Untitled Document
May 18, 2024 [GMT]
வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் கடமையேற்பு! Top News
[Monday 2023-05-22 18:00]

வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


"ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை" - அகம் மனிதாபிமான வளநிலைய தலைவர் கண்டுமணி லவகுகராசா! Top News
[Monday 2023-05-22 18:00]

கடந்த 70 வருடமாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு அரசியல் தீர்வு இன்று வரை எட்டாக்கனியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்களுக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மீளப் பெறமுடியாத ஒரு சமஷ;டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை என அகம் மனிதாபிமான வளநிலைய தலைவர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார்.


தமிழின அழிப்பின் உச்சநாள் மே18 நினைவேந்தல் நிகழ்வு – ஸ்ருட்காட் யேர்மனி! Top News
[Sunday 2023-05-21 17:00]

சிறிலங்கா இனவாத அரசினால் கொத்துக்கொத்தாகத் தமிழினம் இனவழிப்புச் செய்யப்பட்ட மே 18 நாளை நினைவு கூர்ந்து யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உபஅமைப்புகளால் மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண ரீதியிலான கறுவா பயிற்சி பட்டறை! Top News
[Sunday 2023-05-21 17:00]

இன்றையதினம் காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்றது.


கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு! Top News
[Friday 2023-05-19 18:00]

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு!


கல்லடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Friday 2023-05-19 18:00]

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை, மட்டக்களப்பு, கல்லடியில் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி மாணவர்களின் பங்கேற்புடன் இன்று முன்னெடுக்கப்பட்டது.


கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2023-05-19 18:00]

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2023-05-19 18:00]

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பமானது.


வட்டுக்கோட்டையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Friday 2023-05-19 18:00]

இன்று மாலை வட்டுக்கோட்டை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போது நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி! Top News
[Thursday 2023-05-18 18:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று [18-05-2023] தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.


முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் பல பகுதிகிலும் இடம்பெற்று வருகின்றது! Top News
[Thursday 2023-05-18 06:00]

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் பல பகுதிகிலும் இடம்பெற்று வருகின்றது. வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் டிப்புா சந்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.


தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Top News
[Thursday 2023-05-18 06:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.


யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி! Top News
[Thursday 2023-05-18 06:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைதூபியல் 16-05-2023 அன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்திய ஊர்திப் பவனி! Top News
[Thursday 2023-05-18 06:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவை சுமந்த ஊர்திப்பவனி 16-05-2023 அன்று காலை யாழ். உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியை சென்றடைந்தது. அங்கு சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் நான்காம் நாளான இன்று கிளிநொச்சியிலிருந்து ஆரம்பம்! Top News
[Monday 2023-05-15 20:00]

தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் நான்காம் நாளான இன்று கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் வவுனியா, மன்னால், மல்லாவி ஊடாக பயணித்து மூன்றாம் நாளான நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது.


யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Top News
[Monday 2023-05-15 20:00]

யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று மதியம் 1:30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டது.


யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி! Top News
[Monday 2023-05-15 20:00]

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைதூபியல் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.


குமுதினி படுகொலையின் 38வது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Monday 2023-05-15 20:00]

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவில் இடம்பெற்றது. குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது.


இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கரையோர கரப்பதந்தாட்ட போட்டியில் அம்பன் பிங் பொங் வெற்றியீட்டியது! Top News
[Monday 2023-05-15 20:00]

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப் போட்டி இடம் பெற்றது.


குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு! Top News
[Sunday 2023-05-14 19:00]

இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால், மனித படுகொலை இடம்பெற்ற யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது.


பொத்துவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Sunday 2023-05-14 19:00]

வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது இன்று பிற்பகல் 2 மணியளவில் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றது. பொத்துவில் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று வழங்கப்பட்டது.


அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுப்பு! Top News
[Sunday 2023-05-14 18:00]

வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், மே 18 இனப்படுகொலையினை அடுத்த சந்ததிக்கு நினைவூட்டுமுகமாக, இறுதியுத்தத்தில் பொதுமக்களின் பசியாற்றிய முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை 9 மணியளவில் அம்பாறை திருக்கோயில் பிரதான சந்தைவளாகத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.


முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்! Top News
[Sunday 2023-05-14 18:00]

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Sunday 2023-05-14 08:00]

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Top News
[Sunday 2023-05-14 08:00]

நேற்றைய தினம் யாழ்ப்பாணம், முலவைச் சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் வட்டார அமைப்பாளர் இரத்தினம் சதீஸ் வழங்கப்பட்டது தலையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு! Top News
[Friday 2023-05-12 19:00]

தமிழினப் படுகொலையை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் ஆரம்பமானது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தலையும், அஞ்சலியும் செலுத்தினர்.


சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது! Top News
[Friday 2023-05-12 19:00]

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.


யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Friday 2023-05-12 19:00]

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா