Untitled Document
June 16, 2024 [GMT]
இலங்கையில் போரில் காணாமல் போனவர்கள் மதிப்பிடப்பட்டதை விட அதிகம்!
[Thursday 2024-05-23 05:00]
இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

  

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.

முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை 'வட்டுவாகல் பாலம்' எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட்,

'15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டு வரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது' எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

'இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்' எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மன்னார் ஆயரைச் சந்தித்தார் ஜனாதிபதி ரணில்! Top News
[Sunday 2024-06-16 18:00]

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.



வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்!
[Sunday 2024-06-16 18:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



வீரமுனையில் வரவேற்பு கோபுரம் அமைப்பதில் முறுகல்!
[Sunday 2024-06-16 18:00]

சம்மாந்துறை - வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசவுள்ளாராம் சம்பந்தன்!
[Sunday 2024-06-16 18:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.



வாள்வெட்டுக் கும்பலை விரட்டிப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்!
[Sunday 2024-06-16 18:00]

கொடிகாமம் - மீசாலையில், விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதன் போது சிவகுமார் ராகுலன் 25 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



வட்டுக்கோட்டை வாள்வெட்டு - சந்தேக நபர்கள் இருவர் கைது!
[Sunday 2024-06-16 18:00]

வட்டுக்கோட்டை - துணவிப் பகுதியில், கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



வெள்ளை ஈ தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதி வீழ்ச்சி!
[Sunday 2024-06-16 17:00]

வெள்ளை ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதியில் 30 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்!
[Sunday 2024-06-16 05:00]

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.



காரைதீவில் அடுத்த சோகம்- உகந்தைக்கு சென்று திரும்பிய வைத்தியர் கடலில் விழுந்து மரணம்!
[Sunday 2024-06-16 05:00]

அம்பாறை - காரைதீவில் நேற்று இரவு வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!
[Sunday 2024-06-16 05:00]

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.



13வது திருத்தத்தை தேர்தல் பிரசாரமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்!
[Sunday 2024-06-16 05:00]

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



எம்.பி வாகனம் மீது துப்பாக்கிச் சூடு - பொலிஸ் உயர் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
[Sunday 2024-06-16 05:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவை கைது செய்வதற்காக நீதிமன்ற உத்தரவுக்கமை செயற்படவுள்ளதாக என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



தீபச்செல்வனுக்கு ரிஐடி மீண்டும் அழைப்பாணை!
[Sunday 2024-06-16 05:00]

எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ளதாக தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.



அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டங்கள்!
[Sunday 2024-06-16 05:00]

தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.



சஜித்துடன் இனி விவாதம் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி முடிவு.
[Sunday 2024-06-16 05:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இனி எந்தவொரு விவாதமும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு மதிப்பெண் முறை அறிமுகம்!
[Sunday 2024-06-16 05:00]

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.



விறகு எடுக்கச் சென்றவரை அடித்துக் கொன்ற காட்டு யானை!
[Sunday 2024-06-16 05:00]

திருகோணமலை - சம்பூர் தங்கபுரம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் பள்ளிக்குடியிருப்பு - தங்கபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திருமகன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தலைமன்னாரில் தடுத்து நிறுத்தப்பட்ட கனிய மணல் அகழ்வு! Top News
[Saturday 2024-06-15 16:00]

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் இடம்பெறவிருந்த கனிய மணல் அகழ்வுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.



பௌத்த மயமாக்கலுக்கு உதவுகிறது பாஜக! - கஜேந்திரன் குற்றச்சாட்டு.
[Saturday 2024-06-15 16:00]

பாரதிய ஜனதா கட்சி இலங்கை தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.



20 ஆம் திகதி வருகிறார் ஜெய்சங்கர்!
[Saturday 2024-06-15 16:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் 20ஆம் திகதி இலங்கைக்கு வர இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா