தமிழ் மரபுத் திங்கள் உருவான வரலாறு - (கனடா) Tamil heritage month Canada | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 22, 2026 [GMT]

தமிழ் மரபுத் திங்கள் உருவான வரலாறு - (கனடா) Tamil heritage month Canada Top News
[Wednesday 2020-01-01 07:00]

கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். பல நாடுகளில் இருந்து வருகை தந்து, எமக்கு முன்னர் இங்கு குடியேறிய பல இனக்குழுக்கள் கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, தமது அடையாளத்தையும் இழக்காமல், இருப்பைத் தக்க வைத்துள்ளன. அதே வேளையில் தமது மரபுகளையும் பேணி முன்னெடுக்கின்றன. அவ்வகையில் நாமும் நமது அடையாள இருப்புக்கான, எமது மரபுகளையும் பேண வேண்டும்.


  

2003ம் ஆண்டில் முதன் முதலாகக் கனடாத் தமிழ்க் கல்லூரியால் ரொரன்ரோ நகரை மையப்படுத்தித் தமிழ் மொழி வாரம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஓர் இனத்தின் உயிரின் இருப்பாக, ஆணிவேராக அமைந்திருப்பது அந்த இனத்தின் மொழியாகும். இந்த அடிப்படையில் தமிழ்மொழி வாரத்தின் முழக்கமாக 'தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.

தமிழ்க் கல்வியை மழலையர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிக்கும் வசதிகள் இருந்தும் தமிழ் மாணவரும் பெற்றோரும் தமிழ்க்கல்வி கற்பதில் பெருமளவில் அக்கறை எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருந்தது. எனவேஇ தமிழ்மொழி கற்பதை முன் நிறுத்துவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்தத் தமிழ் மொழி வாரத்தின் முதன்மை நோக்கமாகவிருந்தது. கனடியத் தமிழர்களிடையே இருக்கின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து 'தமிழ் மேம்பாட்டுக் கழகம்' என்ற பெயரில் அவையும் ஒன்று உருவாக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழி வாரத்தின் முக்கிய நோக்கமாகச் கனடாத் தமிழ்க் கல்லூரியும், ஏனைய கனடியத் தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கனடா வாழ் ஈழத் தமிழர்களின் கவனம் தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்க் கல்வி, தமிழியல் ஆய்வு போன்ற துறைகளில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் மொழி வார நிகழச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

தமிழ் மொழியைப் பல தலை முறைகளுக்கு நிலைத்து நிற்கச் செய்வதற்கும், மொழியின் மேம்பாட்டைத் திறன் மிக்க முறையில் கொண்டு செல்வதற்கும் கனடாவில் தமிழ் மொழிக் கல்வியைப் பரவலாக்கவும் வேண்டித் தமிழ்மொழி வாரத்தை ஆண்டு தோறும் கொண்டாடுவதெனவும் மேற் கூறிய நோக்கங்களை நிறைவேற்றவும் கீழ்வரும் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

1. எங்கள் பிள்ளைகளைத் தமிழ் வகுப்பில் சேர்ப்போம்.

2. பெற்றோரும் பிள்ளைகளும் தமிழரிடையே தமிழிற் பேசுவதை உறுதி செய்வோம்.

3. நாம் அனைவரும் முடிந்த வரை பிறமொழி விலக்கித் தமிழைப் பயன்படுத்துவோம்.

4. எமது வாழ்வியலில் தமிழ் மொழிப் பண்பாட்டுக்கு முதன்மை அளிப்போம்.

5. தமிழ் நூல்களை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்.

6. தமிழ் கற்பது பற்றி நிலவும் ஐயங்களை நீக்குவோம்.

7. தமிழை முறையாகக் கற்பதில் நிலவும் குறைபாடுகளை அகற்றுவோம்.

8. பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரு பாடமாக தமிழ் மொழியைக் கற்க முடியும் என்னும் செய்தியைப் பரப்புவோம்.

9. தமிழியற் துறையைக் கனேடிய பல்கலைக் கழகத்தில் நிறுவுவதற்கு உழைத்து வரும் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவுவோம்.

10. நுண்கலைகள் பயிற்றுவிப்போர், தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.

11. தமிழ்மொழி வார நிகழ்வுகளில் ஊக்கமுடன் பங்காற்றுவோம்.

12. தமிழ் இதழியலாளர், தமிழ்மொழி வாரச் சிறப்பிதழாகத் தமிழ் மொழி பற்றி அறிவூட்டும் ஆக்கங்களை வெளியிடுவதையும், தமிழ்த் தொலைக் காட்சிகள் அவற்றை ஒளிபரப்புவதையும், தமிழ் வானொலிகள் அவற்றை ஒலிபரப்புவதையும் உறுதி செய்வோம்.

13. கனடாவில் பெருந் தொகையான அதாவது 30,000 மாணவர்கள் தமிழ்மொழி கற்பதை உறுதிப்படுத்துவோம்.

இவ்வாறு தமிழ்மொழி வாரத்துக்கு உறுதி எடுக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும், பட்டிமன்றங்களும், அறிஞர்களின் கருத்தரங்குகளும், பல பெரியார்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இசைவல்லுனர்கள் போன்றோரால் பல தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்மொழி வார முதல் நாள் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகத் தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி. சிந்தியா பாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தைத் திங்களிலும் மாணவர், பெற்றோர் மத்தியில் தமிழர் மரபுகளைப் போற்றிப் பேணும் நடவடிக்கைகளைத் 'தமிழ் மொழி வாரம்' செய்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் இறுதியில் தமிழ்க் கல்வியை கற்பிக்கும் அமைப்பான அறிவகமும் இணைந்து 'தமிழ் மரபுத் திங்கள்' அமைப்பு உருவாக்கம் பெற்றது. இவ்வமைப்பு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பானது வருவாய் நோக்கற்றதாகும். இதில் இப்போது பல அமைப்புகளும் இணைந்துள்ளன. தமிழ்மொழி வாரமானது, தமிழ் மரபுத் திங்கள் அமைப்பாக மாற்றம் பெற்றபின்னர், 2010இல் முதலாவது தமிழ் மரபுத் திங்கள் விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

தமிழர் மத்தியில் மட்டுமல்லாமல், எமது மரபுகளை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, முறையான பிரகடனம் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டது. திட்டங்களின் செயற்பாடுகள் வாயிலாக, 2012இல் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம், ஏயாக்ஸ், பிக்கெரிங் நகரங்களும் 2013இல் பிராம்ரன், தொரன்ரோ, நகரங்களும், 2014இல் ஒட்டாவா நகரமும் தைத் திங்களைத் தமிழரின் மரபுரிமைத் திங்களாக அறிவித்தன. 2014இல் ஒன்ராரியோ மாநில அரசு தமிழ் மரபுத் திங்களைச் சட்டவலுவுள்ளதாக உருவாக்கியது. 2016இல் கனடிய மத்திய அரசு தமிழ் மரபுத் திங்களை ஏற்றுச் சட்டமியற்றியது. இச்சட்டத்தின் ஊடாக கனடா நாடு முழுமையும் தைத்திங்களை தமிழ் மரபுரிமைத் திங்களாக அனைவரும் கொண்டாடக் கூடியதாக உள்ளது.

2019ஆம் ஆண்டில் தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, முதலாவது உலகத் தமிழியல் மாநாடு - தமிழியல்: இன்றும் இனியும் என்னும் தலைப்பில் ரொரன்ரோவில் நடைந்தேறியது. இம்மாநாட்டுக்கு, தாயகத்தில் இருந்தும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர் வருகை தந்திருந்தனர். இம்மாபெரும் மாநாட்டைக் கனடாத் தமிழ்க் கல்லூரியானது அறிவகத்தோடும் கனடியத் தமிழர் தேசிய அவையினரோடும் இணைந்து நடத்தியிருந்தது.

- நன்றி -

  
   Bookmark and Share Seithy.com


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா