Untitled Document
May 20, 2024 [GMT]
கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் கல்லால் அடித்துக் கொலை: - ஏமனில் சம்பவம்
[Tuesday 2016-01-05 08:00]

ஏமனில் தென் மேற்கு பகுதியில் உள்ள ஹட்ராமாவ்ட் மாகாணம் அல்கொய்தா தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர்கள் அன்சர் அல்


ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே குண்டுத் தாக்குதல்: 30 பேர் காயம்
[Tuesday 2016-01-05 08:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தொழில்நுட்ப ஒப்பந்தகாரர்களின் குடியிருப்பு வளாகத்தில் நேற்று குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். குறித்த பகுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்த டிரக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
[Tuesday 2016-01-05 08:00]

சவுதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவின் தலைவர் நிமர் அல் நிமர் உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது ஷியா பிரிவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் காடிப் மாவட்டத்துக்கு உட்பட்ட அவமியா நகரில் நேற்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.


செல்ஃபீ மோகம்: பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட 'திருடன்'
[Tuesday 2016-01-05 08:00]

திருடப்போன இடத்தில் செல்ஃபீ எடுத்து சந்தேக நபர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார் என அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர். சென்ற வாரத்தில் காரொன்றையும் நான்கு பேரிடம் இருந்து பொருட்களையும் திருடியதாக 18 வயது அல்மான்ஸா மார்ட்டினெஸ் மற்றும் வேறு இரண்டு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தான் திருடிய காரை ஒட்டிச் செல்வதற்கு முன்பாக, திருடு கொடுத்த பெண் ஒருவருடன் அல்மான்ஸா தகவல் பரிமாறிக்கொண்டதுடன், அவருடன் சேர்ந்து செல்ஃபீ புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் எடுத்த செல்ஃபீயை வைத்து, அல்மன்ஸாவை தேடிக் கண்டுபிடித்ததோடு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்தது, ஆளைக் கடத்தியது போன்ற குற்றஞ்சாட்டுகளை பொலிசார் அவர் மீது சுமத்தியுள்ளனர்.


மலேஷியாவின் புத்ரஜாயாவில் நடைபெற்ற மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் 2015 அழகுராணி போட்டி:
[Monday 2016-01-04 20:00]

மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் 2015 அழகுராணி போட்டிகளின் இறுதிச்சுற்று மலேஷியாவின் புத்ரஜாயாவில் டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்றது. சுமார் 60 நாடுகளின் அழகுராணிகள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இலங்கையின் சார்பில் ஷெய்லின் சாமுவெல் கலந்துகொண்டார். இப்போட்டிகளில் பிலிப்பைன்ஸை சேர்ந்த லெரென் மாயி பௌட்டிஸ்டா, மிஸ் டுவரிஸம் குயின் ஒவ் த இயர் இன்டர்நெஷனல் விருதை வென்றார். மிஸ் டுவரிஸம் மெட்ரோபொலிட்டன் இன்டர்நெஷனல் விருதை உகண்டா அழகுராணியும் மிஸ் டுவரிஸம் குளோபல் இன்டர்நெஷனல் விருதை லித்துவேனிய அழகுராணியும் வென்றனர். மிஸ் டுவரிஸம் கொஸ்மோபொலிட்டன் இன்டர்நெஷனல் விருதை ஐஸ்லாந்து அழகுராணி வென்றார். வருடத்தின் கனவு யுவதி விருது இந்திய அழகுராணிக்கு வழங்கப்பட்டது.


இஸ்ரேல் ஹெப்ரோனுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ இராணுவ வீரர் காயம்!
[Monday 2016-01-04 17:00]

இஸ்ரேலிய இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் மேற்குக் கரை நகரமான ஹெப்ரோனுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களைத் தேடிவருவதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


சிரிய பிரச்சனை தீர்வுக்கு அரசியல் பேச்சுவார்த்தை அவசியம்: சீன வெளிவிவகார அமைச்சகம்
[Monday 2016-01-04 17:00]

சிரியாவின் மோதல் நிலை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமும் அமைதியான முறையிலும் தீர்க்கப்பட வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இத்தகவலை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுயிங், இன்று நடைபெற்ற தினசரி செய்தி மாநாட்டின் போது தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வாரம் சிரியாவின் எதிர்க்கட்சியான சிரிய தேசிய கூட்டணியின் தலைவர் சீனாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது நாளை செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


2015 ஆம் ஆண்டில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கியூபாவிற்கு விஜயம்!
[Monday 2016-01-04 17:00]

அமெரிக்கா


மியன்மாரில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும்: - ஆன் சான் சூகி
[Monday 2016-01-04 17:00]

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவி ஆன் சான் சூ கி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிடம் இருந்து மியன்மார் சுதந்திரம் பெற்று 68 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை முன்னிட்டு இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆன்சான் சூகி இவ்வாறு தெரிவித்தார். மியன்மாரில் சிறுபான்மை கொரில்லா குழுக்கள் தன்னாட்சி அரசு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து பல தசாப்தங்களாக போராடி வருகின்றன.


எகிப்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல்: - 26 தீவிரவாதிகள் பலி
[Monday 2016-01-04 13:00]

எகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல்


ஐ.எஸ்.தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட 5 உளவாளிகள்: - வீடியோ மூலம் இங்கிலாந்துக்கு மிரட்டல்!
[Monday 2016-01-04 12:00]

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தங்களிடம் பிடிபடும் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வீடியோ மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். சிறிது காலமாக கொலை வீடியோ வெளியிடாமல் இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். அதில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சர்வதேச படைகளுக்கு உதவும் 5 உளவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து ரமாடி நகரின் 80 சதவீதமான பகுதிகளை மீட்ட ஈராக் படையினர்!
[Monday 2016-01-04 11:00]
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் ரமாடி நகரின் 80 சதவீதமான பகுதிகளை ஈராக் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக அன்பர் மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரி மேஜர் ஜெனரல் Hadi al-Rzayej நேற்று உத்தியோக பூர்வமாக தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றி ரமாடி நகரை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரும் முயற்சியில் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து: - 4 பெண்கள் உட்பட 14 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!
[Monday 2016-01-04 08:00]

பாகிஸ்தானில் பெஷாவரைச் சேர்ந்தவர்கள் தேரா இஸ்மாயில்கானில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கந்தாகுர்ரம் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வாகனம் எதிரே வந்த ஒரு வேன்மீது பயங்கரமாக மோதியது. அதில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இந்த விபத்து காரணமாக மோதிய 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 14 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.


ஆப்கானில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
[Monday 2016-01-04 07:00]

ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷரீஃப் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் மீது, ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, எந்த பயங்கரவாத இயக்கமும் இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து இந்திய துணைத் தூதரக அதிகாரி பி.சர்கார், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தொலைபேசியில் கூறுகையில், ""நாங்கள் தாக்கப்படுகிறோம். தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், தூதரகத்தில் உள்ள மூன்று அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம்'' என்று தெரிவித்தார்.


சவுதி தூதரகம் தாக்குதல்: - இரானுடனான ராஜீய உறவுகளை முறித்துக் கொண்ட சவுதி அரேபியா
[Monday 2016-01-04 07:00]

ஷியா சிறுபான்மை இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்தன. கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டதை சவுதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப்படுத்தியுள்ளார்.


மெக்சிகோவில் புத்தாண்டில் பதவி ஏற்ற பெண் மேயர் சரமாரியாக சுட்டுக்கொலை!
[Sunday 2016-01-03 23:00]

மெக்சிகோ நாட்டில் பதவி ஏற்று ஒரு நாள் முடிவடைவதற்குள் மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் டெமிக்ஸ்கோ என்ற நகர் அமைந்துள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மேயராக Gisela Mota என்ற பெண்மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மெக்சிகோ நாட்டின் ஜனநாயகப் புரட்சி கட்சியை சேர்ந்த அவர் கடந்த புத்தாண்டு தினத்தில் நடந்த கோலாகலமான விழாவில் நகர மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், இதே நகரில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நேற்று மர்ம நபர்கள் 5 பேர் துப்பாக்கிகள் ஏந்தியவாறு காரில் வந்துள்ளனர்.


ஹாங்காங்வில் காணாமல்போன புத்தக விற்பனையாளர் சீனாவின் தடுப்புக்காவலில்!
[Sunday 2016-01-03 22:00]

சீன அரசாங்கத்தை விமர்சிக்கின்ற விதத்திலான புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது ஹாங்காங்கில் பல நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவர், சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. ஹாங்காங் எல்லையில் உள்ள ஷென்சென் நகருக்குரிய தொலைபேசி இலக்கம் ஒன்றிலிருந்து லீ போ என்ற அந்த புத்தக விற்பனையாளர், தன்னுடன் பேசியதாக அவரது மனைவி கூறியுள்ளார். விசாரணை ஒன்றில் உதவிக்கொண்டிருப்பதாக அவர் தன்னிடம் கூறியதாகவும் லீ போ-வின் மனைவி கூறியுள்ளார். கோஸ்வே பே புக்ஸ்டோர் நிறுவனத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கடந்த இரண்டு மாதங்களில் காணாமல்போயுள்ளனர். சீன அரசாங்கத்தை விமர்சிக்கின்ற விதத்திலான புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த விவகாரத்தால், ஹாங்காங்கின் சட்டரீதியான சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாக அச்சங்கள் எழுந்துள்ளன.


மதகுரு கொலை எதிரொலி: இரானிய சவுதி தூதரகத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல்
[Sunday 2016-01-03 22:00]

சவுதி அரசுக்கு எதிராக இரானில் போராட்டம் அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர். எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது. ஆனால் சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, அவர்களை கடுமையாக விமர்சித்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் என ஷேக் நிம்ரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்: - 12 பயிற்சி போலீசார் பலி!
[Sunday 2016-01-03 19:00]

ஈராக்கில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மோசூல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள நினெவெஹ்-வை சேர்ந்த பாதுகாப்பு படையினர் ஸ்பெய்ச்சர் ராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திக்ரிட் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நினெவெ போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 7 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும் தீவிரவாதிகளில் 3 பேர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 12 போலீசார் கொல்லப்பட்டனர். அதில் 3 பேர் உயர் அதிகாரிகள். நடு இரவில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 20 போலீசார் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல்! - புடின் கவலை தெரிவிப்பு
[Sunday 2016-01-03 19:00]

தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தல்களில் அமெரிக்காவும் ஒன்று என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் பற்றிய புதிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையொப்பமிட்டுள்ளார். அந்த ஆவணத்தில், உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ரஷ்யா தனது நிலையை உயர்த்துக்கொள்ள பார்க்கிறது. எனினும் மேற்கத்திய நாடுகளுக்கு இது எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக விவகாரங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் எதிர்தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யா மீது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அழுத்தம் தருவதற்கு இது வழிவகுக்கும் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துபாய் தீ விபத்தில் செல்பி எடுத்த தம்பதிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
[Sunday 2016-01-03 09:00]

துபாய் விடுதியில் நடந்த தீ விபத்தின்போது, அதன்பின்னணியில் செல்பீ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தம்பதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கோபுரம் அருகிலுள்ள 63 மாடி கொண்ட டவுன் டவன் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. பட்டாசு வெடித்ததில், ஓட்டலின் 20வது மாடியில் திடீரென தீப்பிடித்து, மற்ற மாடிகளுக்கும் பரவியது. இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் 16 பேருக்கு காயமேற்பட்டது. இந்நிலையில், தீ விபத்து நடந்த ஓட்டலின் அருகிலுள்ள மாடியிலிருந்து ஒரு தம்பதியினர் செல்பீ எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்தனர்.


ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக்கி 17 வயது மாணவி கொலை !
[Saturday 2016-01-02 22:00]

சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சாம்ரா கேசினோவிக் என்பவர் இணைந்தார். அவர் அதில் சேர்ந்த சில மாதங்களிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்த போது ஆஸ்திரியா மாணவியை புதிதாக இயக்கத்தில் சேரும் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக பயன்படுத்தி வந்ததும், அங்கிருந்து தப்ப முயன்றதால் மாணவியை தீவிரவாதிகள் சுத்தியலால் தாக்கி கொன்றுவிட்டதாகவும் தெரிய வந்தது. இதேபோல் துனிசிய நாட்டுப் பெண்ணும் செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்டு வந்தார். அவரும் ஆஸ்திரிய மாணவியும் ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆஸ்திரியா மாணவி கொலை செய்யப்பட்ட தகவலை துனிசிய பெண்தான் தப்பி வந்து வெளியிட்டதாக


சீனாவில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது!
[Saturday 2016-01-02 22:00]

சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


சீன இராணுவத்தில் மூன்று புதிய பிரிவுகள்!
[Saturday 2016-01-02 21:00]

சீன ஆயுதப் படையில் மூன்று புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் ஆயுதப் படையை ஒருங்கிணைத்து நவீனமயப்படுத்தும் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக மூன்று புதிய இராணுவ பிரிவுகளை அந்நாடு அமைத்துள்ளது. சீனாவின் அணு ஆயுதக்கிடங்கை கட்டுபடுத்தும் ஒரு ஏவுகணை கட்டளை பிரிவு, தந்திரோபயமாக உதவிப் படைப்பிரிவு மற்றும் புதிய இராணுவ ஜெனரல் பிரிவு ஆகியவை இந்த புதிய பிரிவுகளில் அடங்கும்.


கனடாவில் இரண்டு நாய்களினால் கடிக்கப்பட்டு கையை இழக்கும் அபாய நிலையில் வயோதிபர்!
[Saturday 2016-01-02 21:00]

கனடாவிலள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த மனிதரொருவர் அறிமுகமற்ற ஒருவரின் நாய்களினால் தனது வீட்டிற்குள்ளேயே பலமாக கடித்து தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற இச்சம்பவத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு கை ஒன்றை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்மன்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 66வயதுடைய றொபின் எல்ஜி தனது இடது கையை இழக்கும் அபாய நிலையில் உள்ளார். கையில் மட்டுமன்றி இவரது கழுத்து கால்கள் மற்றும் வயிற்றிலும் நாய் கடித்துள்ளது. இவர்களது பூனையை துரத்திக் கொண்டு இரு நாய்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளன. நுழைந்த நாய்கள் பூனையை கொன்று விட்டு எல்ஜியின் மனைவி பாக்கரை தாக்கியுள்ளன. அவரையும் கடுமையாக கடித்தும் உள்ளன.


சீனா ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Saturday 2016-01-02 16:00]

சீனாவின் வடகிழக்கு பிரதேசமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் (சற்று முன்னர்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்கடர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 580 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, பூமத்திய கோட்டின் வடக்கே 44.81 பாகையிலும், கிழக்கே 129.95 பாகையிலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் குறித்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


பிரபல சியா மதகுருவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய சவுதி அரசு !
[Saturday 2016-01-02 16:00]

பிரபல சியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாத குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் இவரும் அடங்குவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி முடியாட்சியை விமர்சித்ததை அடுத்து 2012இல் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் எந்தவிதமான வன்செயல்களிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அவரது கைதை அடுத்து அந்த நாட்டின் சியா சிறுபான்மையினர் மத்தியில் போராட்டங்கள் வெடித்தன.


பாகிஸ்தானில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை!
[Saturday 2016-01-02 10:00]

பாகிஸ்தானில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். தீவிரவாதம், பாரட் லேன் மசூதியில் தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ் தலைமையகம் அமைந்துள்ள முல்தானில் தாக்குதல், சட்ட அமலாக்க முகமைகளின் மீது தாக்குதல், லாகூரில் மக்களை கடத்தி கொலை செய்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா