயது 3).



30 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் பெண்: புலம்பெயர்தல் அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி!
[Wednesday 2024-05-08 18:00]

பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அவர். பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்னும் பெண், கர்ப்பமுற்றதால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போதும் உதவி செய்ய ஆட்கள் தேவை என்பதால் தனது உறவினர்கள் வாழும் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார்.



புடின் பதவியேற்பு நாளில் பரிசாக ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டம்!
[Wednesday 2024-05-08 06:00]

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, பாதுகாப்புப் பணியில் இருந்த இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய தாக்குதல் 2 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வரும் நிலையில், விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாகியுள்ளார்.



இஸ்ரேலில் 26 போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் கைது!
[Wednesday 2024-05-08 06:00]

இஸ்ரேல் நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் உள்ள இலாத் நகரில், போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அதிரடி நடவடிக்கையாக 26 பேரை பொலிஸார் கைது செய்தனர்.



ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்க பெண்!
[Wednesday 2024-05-08 06:00]

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக 4 பிள்ளைகள் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான்கு பிள்ளைகளும் ஒரே உருவம் கொண்டவை. இது 15 மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வு ஆகும்.



ரஃபா எல்லையை கைப்பற்றிய இஸ்ரேல்!
[Tuesday 2024-05-07 18:00]

இஸ்ரேல் - ஹமாச் போ இன்னும் முடிவுக்கு வராத நிலையில் காசா பகுதியில் உள்ள ரஃபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.



கனடாவில் பல ஆண்டுகளாக அயல் வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய பெண்!
[Tuesday 2024-05-07 18:00]

கனடாவில் தசாப்தங்களாக அயல் வீட்டவரின் மின் கட்டணத்தை செலுத்திய பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கனடிய மின் விநியோக நிறுவனமான ஹைட்ரோ நிறுவனம் மீது குறித்த பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது மின்மாணிக்கு பதிலாக மின் விநியோக நிறுவனம் அயலவர் வீட்டு பட்டியலை தமக்கு பல தசாப்தங்களாக வழங்கி வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



"ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்" - பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை!
[Tuesday 2024-05-07 18:00]

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2 வயதே ஆன அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய், 24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்துள்ளதாக புகார் எழுந்ததால் கடந்தாண்டு இறுதியில் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.



2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள்: ஏஐ பதிலால் பெரும் அதிர்ச்சி!
[Tuesday 2024-05-07 18:00]

சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க சிறுநீரை அருந்துங்கள்' என்ற கூகுள் ஏஐ இன் அறிவுரைக்கு இணையவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகாட்டல் முதல் உடல் உபாதைக்கான மருத்துவ ஆலோசனை வரை சகலத்துக்கும் கூகுளில் விடை தேடும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது.



அமெரிக்க ராணுவ வீரர் ரஷ்யாவில் கைது!
[Tuesday 2024-05-07 06:00]

தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ சார்ஜண்ட் கார்டன் (Gordon Black) பிளாக், திருட்டு பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது . பிளாக் மே 2 ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு முனையிலுள்ள விளாடிவோஸ்டாக் நகரில் பிளாக் கைது செய்யப்பட்டதாகவும், அவர் அதிகாரபூர்வ பயணத்தில் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
[Tuesday 2024-05-07 06:00]

இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா