Untitled Document
May 10, 2024 [GMT]
அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்: அபாயத்தின் எச்சரிக்கையா?
[Friday 2024-04-26 18:00]

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs)
இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs) இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

  

கடந்த மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அதில், "இயல்புக்கு மேல்" மன்னார் வளைகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையால் (SST) பவளப்பாறைகள் வெளிரிப்போக ஆரம்பித்து மரணத்தைத் தூண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த பவளப்பாறைகள் வெளுப்பு மே கடைசி வாரம் மற்றும் ஜூன் முதல் வாரத்தில் ஏற்படும் என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்தது.

ஆனால், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்தே பவளப்பாறைகள் வெளிரிப்போக தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதை காட்டுகிறது.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குனர் ஜெகதீஷ் எஸ் பாக்கன், "கடந்த வாரம் சில இடங்களில் பவளப்பாறைகள் வெளிரிப்போனதாகவும்" தெரிவித்திருந்தார்.

மேலும், " தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். தூத்துக்குடியைச் சேர்ந்த சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI) மற்றும் சென்னையை தளமாகக் கொண்ட தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) ஆகியவை மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்வதாகவும்" கூறினார்.

மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவின் பவளப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலையின் பரவலைப் புரிந்து கொள்ள கடல் சுழற்சி மாதிரியை மேற்கொள்வதில் சென்னை நிறுவனம் (NCSCM) நிபுணத்துவம் பெற்றுள்ளது.

மேலும், ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை SST -யை கண்காணிக்க MODIS Satellite தரவு பயன்படுத்தப்படும் மன்னார் வளைகுடாவில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 தீவுகள் மற்றும் பால்க் வளைகுடாவில் உள்ள சில தளங்களில் முதல்நிலை தகவல்களைப் பெறுவதற்காக விரைவான கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22 -ம் திகதி முதல் 27 -ம் திகதி வரை இந்த துரித ஆய்வு நடக்கிறது. தூத்துக்குடி, மண்டபம், பால்க் வளைகுடா பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மன்னார் வளைகுடா பகுதியில் இயல்பான அளவை விட 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

இதனால் பவளப்பாறைகள் வெளிரிப்போக தொடங்கின. Favites, Dipsastrea, Goniastrea மற்றும் Platygyra ஆகியவை பகுதியளவு மட்டுமே வெளிர தொடங்கியுள்ளன.

மேலும், பாக்கன் கூறுகையில், "அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முக்கியம் என்பதால் கண்காணிப்பு நடந்து வருகிறது. இப்பகுதியில் ஓரளவு நல்ல மழை பெய்தால் பவளப்பாறைகள் வெளிரிப்போவது குறையும். இல்லையென்றால் பெரும் கவலையை ஏற்படுத்தும்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நீருக்கடியில் கணக்கெடுப்பைத் தொடர திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த கணக்கெடுப்பில், மன்னார் வளைகுடாவில் உள்ள அனைத்து 21 தீவுகள் மற்றும் பால்க் விரிகுடாவில் உள்ள 5 reef sites -களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வெளிரிப்போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் .

  
   Bookmark and Share Seithy.com



பட்டாசு ஆலைகள் விதிமீறல்: உயிரிழப்பு 10ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.



பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ முயன்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!
[Friday 2024-05-10 06:00]

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



செல்போனால் சிதறிய கவனம்: தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து!
[Friday 2024-05-10 06:00]

அண்மையில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் மயக்கம் அடைந்தார்.



பா.ஜ.க அரசை வீழ்த்த தீவிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.



தமிழக அரசு தொடங்கிய திட்டத்தால் தொழிலதிபர்களாக மாறலாம்: என்ன திட்டம்?
[Thursday 2024-05-09 18:00]

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1303 ஆதி திராவிடர்கள் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டமானது பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.



லண்டனில் மகனுடன் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்!
[Thursday 2024-05-09 18:00]

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக 24 நாட்களாக தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பின்னர், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.



மதுரையில் நடக்க போகிறது விஜயின் முதல் அரசியல் மாநாடு!
[Thursday 2024-05-09 18:00]

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை எப்போது நடத்துவது தொடர்பான தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.



அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: தொடரும் சோகம்!
[Thursday 2024-05-09 06:00]

அண்மையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே கன்னியாகுமரியில் சுற்றுலா சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



தீவட்டிப்பட்டி சம்பவம்: விசிக போராட்டம்!
[Thursday 2024-05-09 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



வெப்ப அலை வீச்சு காரணமாக விலக்கு கேட்கும் தூய்மை பணியாளர்கள்!
[Thursday 2024-05-09 06:00]

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த, நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணி நேரம் என்பது கரூர் மாநகராட்சியில் காலை 6.00 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 6.00 மணி முதல் 11 மணி வரையும் மீண்டும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி மற்றும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி என உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பொதுநல மனு: அபராதம் விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தனக்கு ஜாமீன் வழங்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



கொடூரக் கொலை: கதைகட்டிய போலீஸ் - புலனாய்வில் அம்பலமான உண்மை!
[Wednesday 2024-05-08 18:00]

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காந்தி சாலை, பஜார் வீதியில் புதிய வசந்த் அண்ட் கோ அருகே, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும், பச்சை நிற பெட்சீட்டில் சுற்றப்பட்ட நிலையில் தலை சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அருகே துண்டாக்கப்பட்ட கைகளும் இருந்தன. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பஜார் சாலை வழியே வந்த பொதுமக்கள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



குறைபாடுள்ள பிள்ளையை முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்!
[Wednesday 2024-05-08 18:00]

தங்கள் பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளதால் அது தொடர்பாக ஒரு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார் பெண்ணொருவர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள Dandeli என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள் சாவித்ரி, ரவி குமார் தம்பதியர் (Savitri Kumar Shelle, 26, Ravi Kumar Shelle, 27). தம்பதியரின் மகன் வினோத், பேச்சுத்திறன் குறைபாடு கொண்டவன். மகனுடைய குறைபாடு காரணமாக தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதுண்டாம்.



300 பணியாளர் ஒரே நேரத்தில் விடுப்பு: குழப்பத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
[Wednesday 2024-05-08 18:00]

விமான பணியாளர்களின் திடீர் விடுப்பு காரணமாக 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, குறைந்தது 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.



'திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான்' -ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
[Wednesday 2024-05-08 06:00]

திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ஒரே நேரத்தில் எல்லாரும் ஒரே இடத்திற்கு போகும் பொழுது அதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.



“ராமர் கோவிலை இப்படியா கட்டுவது?” - இந்தியா கூட்டணி எம்.பி. பேச்சால் சர்ச்சை!
[Wednesday 2024-05-08 06:00]

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.



நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்? - சீமான் கேள்வி!
[Wednesday 2024-05-08 06:00]

நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி உள்ள "உயிர் தமிழுக்கு" என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வானது போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது.



உ.பி.யில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல்!
[Tuesday 2024-05-07 18:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. டீ தொடர்ந்து உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.



பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: மெளனம் கலைத்த பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-07 18:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.



கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு!
[Tuesday 2024-05-07 18:00]

கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான கடலூர், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா (வயது 17) பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா