Untitled Document
June 2, 2024 [GMT]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]


உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

  

அத்துடன் தாக்குதல் தொடர்பில் வெளிப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டபோதும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் இதன் பின்னர் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்போவதில்லை. எமது அரசங்கத்தில் அதனை நாங்கள் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்து அவை தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அரசாங்கம் அதனை ஒரு சதத்துக்கேனும் கணக்கில் எடுக்காமல், அவ்வாறான தாக்குதல் நடக்காததை போன்றே செயற்பட்டு வந்தது.

அதனால் இந்த வருட இறுதியில் மக்கள் ஆசிர்வாதத்துடன் அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதாவது விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நாங்கள் அமைப்போம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசேட விசாரணையாளர்களையும் கொண்டதாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும். வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகளை முன்னெடுத்து, ஆணைக்குழுவால் வழங்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்தி, சட்டமா அதிபர் ஊடாக குற்றவியல் வழக்குகளை தொடுத்து, இதற்காக விசேட நீதிமன்றத்தை அமைத்தும், சுயாதீன அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகம் ஒன்றையும் அமைப்போம்.

இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய, ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், சட்டத்தால் வழங்கப்படும் உயர்ந்த தண்டனையை வழங்கவும் எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் சாட்சிகளை தயாரித்த விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். முறையான விசாரணைகள் மூலம் நாங்கள் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். எந்தக் காரணத்திற்காகவும் காட்டிக்கொடுக்க மாட்டோம்.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகள் தொடர்பாகவும் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் தொடர்பாகவும் பல விடயங்கள் விசாரணைகளில் இருந்து வெளிப்பட்டுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நாங்கள் பல தடவைகள் அரசாங்கத்திடம் தெரிவித்தோம். ஆனால் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் இதன் பின்னர் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்போவதில்லை. எமது அரசாங்கத்தில் அது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மயை கண்டறிய நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷவிடம் தான் ஏமாந்ததாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு பின்னால் அரசியல் சதித்திட்டம் இருப்பதாகவே எமக்கு புலனாகிறது. அதனால் எமது அரசாங்கத்தில் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டியே ஆகுவோம். எக்காரணம் கொண்டும் கத்தோலிக்க மக்களையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும், காதினால் தலைமையிலான கத்தோலிக்க அருட்தந்தைமார்களையும் ஏமாற்றாது, எப்படியாவது உண்மையை வெளிப்படுத்தி நாட்டுக்கு நிரூபிப்பேன் என்பதை, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த எனது தந்தையின் மீது ஆணையிட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஊர்காவற்றுறையில் நீர்நிலையில் இருந்து 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!
[Sunday 2024-06-02 05:00]

யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுமிகளுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.



குருநகர் சேமக்காலையில் பெண் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை! - பட்டப்பகலில் சம்பவம். Top News
[Sunday 2024-06-02 05:00]

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் சவக்காலைக்கு அழைத்து வந்து தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிப் படுகொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



நான் தமிழ் பொது வேட்பாளருக்கு மாறானவன்! - மார் தட்டுகிறார் சிவிகே.
[Sunday 2024-06-02 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கும். என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.



குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை!- வருகிறது புதுச்சட்டம்.
[Sunday 2024-06-02 05:00]

கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐதேகவின் யோசனைக்கு விக்கி ஆதரவு! - ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பு.
[Sunday 2024-06-02 05:00]

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் சகல விதமான முயற்சிகளையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்களிப்பதற்கான பொதுமக்களின் உரிமைக்கு மதிப்பளித்து, தேர்தல்களை உரிய காலப்பகுதியில் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மானுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு?
[Sunday 2024-06-02 05:00]

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனான தொடர்பு குறித்து இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.



பௌத்த மதத்திற்கு முன்னுரிமை - ரணில் உறுதி.
[Sunday 2024-06-02 05:00]

பௌத்த மதத்திற்கு அரசியல் அமைப்பின் படி முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.



தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு மேலும் மூன்று அமைப்புகள் ஆதரவு!
[Sunday 2024-06-02 05:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.



வடக்கு மாணவர்கள் அதிகளவில் பல்கலைக்கழகத்துக்கு தகுதி!
[Sunday 2024-06-02 05:00]

இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.



தேர்தல்களை பிற்போடக் கூடாது! -சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்.
[Sunday 2024-06-02 05:00]

நாட்டின் தேசிய தேர்தல்கள் பிற்போடப்படக்கூடாது எனவும், அவை உரியகாலத்தில் ஜனநாயகமுறைப்படி நடத்தப்படவேண்டியது அவசியம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



ஆலையடிவேம்பில் வாள்வெட்டுக் குழு அடாவடி! - 7 பேர் படுகாயம்.
[Saturday 2024-06-01 17:00]

அம்பாறை - அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



யாழ். பொதுநூலக எரிப்பின் 43 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
[Saturday 2024-06-01 17:00]

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது.



உடுப்பிட்டியில் கோழிக் கடைக்காரருக்கு வாள்வெட்டு! - அதிகாலையில் சம்பவம்.
[Saturday 2024-06-01 17:00]

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மத தீவிரவாதிகளே இல்லை!
[Saturday 2024-06-01 17:00]

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி பிரசாரத்தை தொடங்கியது முன்னணி!
[Saturday 2024-06-01 17:00]

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இன்று மாலை மூன்று மணியளவில் குறித்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.



செப்டெம்பருக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
[Saturday 2024-06-01 17:00]

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.



நயினாதீவுக்கான படகுச் சேவை! - இன்று முதல் புதிய அட்டவணை!
[Saturday 2024-06-01 17:00]

நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை சந்தேக நபரை ஒட விட்டுவிட்டு தேடுகிறது பொலிஸ்!
[Saturday 2024-06-01 17:00]

தலைமன்னார் சிறுமி கொலை தொடர்பாக கைதாகி சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.



எரிபொருள் விலை குறைந்தாலும் கட்டணம் குறையாது!
[Saturday 2024-06-01 17:00]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.



தமிழரசு நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான கட்டாணை உத்தரவு நீடிப்பு!
[Saturday 2024-06-01 17:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா