அழிவின் விளிம்பில் இலங்கை பழங்குடியினர்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
May 18, 2024 [GMT]

அழிவின் விளிம்பில் இலங்கை பழங்குடியினர்!
[Monday 2022-04-04 16:00]

இலங்கையின் பழங்குடியினர் என கருதப்படும் வேடர் சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் சிறு குழுக்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைமைகளை கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் நவீன நாகரிகத்தின் வருகையால் உறைவிடமாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டன. வேட்டையாடுவதற்குத் தடை, காட்டிலே தேன் எடுப்பதற்கு தடை போன்ற பல தடைகளால் வாழ்வியல் முற்றாக மாறி வருகின்றது.


  

தற்போது தமது பாரம்பரிய தொழில்களை கைவிட்டு விவசாயம், மீன்பிடி போன்று வேறு தொழில்களை நாட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஏனைய கலாச்சாரத்தை உள்ளவாங்கும் வேடர்கள் தமது கலாசாரத்தைக் கைவிட்டு ஏனையவர்களின் கலாசார விழுமியங்களை உள்வாங்க வேண்டிய தேவையேற்பட்டது.

இவ்வாறான நிலைமைகள் குறுக்கிட்ட போதும் இச் சமூகத்தவர் இன்னும் தமது மூதாதையர்கள் பின்பற்றி வந்த வழிபாட்டு முறைகள், உணவு பதனிடும் முறைகள், வாழ்வியல் சடங்குகள் என்பவற்றை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருவது சிறப்பம்சமாகும்.

வேடர்கள் ஊடக மொழியாக தமக்கேயுரித்தான வேடுவ மொழியைக் கொண்டிருந்தனர். இந்த வேடர் மொழியானது இன்று முற்றாக அழியும் நிலைக்கு வந்து விட்டது.

தமது ஊடக மொழியினை கைவிட்டு பிற மொழிகளை பேச வேண்டிய நிர்ப்பந்தம், வேறு மொழிகளை கற்க வேண்டிய நிர்ப்பந்தம், வேடுவர் எனக்கூறும் போது மற்றவர்கள் தரக்குறைவாக பேசுதல் ஆகிய காரணங்களால் அம்மொழிக்கு அந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் தமது தெய்வ வழிபாட்டு சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தும் மொழியாக வேடுவ மொழி காணப்படுகின்றது.

இலங்கை மக்கள் தொகையில் 1% க்கும் குறைவான வேடர்களே இன்று வாழ்ந்து வருகின்றனர்.

மத்திய இலங்கையின் ஹைன்னஸ்கிரிய மலைகள் முதல் தீவின் கிழக்கு கடலோர தாழ்நிலங்கள் வரை சிறிய குடியிருப்புகளில் வேடர்கள் சிதறிக் கிடக்கின்றனர்.

இலங்கையில் சிங்கள – பௌத்த மக்கள் இந்தோ ஆரியர்களாக கிமு 543 இல் இலங்கைக்கு வருவதற்கு முன்பே வேடர்கள் தீவு முழுவதும் வாழ்ந்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக வேடர்கள் சிங்கள ஆட்சியால் ஒடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இன்றும் அவர்கள் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு காட்சிப் பொருளாக பயன்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள்.

வேடர்களின் தோற்றம்

மற்ற பழங்குடி போலவே வேடர்களின் தோற்றம் பற்றி சில சான்றுகள் உள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வேடர்களின் மரபணு தொகுப்போடு 48,000 – 3,800 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பாலன்கோடா மனிதனின் எலும்புக் கூடோடு தொடர்பு படுத்துகிறார்கள்.

கொழும்பிலிருந்து 160 கி.மீ தூரத்தில் பாலன்கோடா நகரத்தின் இம்மனிதனின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரத்தின் பெயரையே வைத்துள்ளர்.

குணபாண்டில அத்தோ, கண்டிய இராச்சியத்தின் (1476-1818) அரசர்களால் வழங்கப்பட்ட சிங்களப் பட்டமான வேடர்களின் டானிகல மகா பண்டாரலகே பரம்பரையைச் சேர்ந்தவர்.

முதலில் அவர்கள் கிழக்கு இலங்கையின் டானிகல மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வாழ்ந்தனர்.

சிங்களவர்களுடன் திருமணம்

ஆனால் 1949 இல் இலங்கையில் செயற்கையாக கட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான சேனநாயக்க சமுத்திரத்தின் கட்டுமானம் இந்த வேட சமூகத்தை இடம்பெயர வைத்தது.

இடம்பெயர்ந்தவர்கள் சிங்களக் கலாச்சாரத்தில் இணைவதோடு, சிங்களவர்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.

பல சிங்கள மக்கள் வேடுவர்களை பின்தங்கியவர்களாகவும் கலாச்சார மற்றவர்களாகவும் கருதியதால், அவர்களில் பெரும்பாலோர், தங்கள் வேடர் மரபை மறைக்க தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

​​இலங்கை வேடர்கள் தற்போதைய நிலை

​​இலங்கையின் வேடர்கள் மீதான பார்வைகள் மெதுவாக மாறி வருகின்றன.

இப்போது நிலைமை மாறிவிட்டது, மக்கள் அதிகம் படித்தவர்கள், அவர்கள் வேடர்களை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

எனினும், மக்களுடன் கலந்து விட்டதால் அவர்களை தனியாக அடையாளப்படுத்த விரும்ப வில்லை. இப்படியே மெல்ல மெல்ல அழிவின் விளிம்பில் வேடர் சமூகம் உள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


கடற்கரையில் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றி திரியும் சுற்றுலாப்பயணிகள்!
[Friday 2024-04-26 19:00]

விசித்திரமான முறையில் ஆடை அணிவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் நிர்வாணமாக சுற்றி திரிந்து மகிழ்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.


சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.


டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா