Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள் இவர்கள்: Top News
[Thursday 2020-02-06 18:00]

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்… குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும் இடம் என பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

அதனை தங்கமுடியாத சிலர் தற்கொலை முயற்சிகளிலும், சிலர் முன்னேற முடியாமல் ஒதுங்கி அடங்குவதையும் , சிலர் அவர்களுக்கே இரையாகி தம் வாழ்வை நாசமாக்கி தொலைத்த சம்பவங்களும் நம் தமிழர் பிரதேசத்தில் தொடர்கதையாகவே இருக்கின்றது.

இன்றைய சூழலில் வாழும் பெண்கள் பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரர்களையே தமது பாதுகாப்பு ரீதியில் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு காரணம் இவர்கள் போன்ற ஒரு சிலரின் நடத்தைகளே.

இதனையும் தாண்டி படித்து பட்டம் பெற வேண்டும் என்று பல கனவுகளோடு பல்கலைகழகங்களில் கால் எடுத்து வைக்கும் பெண்களில் எத்தனையோ பேர் பகிடிவதை காரணமாக படிப்பை இடை நிறுத்தியும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர்.

இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை உங்கள் காம ஆசையால் பலியாக்க போகின்றீர்கள்?எப்போது தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கப் போகின்றீர்கள்?

இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களில் சிலர் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதால் தற்கொலை முயன்றுள்ளார் ஓர் மாணவி.

குறித்த மாணவியிடம் குளியலறையில் நின்று படம் எடுத்து அனுப்புமாறு நிர்ப்பந்தித்ததுடன்,மாணவியின் வாட்சப் குரூப்பில் படத்தையும் பகிர சொல்லி இருப்பாதாக தகவல். இந்நிலையில் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் வர்க்கத்தினரே சிந்தியுங்கள். நாளை உங்கள் சகோதரியோ அல்லது உங்கள் வழ்க்கைத் துணையோ இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்.

நம் தமிழினத்திற்கு நீங்கள் பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாய் இல்லை. காலம் காலமாக நம் மூதாதையர்கள் கட்டிக்காத்த பண்புகளை இழிவு படுத்தாதீர்கள்.

கடந்த பத்து வருடங்களிற்கு முன்னர் இதை நீங்கள் செய்திருந்தால் இன்று உங்கள் நிலை வேறுமாதிரியாகவிருக்கும். வரலாறுகள் தெரியவில்லை எனில் பெற்றோர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாளைய சமுதாயம் உங்களைபோன்றவர்கள் கைகளில் என்பதை நினைக்கும்போது மனம் கலங்குகின்றது.

பெண்தானே என இழிவாக நினைக்காதீர்கள்… உங்களை ஆக்கத்தெரிந்த அவளுக்கு அழிக்கவும் தெரியும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

குறித்த புகைப்படத்தில் உள்ளவர்களே மாணவிகளிடம் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டவர்கள் என உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்படியாணவர்களின் இந்த சீரழிவான நடவடிக்கைக்கு பெற்றோர்களும் புலம்பெயர்வாழ் உறவுகளான சில பரதேசிகளுமே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக சைக்கிளிலும் கால்நடையாகவும், பேருந்துகளிலுமே பலகலைக்கழகங்களுக்கு பிள்ளைகள் சென்றுவந்தார்கள். பெற்றவர்கள் கஸ்ரப்படுவதை உணர்ந்து கொண்ட சமுதாயமாக அக்காலம் அமைந்திருந்தது.

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது . பிள்ளைகள் பல்கலகழகத்திற்கு தேர்வாகிவிட்டார்கள் என வெளிநாட்டிற்கு தொலைபேசி அழைப்புக்கள் பறக்க, அங்கு குளிரில் உறைந்து வயிற்றைகட்டி வாயைகட்டி சேமிக்கின்ற காசில் 8 லட்சம் 10 லட்சம் என மோட்டார்சைக்கிள் வாங்கு என யோசிக்காமல் பணம் அனுப்புபவர்களால்தான் இவ்வாறான ஊதாரிகள் உருவாக்கப்படுகின்றார்கள்.

ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள் புலம்பெயர் உறவுகளே. இப்படியான ஊதாரிகளையும் ஒழுக்க கேடானவர்களையும் உருவாக்குவது ரத்தம் உறையவைத்து நீங்கள் சம்பாதிக்கும் பணம்தான். அத்துடன் இந்த காவாலிகளை பெற்ற பெற்றோர்களே உங்களுக்கும்தான். பத்துபேரிடம் கையேந்தி மோட்டார்சைக்கிள் வாங்கிக்கொடுத்துதான் உங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் விடுகின்ற இவ்வாறான தவறுகளால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நீங்களே இருண்ட யுகத்திற்கு அழைத்துசெல்கின்றீர்கள் என்பதை மறவாதிருங்கள். ஊதாரியாக உங்கள் பிள்ளைகள் வளர யார் காரணமோ அவர்களிடமெ நாளை பிள்ளைகளின் இறுதி கிரிகைகளுக்காவும் பணம் கேட்கவேண்டிய தேவை ஏற்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பாரம்பரியத்திற்கும் பழக்கவழக்கத்திற்கு பெயர்போன வடக்கு கிழக்கின் தற்போதைய நிலை எப்படி இருக்கின்றது தெரிகின்றதா? இப்படியொரு கேவலமான கலாச்சாரத்தை உருவாக்கவா யுத்த காலத்தில் உங்கள் பிள்ளைகளை பாதுகாத்தீர்கள்? நாளைய சமுதாயம் மண்ணோடு போவதற்கு நீங்களும், புலம் பெயர் உறவுகளுமே காரணம் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

நிலமை இப்படியே சென்றால் யாழ்ப்பாண சமூகம் என்ற ஒரு வரலாறே நாளைய சந்ததிகளின் சாபக்கேடாய் அமைந்துவிடும் என்பதியும் நினவில்கொள்ளுங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com



தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டு பழமையான ராட்சத டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2026-05-15 17:00]

சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் இனத்தின் எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். “நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைனோசர் இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.



மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல்!
[Monday 2026-05-11 17:00]

மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11,000 காரட் எடையுள்ள பிரம்மாண்ட மாணிக்கக்கல் ஒன்று துறைசார் நிபுணர்களை வியப்பிலாழ்த்தியுள்ளது. இந்த மாணிக்ககல், பல தசாப்தங்களில் மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கற்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, மியான்மரின் புகழ்பெற்ற இரத்தினக்கற்கள் நிறைந்த மோகோக் பகுதியை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.



பிரித்தானியாவின் 250 பேர்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றில் ஹன்டாவைரஸ் பாதிப்பு!
[Friday 2026-05-08 16:00]

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, 250 பேர்களைக் குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவான 'டிரிஸ்டன் டா குன்ஹா'வில், மூன்றாவது பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இரண்டு பிரித்தானியருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. தற்போது மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 24 அன்று, ஏழு பிரித்தானியர்கள் எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறங்கியுள்ளனர்.



உயிர் பலி வாங்கும் பேய் பங்களா: பொலிசார் கண்டுபிடித்த உண்மை!
[Thursday 2026-04-30 16:00]

அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின. அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது. அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன. அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.



107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கனடியர்!
[Wednesday 2026-04-29 17:00]

கனடாவின் மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம், கனடாவின் மிக வயதான மனிதர்களில் ஒருவரான இவான் வின்னிச்சுக் திகழ்கின்றார். செவ்வாய்க்கிழமை அன்று மிசிசாகாவில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவான் தனது 107-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.



வரலாற்றில் முதல்முறை: நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை நேரடியாக பார்த்த மனிதர்கள்!
[Sunday 2026-04-05 18:00]

நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர். 54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.



யுரேனியத்தை செறிவூட்டும் "சென்ட்ரிபியூஜ்" தொழில்நுட்பத்தின் ரகசியங்கள் இதோ!
[Thursday 2026-03-26 07:00]

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அணுக்கரு பிளவு ஏற்படக்கூடிய U-235 என்ற ஐசோடோப் வெறும் 0.7% மட்டுமே உள்ளது. ஆனால், அணுமின் நிலையங்களுக்கு 3% முதல் 5% வரையிலும், அணு குண்டுகள் தயாரிக்க 90% வரையிலும் இந்த U-235 தேவைப்படுகிறது. இந்தச் செறிவை அதிகரிப்பதே 'செறிவூட்டல்' ஆகும். இதற்கு 'கேஸ் சென்ட்ரிபியூஜ்' (Gas Centrifuge) முறை பயன்படுத்தப்படுகிறது. முதலில், திட நிலையில் உள்ள யுரேனியம் 'யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு' (UF6) என்ற வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயு, மிக அதிவேகமாகச் சுழலக்கூடிய சென்ட்ரிபியூஜ் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது.



2 தலை, 1 இதயம்: ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2026-03-24 17:00]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கடலுக்கு அடியில் வாழும் பேய் மீன்!
[Thursday 2026-02-26 16:00]

கடலில் வாழும் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு கொண்ட மீன் பற்றி பதிவில் பார்க்கலாம். இந்த உலகத்தில் பல அதிஷயங்கள் உள்ளது. அது ஒவ்வொன்றும் நாம் கேட்கும் போது பார்க்கும் போது இப்படியும் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கும். அதிலும் கடல்வாழ் உயிரினங்களை எல்லோருக்கும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ஒரு விருப்பமும் ஆர்வமும் இருக்கும். கடல் வாழ் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளது.



கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி!
[Tuesday 2026-02-17 16:00]

சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் நடந்துள்ளது.இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.



எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர்!
[Monday 2026-02-16 15:00]

எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர் பொறிக்கபட்டுள்ளது. எகிப்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளதென்பது பலருக்கும் தெரிந்த விடயம். அதில் மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிசர்லாந்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட்!
[Wednesday 2026-02-04 16:00]

இந்தியாவில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. உலகளவில் கார் மட்டுமல்லாது, தனித்துவமான அல்லது விருப்பமான எண் கொண்ட காரின் நம்பர் பிளேட்டையும் வாங்க பெரும் தொகையை சிலர் செலவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு, 'HR 88 B 8888' என்ற நம்பர் பிளேட் ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற பெருமையை பெற்றது.



நிலவில் அமைய உள்ள ஹொட்டல்!
[Thursday 2026-01-15 17:00]

2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் மீண்டும் நிலவிற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்காவின் நாசா, 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பிய நிலையில், அதன் பின்னர் தற்போது வரை மனிதர்கள் சென்றதில்லை. 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், 2030 ஆம் ஆண்டில் சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதை இலக்காக வைத்து செயலாற்றி வருகிறது.



உலகில் மரணமே இல்லாத இடம் எங்குள்ளது தெரியுமா?
[Monday 2026-01-12 19:00]

உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணி காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்டு. இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன.



பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்!
[Thursday 2025-12-25 06:00]

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா