Untitled Document
May 20, 2024 [GMT]
கனடாவிற்கு குடிபெயர்வதற்கு எவ்வளவு பணம் தேவை: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!
[Friday 2024-05-10 06:00]

புலம்பெயர் கனேடிய விண்ணப்பதாரர்களின் நிதி ஆதாரம் தொடர்பில் அந்நாட்டின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது(IRCC) புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கனடாவுக்கான எக்ஸ்பிரஸ் நுழைவு வீசா விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே 27. 2024ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிதிச் சான்றுடன் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான புதிய நிதி திட்டத்தை மே 28, 2024 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக கனடா அறிவித்துள்ளது.

புலம்பெயர் கனேடிய விண்ணப்பதாரர்களின் நிதி ஆதாரம் தொடர்பில் அந்நாட்டின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது(IRCC) புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கனடாவுக்கான எக்ஸ்பிரஸ் நுழைவு வீசா விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே 27. 2024ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிதிச் சான்றுடன் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான புதிய நிதி திட்டத்தை மே 28, 2024 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக கனடா அறிவித்துள்ளது.

  

இதன்படி கனடா தமது புலம்பெயர் நிதி திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.

இதற்கமைய விண்ணப்பதாரர், அவர்களது மனைவி அல்லது பொதுச் சட்டப் பங்குதாரர், அவர்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் மனைவி அல்லது பங்குதாரரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளும் உள்ளடக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு விண்ணப்பதாரருக்கு, தேவையான தொகை 14,690 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 13,757கனேடிய டொலர்கள்) எனவும்,

இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு, 18,288 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 17,127கனேடிய டொலர்கள்) எனவும்,

மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு, புதிய தொகை 22,483 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 21,055 கனேடிய டொலர்கள்) எனவும்,

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, 27,297 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 25,564 கனேடிய டொலர்கள்) எனவும்,

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, 30,690 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 28,994 கனேடிய டொலர்கள்) எனவும்,

ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு, 34,917 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 32,700 கனேடிய டொலர்கள்) எனவும்,

ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு, புதிய தொகை 38,875 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 36,407 கனேடிய டொலர்கள்) எனவும்,

ஏழு உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் 3,958 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 3,706 கனேடிய டொலர்கள்) என புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பால், ஏற்றுக்கொள்ளக்கூடிய நிதி ஆதாரம் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் இந்திய மாணவர்கள் போராட்டம்!
[Monday 2024-05-20 18:00]

கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக இங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.



உயிரிழந்த ஈரான் அதிபர் யார்? பலரும் அறியாத தகவல்கள்!
[Monday 2024-05-20 18:00]

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 63 வயதானவர் இப்ராஹிம் ரெய்சி. கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.



கனடாவில் AI துறையில் நிலவும் பதவி வெற்றிடங்கள்!
[Monday 2024-05-20 18:00]

கனடாவில் அதிகளவில் கிராக்கி நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையக் கூடும்.



ஈரான் அதிபர் உயிரிழந்தார்: வெளியானது அறிவிப்பு!
[Monday 2024-05-20 18:00]

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிபர் இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.



ஈரான் ஜனாதிபதி தொடர்பில் நடவடிக்கைகள் தீவிரம்!
[Monday 2024-05-20 06:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தேவையான அனைத்து உதவிகளும் முன்னெடுக்க தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்திருந்தது. தற்போது ரஷ்யாவும் உதவ முன்வந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி தொடர்பில் தகவல் வெளியானதும், தமக்கு துக்கத்தை ஏற்படுத்தியதாக துருக்கியின் எர்டோகன் தெரிவித்திருந்தார்.



ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 சிறார்கள்!
[Monday 2024-05-20 06:00]

ஜேர்மனியில் பெந்தெகொஸ்தே கூடார முகாம் மீது மின்னல் தாக்கியதில் 38 சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்து 700 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் Soest மாவட்டத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெந்தெகொஸ்தே கூடார முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில் மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.



ஹரி - மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் இலவச விமான சேவை அளித்தவர் தேடப்படும் குற்றவாளி!
[Monday 2024-05-20 06:00]

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் கட்டணமில்லா விமான சேவையை அளித்தவர் நிதி முறைகேட்டில் சிக்கி அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி என்றே தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரிய தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் பீஸ் என்பதின் நிறுவனர் Dr. Allen Onyema. இவரே இளவரசர் ஹரி - மேகன் தம்பதி நைஜீரியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கட்டணமில்லா சேவையை அளித்தவர்.



60,000 கோடி லாபம் ஈட்டிய விமான நிறுவனம்: ஊழியர்களுக்கு போனஸாக 8 மாத சம்பளம்!
[Sunday 2024-05-19 19:00]

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால் எட்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது. 2023-24 நிதியாண்டில் விமான நிறுவனம் 1.98 பில்லியன் டொலர் (இலங்கைப் பணமதிப்பில் ரூபா. 59,032 கோடி) லாபத்தைப் பதிவு செய்துள்ளது.



"மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்" - பகீர் கிளப்பும் டொனால்டு டிரம்ப்!
[Sunday 2024-05-19 19:00]

அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ பைடன் (Joe Biden) அரசை விமர்சித்து வரும் டொனால்டு டிரம்ப், தற்போது உலகப்போர் வெடிக்கலாம் என பகீர் கிளப்பியுள்ளார்.



கனடாவில் தாயை கொடூரமாக கொன்ற மகன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!
[Sunday 2024-05-19 19:00]

கனடாவில் தாயை கொடூரமான முறையில் கத்தியில் குத்திக் கொன்ற மகன் ஒருவர், நீதிமன்ற விசாரணைகளின் போது கொலை செய்ய நினைக்கவில்லை என கூறியுள்ளார். தமது தாயாரை படுகொலை செய்யும் நோக்கில் கத்தியால் பல தடவை குத்தவில்லை என தெரிவித்துள்ளார்.



துபாயில் பள்ளி பேருந்துகளில் புதிய முயற்சி!
[Sunday 2024-05-19 19:00]

துபாயில் பள்ளி பேருந்துகளில் விளம்பரத்தரங்கள் ஒட்டுவது குறித்து புதிய முயற்சி எடுக்கவுள்ளதாக போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பள்ளிப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்புதல் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பள்ளிப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு கூடுதல் வருவாயை வழங்குதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள்: பிரித்தானியாவில் பேரணி! Top News
[Sunday 2024-05-19 08:00]

பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்டுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய இன்று 15 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதமொன்றினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள்.



முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்: கனேடிய பிரதிநிதியின் உருக்கமான பதிவு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இலங்கை உட்பட சர்வதேச தரப்புகளினால் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் கனேடிய அரசியலின் முக்கிய பிரதிநிதியும் சுகாதார அமைச்சருமான மார்க் ஹொலண்ட்டினால்(Mark Holland) அவரது அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Sunday 2024-05-19 08:00]

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது. நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.



அமெரிக்காவில் கஞ்சாவுக்கு பச்சைகொடி காட்டிய ஜோ பைடன்!
[Saturday 2024-05-18 16:00]

அமெரிக்காவில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.



கிர்கிஸ்தானில் தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-18 16:00]

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.



புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கனடா அரசின் நடைமுறை!
[Saturday 2024-05-18 16:00]

கனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை.



பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை!
[Saturday 2024-05-18 16:00]

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.



இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட வரலாற்று தீர்மானம்!
[Saturday 2024-05-18 08:00]

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வரலாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றில் முன்வைத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸின் 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில் அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel )இலங்கையின் மோதலுக்கு ஒரு தீர்வாக ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த முக்கிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.



பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்று எதிர்நோக்கிய நெருக்கடி!
[Saturday 2024-05-18 08:00]

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை குடும்பமொன்றின் தந்தை மற்றும் மகன் நாட்டில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டில் வசிக்க முடியாதெனவும் Home Office அறிவித்திருந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பத்து வயது மகனை கொண்ட குடும்பத்திற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா