Untitled Document
June 16, 2024 [GMT]
வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது!
[Thursday 2024-05-23 15:00]


தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது. அதேவேளை இந்தியாவின் பின்னணியில் சிவில் அமைப்புக்கள் செயற்படுகின்றன எனவே பொது வேட்பாளர் ஒரு நாடகம் ஒரு சதி  என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது. அதேவேளை இந்தியாவின் பின்னணியில் சிவில் அமைப்புக்கள் செயற்படுகின்றன எனவே பொது வேட்பாளர் ஒரு நாடகம் ஒரு சதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

  

மட்டக்களப்பு மேல்மாடி வீதியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டிலே 1949ம் ஆண்டிற்கு பிறகு இருக்கின்ற ஒற்றையாட்சி கட்டமைப்பை அகற்றிவிட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழர்கள் இந்த தீவிலே நிம்மதியாக வாழவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எமது கோரிக்கையாகும்.

அதன் அடிப்படையில் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் கடந்த 75 வருடமாக தமிழ் மக்கள் தொடர்சியாக அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் போராடிவந்து இன்று ஆயுத போராட்டம் பாரிய ஒரு உயிர்சேதங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நிற்கின்ற சூழ்நிலையிலே மீண்டும் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஆதரிக்கப் போகின்றோமா? அல்லது சமஸ்டி கட்டமைப்புக்காக குரல் கொடுக்கப் போகின்றோமா? என்ற விடயத்தை நாங்கள் தெளிவடைய வேண்டும்.

கடந்த 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு இனங்கி அவர்கள் மக்களுக்கு தமிழ் தேசியத்தை கூறிக்கொண்டு மாறாக 2016ம் ஆண்டு அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டது அதில் 6 பேர் கொண்ட குழுவில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் ஊடக பேச்சாளர் எம். சுமந்திரன் இருந்தனர்.

அதில் அவர்கள் ஏக்கிய ராஜ்சிய என்ற வார்த்தையை பிரயோகித்து மக்களை ஏமாற்றி ஒற்றியாட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவந்த அந்த நிலையை மாற்றி அவர்களாகவே ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இவர்கள் ஒரு பச்சை துரோகத்தை செய்கின்ற போது அந்த நேரத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் எழுக தமிழர் என்ற மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் இது தான் என மக்கள் எழுச்சி மூலம்; தெரியப்படுத்தினர்.

அன்றைய நேரத்தில் இந்த சிவில் அமைப்புக்கள் நித்திரை கொண்டதா? அல்லது கோமாவில் இருந்தனரா? என்பது தான் எனது கேள்வி ஆகவே எங்களை பொறுத்தமட்டிலே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் எல்லாம் ஒரு நாடகம் ஒரு சதி இதற்கு பின்னணியில் இந்தியா நிற்கின்றது.

இந்தியா விரும்புகின்ற நபர்களே அரசியல் தரப்புக்களையே காட்டினால் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் அவர்களின் சொல்லை கேட்கமாட்டார்கள் என்பதற்காக இப்படிப்பட்ட சிவில் அமைப்புக்கள் போன்றவற்றை தங்களின் நிகழ்சி நிரலை நிறைவேற்றுவதற்காக இப்படிப்பட்ட கைங்கரியங்களை இந்தியா செய்கின்றது.

தேர்தல் பகிஸ்கரிப்பு விடயத்தில் மூன்று விடயங்களை சொல்ல இருக்கின்றோம் அதில் முதலாவது ஜனாதிபதியாக வார விரும்புவருக்கு ஒரு செய்தியை சொல்ல இருக்கின்றோம் அவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்கள் ஏனையவர்களுக்கு வாக்களித்திருந்தால் தான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது என்ற விடையத்தையும்.

இரண்டாவதாக ஜனாதிபதியாக வராமல் தோற்றவர்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு எழுத்து மூலம் கொடுத்திருந்தால் நாங்கள் ஜனாதிபதியாக வந்திருக்கலாம் என்ற விடயத்தையும்.

மூன்றாவதாக இந்த தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூலோக அரசியல் நலனை இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டுவந்த இந்த வல்லரசுகள் இனிமேலும் வந்து தமிழர்களை நாங்கள் பகடக்காயாக பயன்படுத்த முடியாது அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிய பிறகுதான் தாங்கள் விரும்பிய தலைவர்களை கொண்டுவர இந்த மக்களிடம் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதற்காகதான் இந்த தேர்தல் பகிஸ்கரிப்பை நாங்கள் அறிவித்தோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்!
[Sunday 2024-06-16 05:00]

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.



காரைதீவில் அடுத்த சோகம்- உகந்தைக்கு சென்று திரும்பிய வைத்தியர் கடலில் விழுந்து மரணம்!
[Sunday 2024-06-16 05:00]

அம்பாறை - காரைதீவில் நேற்று இரவு வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!
[Sunday 2024-06-16 05:00]

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.



13வது திருத்தத்தை தேர்தல் பிரசாரமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்!
[Sunday 2024-06-16 05:00]

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



எம்.பி வாகனம் மீது துப்பாக்கிச் சூடு - பொலிஸ் உயர் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
[Sunday 2024-06-16 05:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவை கைது செய்வதற்காக நீதிமன்ற உத்தரவுக்கமை செயற்படவுள்ளதாக என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



தீபச்செல்வனுக்கு ரிஐடி மீண்டும் அழைப்பாணை!
[Sunday 2024-06-16 05:00]

எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ளதாக தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.



அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டங்கள்!
[Sunday 2024-06-16 05:00]

தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.



சஜித்துடன் இனி விவாதம் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி முடிவு.
[Sunday 2024-06-16 05:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இனி எந்தவொரு விவாதமும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு மதிப்பெண் முறை அறிமுகம்!
[Sunday 2024-06-16 05:00]

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.



விறகு எடுக்கச் சென்றவரை அடித்துக் கொன்ற காட்டு யானை!
[Sunday 2024-06-16 05:00]

திருகோணமலை - சம்பூர் தங்கபுரம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் பள்ளிக்குடியிருப்பு - தங்கபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திருமகன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தலைமன்னாரில் தடுத்து நிறுத்தப்பட்ட கனிய மணல் அகழ்வு! Top News
[Saturday 2024-06-15 16:00]

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் இடம்பெறவிருந்த கனிய மணல் அகழ்வுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.



பௌத்த மயமாக்கலுக்கு உதவுகிறது பாஜக! - கஜேந்திரன் குற்றச்சாட்டு.
[Saturday 2024-06-15 16:00]

பாரதிய ஜனதா கட்சி இலங்கை தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.



20 ஆம் திகதி வருகிறார் ஜெய்சங்கர்!
[Saturday 2024-06-15 16:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் 20ஆம் திகதி இலங்கைக்கு வர இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



சட்டப்புத்தகத்தில் உள்ள 13 ஐ நடைமுறைப்படுத்தும் போது ஏன் பிரச்சினை வருகிறது?
[Saturday 2024-06-15 16:00]

எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.



கனடா பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தமிழ் மாணவி இலங்கை இராணுவம் மீது குற்றச்சாட்டு!
[Saturday 2024-06-15 16:00]

கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குபற்றிய தமிழ் மாணவி இலங்கை இராணுவத்தை கடுமையாக சாடியுள்ளார். இலங்கையில் இன்றுவரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் சரிகா நவநாதன் என்ற தமிழ் மாணவியின் உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - புதிய விசாரணைக்குழுவை நிராகரித்தது கத்தோலிக்க திருச்சபை!
[Saturday 2024-06-15 16:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.



நீர்கொழும்பு கடலில் குளித்த இரு தமிழ் மாணவர்கள் நீரில் மூழ்கிப் பலி!
[Saturday 2024-06-15 16:00]

நீர்கொழும்பு- குடாப்பாடு மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நேற்று கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
[Saturday 2024-06-15 16:00]

திருகோணமலை - கிண்ணியா வான்எல சுண்டியாறு பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிண்ணியா இடிமனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தராவார்.



குறிகாட்டுவானில் கரையொதுங்கிய சடலம்!
[Saturday 2024-06-15 16:00]

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால், சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பொதுவேட்பாளராக களமிறங்கத் தயார்! - அனந்தி அறிவிப்பு.
[Saturday 2024-06-15 06:00]

தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயாராக உள்ளேன் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா