Untitled Document
June 16, 2024 [GMT]
கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!
[Thursday 2024-05-23 06:00]

ஒன்ராறியோ ஏரியில் கடந்த 2017ல் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் மரபணு சோதனையின் மூலமாக ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகாள முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் அறிவித்துள்ளனர். கடந்த 2017 ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

ஒன்ராறியோ ஏரியில் கடந்த 2017ல் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் மரபணு சோதனையின் மூலமாக ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகாள முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் அறிவித்துள்ளனர். கடந்த 2017 ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

  

இதில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட சோதனையில் அவர் கனடியரா அல்லது வெளிநாட்டவரா என்பது தொடர்பான குழப்பம் பொலிசாருக்கு ஏற்பட்டது. அவரிடத்தில் அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் காணப்படவில்லை.

இதனையடுத்து மாதிரி புகைப்படம் ஒன்றை பொலிசார் வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடினர். தொடர்புடைய பெண்ணிற்கு 44 முதல் 70 வயதிருக்கலாம் என்றும், ஐந்து அடி நான்கு முதல் ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் இருக்கலாம் என்றும்,

பழுப்பு நிற கண்கள் மற்றும் குறுகிய நரை முடியுடன் 135 முதல் 150 பவுண்டுகள் எடையுடன் கூடிய பெண் எவர் என்றும் பொலிசார் குறிப்பிட்டனர். அத்துடன் கனடா முழுமையும் மாயமானவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், 2023 ஜனவரி மாதம் மரபணு சோதனை முன்னெடுக்க ரொறன்ரோ பொலிசார் முடிவு செய்தனர். அதில் தொடர்புடைய பெண்மணிக்கு வட அமெரிக்காவில் தூரத்து சொந்தங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த விசாரணை ஒருகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டது. 2023 ஆகஸ்டு மாதம் ரொறன்ரோ பொலிசார் சுவிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

அதில் 2017 செப்டம்பர் மாதம் பெண் ஒருவர் மாயமானதாக புகார் ஒன்று பதிவாகியுள்ளதை கண்டரிந்தனர். இதனையடுத்து மரபணு சோதனை மூலமாக கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுகையில், குறித்த பெண் சுவிஸ் நாட்டவர் என உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், அவரது உறவினர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் மரணம் குற்றச்செயல் அல்ல என்பதால் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



லண்டனில் தமது கதையை நாடகமாக்கிய நிறுவனம் மீது வழக்குத் தொடரும் கொலைகாரன்!
[Sunday 2024-06-16 08:00]

பிரித்தானியாவில் தமது மருமகளை கௌரவக் கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நபர் ITV நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். தொடர்புடைய நிறுவனம் உருவாக்கியுள்ள நாடகத்தால் தமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தெற்கு லண்டனை சேர்ந்த 20 வயது பனாஸ் மஹ்மோத் என்பவர் தமது கணவரால் அனுபவித்த சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாமல், ஒருகட்டத்தில் கணவரிடம் இருந்து பிரிந்துள்ளார்.



ஈரானின் புதிய நகர்வு: முன்னணி நாடுகள் கடும் கண்டனம்!
[Sunday 2024-06-16 08:00]

ஈரான் முன்னெடுத்துள்ள புதிய நகர்வுக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.



கடல் மட்டத்தில் இருந்து 400 அடி: நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம்!
[Sunday 2024-06-16 08:00]

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் ஹொனலுலுவில் இருந்து லிஹூ பகுதிக்கு புறப்பட்ட Southwest ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் சமீபத்தில் தான் தகவல்கள் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் நடவடிக்கைகள் வலுக்கட்டாயமாக கைவிடப்பட்ட நிலையில், சில நொடிகளுக்குள் அந்த விமானம் பல நூறு அடிகள் கீழிறங்கியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.



பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரித்தார் இஸ்ரேல் அமைச்சர்!
[Saturday 2024-06-15 17:00]

இஸ்ரேல் லெபனான் நாடுகளுக்கிடையில் நிலைவும் பதற்றத்தைக் குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். லெபனான் இஸ்ரேல் எல்லையில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்னுவேல் மேக்ரான் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் திட்டம் ஒன்றை முன்வைத்தார். லெபனானுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் ஒரு திட்டத்தை முன்வைக்க முயன்றது.



மேக்ரானை சந்தித்த பிரதமர் ட்ரூடோ!
[Saturday 2024-06-15 17:00]

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.



நான் ஜனாதிபதியானால் வருமான வரியை ஒழிப்பேன்: டிரம்ப் வாக்குறுதி!
[Saturday 2024-06-15 17:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் மக்கள் மீது வாக்குறுதிகளை பொழிந்து வருகிறார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கர்களை வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.



கனேடிய இந்திய பிரதமர்கள் திடீர் சந்திப்பு!
[Saturday 2024-06-15 17:00]

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின், தற்போது நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கனடா பிரதமரும் இந்திய பிரதமரும் சந்தித்துக்கொண்டார்கள். கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.



34 பெண்கள்: காணொளி பதிவு செய்த வழக்கில் கைதான கனேடியர்!
[Saturday 2024-06-15 06:00]

கனடாவின் கியூபெக் பகுதியை சேர்ந்த நபர், பெண்களுடன் நெருக்கமாக இருந்து, அந்த காட்சிகளை படம் பிடித்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிக்கியுள்ளார். கியூபெக் பகுதியை சேர்ந்த 43 வயது மார்ட்டின் பிள்ளை என்பவரே செவ்வாய்க்கிழமை பகல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,



போர் நிறுத்தத்திற்கு தயார்: ஜனாதிபதி புடின் அறிவிப்பு!
[Saturday 2024-06-15 06:00]

உக்ரைன் மீதான போரை கைவிட தாம் தயாரென அறிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஏற்க முடியாத கடும் நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விளாடிமிர் புடின், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் துருப்புகள் வெளியேற வேண்டும் என்றும், நேட்டோவில் இணையும் கனவை கைவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.



ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆபத்து!
[Saturday 2024-06-15 06:00]

ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வரலாற்றுப் பின்னடைவை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவரை மாற்றும் நடவடிக்கைகளை கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களுக்கு விருப்பமான தலைவர்களை ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.



பிரதமர் ரிஷி சுனக் - பிரதமர் மோடி சந்திப்பு!
[Friday 2024-06-14 18:00]

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் நேற்று முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.



பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு!
[Friday 2024-06-14 18:00]

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.



தொலைபேசியில் ஜெலன்ஸ்கியிடம் சீன ஜனாதிபதி கூறிய முக்கிய தகவல்!
[Friday 2024-06-14 18:00]

"சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவத்துள்ளார் என உன்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் மூலம் பேசியதாகவும், அப்போது இதனை தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.



இத்தாலி நாடாளுமன்றத்தில் கைகலப்பு!
[Friday 2024-06-14 18:00]

இத்தாலியில் ஜி7 மாநாடு இன்று (14) நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று முன் தினம் (12) நாடாளுன்ற சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதியுதவி!
[Friday 2024-06-14 06:00]

முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க G7 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. உக்ரைனை நாங்கள் கைவிடவில்லை என்பதை ரஷ்யாவுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் G7 நாடுகளின் இந்த முடிவானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.



புகலிடக் கொள்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் சிக்கிய ஹங்கேரி!
[Friday 2024-06-14 06:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கொள்கைகளை பின்பற்ற மறுப்பதாக குறிப்பிட்டு, ஒன்றியத்தின் முதன்மை நீதிமன்றம் ஹங்கேரிக்கு 200 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. அத்துடன் ஹங்கேரி தற்போது பின்பற்றும் கொள்கைகளை மாற்றும் வரையில் நாளுக்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ 8 கோடி) தண்டம் விதிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.



துஸ்பிரயோகம், போதை மருந்து: அம்பலமாகும் எலோன் மஸ்க்கின் உண்மை முகம்!
[Friday 2024-06-14 06:00]

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தொடர்பில் புயலைக்கிளப்பும் 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதில், தமது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பலருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார் என அறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.



கனடாவில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு!
[Thursday 2024-06-13 18:00]

கனடாவில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவில் அதிகளவில் தங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. 29 வயதான கெரி பிரின்ஸ் என்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.



கிரீஸ் கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்!
[Thursday 2024-06-13 18:00]

செங்கடலில் கிரீஸ் கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. யேமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இருந்து தென்மேற்கே 66 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த கிரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.



பிரான்ஸில் பற்றி எரியும் தீயால் 600 ஹெக்டேர் நாசம்!
[Thursday 2024-06-13 18:00]

பிரான்ஸில் பற்றி எரியும் தீயால் 600 ஹெக்டேர் தீயில் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதி உள்ளது. கரடு முரடான மலை குன்றுகளுடன் கூடிய இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பிடித்தது. காற்று வீச்சு காரணமாக கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென வனப்பகுதி முழுவதும் காட்டுத்தீ பரவியது.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா