Untitled Document
May 22, 2024 [GMT]
சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு நீக்கும் குங்குமப் பூ..!
[Tuesday 2016-03-01 07:00]

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.


உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!
[Monday 2016-02-29 22:00]

வெள்ளரிக்காய் - 1, இஞ்சி - சிறிதளவு, கற்றாழை - 3-4 துண்டுகள், இந்துப்பு - தேவையான அளவு. செய்முறை:- வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம். பலன்கள்: வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும்.


பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட
[Friday 2016-02-26 20:00]

உலகில் பல மில்லியன் உறுப்பினர்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய சமூக வலைதளம் பேஸ்புக்.. பேஸ்புக் போஸ்ட்களுக்கு like செய்து பழகியிருப்பீர்கள், அதே போல, Dislike பட்டன் தேவை என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. பேஸ்புக் தளத்தில் பதியப்படும் அனைத்து போஸ்ட்களுக்கும்


தோலின் உயிரணுக்கள் மூலம் மூளைப்புற்று நோயை குணப்படுத்தும் முறை கண்டுபிடிப்பு!
[Friday 2016-02-26 14:00]

மனிதத் தோலில் உள்ள உயிரணுக்களை (செல்களை) குருத்தணுக்களாக மாற்றி மனிதர்களின் மூளையில் உருவாகும் கிலியோபிளாஸ்டோமா என்ற புற்றுக்கட்டியை குணப்படுத்தும் நவீனவகை மருத்துவத்தை அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கிலியோபிளாஸ்டோமா என்ற மூளைப் புற்றுக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலானதாக கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே உண்டு. மீதி நோயாளிகள் சிகிச்சை தொடங்கிய இரண்டு ஆண்டுகள்கூட உயிர் வாழ்வது கடினம் என்ற நிலைதான் நீடித்து வருகிறது.


மினரல் வாட்டர் தயாரிக்க செப்பு - பாத்திரங்களை பாவிக்கலாம்!
[Thursday 2016-02-25 12:00]

போத்தல் தண்ணீர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக் கணக்கான ரூபாய்கள் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார் எனும் நபர். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவா்கள், செம்புப் பாத்திரத்துல தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடாத்தினார்கள். அதனது முடிவுப்படி, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. இந்தத் தகவல் அறியப்பட்டதிலிருந்து செம்புக் குடத்துல வைத்துதான் தண்ணீரைக் குடிக்கிறோம்.


திருமணமாகாத பெண்கள் ஏன் சிவலிங்கத்தை வழிபடக் கூடாது ?
[Thursday 2016-02-25 07:00]

சிவலிங்கத்தை ஆண்கள் மட்டுமே பூஜிக்க வேண்டும் என்றும் பெண்கள் பூஜிக்க கூடாது என்றும் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் அதிலும் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் சிவலிங்கத்தின் அருகே செல்லவே கூடாது என்றும், அதனை பூஜிக்க கூடாது எனவும் கூறப்படுகிறது. சிவலிங்கம் என்பது சிவன் தியானம் செய்யும் நிலை என்று கருதப்படுவதாலும், அந்த நிலையில், சிவன் தூய்மையான நிலையில் தியானத்தில் இருப்பதாலும், சிவலிங்கத்தை பெண்கள் அருகே சென்றோ அல்லது கைகளால் தொட்டோ பூஜிக்க கூடாது. சிவன் தியானத்தில் இருக்கும் போது மற்ற ஆண், பெண் கடவுள்கள் கூட அவரை தொந்தரவு செய்ய தயங்குவார்கள்.


ஆண், பெண் மத்தியில் வேறுபடும் மாரடைப்பு அறிகுறிகள்!
[Thursday 2016-02-25 07:00]

ஆண், பெண் உடற்கூறு ஹார்மோன் மாற்றங்களினால், இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றின் அறிகுறிகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன என சிகாகோவின் ரஷ் மருத்துவ மையத்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, அதிகப்படியான நெஞ்சு வலி மற்றும் கழுத்து, தோள்பட்டை வலி போன்றவை தான் ஆரம்பக் கால இதய நோய் அறிகுறிகளாக தோன்றும். பெண்களின் சில சுழற்சி முறை ஹார்மோன்களின் காரணங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றால், இதய நோய் அறிகுறிகள் குறித்து பெண்கள் தெளிவற்று போகின்றனர் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனால் இதய நோய் இருக்கிறதா என தெரியும் முன்னரே சிலர் உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் அச்சம் தெரிவிகின்றனர்


திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
[Wednesday 2016-02-24 18:00]

ஒவ்வொருவருக்கும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதில் எவ்வளவு நாள் வாழப் போகிறோம் என்பதாகட்டும், தொழிலாகட்டும், திருமணமாகட்டும் அனைவரும் அதை தெரிந்து கொள்ள விரும்புவோம். குறிப்பாக அதில் பெரும்பாலானோர் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இம்மாதிரியான விஷயங்களை நம்முடைய ஜாதகம், கைரேகை போன்றவை சொல்லும். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை உங்கள் திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி உங்கள் கையில் உள்ள திருமண ரேகை என்ன சொல்கிறது என்று கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


பாம்பு கடித்தவர்கள் பலர் இறக்காமலேயே சாகடிக்கப்பட்டுவிடுவர்! - கடைசி முயற்ச்சி என்ன?
[Tuesday 2016-02-23 19:00]

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும். கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள


இந்தியாவில் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு! 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்!
[Tuesday 2016-02-23 13:00]

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒருமுறை போட்டுக் கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால், குளுக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம்.இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம்.


சுவாசத்தை அறியும் புதிய சாதனம்
[Tuesday 2016-02-23 09:00]

காரணமறியாத பதற்றம், இதய படபடப்பு போன்ற பலவற்றை நல்ல சுவாசத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம். அந்தவகையில் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை நன்கு சுவாசித்தோம், நல்ல நிலையில் உட்கார்ந்திருந்தோம் என்பதை அறிவிக்கும் வகையிலான புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அதிகம் சொக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்: - ஆய்வில் தகவல்
[Tuesday 2016-02-23 08:00]

அதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் பல்கலைக்கழகம், லக்ஸம்பர்க் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டன.இதுகுறித்து "அப்படைட்' அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில், ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது:சாக்லெட் சாப்பிடுவதால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தவை!
[Monday 2016-02-22 10:00]

சிறுதானியம் (Millet) என்பது வரகு, சாமை, தினை, குதிரை வாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும். சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் தினைக்களத்தில் சந்தித்ததை வள்ளி திருமண கதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைத் தகவல்கள் வாயிலாக சிறுதானியம் என்பது பாரம்பரிய உணவு என நிறுவயியலும். பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சுழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.


கரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்!
[Monday 2016-02-22 07:00]

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?


மங்குஸ்தான் பழத்திலும் புற்று நோய் எதிர்ப்பு சக்தி உண்டு
[Saturday 2016-02-20 09:00]

மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன் படுத்தி வந்தனர். சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.


அப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்!
[Saturday 2016-02-20 00:00]

ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம் என கூறியுள்ளனர் சுகாதார நிபுணர்கள்!.

1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3. நெல்லிக்காய் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.


நீரிழிவு, தோல் நோய், இரத்த சோகை வராமல் தடுக்கும் சக்கி கொண்டது பீர்க்கங்காய்!
[Friday 2016-02-19 07:00]

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.


கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பை மெருகேற்ற ஆண்களுக்கான உணவு வகை!
[Thursday 2016-02-18 07:00]

பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. seithy.com உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது.


எலுமிச்சையின் ஏழு வகைப் பயன்கள் பற்றி தெரிவோம்!
[Tuesday 2016-02-16 07:00]

1. வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

2.பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன் டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டி பாக்டீரியலாகவும் இருப்பதால், தோல் நோய்களை அண்ட விடாது.

3. காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி. எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.


இன்று காதலர் தினம்! அப்படி என்றால் என்ன?
[Sunday 2016-02-14 20:00]

காதலர் தினம் என்றால் என்ன? கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது

இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.


நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என சொல்வது ஏன் ?
[Saturday 2016-02-13 20:00]

நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம். 100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன. மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும். நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.


எதற்காக நாம் நிம்மதியாக தூங்க வேண்டும் ?
[Saturday 2016-02-13 20:00]

நாம் தினமும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக செயல்பட தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் குறைந்தது 7-8 மணிநேரமாவது தூங்கினால் மட்டுமே உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும் என பலதரப்பட்ட ஆய்வுகள் கூறிவருகின்றன.

* சரியான அளவில் தூங்காவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, மன அழுத்தத்தை உண்டாக்கும்.

* ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, அதுவே உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2016-02-13 20:00]

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள். அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.


நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?
[Friday 2016-02-12 20:00]

சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம். இதோ... பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.


உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில் கீரை!
[Friday 2016-02-12 20:00]

உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளன. காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள், நார்ச்சத்து:- காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக்குழாயில் எளிதாக பயணிக்க நார்ச்சத்து உதவும்.


மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள் சில !
[Thursday 2016-02-11 23:00]

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உண்மமைக‌ள் வெ‌ளிவ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அதில் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம், அதிர்‌ச்‌சியையு‌ம் கூட ஏற்படு‌த்து‌ம். அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இங்கே.. பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ.பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.


இயற்க்கை மருத்துவம் பற்றிய குறிப்புகள்! :
[Thursday 2016-02-11 22:00]

இயற்கை மருத்துவம் சொல்லும் அரிய குறிப்பகள் இவை..

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).


மூவேளையும் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
[Thursday 2016-02-11 18:00]

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள். அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா