Untitled Document
April 25, 2024 [GMT]
 
ஆயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி: பிரித்தனிய விஞ்ஞானி அசத்தல்!
[Thursday 2022-06-09 16:00]

வாழ்நாள் முழுவதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் அணுக்கழிவு மூலம் வைர பேட்டரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கான இந்த பேட்டரிகள் ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும்.


மறைந்த கணவரின் மறுபிறவி என நம்பி நாகப்பாம்புடன் வாழ்ந்து வந்த பெண்மணி!
[Tuesday 2022-06-07 18:00]

இந்தியா மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மானஷா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் சரவல்லா மவுனேஷ் கம்பாரா இறந்துவிட்டார்.


கனேடிய நபருக்கு எதிர்பாராத நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-06-06 18:00]

கடந்த சனிக்கிழமையன்று இடமடபெற்ற லோட்டோ 6-49 ஜாக்பாட்டில் ஒன்ராறியோ நபர் ஒருவர் $6 மில்லியனை வெற்றி பெற்று பேரதிஸ்டத்தை பெற்றுள்ளார். இருப்பினும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட $1 மில்லியன் பரிசை ப்ரேரிஸில் உள்ள ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், ஜூன் 8 அன்று நடக்கவிருக்கும் அடுத்த லோட்டோ 6-49 டிராவிற்கான ஜாக்பாட் $5 மில்லியனாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இறந்த தந்தையை உயிருடன் கொண்டுவந்த குடும்பத்தார்!
[Friday 2022-06-03 18:00]

தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார்.


தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இந்திய இளம்பெண்!
[Friday 2022-06-03 06:00]

இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார். க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை என்று யாரும் இல்லை.


'பிண நீரை' விற்று பணம் சம்பாதிக்கும் வினோத பெண்!
[Saturday 2022-05-28 16:00]

அமெரிக்காவில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட ஏரிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்று அழுக்கான போத்தல் நீரை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில், லாஸ் வேகாஸின் மீட் (Mead) ஏரியின் கரையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு கடைக்காரர் அப்பகுதியால் உருவாக்கப்பட்ட புதிய ஆர்வத்திலிருந்து லாபம் ஈட்ட ஒரு தனித்துவமான வழியைக் கண்டுபிடித்துள்ளார்.


76 வயது மூதாட்டியை கரம்பிடிக்கும் 19 வயது சிறுவன்!
[Friday 2022-05-27 17:00]

19 வயது சிறுவனுக்கு 76 வயது ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளமை நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் திருமணம் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என அந்த சிறுவன் கூறியிருக்கிறான். 19 வயதான கியூசெப் டி'அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.


நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்!
[Thursday 2022-05-26 16:00]

கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்கு ஜாக்கி என்று பெயரிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.


83 வயதில் ஆபாசப்பட நட்சத்திரமாக மாறிய பாதிரியார்!
[Wednesday 2022-05-25 17:00]

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு, 83 வயதில் ஆபாச திரைப்பட நட்சத்திரமாக மாறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாதிரியார் நார்ம் செல்ஃப் (Norm Self) சமீபத்தில் தனது முதல் அடல்ட் திரைப்படத்தில் நடுத்துள்ளார். மேலும், அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்று விவரித்துள்ளார். தகவல்களின்படி, நார்ம் செல்ஃப் முன்பு போதகராகப் பணியாற்றினார், ஆனால் பல தசாப்தங்களுக்கு முன்பு விலகினார். பின்னர் அவர் வயது வந்தோருக்கான திரைப்படத் துறையில் நுழைந்தபோது அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை உணர்ந்தார்.


உலக நாடுகளை மிரள வைத்த இலங்கை தற்காப்பு கலை!
[Tuesday 2022-05-24 16:00]

அங்கம்பொர என்பது இலங்கைக்கே உரித்தான ஒரு தற்காப்புக்கலை. இந்த பெயர் உலகில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும் இந்த தற்காப்புக் கலையின் தனித்துவத்தின் காரணமாக, இப்போது பலர் அதைப் பற்றி அறியத் தொடங்குகிறார்கள். கிராமப்புறங்களில் மறைந்திருந்த அங்கம்பொர கலை படிப்படியாக வெளிவரும் காலம் தான் இது.


ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலத்தில் விற்கப்பட்ட கார்! Top News
[Saturday 2022-05-21 16:00]

உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலத்திற்க்கு சென்று விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் இன்றைய நவீன காலக்கடத்தில் பல பொருட்கள் வந்தாலுமே பழைய பொருட்களுக்கு எப்பவுமே மவுசு இருக்கதான் செய்கிறது. அதனால் தான் பழைய ஓவியங்கள், பொருட்கள், உபகரணங்கள் என பலவும் ஏலத்தில் பலரால் அதிகமான விலைக்கு வாங்கப்படுகிறது.


ஓட்டை குடையின் விலை 1.2 லட்ச ரூபாய்: அப்படி என்ன சிறப்பு?
[Friday 2022-05-20 16:00]

ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.


திகதியை சொன்னால் கிழமையை சொல்லும் சிறுவன்!
[Tuesday 2022-05-17 16:00]

வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் - சங்கீத பிரியா தம்பதியரின் மகன் ரக்ஷன். 5 வயது மட்டுமே நிரம்பிய இவ்விறுவனிடம் ஏதேனும் ஒரு தேதியை குறிப்பிட்டு கேட்டால், அந்த தேதி என்ன கிழமையில் வருகிறது என்பதை சரியாக கூறுகிறான்.


தங்களுக்கு தாங்களே தீவைத்து கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி!
[Friday 2022-05-13 16:00]

ஹாலிவுட்ன் ஜோடி கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர். இவர்கள் இருவரும் ஸ்டண்ட் கலைஞர்கள். இருவரும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் காதலில் விழுந்தனர். இவர்கள் தங்கள்திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி உள்ளனர்.


சேனைக்கிழங்கில் பூத்த வினோத பூ! Top News
[Monday 2022-05-09 17:00]

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வடகாட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தோட்டத்தில் விளைந்த சேனைக்கிழங்குகளை அறுவடை செய்து வீட்டில் பதப்படுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதிசயிக்கும் வகையில் சேனை கிழங்கிலிருந்து, ஒரு அடி உயரத்தில் அழகான தோற்றத்தில் ஒற்றைப்பூ பூத்துள்ளது.


21 வருடங்களாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்துவந்த நபர்!
[Friday 2022-05-06 16:00]

தாய்லாந்தில் காதல் மனைவியின் சடலத்தை 72 வயதான முதியவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் செய்துள்ள சம்பவம் ஒறு பதிவாகியுள்ளது. தற்போது, மனைவியின் சாம்பலை வீட்டிலேயே வைத்து, அவரது பெயரில் அறப்பணி செய்துவருகிறார் சார்ன் ஜன்வாட்சாக்கல் (Mr Charn) எனும் காதல் கணவர்.


தங்க நிறத்தில் மாறவிருக்கும் ஈபிள் கோபுரம்!
[Thursday 2022-05-05 16:00]

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி, பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம் தங்க நிறமாக மாற உள்ளது. 1907இல் தங்க நிறத்தில் ஜொலித்த இரும்புப் பெண் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்திற்கு பல முறை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. முதலில் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட அக்கோபுரம், இப்போது ஒலிம்பிக் போட்டிகளையொட்டி ஒலிம்பிக் மெடல்களை பிரதிபலிக்கும் வகையில் பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாற உள்ளது.


விண்வெளியில் மற்றுமொரு பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
[Tuesday 2022-05-03 16:00]

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. பூமியை போல சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா என்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


தனது சிறுநீரை குடித்து உயிர் வாழும் வினோத நபர்!
[Tuesday 2022-05-03 08:00]

தினமும் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழும் இளைஞர் பற்றி பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின், ஹாம்ப்ஷயர் பகுதியில் வசிப்பவர் ஹாரி மட்டாடின்(34). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அவருடைய சிறுநீரை குடித்து வருகிறார். அதற்கு காரணமாக அவர் கூறியது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.


நெதர்லாந்தில் காரை இயக்கிய 4 வயது சிறுவன்!
[Monday 2022-05-02 16:00]

நெதர்லாந்தின் உட்ரெட்ச் (Utrecht) நகரில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் கார் ஒன்றை தனியாக வீதியில் செலுத்திச் சென்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் காரை செலுத்திச் சென்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களுடன் மோதியபின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றான்.


"தாய்மண்ணின் கலைநயத்தை பிரதிபலிக்க விரும்புகிறேன்" - புடவையில் வலம் வரும் நபர்!
[Saturday 2022-04-30 16:00]

மேற்கு வங்காளம் கொல்கத்தாவை சேர்ந்தவர் புஷ்பக் சென்( 26) . இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஆடை விஷயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது. ஆகவே, அவர் சேலை அணியத் தொடங்கினார். அந்த ஆடைகளில் வெளியிடங்களில் நடமாடியும் வருகிறார். அவரை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.


அமெரிக்காவில் ஒருநாள் மேயரான பூனை!
[Tuesday 2022-04-26 16:00]

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹெல் என்ற சிறிய நகரின் மேயராக பூனை ஒன்று பதவியேற்ற சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிய கண்களுடன் உடல் குறைபாட்டுடன் பிறந்த பூனை ஜிங்ஸ் தன் குறைபாட்டாலே சமூக வலைதளங்களில் பிரபலமானது.


இறந்த சிறுமிக்கு ஐபோன் உருவத்திலான கல்லறை! Top News
[Sunday 2022-04-24 18:00]

நியூஸிலாந்தில் இறந்த ஒரு சிறுமிக்காக ஐபோன் உருவத்திலான அவரின் குடும்பத்தினர் கல்லறைக்கல் நிர்மாணித்துள்ளனர். அச்சிறுமி தனது செல்லிடத்தொலைபேசியை மிகவும் நேசித்தவர் என்பதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. தெரேசா மதாஷியா(Theresa Madasia)எனும் சிறுமி 2018 ஆம் ஆண்டு தனது 15 வயதில் இறந்தார். இறப்பதற்கு முன்னர் பெரும்பாலான நேரத்தை தொலைபேசியுடனேயே அவர் செலவிடுவார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


சடலத்தை போல் துர்நாற்றம் வீசக்கூடிய வினோத மலர்! Top News
[Friday 2022-04-22 18:00]

சடலத்தை போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக பூத்துள்ளது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர், உலகிலேயே மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய மலராக கருதப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்தச் செடி, மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் 2வது தளத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.


70 வயதில் மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மூதாட்டி!
[Tuesday 2022-04-19 19:00]

இந்தியாவில் 70 வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில் தற்போது அவரும் இணைந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 70 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற பெண் IVF சிகிச்சைக்குப் பிறகு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.


கனடாவில் புலம்பெயர் தம்பதிக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!
[Monday 2022-04-18 17:00]

கனடாவில் புலம்பெயர்ந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. Surrey-வை சேர்ந்த தம்பதி ஜார்னில் மற்றும் மஜிந்தர். இவர்களுக்கு லொட்டோ 6/49ல் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து மஜிந்தர் கூறுகையில், இவ்வளவு பெரிய பரிசு எங்களுக்கு விழுந்ததை நம்பவே முடியவில்லை.


கனேடிய பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
[Saturday 2022-04-16 16:00]

கனடாவில் லொட்டரியில் தனக்குக் கிடைத்த பணத்தை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் பெண் ஒருவர். கனடாவில், North Bay என்ற இடத்தைச் சேர்ந்தவர் Sherry Forsman (67). அவருக்கு நான்கு மகள்களும், ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். Sherryக்கு லொட்டரியில் 100,0000 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.


ஏலியனாக மாறிய நபர்: மிரண்டுபோன குடும்பத்தினர்! Top News
[Friday 2022-04-15 17:00]

பிரேசிலில் ஏலியனை போன்று காட்சி அளிக்க விரும்பி மூக்கு, காது, விரல்களை நீக்கிய நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்தவர் மிச்செல் ஃபாரோ டோ பிராடோ(Michelle Farrow to Prado). இவரது உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 60க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டுள்ளார்.


அவுஸ்திரேலிய கடற்கரையில் செத்து ஒதுங்கிய கடல் டிராகன்கள்! Top News
[Thursday 2022-04-14 16:00]

கடற்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை கடல் டிராகன்கள் அதிக அளவில் செத்து கரையில் ஒதுங்கியுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கடல் டிராகன்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. நீண்ட மூக்குடன், பார்ப்பதற்கு குட்டி டைனோசார்கள் போன்று காணப்படும் இந்த கடல் டிராகன்கள் அரிய இன வகையாக கருதப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக கடல்நீரில் வாழ்கின்றன. இதனை பாதுகாக்கவும் ஆஸ்திரேலியா அரசு கவனம் செலுத்தி வருகிறது.


103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர்: அவரின் ஆசை என்ன தெரியுமா?
[Tuesday 2022-04-12 16:00]

ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர்.

Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா