இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 22, 2026 [GMT]

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


  

ஒரு பொருள்பொதிந்த மற்றும் நிலையான அமைப்பு மாற்றத்திற்கான ஒரே வழி பெரியளவிலான அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் ஆகும். இதைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, நாட்டை நியாயமாக ஆள 12 அமைச்சர்கள் உட்பட 60 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட முற்றிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வர வேண்டும். அரசியல் அமைப்பில் அவர்களில் எவரேனும் திறமையற்றவர்களாகவோ அல்லது அழிவுகரமானவர்களாகவோ இருந்தால், அல்லது ஊழல்வாதிகளாகக் காணப்பட்டால் அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் (மக்களுக்கு) வழங்கப்பட வேண்டும். நீதித்துறையை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட வேண்டும். Sri Lanka's Financial Meltdown Could Be End Of The Road For Rajapaksa Family - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

படுமோசமாகத் தோல்வியுற்ற ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களின் 1977 அரசியலமைப்பைத் திருத்தங்களுடன் இணைப்பது நாட்டுக்கு நன்மை பயக்காது. அதே நேரம், ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து அரசியலமைப்பிற்கு முரணான உத்தரவுகளைப் பெறுவதை காவல்துறையும் இராணுவமும் நிறுத்த வேண்டும். அதற்கான நேரம் இது. சட்டவிரோதமாகக் கைது செய்தல் மற்றும் குற்றச்சாட்டுக்களைச் சோடித்தல், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுதல் மற்றும் மக்களுக்குத் தீங்கு விளைவித்தல் ஆகியவை அடங்கும். அவ்வாறு செய்வது அரச ஆதரவு பயங்கரவாதம் ஆகும், அது சட்டப்படி தண்டனைக்குரியது.

திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை நீக்குதல்

அண்மைய அரசியலமைப்புத் திருத்தங்களில் மிகவும் கசப்பான விடயங்களில் ஒன்று நீதித்துறையின் அதிகாரத்தை நீக்கி நிறைவேற்று சனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டதாகும். இன்று அரசியல்வாதிகள் நீதித்துறையை முடக்கி, நாட்டில் அழிவுகளை ஏற்படுத்த வழிகோலியுள்ளனர். அரசியல்வாதிகள், சனநாயகத்தின் முக்கிய அம்சத்தை அகற்றியுள்ளது: நீதித்துறையை சட்டமன்றம் மற்றும் நிறைவேற்றுத் துறைகளில் இருந்து பிரிக்கத் தவறிவிட்டது.

The independence of the judiciary was systematically taken away via recent constitutional amendments. With the enacting of the scoundrel 20th amendment, justice/judiciary, law and order, and accountability virtually disappeared from Sri Lanka—turning into a lawless society.

அண்மைக் காலத்தில் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் திட்டமிட்ட முறையில் பறிக்கப்பட்டது. அயோக்கியத்தனமான 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டதன் மூலம், நீதி/நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து - சட்டமற்ற சமூகமாக மாற்றியுள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி

துன்புறுத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள், விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் தேசிய வளங்களை (ஒருவேளை, அதிட்டப் பகிர்வு) கொள்ளையடிப்பதற்கு நிறைவேற்று சனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒரு சரியான அமைப்பை உருவாக்கியது. தவறான தகவல், சுயநல சனாதிபதிகள் நேர்மையற்ற ஆலோசகர்கள், அதிகாரிகள் மற்றும் வணிகர்களால் ஏமாற்றப்பட்டனர்: சிறிலங்கா ஒட்டாண்டி ஆவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

இருபதாவது திருத்தத்திற்குப் பின்னர், பொதுமக்களின் அவலங்கள் அதிகரித்தன. 20 ஏ ஆவது நீதித்துறை உட்பட, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட அரசாங்கத்தின் சட்டமன்ற மற்றும் நிர்வாகக் கிளைகளை மேற்பார்வையிடும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் அகற்றுவதற்காக வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் அரசியலமைப்பு சபைக்குள் ஊடுருவி, அரசியல்வாதிகள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு இலவச அனுமதிச் சீட்டுக்களை வழங்கி, பொருளாளர் மற்றும் தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிக்க வாய்ப்பளித்தனர். இந்த முறைகேடுகளால், சராசரி மனிதர்கள் இப்போது பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகளுக்கு மிக அதிக விலை கொடுத்து உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர். அதன் விளைவு மக்களின் துன்பம் அதிகரித்துள்ளது.

அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடான நடத்தை

இப்போதெல்லாம், நடைமுறையில் அதிக பணம் உள்ள எவரும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம். அரசிதழின் அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் வியாபாரிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் எனத் தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சில சமயங்களில் ஒரு பழைய ஆனால் விலையுயர்ந்த வட்டரங்கில் (circus) வரும் கோமாளிகளைப் போலச் செயல்பட்டனர் - சட்டத்தை மீறுகிறார்கள்.

மற்ற நேரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தொலைநாடகமாக மாற்றினர் - பொது பொழுதுபோக்கு. ஒரு எடுத்துக்காட்டு 2018 இல் அரசியல் நெருக்கடியின் போது; அவர்கள் குண்டர்கள் போல் பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொண்டு பொதுச் சொத்துக்களை தண்டனைக்குப் பயமின்றி அழித்தார்கள். இந்த அரசியல் குண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும், பொதுச் சொத்துக்களை அழித்ததற்காகவும் ஏன் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதை பொதுமக்கள் அறிய விரும்புகிறார்கள்.

ஏன் இந்த இரட்டை நிலைகள்?

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருமே நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குண்டர்களாக மாறி, அரை - பாதுகாப்பின் கீழ் ஒரு திசைதிருப்பலை உருவாக்க அல்லது யாரோ ஏதோவொன்றிலிருந்து கவனத்தை ஈர்க்க தங்கள் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றம் பொதுமக்களுக்கு ஒரு பயனற்ற ஆனால் விலையுயர்ந்த விவகாரமாகவும், கேவலமான நடத்தை எடுத்துக்காட்டுக்களை வழங்கும் அழிவுகரமான நிறுவனமாகவும் மாறியுள்ளது: குறிப்பாக குழந்தைகளுக்கு. ஒரு மோசமான எடுத்துக்காட்டு. பயனற்ற மாகாணசபைகளைப் போல, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி 'நகைச்சுவை நடிகர்களால்' பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி 'நகைச்சுவை' நடிகர்களால் இந்த மதிப்பற்ற வட்டரங்கு நடத்தப்படுகிறது.

ஊழல் மன்னர்கள்

அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் மத்தியில் வெட்கப்படத்தக்க வகையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது நகராட்சிகள், சுங்கத் திணைக்களம், உள்நாட்டு வருவாய்த்துறை , உரிமம் வழங்கும் முகவர்கள், கடவுச்சீட்டு அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் பரவியுள்ளது. அரசாங்க அதிகாரிகள் எதையாவது வழங்கினாலும் அல்லது மக்களுக்கு ஒப்புதல் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் ஊழல் உள்ளது - இலஞ்சம் வாங்குபவர்கள் இல்லாத எந்த அரசாங்க அலுவலகமும் இல்லை. மத்திய வங்கிப் பணமுறிவு ஊழல் போன்ற பெரிய ஊழல்களில் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதியின் முன் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, இப்போது அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். மேலும் பலர் கொண்டு வருப்படுகிறார்கள். இது மிகவும் வேடிக்கையானது.

LitroGas, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, போக்குவரத்துப் பிரிவுகள் (தொடர்வண்டிகள் மற்றும் பேருந்துகள்), ஸ்ரீலங்கன் விமான சேவை, போன்ற பல அரசாங்க நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதற்கும் இதே காரணம்தான்: ஊழல் மற்றும் உறவினர், நண்பர்களுக்குப் பதவிகள் கொடுப்பது. இந்த நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் அனைத்தும் வருவாய் ஈட்டக்கூடிய திறன் கொண்டவை, ஆனால் அப்படி அவை இன்று இல்லை. திறமையின்மை, அதிகரித்த செலவுகள், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் திருட்டுப் போன்றவற்றால், இவை பாரிய இழப்புகளைப் சந்திக்கின்றன. கணக்கியல், தணிக்கை மற்றும் இலஞ்ச ஆணையம் உள்ளிட்ட மேற்பார்வைகளை அகற்றுவது, விளைவுகள் இல்லாமல் நிதியை திருடுவதற்கான சரியான களத்தை உருவாக்கியுள்ளது.

நிர்வாகக் குழுவால் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் தொடர்வது

இதற்கிடையில், முன்னாள் சனாதிபதி சட்டவிரோதமாக கொலைகாரர்கள் மற்றும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்ததுடன் அவர்களுக்கு உயர் அரசாங்க பதவிகளையும் வழங்கினார்! அரசாங்கக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்தத் திறனும் அல்லது நம்பகத்தன்மையும் இல்லாத நபர்களை அவர் நியமித்தார், மேலும் சிலரை தூதர்களாகவும், மூத்த தூதரக ஊழியர்களாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பினார் - உறவினர், நண்பர்களுக்குப் பதவிகள் கொடுப்பதின் உன்னதமான எடுத்துக்காட்டுக்கள். தற்போதைய சனாதிபதியைப் போன்று தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், போட்டியிடாதவர்கள் அல்லது "தேசியப் பட்டியலில்" கூட இடம் பெறாதவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக நுழைவதற்குத் தற்போதைய ஊழல் அனுமதித்தது. இலங்கையில் மாத்திரமே இவ்வாறான அதீத ஊழல் இடம்பெற்று உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் (Guinness Book of world records) இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசியல்வாதிகளின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் வெட்கக்கேடானது.

நாடாளுமன்றத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டவிரோத நியமனங்களைத் தடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், நீதித்துறையும் 'தோல்வியடைந்தது' : யாரும் அவற்றை எதிர்க்கவில்லை! இதன் விளைவாக, அவர்களில் சிலரை நா.உறுப்பினர்கள் மட்டுமல்ல, அமைச்சர்கள், பிரதமர்கள் மற்றும் சனாதிபதியாகவும் கூட அனுமதித்தார்கள்! இதன் விளைவாக நாட்டிற்கு எதிர்மறையான முடிவுகள் வெளிப்படையானவை. என்ன ஒரு அபத்தம்! பெரும்பாலான 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்தே இந்த மோசடி மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு பங்களித்துள்ளனர். இலங்கையில் மட்டும்தான் இவ்வாறான சூழ்ச்சிகள் நடக்கின்றன.

இலங்கையின் ஒட்டாண்டிநிலைக்கான பாதை

ஊழல், மோசமான தீர்ப்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுடன் இணைந்து, இந்த அமைப்புகள் இலங்கையில் ஒட்டாண்டிநிலைக்கு பாதை அமைத்தன. இரண்டாவது முக்கிய சிக்கல் விதிவிலக்காக அதிக பொதுச் செலவுகள்—1.5 மில்லியன் பொது ஊழியர்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள். நம்பமுடியாத வகையில், 12 ஆண்டு அமைதிக்குப் பிறகும் கூட, தேவையில்லாமல் மிகைப்படுத்தப்பட்ட இராணுவத்தை பராமரித்தது. இந்தக் கட்டுரைத் தொடரின் 9 முதல் 11 வரையிலான பகுதிகள் "செலவுகளைக் குறைப்பதன் முக்கியத்துவம்" என்பதன் கீழ் இந்த நடவடிக்கைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அதிக வேலையில் இருக்கும் ஆயுதப் படைகளின் மனித பலத்தை பாதியாகக் குறைப்பதும் இதில் அடங்கும். இருப்பினும், அரசாங்கம் அவ்வாறு செய்கிறது என்பதற்கான குறிப்புக் கூட இல்லை - நிர்வாகத்தின் அபத்தம்.

கடந்த தசாப்தத்தில், அரசாங்கங்கள் படிப்படியாக இராணுவத்தின் பலத்தை ஆண்டுக்கு 10% குறைத்திருக்க வேண்டும் (முதன்மையாக இயற்கைச் சிதைவுகள் மூலம்); அது குறிப்பிடத்தக்க வகையில் செலவினங்களைக் குறைத்து, ஆண்டு வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கு உதவியிருக்கும், ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்கள் செலவுகளைக் குறைக்க எதுவும் செய்யவில்லை.

நடைபாதை கட்டுவதற்கும், அழகுபடுத்துவதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும், மூத்த இராணுவ அதிகாரிகளின் வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் (அதாவது, இலவச தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதற்கு) இராணுவ உழைப்பு மிகவும் ஒறுப்பானது: அது இராணுவத்தின் வேலையல்ல. தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு (பொதுமக்கள் அனுபவிக்காத) எரிபொருள், மின்சாரம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட கொடுப்பனவுகள் அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து தேவையற்ற சலுகைகளும் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள், எதேச்சதிகார சக்திகளை அல்ல

ஆதாரமற்ற அவசரகால பிரகடனத்தால் வலுவூட்டப்பட்ட சனாதிபதி, எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களை தன்னிச்சையாக கைது செய்யத் தள்ளினார். அரசியல் சாசனத்தின்படி, இந்தத் தோல்வியடைந்த, சனநாயகமற்ற அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்களுக்கு 100% உரிமை உள்ளது. தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சட்டவிரோதக் கைதுகளை திருப்திப்படுத்தவும், நேர்மையற்ற அரசியல்வாதிகள் சிலரின் உத்தரவை நிறைவேற்றவும், தங்கள் உயர் அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிகிறது.

சனாதிபதியை திருப்திப்படுத்துவதற்காக இராணுவம் அரசியலமைப்பிற்கு முரணான இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவுவதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் மற்றும் ஏனையோரையும் நிபந்தனையின்றி சனாதிபதி விடுவிக்க வேண்டும். இராணுவ புலனாய்வு மற்றும் பிற மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்தி மிரட்டாமல் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும்.

  
   Bookmark and Share Seithy.com


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா