|
|
கனடா செந்தில் குமரனின் அறக்கட்டளை ஊடாக அக்கறைப்பற்றை சேர்ந்த சசிகலாவிற்கு வெற்றிகரமாக இருதய சத்திர சிகிச்சை நிறைவு!
[Tuesday 2017-10-24 19:00]
|
25 வயதான சசிகலா தனது 9 வயது முதலே இதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். இவரது தந்தையான சிவசுப்ரமணியம் தனது மகளின் உயிரை காப்பதற்கு அடிக்கடி அரசாங்கமருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தபடியே இருந்துள்ளார். ஆனால் சத்திரசிகிச்சை செய்த இந்த நோயினில் இருந்து முழுமையாக வெளிவர முடியாத நிலைமை ஏனென்றால் அரசாங்க மருத்துவமனையில் இவருக்கு முன் இவரை விட மோசமான நிலைமையில் பலர் நாட்கள் வருடங்களாக உருண்டோடி சசிகலாவுக்கு திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது.
|
|
|
யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024!
[Friday 2024-03-22 18:00]
|
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.
|
|
|
இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு!
[Wednesday 2024-03-13 06:00]
|
COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.
|
|
|
கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்!
[Tuesday 2024-03-05 06:00]
|
இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
|
|
|
சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு!
[Tuesday 2024-03-05 06:00]
|
1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.
|
|
|
திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி!
[Monday 2024-03-04 06:00]
|
02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
|
|
|
இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்!
[Tuesday 2024-02-27 06:00]
|
இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.
|
|
|
வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா!
[Tuesday 2024-02-27 06:00]
|
எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
|
|
|
‘ஒற்றைக்கட்டண’ திட்டம்!
[Thursday 2024-02-08 18:00]
|
கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
|
|
|
தமிழ் மரபுத் திங்கள் 2024!
[Thursday 2024-02-01 21:00]
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர் ,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன.
|
|
|
உறை பனியிலும் இறைபணியே மேல் என
மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்!
[Thursday 2024-01-25 00:00]
|
கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான "நிவாரணம்" எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை " MGR 107 " மனிதநேயம் படைத்த மக்கள் வெள்ளம் அலைகடலாக ஆர்ப்பரித்து எழுந்தோடித் தளம்பிய காட்சியாய் விரிந்த காட்சி
கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.
|
|
|
"வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை" கவிதை நூல் வெளியீட்டு விழா!
[Sunday 2024-01-21 19:00]
|
க.வசந்தகுமாரி எழுதிய ' வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை.' என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்
சக்தி Tv நிர்வாகி கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கலந்துகொண்டதோடு நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்.
|
|
|
தென்னியங்குளம் பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!
[Sunday 2024-01-21 08:00]
|
அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் 02ஆண்டு நினைவு நாளில் “எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக… கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்கள்
இறைபாதமடைந்து 02ஆம் ஆண்டு நினைவு தினமான 19.01.2024 இன்று அன்னாரின் குடும்பத்தினரின் 200,000/= நிதி பங்களிப்பில்
“ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் கற்றல் உபகரணங்களும்,மதிய உணவு வழங்கும் நிகழ்வும் தாயகத்தின் முல்லைத்தீவு/ துணுக்காய் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது….
|
|
|
BRITISH TAMILS FORUM CELEBRATED “THAI PONGAL” AND TAMIL HERITAGE IN THE BRITISH PARLIAMENT!
[Saturday 2024-01-20 08:00]
|
The British Tamils Forum (BTF) celebrated Thai Pongal and Tamil Heritage month in the British Parliament on Monday,15 January 2024. Upon receiving overwhelming support from the British Tamil community including youth, charities, and business entrepreneurs, the demand for attending the celebration was exceptionally high, and the BTF had to have the celebration in two different halls, CPA Room and the Churchill Room in the UK Parliament to accommodate attendees for the event. The BTF received unparalleled support from cross-party Parliamentarians from Conservative, Labour, LibDem, SNP and DUP in the function. The BTF conveys its sincere gratitude to all the Parliamentarians for facilitating and participating in the hugely successful event.
|
|
|
தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா - Queen's Park!
[Saturday 2024-01-20 08:00]
|
கடந்த வெள்ளிக்கிழமை 12.01.2024 அன்று ஒன்ராறியோ மாநில சட்டசபையில் போக்குவரத்து இணை அமைச்சரும், ஸ்காபரோ ரூஜ் பார்க்கின் ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்களின் தலைமையில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா இடம்பெற்றது. இவ்விழாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர்களான ரெய்மன்ட் சோ, அரிஸ் பபிக்கியன் மற்றும் டோன் கலகர் மேர்ஃபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
|
|
|
ஒரு பாடசாலை நூறு கோவில்களுக்கு சமன் என்பதை நிரூபித்து காட்டியவர் அமரர் மாணிக்கவாசகம் - மனோ கணேசன் எம்பி!
[Sunday 2024-01-07 20:00]
|
அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும். இந்த கொள்கையை, தனது சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரண காணியை, வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக வழங்கி, தன் வாழ்வில் செய்து காட்டி நிரூபித்த மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
|
|
|
பல் மருத்துவரான தமிழ் யுவதியை சுட்டுக்கொன்றுவிட்டு முன்னாள் காதலன் தற்கொலை: காருக்குள் மீட்கப்பட்ட 2 சடலங்கள் - நோர்வேயில் பயங்கரம்!
[Sunday 2024-01-07 08:00]
|
நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. ராஹவி (30) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டார். அவரது முன்னாள் காதலரே இந்த கொலைக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். ராகவியின் சடலம் இருந்த காருக்குள், அந்த இளைஞரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார்.
|
|
|
நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா!
[Thursday 2024-01-04 20:00]
|
அவுஸ்திரேலியா மெல்பேனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17/12/23) கொண்டாடப்பட்டது.
|
|
|
தமிழ் மரபுத் திங்கள் 2024 தொடக்க நாளான நேற்று தமிழ் மரபுத் திங்கள் கொடி ஏற்றி வைக்கப்பட்டது!
[Tuesday 2024-01-02 06:00]
|
சனவரி 1, 2024: தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான இன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனடியத் தேசியக் கொடி இரண்டும் கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. தமிழ் மரபுத் திங்கள் கொடி, கனடாவில் பல நகர சபைகளிலும் தொடர்ச்சியாக ஏற்றப்பட இருக்கின்றது.
|
|
|
சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மல்லாவியில்!
[Saturday 2023-12-23 06:00]
|
சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று மல்லாவியில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் பல்கலைகழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
|
|
|
சிறார்களின் இருதய சத்திர சிகிச்சைக்கு வரிசை கட்டி வாரி வழங்கிய பக்தர்கள்!
[Saturday 2023-12-09 06:00]
|
கடந்த சூரன் போர் - பாரணை தினங்களில் கனடா கந்தசாமி ஆலயத்தில் சேகரித்த $13,833.16 நிதியின் விவரம்.
கடந்த நவம்பர் 18 - 19 திகதிகளில் கனடா கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போர் - பாரணை நேரங்களில், கடும் இருதய நோயுடன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரண்டு சிறார்களின் இருதய சத்திர சிகிச்சைக்கு நானும் எங்கள் நிவாரண அமைப்பின் தொண்டர்களும் நின்று நிதி சேகரித்தோம்.
|
|
|
ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம் கொழும்பு அவிசாவளையில் ஆரம்பிக்கட்டும் - தீப்பிடித்த வீடுகளை பார்வையிட்ட பின் மனோ கணேசன் எம்பி!
[Monday 2023-12-04 21:00]
|
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச் வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோருகிறேன். இங்கே இடம்பெற்றுள்ள தீவிபத்தில் எட்டு வீடுகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்னமும் நான்கு வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. இங்கே ஏறக்குறைய இருபது குடும்பங்கள் வாழ்வதாக அறிகிறேன். இந்த இருபது குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டிக்கொள்ள தலா பத்து (10) பேர்ச் காணி துண்டுகள் வழங்கப்பட வேண்டும்.
|
|
|
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் – 2023!
[Friday 2023-12-01 05:00]
|
மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
|
|
|
மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி- 2023!
[Friday 2023-12-01 05:00]
|
27.11.2023 திங்கட்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெற்ற மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் யேர்மனியில் உள்ள மாவீரர்களின் சொந்தங்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டனர்.
|
|
|
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு!
[Thursday 2023-11-30 18:00]
|
27.11.2023 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய,அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை வீரவேங்கை இனியவளின் சகோதரி யசி அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர்.
|
|
|
அரசபாளையத்தில் மாவீரர் நாள் 2023!
[Wednesday 2023-11-29 06:00]
|
தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர்.
|
|
|
தமிழீழத் தேசியக் கொடி நாள்!
[Thursday 2023-11-23 06:00]
|
21/11/2023 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் பிரம்டன் நகரசபையில் எழுச்சிகரமாகவும், உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது. இந் நிகழ்வை Dr குமுதினி குணரட்ணம் மற்றும் விஜிதரன் வரதராஜா ஆகியோர் ஒருங்கமைத்தனர். நீண்டவிடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கட்கும், போர்க் காலத்தில் அரச பயங்கரவாதங்களால்கொல்லப்பட்ட மக்களுக்குமாக அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
|
|
|
யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு!
[Tuesday 2023-11-14 06:00]
|
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான பயிலரங்கு சிறப்புற நடைபெற்றது. இப்பயிலரங்குகளில் கிட்டத்தட்ட 200ஆசிரியர்கள் இணைந்து கொண்டனர். அதிலும் இளைய ஆசிரியர்களின் இணைவு மிகச் சிறப்பாக இருந்தது.
|
|
|
'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா!
[Sunday 2023-11-12 21:00]
|
இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் ஏற்பாட்டில் செல்வன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய 'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா 11.11.2023 இல. 63, தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்தது .
|
|
|
|