மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி? - நடராஜா குருபரன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 26, 2024 [GMT]

மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி? - நடராஜா குருபரன்
[Sunday 2016-02-07 21:00]

இலங்கை அரசியலில் பலமாக இருப்பதாக நினைத்த எவருமே நிலைத்திருக்கவில்லை என்பதுதான் வரலாறு தந்த பாடங்கள்... இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சி வரை ஆட்சிக்கு வருபவர்கள் அனைவரும் தமது எதேட்சாதிகாரங்கள் மூலம் ஆட்சிக் கதிரையை இறுகப் பற்றிக் கொள்ளவே விரும்பினார்கள்... ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றுப் போனதுததான் வரலாறுகளாக எம் கண்முன்னே விரிகின்றன... தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவரே 3 தசாப்தங்களை தன் பிடிக்குள் வைத்திருந்தார்... அவர் ஜனநாயக அரசியல் வழி வந்தவர் அல்ல.. விடுதலைப் போராட்ட வழியில் ஆயுதங்களால் அரசியலை நகர்த்தியவர்... அவரும் கூட தான் எதிர்பார்த்த காலத்தை விட, சென்றடைய விரும்பிய இலக்கை அடைய முன் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்டார்...


  

கடந்த சில நாட்களின் முன்பு கூட மகிந்த ராஜபக்ஸ கூறினார் 'என்னை 20 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என்றே நினைத்தேன் ஆனால் அசைத்துவிட்டார்கள்;' என்றார்.. ஆனால் அதனைக் கேட்ட பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, அதனை கிறுங்குப் பிடிக்குள் வைத்திருக்கும் தமிழரசுக் கட்சியை யாரும் அசைக்க முடியாது, 'தோட்டத்தில் கட்டியிருக்கும் வெருளிக்கும் கூட்டமைப்பு என்றால் மக்கள் கண்ணை மூடி வாக்களிப்பார்கள'; என்று தமிழரசுக் கட்சியும், அதன் உபயக்காரர்களும் நினைத்தால், மகிந்தராஜபக்ஸவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் அதள பாதாளத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயம் இல்லை என்பதனை இங்கு சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

1985களில்; 'மக்கள் என்னடா மக்கள் பு.... மக்கள்' என யாழ் நகரில் ஒரு விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்;தர் கூறினார். ஜனநாயக வழிவந்த அரசியலாயினும், ஆயுத வழி வந்த அரசியலாயினும் காலம் பூராகவும் மக்களை மாக்களாக நினைத்து அரசியல் செய்ய, விடுதலையை அடைய முனைந்த எவரும் வரலாற்றில் நின்று நிலைத்ததில்லை... அவர்கள் நிலைத்திருந்த எதாட்சாதிகார காலங்கள் மாறுபடலாம் ஆனால் நிலைத்ததில்லை....

இந்த வரலாற்றுப் பாடங்களை கற்றுக் கொள்ளாது மீண்டும் மீண்டும் தம் தலையை மோதுவது மட்டும் அல்லாது மக்களையும் அல்லவா இவர்கள் தெருவுக்கு கொண்டு வருகிறார்கள்...

இந்த பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா? ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தமிழசுக் கட்சியில் இணைந்து கொண்டு அங்கத்துவத்தை பெற்றார் என இன்று ஊடகங்களில் தகவல் வந்திருக்கிறது. அந்த அங்கத்துவப் பத்திரத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பெற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது...

இது உண்மையானால் அதிகாரத்தில், ஆணவத்தில், மமதையில் இருக்கும் போது பெரிய, சிறிய கட்சிகளை உடைத்து சின்னாபின்னமாக்கி தனது கூட்டுக்குள் அக்கட்சிகளின் உறுப்பினர்களை உதிரிகளாக இணைத்த மகிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. அவர் சிங்களம் பேசும் தலைவர் சிங்களக் கட்சியின் தலைவர். இவர்கள் தமிழ பேசுபவர்கள் மொழி மட்டுமே மாறுபடுகிறது..

மகிந்த தனது ஆட்சிக் காலத்தில் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி, கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்தார்.. தன்னோடு இணைந்து இருந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சலுகைகளை கொடுத்து தலமைக்கு தெரியாமல் தன்னோடு இணைத்திருந்தார். இதனால் மலையகக் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், தெற்கின் பெரும்பான்மையினக் கட்சிகள், பிரதான எதிர் கட்சியாக இருந்த ஐக்கியதேசியக் கட்சி என அனைத்து கட்சிகளும் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியிருந்தன..

ஆனால் அதிகாரமும் பலமும் அறுந்து போனால் ஒட்டுண்ணி கழருவதைப் போல் எல்லோரும் கழன்று சென்றுவிடுவார்கள் என்பதனை மகிந்த இப்போது உணர்ந்திருப்பார். பல்வேறு போட்டிகள், எதிர்ப்புகளை தாண்டி ஒரு கட்சி தனது வேட்பாளராக ஒருவரை நியமிக்கும் போது, சரி பிழைகளுக்கு அப்பால், அந்தக் கட்சி அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து, தனது சுயலாபத்திற்காகவும், நலனுக்காகவும், இன்னொரு கட்சிக்கு தாவுகின்ற ஒருவர், அதே நலன் பாதிக்கப்படும் போது அடைக்கலம் கொடுத்தவரையும் கட்சியையும் நடுத்தெருவில் விட்டு தனது நலனை அடையவே முற்படுவார் என்பதனை மகிந்த தற்போது உணர்ந்திருப்பார்...

அது போலத்தான், மகிந்தவின் மமதை போல், தமிழரசுக் கட்சியும் செயற்பட்டு, தன்னோடு இருக்கும் சிறு கட்சிகளையும், விழுங்க முற்பட்டால் தானும் விரைவில் ஏனையவர்களால் விழுங்கப்படும் என்பதனை உணரும் காலம் தொலைவில் இல்லை....

மாறாக தமிழ் மக்களிற்கான நியாயமான தீர்வை நோக்கிய பயணத்தில், தன்னோடு இருக்கும் சிறு கட்சிகளையும் அனுசரித்து, சொந்த நலன்களை புறந்தள்ளி, மக்கள் நலனை முன்நிறுத்தி, அனைவரையும் அரவணைத்துச் சென்றால், தமிழரசுக் கட்சியும் வரலாறு முழுவதும் தொடரும்... இல்லையேல் மகிந்தவின் சாம்ராட்ஜியமும், ஏனையோர்களின் சாம்ராட்ஜியங்களும் கண்முன்னே வீழ்ந்தது போல் தமிழரசுக் கட்சியின் எதேட்சாதிகாரமும் வீழும் காலம் தொலைவில் இல்லை..

நன்றி - குரு

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா