Untitled Document
June 17, 2024 [GMT]
காணாமல் போனவர்கள் தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? - சுகாஸ் கேள்வி.
[Sunday 2024-05-26 17:00]


திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் 2 தமிழ் மீனவர்களை 5 நாட்களாகக் காணவில்லை. சிங்கள மீனவர்கள் காணாமற்போனால் ஹெலிகொப்டரில் தேடும் அரசு, தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் 2 தமிழ் மீனவர்களை 5 நாட்களாகக் காணவில்லை. சிங்கள மீனவர்கள் காணாமற்போனால் ஹெலிகொப்டரில் தேடும் அரசு, தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

  

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடற்றொழிலுக்காக சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போய் இருக்கின்றார்கள். அவர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைதிரும்பவில்லை. இதனால் கடற்றொழில் அமைப்புக்களும் அவர்களது குடும்பங்களும் மோசமான மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், வேதனையான விடயம் என்னவென்றால் அந்த அப்பாவி தமிழ் மீனவர்கள் இருவரையும் மீட்பதற்கு இலங்கை அரசோ இலங்கை கடற்படையோ முன்வரவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணி, மலைத்தொடரில் இருந்து காணாமல் போயிருந்தார். அவரை மீட்பதற்கு ஹெலிகொப்டர்கள் பறந்தன. தென்னிலங்கை கடற்பரப்பில் பல சிங்கள மீனவர்கள் காணாமல் போயிருந்த சந்தர்ப்பங்களில் அப்போதும் துரிதமாக ஹெலிகொப்டர்கள் விரைந்தன.

ஆனால், கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள இந்த தமிழ் மீனவர்களை மீட்பதற்கு ஒரு ஹெலிகொப்டர் கூட முன்வரவில்லை. தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. ஏன்? அவர்கள் தமிழர் என்பதாலா? இது இலங்கையின் இன பாகுபாட்டை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

உடனடியாக அவர்களை தேடுங்கள். அப்பாவி மீனவர்களின் உயிர்கள் போவற்கு காரணமாகிவிடாதீர்கள். சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற அமைப்புகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க கிளிநொச்சி மாவட்ட அமைப்புக்கள் ஆதரவு!
[Monday 2024-06-17 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.



முல்லைத்தீவில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!
[Monday 2024-06-17 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



நாளை இந்திய துணைத் தூதரகம் முற்றுகை! - மீனவர்கள் அறிவிப்பு.
[Monday 2024-06-17 17:00]

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .



சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!
[Monday 2024-06-17 17:00]

12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.



துட்டகைமுனு சிங்கள மன்னன் இல்லை - அவன் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழியே இல்லை!
[Monday 2024-06-17 17:00]

மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



வாக்குப்பெட்டிகளைத் தயார்படுத்த உத்தரவு!
[Monday 2024-06-17 17:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.



10 நிபந்தனைகளுக்கு அமைய போட்டியிடத் திட்டம் தயார்! - தம்மிக்க பெரேரா
[Monday 2024-06-17 17:00]

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 50% வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.



இத்தாலியில் இலங்கையரை கொலை செய்ய முயன்ற மற்றொரு இலங்கையர் கைது!
[Monday 2024-06-17 17:00]

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



பொலிஸ் பிடியில் இருந்து தப்பித்த கைதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
[Monday 2024-06-17 17:00]

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.



அல்லைப்பிட்டியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Monday 2024-06-17 17:00]

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் பின்னால் இராணுவத்தின் மறைகரம்! - சிறிதரன் குற்றச்சாட்டு. Top News
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார்.



பழக்கதோசத்தில் போட்டியிடுவார் சிவாஜிலிங்கம்!- என்கிறார் சுமந்திரன்.
[Monday 2024-06-17 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் நிறுத்தும் விடயத்தில் ஆதரவு வழங்குவதில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், பழக்கதோசத்தில் சிவாஜிலிங்கம் போட்டியிடுவார் என்றார்.



மாதகல் யுவதிக்கு கொரோனா தொற்று!
[Monday 2024-06-17 05:00]

மாதகலில் 20 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு உறவினர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சென்ற பின்னர், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.



ரணிலை தவிர வேறு வழியில்லை!
[Monday 2024-06-17 05:00]

தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தொடர்வதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளச்செய்ய முடியும் எனவும், பரிசோதனை முயற்சி ஒன்றை செய்து பார்க்கப் பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என்பதால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



தொல்புரத்தில் மாணவன் வீதியில் மயங்கி விழுந்து மரணம்!
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணம், தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும் இலங்கையில் குறையாதாம்!
[Monday 2024-06-17 05:00]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



பிரித்தானியா செல்ல முயன்ற திருகோணமலை யுவதி கட்டுநாயக்கவில் கைது!
[Monday 2024-06-17 05:00]

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இளம்பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



கிளிநொச்சி எரிபொருள் நிலையத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்! Top News
[Monday 2024-06-17 05:00]

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எரிபொருள் நிரப்ப வந்திருந்த நபர் அலைபேசியில் பேசியவாறும் மோட்டார் சைக்கிளை இயங்குநிலையில் வைத்திருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கும் வேளை அதில் தீ பற்றியது. பணியாளர்கள் உடனடியாக விரைந்து தீயை அணைத்தனர்.



அனலைதீவில் மிதந்து வந்த மர்மப்பெட்டி! - திறந்து பார்த்த போது ஆச்சரியம்.
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணம் - அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.



ஆபாச காணொளிகளை பதிவேற்றிய இளம் தம்பதி கைது!
[Monday 2024-06-17 05:00]

ஆபாச காணொளிகளை இணையத்தில் நேரடியாகப் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபட்ட இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா