தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கிறதாம் கனடா ஈழம்சாவடி ! - நம்பலாமா..? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 26, 2024 [GMT]

தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கிறதாம் கனடா ஈழம்சாவடி ! - நம்பலாமா..? Top News Top News
[Friday 2016-07-29 23:00]

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி பிரமாண்டமாய் இவ்வருடமும் அமைந்த ஈழம் சாவடி பல சிறப்புக்களை கொண்டதாக இவ்வாண்டு அமைந்தது. ஈழம்சாவடி பெற்ற வருமானத்தில் ஒருபெரும் பகுதியை ??? தாயக உறவுகளின் புனர்நிர்மாணப் பணிக்காக வழங்கவுள்ளதாக ஈழம்சாவடியின் அமைப்பாளர்களான பிராம்டன் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளமை கனடியத் தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி கனடாவில் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஏனைய தமிழர்களும் தாய கஉறவுகளுக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற வேண்டுதலை மக்கள் பலரும் வெளியிட்டுள்ளனர்.


  

இவ்வாறு ஒரு தொடர் செய்தியை இன்று வெளியிடுள்ளனர். கனடா பிரம்டன் பிரதேசத்திலுள்ள ஈழம்சாவடி நிகழ்வு நடாத்துனர்கள் -

கடந்த பலவருடங்களாக ஈழம் பவலியன் என்ற பெயரால் கனடா பிரம்டன் நகரசபையின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டுவரும் இந்த ஈழம்சாவடி நிகழ்வு நடாத்துனர்கள் - தமது நிகழ்வுக்கான அனுசரணையாளா்களுக்கும் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் கூறிவரும் பல்லவி - தாயக மக்களுக்கு குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தாநிகழ்வு மூலம் தாம் தொடர்ந்து உதவி வருகிறோம் என்பதே..!! கடந்த 3 வருடமாக நடாத்தப்பட்டுவரும் ஈழம் சாவடி நகழ்வில் ஈழம் என்ற பெயரால் இவா்கள் பெற்ற இலாபத்தில் தாயகத்தில் எங்கே யாருக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்ளவிகளுக்கு இவா்களிடம் இன்றுவரை சரியான பதில் இல்லை என்பதே உண்மை..

இவா்களது நிர்வாகத்தினுள் தாயக மக்களுக்கு உதவிகள் செய்வதாக பேசப்பட்டு வந்தாலும் நிர்வாகத்திலுள்ளவா்களுக்கு கூட எங்கே எப்படிப்பட்ட உதவிகள் செய்யப்பட்டது? செய்யப்படுகிறது? எத்தனைபேர் பயனடைந்தார்கள் என்ற கேள்விகளுக்கு பதில்காணப்படாததால் அடிக்கடி நிர்வாகரீதியான குழப்பநிலை காணப்படுவதாகவும் தெரியவரகிறது.

நிகழ்வில் - பனம்பொருட்களை பார்வைக்கு வைப்பதும் - கடலினுள் குமரிக்கண்டம் தாண்டு கிடப்பதை திரையிட்டும் - வன்னியில் இராணுவம் கற்பழிப்பதாக நாடகங்களைபோட்டும் - தாயகப்பாடல்களுக்காக நடனங்களை அரங்கேற்றியும் கனடிய தமிழ் மக்களிடம் ஈழ வியாபாரம் செய்யும் இந்த ஈழவியாபாரிகளிடம் நீங்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் ஏதாவது உதவிசெய்யலாம் தானே என பலர் எழுப்பிய கேள்விகளுக்கு இவா்களிடம் இருந்துவரும் பதில் யாதெனில் - காசு அங்கை நாட்டுக்கும் போகுது என்பதே !!

சரி அங்கே எங்கே போய் அந்த பணம் யாருக்எகு என்னசெய்கிறது என கேட்டால் - அது வெளியில் சொல்லமுடியாதுதானே சொன்னால் ஆமிக்காரர்களால் பிரச்சனை வரும் தானே - கொடுக்கிறவையையும் உள்ளுக்கை போட்டு உதவி பெறுகிறவையையும் உள்ளுக்கை போட்டுவிடுவாங்கள் எல்லோ!! என எல்லாம் இரகசியம் என்கிறாா்கள்.

கடந்த 3 வருடங்களாக கனடா பிராம்டன்வாழ் மக்களுக்கு ஏதேதோ சொல்லி காலத்தை கடத்திவந்த கனடா ஈழம் பவலியன் நிகழ்வு நடாத்துனர்கள் குமரிக்கண்டம் கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டதையும் - ஈழத்து பனம்பொருட்களையும் - ஆமிக்காரன் தமிழ்பெண்களை கற்பழிப்தையும் அரங்கேற்றி காட்டுவதை இனியாவது தவிர்த்து - தாயகத்தில் அல்லலுறும் மக்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுதலையான போராளிகள் - ஊனமுற்றோர் படும் அவலவாழ்க்கைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தி ஏதாவது உதவித்திட்டங்களை செய்யமுன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலாகள் பலரது அவாவாக காணப்படுகிறது.

கனடாவிலுள்ள தமிழ் வர்த்தகப் பெருந்தகைகளே -

ஈழம் - பாதிக்ப்பபட்ட மக்கள் - போரால் பாதிக்ப்பட்ட வலுவிழந்தோர் என்ற வசனங்களை யார் பாவித்து தங்களது கதவுகளை தட்டினாலும் - நீங்கள் அள்ளிக்கொடுப்பதில் ஒரு பகுதியை தாயக மக்களுக்காகவும் கிள்ளிக்கொடுக்க உத்தரவிடுங்கள்.. செலவிடுதலை உறுதி செய்யுங்கள். காசு நாட்டுக்கும் போகுது என சொல்லி தமது காரியத்தை கச்சிதமாக நகர்த்தும் பலர் நமது சமூகத்தில் இன்று பெருகியுள்ளனர்.

கனடா ஈழம் பவலியன் - ஈழம் எனப்படும் தமிழர் தேசத்தின் பெயரால் நடாத்திவரும் நிகழ்வுக்கு பல தமிழ் வர்த்தக பிரமுகர்கள் நன்கொடைகளை மனமுவந்து கொடுத்துவருகிறார்கள். கடந்த காலங்களைப்போல் இந்தவருடமும் ஈழம்பவலியன் நிகழ்வு நடாத்துனா்கள் ஈழம்சாவடி பெற்ற வருமானத்தில் ஒருபெரும் பகுதியை தாயக உறவுகளின் புனர்நிர்மாணப் பணிக்காக வழங்கவுள்ளதாக.. கொடுக்கிறோம் அல்லது செலவு செய்கிறோம் என சொல்லி மக்களை மடையா்கள் ஆக்குகிறார்கள் என்பது புரிகிறது..

சரி அப்படி இவா்கள் கடந்தகாலங்களிலும் சரி - நிகழ் காலத்திலும் சரி ஏதாவது தாயக மக்களுக்கு உதவிகள் செய்திருந்தால் அவற்றை கனடிய தமிழ் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தவேண்டும் என்பதே இன்றையதேவை..

ஈழம்சாவடி நிகழ்வு குழுமத்தினருள் பலர்..

தாயக மக்களுக்கு ஏதாவது தமது நிகழ்வால் உதவிகள் செய்யப்படவேண்டும் என துடித்தாலும் அதிகார வரம்பில் உள்ள அரசியல் செல்வாக்குமிக்க ஒரு சிலர் அவற்றைத்தட்டிக்கழிப்பதாகவும் தமது சுயநலன்களை முதன்மைப்படுத்துவதாகவும் - காலத்தை கடத்துவதாகவும் அறியமுடிகிறது. இந்த ஈழம் சாவடி அமைப்பினரது நிர்வாகத்தினுள் உள்ள சுயநலவாதிகள் சிலர் தமது அதிகாரத்தை தவறான நோக்கங்கள் மற்றும் சுயநல தேவைகளுக்காக பயன்படுத்துவதாக தெரிகிறது. இவா்கள் பொதுநலவாதிகளாக மாற்றம் பெறவேண்டும். அல்லது நிர்வாக சுத்திகரிப்பு பொதுநல மனப்பாண்மை மிக்கவர்களால் செய்யப்படவேண்டும் என்பதே கனடாவிலுள்ள ஈழம்சாவடி நலன்விரும்பிகளது வேண்டுதலாக காணப்படுகிறது.

பிரம்டன் வாழ் - சமூக நலன் வீரும்பிகள்

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா