13 குழந்தைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர பெற்றோர்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

13 குழந்தைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர பெற்றோர்!
[Wednesday 2018-01-17 20:00]

அமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து 95 கி.மீ. தொலைவில் உள்ள நகரம் பெர்ரிஸ். அந்த நகரத்தில் வசித்து வந்தவர்கள், டேவிட் ஆலன் டுர்பின் (வயது 57), லூயிஸ் அன்னா டுர்பின் (49).


  

இந்த தம்பதியருக்கு 2 வயதில் இருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வெளியுலகத்துக்கு வந்ததே இல்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் அந்த தம்பதியரின் 17 வயது மகள், அந்த வீட்டில் இருந்து கடந்த 14-ந் தேதி நைசாக தப்பினார். அவர் அந்த வீட்டில் கிடந்த ஒரு செல்போனை கையில் எடுத்துக்கொண்டு சென்றார். பின்னர் அந்த செல்போனின் மூலம் 911 என்ற அவசர கால அழைப்பு எண்ணை அழைத்துப் பேசினார்.

அப்போது அவர் தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் பெற்றோரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து போலீஸ் படையினர் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி, அவர்களையே உறைய வைத்தது. 12 பிள்ளைகள் ஒரு அறையில் பிணைக்கைதிகள்போல அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு படுக்கையில் சங்கிலியால் பிணைத்து கட்டப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நல்ல உடைகள் கூட வழங்கப்படாமல், அழுக்கான உடைகள் அணிந்து இருந்தனர். அவர்களில் 7 பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் நல்ல சாப்பாடு போடாமல், பட்டினி போட்டு கொடுமை செய்ததால் அவர்கள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி அடையவில்லை.

அவர்கள் அத்தனை பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். தங்களை பட்டினி போட்டதாக குழந்தைகள் வேதனையுடன் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தப்பிய 17 வயது மகள் உள்பட 6 பேர் மொரினோவேலியில் உள்ள ரிவர்சைட் பல்கலைக்கழக மருத்துவமனையிலும், மீதி 7 பேர் கொரோனா பிராந்திய மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டேவிட் ஆலன் டுர்பின், லூயிஸ் அன்னா டுர்பின் தம்பதியரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சித்ரவதை, குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தி, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெற்ற பிள்ளைகளையே பிணைக்கைதிகள் போல பெற்றோரே அடைத்து வைத்து கொடுமை செய்தது, அமெரிக்காவையே உலுக்கி உள்ளது.

சம்பவம் நடந்த வீட்டில் தனியார் பள்ளிக்கூடம் நடத்தப்படுவதாகவும், அதன் முதல்வராக டேவிட் ஆலன் டுர்பின் உள்ளதாகவும் கலிபோர்னியா மாகாண கல்வித்துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது. மேலும், டேவிட் ஆலன் டுர்பின் 2 முறை திவால் ஆனவர் என அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் நல்ல சம்பளத்துடன் என்ஜினீயராக பணியாற்றியதும் தெரியவந்து உள்ளது. எவ்வளவு காலமாக இந்த குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைக்கு ஆளாகி வந்து உள்ளனர், இதன் பின்னணிதான் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.


சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.


டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா