|
|
போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்
[Wednesday, 2008-02-27 23:45:04]
|
தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து , ஒன்பது மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர்.
|
|
|
|
|
கொலை முயற்றி குற்றச்சாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்: - இழுத்துச் செல்லப்படுவதைப் படம்பிடிக்க முனைந்த AFP நிறுவன படப்பிடிப்பாளரின் ஒளிப்படக் கருவி படையினரால் பறித்து உடைக்கப்பட்டது.
[Monday, 2010-02-08 19:22:26]
|
நடந்து முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார்.
அவருடன் கூடவே அவரது ஊடகச் செயலாளர் சேனகா டி சில்வாவும் கைது செய்யப்பட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்கான இரகசியச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார் என படைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார்.
|
|
|
|
|
எனக்கு கிடைத்த டாக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியே! பொது மக்களை பாதுகாக்கவே நாம் படையெடுத்தோம் :- மொஸ்கோ பட்டமளிப்பில் மஹிந்த ராஜபக்ச.
[Monday, 2010-02-08 16:52:28]
|
ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார். ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
|
|
|
|
|
சிறிலங்காவுக்கு எதிரான மனிதவுரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்க மஹிந்த சமரசிங்க பயணமானார்:
[Monday, 2010-02-08 16:43:07]
|
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது . குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம், மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கவுள்ளது.
|
|
|
|
|
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் முடுக்கிவிடப்பட்டுள்ள ஊடக அடக்கு முறைக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்:-
[Monday, 2010-02-08 11:40:52]
|
ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
|
|
|
|
|
யாழ்ப்பல்கலைக்கழகத்தின் சிங்கள முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதுடன் முன்னுரிமையளிக்கப்படும்:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.
[Monday, 2010-02-08 08:48:40]
|
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காரணத்தினால் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் மிகக் குறைந்தளவு சிங்கள முஸ்லிம் மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
|
|
|
|
|
எந்த ஒரு சுதந்திர போராட்டத்துக்கும் பின்னடைவு ஏற்படுவது இயற்கையானது; அதில் இருந்து மீண்டு எழும்பும்; இன்னும் 5 ஆண்டுகளில் ஈழத்தில் சுதந்திர கொடியேற்றப்படும்; அந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்:- புலவர் புலமைப்பித்தன்.
[Monday, 2010-02-08 08:42:32]
|
தமிழ்நாடு, கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் துவக்கிவைத்து உரையாற்றினார்.
|
|
|
|
|
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து அரசாங்கம் வடக்கு கிழக்கை கட்டி எழுப்பும்;ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த கோரிக்கைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை:- மைத்திரிபால.
[Monday, 2010-02-08 08:36:04]
|
பொது தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆழும் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றி பெறும். அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் யாப்பில் மாற்றம் கொண்டு வருவ்வோம். அதனை அபிவிருத்தி செய்வோம் இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படுவோம். இவ்வாறு கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேன அவர்கள்.
|
|
|
|
|
நோர்வே பேர்கனில் நடைபெற்ற உயர்கல்வித் தேர்வுப் பட்டறை:
(படங்கள் இணைப்பு)
[Monday, 2010-02-08 07:33:35]
|
கடந்த 06.02.2010 அன்று பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பும் அன்னை பூபதி கலைக்கூடமும் இனைந்து உயர்கல்விப்பட்டறை ஒன்றை நடாத்தினார்கள். அதில் பல பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். உயர்தர வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், துறைசார் வல்லுனர்கள் இப் பட்டறையில் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் கல்வித்தெரிவிற்கான தேவைகளையும் புள்ளி விபரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
|
|
|
|
|
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு:- தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என தெரிவிப்பு.
[Monday, 2010-02-08 07:04:11]
|
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.
|
|
|
|
|
சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டம் இராணுவத்திற்கு இல்லை என்கிறது இராணுவம்:- அவர் ஓய்வு பெற்றுள்ள காரணத்தினால் அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என சட்டத்தரணி அதரிவிப்பு.
[Monday, 2010-02-08 06:56:52]
|
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்யும் எவ்வித திட்டமும் கிடையாது என இராணுவம் அறிவித்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்தது. அந்தச் செய்திகளில் உண்மையில்லை என இராணுவ தலைமைப்பீடம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
|
|
|
|
|
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவந்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது:-
[Monday, 2010-02-08 06:30:54]
|
சிறிலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகிய வற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப் புலி உறுப் பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரைத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதிவான் சம்பா ஜானகீ ராஜரட்ண நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.
|
|
|
|
|
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வார இறுதியில் த.தே.கூ கலந்தாலோசனை செய்யவுள்ளது:
[Monday, 2010-02-08 06:25:55]
|
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் நாளை நாடு திரும்பக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் தெரிவித்துளதாக தகவல்பள் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்த பின்னர் தேர்தலில் தமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
|
|
ஜி எஸ் பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை:-
[Monday, 2010-02-08 06:23:45]
|
நீக்கப்பட்ட ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸின் இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையின் படி ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியிலேயே நடைமுறைக்கு வரும். எனினும் தற்போது அந்த நிலைமை மாறி, இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை முன்வைத்து மீண்டும் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
|
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு திடீர் விஜயம் :
[Monday, 2010-02-08 06:18:57]
|
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு திடீர் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இந்தியாவிற்கு பயணமானதாகவும், நாளை அவர் நாடு திரும்புவார் எனவும் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
|
|
|
கிளிநொச்சி கணேசபுரத்தில் கினற்றிலிருந்து பெண்கள் இருவரது சடலங்கள் கண்டெடுப்பு - மக்கள் மத்தியில் அச்சம் மேலோங்கியுள்ளது:
[Monday, 2010-02-08 06:10:52]
|
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தி உலகிற்கு பிரச்சாரமிடும் நிலையில் அங்கு மர்மக்கொலைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி வரும் மக்களை வரவேண்டாம் என, தெரிவித்துள்ளார்கள்.
|
|
|
|
|
ஆவணங்களை காண்பித்து வாகனங்களை மக்கள் திரும்ப பெறலாம்:- தமிழோசையிடம் யாழ் ஆயர் தோமஸ் செளந்திரநாயகம்.
[Sunday, 2010-02-07 17:03:36]
|
இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
|
|
|
|
|
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் கூட்டணிக்கு முயற்சி:- எதிர்வரும் தேர்தலை ஓர் அணியாக எதிர்கொள்வது பற்றி இரகசியப் பேச்சுக்கள்
[Sunday, 2010-02-07 16:13:49]
|
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து போட்டியிட முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையிலான உறவுகள் பலப்பட்டுவரும் நிலையில் எதிர்வரும் தேர்தலை ஓர் அணியாக எதிர்கொள்வது பற்றி இரகசியப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அறியப்படுகிறது.
|
|
|
|
|
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தீடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது:
[Sunday, 2010-02-07 14:21:15]
|
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளி கோயில் அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது. வெள்ளை நிறத்திலான சிறிய புத்தர் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்ப்பட்டுள்ளது. எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. யாழ் குடாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நவடிக்கை ஆரம்பித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
|
|
|
|
|
"சுதந்திரத் தனி தமிழீழம் பற்றிய வாக்கெடுப்பு - 99.33 % ஆம் எனப் பதில்":-இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முயற்சியை வெற்றியுடன் நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் த.தே.ச. நன்றி தெரிவிப்பு.
[Sunday, 2010-02-07 11:36:52]
|
1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சரித்திர முக்கியத்துவம் பெற்ற, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பெரிய பிரித்தானியாவில், ஒர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தவும் அத்துடன் பெரிய பிரித்தானியாவில் அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய சபை அமைக்கப்பட்டது.
|
|
|
|
|
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தமிழீழ அகதிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்:-பத்திரிகை ஆசிரியர் கா. அய்யநாதன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
[Sunday, 2010-02-07 11:28:45]
|
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ அகதிகள் மீது, தமிழக காவற்துறையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழினப் பாதுகாப்பு போராட்டக்குழு தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
|
|
|
|
|
|
1 2 3 4 5 6 7 8 9 10 [Next] [Last Page] |
|
|