Untitled Document
May 17, 2024 [GMT]
வடக்கு மாகாணம் மலர்ச்சி பெற்று வருகிறது! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[Thursday 2016-01-07 19:00]

எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். பட்டதாரிப் பயிலுனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், சாரதிகள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கோப்பாய் கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 09 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். பட்டதாரிப் பயிலுனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், சாரதிகள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கோப்பாய் கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 09 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

  

சிறிது சிறிதாக எமது வடமாகாணம் மலர்ச்சி பெற்று வருகின்றது என்பதற்கு இன்றைய தினம் ஒரு உதாரணம். வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, நேர்மையான நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கி எமது மாகாணம் முன்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. வடமாகாணத்தில் பல திணைக்களங்கள் மற்றும் அமைச்சு மட்ட அலுவலகங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் போட்டிப் பரீட்சைகள் மூலமும் நேர்முகத் தேர்வின் மூலமும் தெரிவு செய்யப்பட 640 பேர் இன்று நியமனங்களைப் பெற்றுக்கொள்ள உள்ளீர்கள்.

பல்லாயிரக் கணக்கானவர்கள் போட்டியிட்ட பரீட்சைகளில் மிகவும் சிறப்பாகத் தேர்வடைந்து முகாமைத்துவ உதவியாளர்களாக 190 பேரும், கலாச்சார உத்தியோகத்தர்களாக 11 பேரும், சாரதிகளாக 109 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் விளையாட்டு உத்தியோகத்தர்கள் 17 பேர் கூடத் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களின் கல்வித் தகைமைகள் போன்ற விடயங்கள் நேர்முகப் பரீட்சையில் உன்னிப்பாகச் சரி பார்க்கப்பட்டு தெரிவானவர்களே இன்று நியமனம் பெறுகின்றனர்.

அத்துடன் பட்டதாரிப் பயிலுனர்கள் நியமனம் தொடர்பில் 330 பட்டதாரிகள் நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய நியமனங்களும் இன்று வழங்கப்படுகின்றன. வடமாகாணத்திலே 640 வீடுகளிலே ஒளியேற்றப்படுகின்ற நாள் இன்று என்றால் அது மிகையாகாது. வேலையில்லாது இருப்பது எப்பேர்ப்பட்ட சமூகச் சிக்கல்களைத் தருகின்றது என்பதை நான் கூறி எவரும் தெரிய வேண்டியதில்லை. வேலை செய்ய முடியுமான அனைவரும் பொறுப்பான வேலைகளில ; அமர்த்தப்பட வேண்டும் என்பது தான் எமது அவா, ஆசை, எதிர்பார்ப்பு. அதனை அவ்வளவு இலேசாக நடைமுறைப்படுத்த முடியாது.

பலர் அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். அது தவறு. இன்று அரசாங்கம் ஒன்று ஒரு நாட்டில் தனித்து இயங்குவது என்பது கடினமானது. தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் எனப் பலவும் அரசாங்கங்களுக்கு ஒத்திசைவாக நடந்து சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது. எனவே எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க முன்வர வேண்டும். தன்னம்பிக்கையுடன் தொழில் முயற்சியாளராக மாற முன்வர வேண்டும். இன்று பல்துறை வணிகர்களாக, தொழில் விற்பன்னர்களாக, சமூகத்தின் பலம் பொருந்திய பகுதியினராக இருப்பவர்கள் பழைய சிந்தனைகளை விடுத்துப் புதிதாகச் சிந்தித்து முன்னேறியவர்கள் என்பதை நாம் மறத்தலாகாது.

அரசாங்க உத்தியோகத்தர்களாகப் பதவியேற்கும் எங்;களிடம் இதைப் பற்றியெல்லாம் ஏன் கூறுகின்றீர்கள் என்று நீங்கள் வியப்படையலாம். என்னுடைய அறிவுரை இதுவரை பொதுவானது. எமது அனைத்து இளைஞர் யுவதிகளையும் நோக்கிக் கூறப்பட்டது. ஆனால் நீங்கள் சற்று அதிர்ஷ்டம் பெற்றவர்கள். அரசாங்கத்தினால் பொறுப்பேற்று நடத்தப்படப் போகின்றவர்கள். உங்களுக்கென்று சில விடயங்களை நான் எடுத்துக் கூறுவேன். சுமார் 40, 50 வருடங்களுக்கு முன் அனைத்து நியமனங்களும் மத்திய அரசினாலேயே வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் வர்த்தமானி மூலமாக விண்ணப்பங்கள் கோரப்படுவன.

தகுதியான விண்ணப்பதாரிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்கள். அதன் பின் போட்டிப் பரீட்சை நடைபெறும். அப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்வானவர்களுக்கு நியமனத்தைப் பெறுவதற்கான கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் படி தகவல் அனுப்பப்படும். நியமனக் கடிதத்தைப் பெறும் வரை எந்த இடத்திற்கு அனுப்பப் போகின்றார்கள் என்ற எந்தத் தகவலும் பெற்றுக் கொள்ள முடியாது.

நியமனக் கடிதம் வழங்கப்பட்டதும் அதில் களுத்துறைக் கச்சேரியில் கடமையைப பொறுப்பேற்கவும் அல்லது நுவரெலியாவில் உள்ள ஒரு காரியாலயத்தில் பொறுப்பேற்கவும் அல்லது தங்காலைக்கு உடனே வந்து சேரவும் எனக் குறிப்பிட்டு இலங்கை முழுவதிலும் உள்ள பல பகுதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவன. அதில் ஒருவர் அல்லது இருவர் வடபகுதியில் உள்ள ஏதாவது ஒரு அலுவலகத்திற்கு தெரிவாகிவிட்;டால் அவர்கள் லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு கோடி ரூபா பரிசு பெற்றதற்கு ஒப்பான சந்தோசத்தில் இருப்பார்கள்.

தேர்வானவர்கள் எந்த மேன்முறையீடும் செய்ய முடியாது அல்லது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியாது. நியமித்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்கு இடம், வலங் கூடத் தெரியாத நிலையில் தெரிந்தவர்களின் உதவியுடன் சென்று கடமையைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இது தான் அன்றைய நடைமுறை. மத்தியின் செல்வாக்கு மிகப் பலமாகப் பரவியிருந்த காலமது. பின்னர் தான் மத்தியின் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்து வேரூன்றியது. மாகாணங்கள் மத்தியின் சில கடமைகளைத் தான் எடுத்துச் செய்தது. உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு எதுவித கஸ்டமும் இல்லை.

வடமாகாணத்தில் இருக்கின்ற ஏதோ ஒரு காரியாலயத்திற்குத் தான் உங்கள் நியமனங்கள் கிடைக்கப் போகின்றன. வட பகுதியில் உள்ள எந்த மூலைமுடுக்காயினும் ஆகக் கூடியது 3-4 மணித்தியாலங்களுக்குள் சென்று விட முடியும். தீவுகளுக்குக் கூட விரைவில் சென்று விடலாம். என்னுடைய நீதிமன்றத்தில் அந்தக் காலத்தில் வேலைசெய்த ஒரு சிங்களப் பெண்மணி சுமார் நூறு மைல் தூரத்தைத் தினமும் ரயிலில் கடந்து வந்து வேலை செய்து விட்டு திரும்பவும் அந்த நூறு மைல் திரும்பிச் சென்றமை எனக்கு நினைவுக்கு வருகின்றது. அந்த விதத்தில் உங்கள் வாழ்விடங்களுக்கு அண்மையில் உங்கள் வேலைத் தளங்கள் அமைந்துள்ளன என்பது உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பேறு.

அப்படியிருந்தும் உங்களில் பலர் அம்மாவுக்குச் சுகம் இல்லை, அப்பா இயலாமல் படுத்திருக்கின்றார், தங்கை A/L சோதனை எடுக்கின்றார் என பல நொண்டிச் சாட்டுக்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் கடமையாற்ற அனுமதிக்கும் படி மேன்முறையீடு செய்வீர்கள். உங்கள் மேன்முறையீட்டுக்கான பதிலை இப்பொழுதே தெரிவித்து விடுகின்றேன். நியமனங்கள் வழங்கப்படுவது அரச அலுவலகங்களில் உள்ள கடமைகளை முறையாகவும் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கேயாகும்.

அதை விடுத்து உங்கள் பிரத்தியேகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அரச அலுவலகங்களில் நியமனங்கள் பெற்றவுடன் தான் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகின்றன.இதே நியமனங்கள் ஒரு பிரத்தியேக வங்கியிலோ அல்லது நிறுவனத்திலோ கிடைக்கப் பெற்றால் எந்தவித மறுப்பும் இன்றி உங்கள் கடமைகளை முழு நேரமும் ஓய்வு ஒழிச்சல் இன்றி புரிய வேண்டும். இல்லா விட்டால் அடுத்த நிமிடம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

அண்மையில் ஒரு வங்கி திறப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். அங்கு கடமையில் புதிதாக இணைந்து கொண்ட ஒரு உத்தியோகத்தரைத் தற்செயலாக எனக்குத் தெரிந்த ஒருவர் சந்திக்க நேர்ந்தது.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் போரின் 15 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின், முன்னாள் போராளிகளின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை இன்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.



மூன்று மீனவர்களுடன் சம்பில்துறையில் கரையொதுங்கியது இந்தியப் படகு!
[Friday 2024-05-17 16:00]

தமிழகம்- மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர். குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நினைவேந்தல்களை தடுக்க வேண்டாம்! - என்கிறார் மைத்திரி
[Friday 2024-05-17 16:00]

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.



நாடு நல்ல நிலையை அடைந்த பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!
[Friday 2024-05-17 16:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.



சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
[Friday 2024-05-17 16:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.



தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்!
[Friday 2024-05-17 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா