திடீரென உலகம் முழுவதும் பிரபலமாகும் ‘quiet quitting’! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
May 18, 2024 [GMT]

திடீரென உலகம் முழுவதும் பிரபலமாகும் ‘quiet quitting’!
[Saturday 2022-08-20 16:00]

உலகம் முழுவதும் ‘quiet quitting’ என்னும் விடயம் பிரபலமாகி வருகிறது. தங்களுக்குத் தெரியாமலே தாங்கள் quiet quittingஐப் பின்பற்றி வருவது இப்போதுதான் தங்களுக்குப் புரிந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். உலக நாடுகள் பலவற்றில் ‘quiet quitting’ என்னும் விடயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.


  

இந்த Quiet Quitting என்றால் என்ன?

பிடிக்காத வேலையை விட்டு அமைதியாக வெளியேறிவிடுவதா?

இந்த கொரோனா பொதுமுடக்கக் காலகட்டம், வேலை குறித்த பலரது கண்ணோட்டத்தை மாற்றிவிட்டது. நான் எதற்காக வேலை செய்கிறேன், வேலை என்பது என் கொள்கைகளை விட வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததா என தங்களைத் தாங்களே கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள் மக்கள்.

பொதுமுடக்கக் காலகட்டத்தின் மீது வீட்டிலிருந்தவண்ணம் பணியாற்றிவந்த Paige West என்பவர், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கம்பியூட்டரையே பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மெல்ல, தான் quiet quittingஐ தழுவிக்கொண்டதாக தெரிவிக்கிறார்.

இந்த quiet quitting என்பது பிடிக்காத வேலையை விட்டு அமைதியாக வெளியேறுவது அல்ல, அது வேலை நேரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது போன்ற ஒரு விடயமாகும்.

உதாரணமாக சிலர் வேலையின் நடுவில் பதறிப் பதறி மதிய உணவை விழுங்குவார்கள். வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றாலும் குடும்பத்துடன் முழுமையாக நேரம் செலவிடாமல், நடு நடுவே கம்பியூட்டரிலோ அல்லது மொபைலிலோ மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆக, இந்த quiet quitting என்னவென்றால், வேலை முடிந்தால் வீட்டுக்குச் சென்று மீதமுள்ள நேரத்தை குடும்பத்துடன் நிம்மதியாக செலவிடவேண்டும், மதிய உணவைப் பதற்றமின்றி, முழு மதிய இடைவேளையையும் பயன்படுத்திக்கொண்டு உண்ணவேண்டும். நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்பை எடுத்துக்கொள்வது, குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்குகொள்வது, வேலை செய்யும் நேரத்தில் வேலை, வேலை முடிந்தபிறகு சொந்த அல்லது குடும்ப விடயங்களில் கவனம் செலுத்துவதுதான் quiet quitting.

இந்த விடயம் இப்போது பல நாடுகளில் பரவிவரும் நிலையில், சமூக ஊடகங்களில் quiet quitting குறித்த விடயங்கள் வைரலாகிவருகின்றன.

இன்னொருபக்கம், quiet quitting என்றால் என்னவென்றே தெரியாமல், தாங்கள் முன்பே அதை துவங்கிவிட்டது தெரியவந்துள்ளதால் பலர் வியப்படைந்துள்ளார்கள்.

ஆனால், இந்த விடயம் அலுவலகங்களுக்கு நல்லதல்ல, அதை ஒழித்துக்கட்டவேண்டுமென பணி வழங்குவோர் சிலர் கருதுகிறார்கள். நிபுணர்களோ, அப்படியல்ல, பணியாளர்களின் பணி எவ்வளவு முக்கியமானது, அவர்களிடமிருந்து அலுவலகம் எதை எதிர்பார்க்கிறது என்பதை சரியான விதத்தில் பணியாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்கிறார்கள்.

பணியாளர்களுக்கு எந்த வேலைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை தெரியப்படுத்துவதன் மூலம், பணியாளர்கள் மனக்களைப்பு அடையவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மீது தொடர்ச்சியாக நிறுவனங்களும் மேலாளர்களும் கவனம் செலுத்தவேண்டும் என்கிரார்கள் அவர்கள்.

மகிழ்ச்சியான பணியாளர்களால்தான் நல்ல விளைவைக் கொடுக்கமுடியும் என்கிறார்கள் அவர்கள்.

  
   Bookmark and Share Seithy.com


கடற்கரையில் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றி திரியும் சுற்றுலாப்பயணிகள்!
[Friday 2024-04-26 19:00]

விசித்திரமான முறையில் ஆடை அணிவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் நிர்வாணமாக சுற்றி திரிந்து மகிழ்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.


சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.


டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா