Untitled Document
April 19, 2024 [GMT]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்!
[Monday 2018-10-29 18:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

  

இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும்.

மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த பின்னர் புதிய அரசவை உறுப்பினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் புதிய அமைச்சரவையினை அமைத்துக் கொள்வார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவவது அரசவை அமைக்கப்படும் முறைமை குறித்த தகவல்கள் பின்வருமாறு :

2010ம் ஆண்டு தேர்தல்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை அமைக்கப்பட்டது.

தமிழீழ மக்களுக்குரிய அரசமைக்கும் உரிமையினைக் குறியீட்டுவடிவில் உணர்த்தும் வகையில், அரசுகளைக் கொண்டுள்ள நாடுகள் தமது அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் கட்டமைப்பை ஒத்த வடிவத்தில், நாமும் எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்பை அமைத்துக் கொண்டோம்.

இதேவேளை நாம் ஒரு அரசை இன்னும் அமைத்துவிடவில்லை என்பதனையும், தமிழீழ மக்களுக்கான ஓர் அரசை அமைப்பதற்காகச் செயற்படுவதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்பதனையும் உணர்ந்தவர்களாகவே நாம் செயற்பட்டு வந்துள்ளோம்.

முதலாவது அரசவைக் காலம் மூன்றாண்டுகளைக் கொண்டிருந்தது. முதலாவது அரசவைக்காலம் நிறைவுற்று அரசவை கலைந்த பின்னர் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு இரண்டாவது அரசவைக்காலத்துக்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்;. முதலாவது அரசவை கலைவதற்கு முன்னர் இரண்டாவது அரசவைக்காலத்தை 5 வருடங்களாக நீடிப்பதென்ற அரசியலமைப்பு மாற்றத்தை அரசவை மேற்கொண்டிருந்தது.

அதன் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட அரசவையின் காலமே தற்போது நிறைவடைகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை மற்றும் அமைச்சரவை, நெறிமுறை ஆணையம், மதியுரைக் குழு, மேலவை போன்ற அரசியல் கட்டமைப்புகளின் ஊடாக, நாம் கடந்த 8 ஆண்டுகளாக எவ்வாறு ஜனநாயகமுறையில் அமைந்த ஓர் அரசின் கட்டமைப்பு செயற்படுமோ அதே போன்ற ஒழுங்குடன் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

கொள்கை சார்ந்த முடிவுகளை அரசவையும், நிர்வாகம் சார்ந்த முடிவுகளை அமைச்சரவையும் எடுக்கும் வகையில் நாம் செயற்பட்டு வருகிறோம். அரசவை உறுப்பினர் அனைவரும் நேரடியாகச் சந்திக்கும் வகையில் வருடம் இரு தடவைகள் நேரடி அமர்வுகளையும், ஓவ்வொரு மாதமும் தவறாது முதல் சனிக்கிழமையன்று தொலைத்தொடர்பு ஊடகவழி மூலமான நிகழ்நிலை அமர்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கோண்டு வந்திருக்கிறோம்.

இதன் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தன்னையொத்த விடுதலை அரசியல் இயக்கங்களுக்;கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறதென்ற உண்மையையும் இவ்விடத்தில் பதிவு செய்தாக வேண்டும். எமக்கிடையே எழக்கூடிய பல்வேறு வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளையெல்லாம் அரசவை அமர்வுகளின் போது நாகரீகமான முறையில் விவாதித்து முடிவுகளை எடுக்கும் பக்குவத்துடன் அரசவை உறுப்பினர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயகமுறைக் கட்டமைப்பு என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது இவ் ஒழுங்குகள் எல்லாம் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றவையே.

இனி அமையவுள்ள மூன்றாவது அரசவைக்கு திறமையுள்ள புதியவர்களை உறுப்பினர்களாக இணைத்;து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பது எமது வேணவா.

புதிய அரசாங்கத்தினை தேர்தல் மூலம் அமைத்துக் கொள்வதற்காகவென எமது அரசியலமைப்புக்கு அடங்கிய வகையில் அரசவையின் பரிந்துரைக்கேற்ப பிரதமர் என்ற ரீதியில் நான் தலைமை தேர்தல் ஆணையத்தை நியமித்துள்ளேன். இவ் ஆணையமே தேர்தல்களைப் பொறுப்பெடுத்து நடாத்தும். இவ் ஆணையம் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் செயற்படும். தேர்தற்திகதியினையும் ஆணையமே அறிவிக்கும்.

பின்வருவோர் இவ் ஆணையத்தில் உறுப்;பினர்களாக உள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையாளர்:

திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ). இவர் அத்தாட்சிப் படுத்தப்பட்ட கணினி கட்டமைப்புத் துறை நிபுணர் (Certified Cloud Architect), ஒன்ராறியோ மாகாண அரச நிறுவனமொன்றில் கணினி கட்டமைப்புத் துறை நிபுணத்துவ ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். தொலைக்காட்சி - வானொலி விமர்சகர். மற்றும் கலை நாடகத் துறை ஆர்வலர். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னை நாள் அவைத் தலைவரும் ஆவார்.

தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள்:

செல்வி லக்ஷ்மி லோகதாசன் (அவுஸ்திரேலியா, சிட்னி). இவர் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் சட்டவியல் மற்றும் சர்வதேச கற்கையியல் துறைகளில் இறுதி ஆண்டு மாணவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இளைய தலைமுறை பெண் எனும் விருது பெற்றவர். அத்துடன் துணைவேந்தரின் தலைமைத்துவப் பரிசு, 2015 க்கான புதிய கொழும்புத் திட்டப் புலமைப் பரிசுகளும் பெற்றவர்.

திரு றோனி மறுசலீன் (பிரான்ஸ், பாரிஸ்);. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுப் பின்னர் விரிவுரையாளராகவும் இருந்தவர். பிரான்ஸ் நாட்டில் நெடுங்காலமாக நன்கறியப் பட்ட சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.

பிரதமர் ருத்ரகுமாரன் அவர்கள் தனது அறிக்கையின் நிறைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறைகளில் தேர்தல் ஆணையத்தின் தனித்துவமானதும் சுதந்திரமானதுமான செயற்பாட்டுக்கு அனைவரது ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வேண்டியுள்ளார்.

நாதம் ஊடகசேவை

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு எமது ஆட்சியில் தண்டனை! - தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி.
[Thursday 2024-04-18 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



அதிகளவு உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதான காரணம்!
[Thursday 2024-04-18 16:00]

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



மைத்திரிக்கு தடை உத்தரவு நீடிப்பு!
[Thursday 2024-04-18 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஞாயிறன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
[Thursday 2024-04-18 16:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.



நயினாதீவில் பெண்ணுக்கு நடுக்கடலில் பிரசவம்!
[Thursday 2024-04-18 16:00]

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.



வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார் கோட்டா!
[Thursday 2024-04-18 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேவிபுரத்தில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் காயம்!
[Thursday 2024-04-18 16:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆரையம்பதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
[Thursday 2024-04-18 16:00]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுடைய சடலம் எனவும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



ரஷ்ய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - இராணுவ மேஜர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகின்றது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா