Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் மிக நீண்டகால கொரோனா நோயாளி யார் தெரியுமா?
[Wednesday 2022-02-16 16:00]

துருக்கியைச் சேர்ந்த 56 வயதான முசாஃபர் கயாசன், உலகின் மிக நீண்ட கால கோவிட்-19 நோயாளியென கருதப்படுகிறார். புற்றுநோயினால் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் மருத்துவமனையிலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் அவர் இருக்கிறார்.

கயாசன் முதன்முதலில் கோவிட்-19 தொற்றிற்குள்ளான போது, மரணத்தை நெருங்கி விட்டதாக நினைத்தார். காரணம், ​​அவர் ஏற்கனவே இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், இனிமேல் தப்பமாட்டேன் என உறுதியாக நினைத்தார். ஆனால், கடந்த பதினான்கு மாதங்கள் மற்றும் 78 நேர்மறை சோதனைகளுக்குப் பிறகு, அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .

அத்துடன் இன்னும் தொற்றுநோயிலிருந்து விடுபட போராடுகிறார். “இது COVID இன் பெண் வைரஸ் என்று நான் நினைக்கிறேன். அவள் என்னுடன் வெறித்தனமாக இருக்கிறாள்” என கயாசன் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

கடந்த வாரம் நடத்தப்பட்ட PCR சோதனையிலும் அவர் தொற்றிற்குள்ளானவர் என முடிவு வந்துள்ளது. இது அவரது 78வது பரிசோதனை. அனைத்திலும் நேர்மறையான முடிவுகளே கிடைத்தன.

ஒன்பது மாதங்கள் மருத்துவமனையில் மற்றும் ஐந்து மாதங்கள் பெரும்பாலும் அவரது பிளாட்டில் தனிமையாகவும் இருக்கிறார். அதேசமயம் அவரது பேத்தி அஸ்ரா உட்பட வெளி உலகத்திலிருந்து அவர் பிரிந்திருக்கிறார்.

பேத்தி அஸ்ராவை பார்ப்பதற்காக தோட்டத்தில் உட்கார்ந்து, தொலைவிலிருந்து பார்த்துக் கொள்கிறார். கண்ணாடிக்கு பின்னாலிருந்து பேசுகிறார்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஒஃப் மெடிசினில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள கொரோனா நோயாளிகள் கடுமையான சுவாச நோய்க்குறியுடன் நீண்டகால தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.

அத்துடன் இரத்த புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிளைப் பெற்ற பிறகும் கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கயாசனின் மருத்துவர், இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் மற்றும் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியரான செராப் சிம்செக் யாவுஸ், தாங்கள் கண்காணித்த மிக நீண்ட தொற்று சம்பவம் இது என்றும், பிறழ்ந்த மாறுபாட்டின் ஏதேனும் ஆபத்துக்காக இது உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் “441 நாட்களுக்கு ஒரு நோயாளி நேர்மறை சோதனை செய்த சம்பவம் இன்று வரை தெரிவிக்கப்படவில்லை” என அசிபாடெம் மருத்துவமனையின் தொற்று நோய்கள் மற்றும் மருத்துவ நுண்ணுயிரியல் மருத்துவர் காக்ரி புக் கூறினார்.

நேர்மறை சோதனைகள் கயாசனை தடுப்பூசிக்கு தகுதியற்றதாக ஆக்குகின்றன, அதேசமயம் துருக்கிய வழிகாட்டுதல்களின்படி, நேர்மறையான நோயாளிகள் தடுப்பூசி பெற முழு குணமடைவதற்கு காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இதேவேளை நீண்டகால தொற்று காரணமாக தனது சுவை மற்றும் வாசனை உணர்வை இழந்த கயாசன், குறைந்தபட்சம் தனது சிறைவாசத்தை எளிதாக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா