Untitled Document
May 18, 2024 [GMT]
இந்திய வெளிவிவகார செயலாளர் கொழும்பு வருகிறார்!
[Monday 2016-01-04 07:00]

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

  

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய உயர் மட்ட குழு கலந்துகொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகளையும் இந்திய வெளியுறவு செயலர் தனது விஜயத்தின்போது ஆராயவுள்ளார். அந்தவகையில் 10 ஆம் திகதியளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களையும் ஜெய் சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழு அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளன.இலங்கை தலைவர்களுடன் இந்திய வெளியுறவு செயலர் மேற்கொள்ளவுள்ள சந்திப்புக்களின்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கைக்கான இந்தியாவின் புதிய முதலீடுகள் என்பவை தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய வெளியுறவு செயலரின் இலங்கை விஜயம் தொடர்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வா மேலும் தெரிவிக்கையில்,இந்திய வெளியுறவுச் செயலாளர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டே இங்கு வருகின்றார். இது வழமையான விஜமாகும். இதன்போது இலங்கையில் வெளிவிவகார செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளை சந்திப்பார். ராஜதந்திர மட்டத்திலான இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திப்பது தொடர்பில் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.

10 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இவர் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்தியாவுடன் கையெழுத்திடப்படவுள்ள வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வ உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இவ் உடன்படிக்கை எப்போது கையெழுத்திடப்படுமென தீர்மானிக்கப்படவில்லை.என்றார்.

இதேவேளை ஜெனீவா பிரேரணை தொடர்பாக மீளாய்வு செய்வதற்காகவும் அதனை இலங்கையர் மத்தியில் செயல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகவும் இந்தியாவின் உயர்மட்ட ராஜதந்திரி ஒருவர் இலங்கை வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இங்கு வரும் இந்திய ராஜதந்திரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும சந்தித்து வடக்கு, கிழக்கு பிரச்சினை தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!- பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
[Saturday 2024-05-18 04:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.



கோட்டாவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!
[Saturday 2024-05-18 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்துக் சர்வதேச விசாரணையே தீர்வு! - உறவுகள் வலியுறுத்தல்.
[Saturday 2024-05-18 04:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரம் - குமாரபுரத்தில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 04:00]

திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்! - நிமால் விநாயகமூர்த்தி
[Saturday 2024-05-18 04:00]

பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. "எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?" என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் - எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் - இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.



மூன்றாவது ஆண்டாக இன அழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சட்டமூலம்-104! Top News
[Saturday 2024-05-18 04:00]

தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது.



வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Saturday 2024-05-18 04:00]

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



வவுனியா இரட்டைக் கொலை - சாட்சிகளை அச்சுறுத்திய பெண் கிராம அலுவலர்!
[Saturday 2024-05-18 04:00]

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



போர் என்பது வெற்றியல்ல - அது நாட்டினதும் மனித குலத்தினதும் தோல்வி!
[Saturday 2024-05-18 04:00]

போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.



தெல்லிப்பழையில் நாய் இறைச்சிக் கொத்து? - உணவகத்துக்கு சீல்.
[Saturday 2024-05-18 04:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் போரின் 15 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின், முன்னாள் போராளிகளின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை இன்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.



மூன்று மீனவர்களுடன் சம்பில்துறையில் கரையொதுங்கியது இந்தியப் படகு!
[Friday 2024-05-17 16:00]

தமிழகம்- மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர். குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நினைவேந்தல்களை தடுக்க வேண்டாம்! - என்கிறார் மைத்திரி
[Friday 2024-05-17 16:00]

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.



நாடு நல்ல நிலையை அடைந்த பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!
[Friday 2024-05-17 16:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.



சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
[Friday 2024-05-17 16:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.



தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்!
[Friday 2024-05-17 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா