|
|
நாடு கடந்த அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் விழா:
[Sunday 2017-05-07 19:00]
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வுடன் சனிக்கிழமை ஏப்ரல் 22ம் திகதி ரொறோன்ரோவில் உள்ள ஸ்காபொரோ மாநாட்டு நிலையத்தில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.
'தந்தை செல்வா ஞாபகார்த்த விருது' திரு ஈழவேந்தன் அவர்களுக்கும், 'மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த விருது' கலாநிதி சேவியர் பெர்னான்டோ அவர்களுக்கும், 'நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருது' தென்னாபிரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளரான யஸ்மின் லூயில்ஸ் ஸூகா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
|
|
|
வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]
|
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
|
|
|
கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்!
[Tuesday 2024-03-26 18:00]
|
யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.
|
|
|
இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]
|
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
|
|
|
அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]
|
அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
|
|
|
மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]
|
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
|
|
|
மீசாலையில் சொகுசுப் பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி!
[Tuesday 2024-03-26 18:00]
|
யாழ்.தென்மராட்சி மீசாலை பகுதியில் அதி சொகுசு பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை இரவு ஏ9 வீதியில் மீசாலை வீரசிங்கம் பாடசாலை முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
|
|
|
வடக்கு விவசாயிகளுக்கு மின்கட்டணம் குறைப்பு!
[Tuesday 2024-03-26 18:00]
|
விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
|
|
|
கோட்டா நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்கியது நீதிமன்றம்!
[Tuesday 2024-03-26 18:00]
|
நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் செல்லுபடியற்றதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
|
|
|
சம்பளப் பிரச்சினைக்காக பதவி விலகமாட்டேன்!
[Tuesday 2024-03-26 18:00]
|
சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
|
|
|
வடக்கில் கடந்த ஆண்டு 52 கொலைகள் - யாழ்., கிளிநொச்சி பிரிவுகள் முன்னணியில்.
[Tuesday 2024-03-26 17:00]
|
வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
|
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்!
[Tuesday 2024-03-26 07:00]
|
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும் என்றும் அவர் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் மூலம் தேர்தலைப் பிற்போட முனையவில்லை!
[Tuesday 2024-03-26 07:00]
|
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லையென நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
|
|
|
ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது!
[Tuesday 2024-03-26 07:00]
|
ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளைக் கோர வேண்டியதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்
|
|
|
எரிபொருள் நிரப்பு நிலையம் மீது மதுபோதையில் சென்றவர்கள் தாக்குதல்!
[Tuesday 2024-03-26 07:00]
|
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது மதுபோதையில் சென்றவர்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
|
|
|
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மைத்திரியை கைது செய்ய வேண்டும்!
[Tuesday 2024-03-26 07:00]
|
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
|
|
|
சித்திரை புத்தாண்டுக்கு முன் 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 05:00]
|
2024 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
|
|
|
வட்டி வீதத்தைக் குறைத்தது மத்திய வங்கி!
[Tuesday 2024-03-26 05:00]
|
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
|
|
|
பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை!
[Tuesday 2024-03-26 05:00]
|
சித்திரை புதுவருட காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை 375 முதல் 400 ரூபாவிற்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
தினேஸ் சீனா சென்றதால் பதில் அமைச்சராக ஜானக வக்கம்புர!
[Tuesday 2024-03-26 05:00]
|
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகளுக்கான பதில் அமைச்சரவை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் பிற்பகல் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றதன் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
|
|
|
இளநீரால் கொட்டும் வருமானம்!
[Tuesday 2024-03-26 05:00]
|
கடந்த பெப்ரவரி மாதத்தில் இளநீர் ஏற்றுமதியின் மூலம் 3, 439 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை விடவும் 734 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.
|
|
|
சுவிட்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்!
[Monday 2024-03-25 19:00]
|
சுவிட்ஸர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு அமைவாகவே இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|
|
மைத்திரியிடம் 6 மணிநேரம் சிஐடியினர் விசாரணை!
[Monday 2024-03-25 19:00]
|
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர், இன்று அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
|
|
|
13 ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!- என்கிறார் சித்தர்.
[Monday 2024-03-25 19:00]
|
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
|
|
|
பெரிய வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[Monday 2024-03-25 19:00]
|
ஈஸ்டர் ஞாயிறு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறும் தேவாலயத்திற்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் வகையில் தேவாலயங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
|
|
|
கனடாவுக்கு அனுப்புவதாக 43 இலட்சம் ரூபா மோசடி! - போலி ஊடகவியலாளர் கைது.
[Monday 2024-03-25 19:00]
|
தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் அவசியமில்லை!
[Monday 2024-03-25 19:00]
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றத்திற்கு தலைமை தாங்கவுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.
|
|
|
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம்!
[Monday 2024-03-25 19:00]
|
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான இன்று ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
|
|
|
பால்மா விலைகள் குறைக்கப்பட்டதன் இரகசியம்!
[Monday 2024-03-25 19:00]
|
பால்மா இறக்குமதியாளர்களுடன் பொது நிதிக் குழுவின் மோதலால் பால் மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.
|
|
|
|