|
|
துணுக்காய் கோட்ட பாடசாலைகளின் நிலைகளிலே மல்லாவி மத்திய கல்லூரிமுன்னிலை!
[Monday 2023-07-03 06:00]
|
துணுக்காய் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் 28/06/2023, 30/06/2023 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இவ்வருடத்தின் துணுக்காய் கோட்ட பாடசாலைகளின் நிலைகளிலே மு/மல்லாவி மத்திய கல்லூரி ஒட்டுமொத்தமாக 446 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
|
|
|
டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2023!
[Monday 2023-06-26 18:00]
|
கடந்த இரு வாரமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை நேற்றைய தினம் சனிக்கிழமை நிறைவுசெய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.
|
|
|
மத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி - வில்லிச் 2023!
[Wednesday 2023-06-21 18:00]
|
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும் போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது.
|
|
|
வட்டு இந்துவின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!
[Friday 2023-06-16 06:00]
|
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன் அவர்கள் முன்வந்து இந்த நன்கொடையை வழங்கியிருந்தார்.
|
|
|
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு!
[Sunday 2023-06-11 07:00]
|
கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ''ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் - தெணியான்'' நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி - கொற்றாவத்தையில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று சனிக்கிழமை (10.06.2023) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
|
|
|
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்ட நிகழ்வு!
[Wednesday 2023-06-07 06:00]
|
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் திங்கட்கிழமை ( 05 06.2023 ) அன்று பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
|
|
|
வாதரவத்தை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!
[Wednesday 2023-06-07 06:00]
|
இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை 33 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூறும் நிகழ்வு யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் (05-06-2023) அன்று மாலை இடம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
|
|
|
இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை!
[Wednesday 2023-06-07 06:00]
|
எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக அக்கறை செலுத்துகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய காட்டுமிராண்டித்தனங்களை தொடர்ந்தும் நினைவு படுத்துவது அனைவரதும் கடமையாகும்.
|
|
|
தொல்புரம் ஆரம்ப மருத்துவமனையில் கட்டடங்கள் திறப்பு!
[Wednesday 2023-06-07 06:00]
|
தொல்புரம் ஆரம்ப மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பெற்ற வாகனத் தரிப்பிடம் மற்றும் நோயாளர் காத்திருக்கும் மண்டபம் என்பன (05-06-2023) அன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. "சுப்பையா பொன்" ஞாபகார்த்தமாக, அவரது மகன் சுப்பையா வரதராசா அவர்களது நிதி அனுசரணையில் நோயாளர் காத்திருப்பு மண்டபம் அமைக்கப்பட்டதுடன், அமரர்கள் துரைசிங்கம் சிவபாக்கிரம் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் திரு.து.சிவகுமார் அவர்களது நிதி அனுசரணையில் வாகனத் தரிப்பிடமும் அமைக்கப்பெற்றது.
|
|
|
யோகாசன பயிற்சிப்பட்டறை!
[Sunday 2023-06-04 17:00]
|
யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில் எதிர்வரும் 27.05.2023 அன்று சர்வதேச யோகா தினத்தை நோக்கிச் செல்லும்போது என்னும் கருப் பொருளில் சர்வதேச யோகதினப் பயிற்சிப்பட்டறை இன்று யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தில் இடம்பெற்றது.
|
|
|
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!
[Thursday 2023-06-01 18:00]
|
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது.
|
|
|
தையிட்டி விகாரையில் 3ஆம் கட்டமாக போராட்டம் ஆரம்பம்!
[Wednesday 2023-05-31 22:00]
|
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாம் கட்ட போராட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஏற்கனவே இரண்டு கட்டமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் அதே பகுதியில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
|
|
|
சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவித்திட்டங்கள்!
[Wednesday 2023-05-31 21:00]
|
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் (30/05/2023) முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு அனந்தர்குளம் சின்னப்பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம், ஶ்ரீ நாக கண்ணகையம்மன் ஆலயங்களின் கட்டிட பணிக்காக ரூபா 100,000/- நிதியும்,
|
|
|
மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு சிட்னியில் கெளரவம்!
[Wednesday 2023-05-31 06:00]
|
12 திருமுறைகளை இலகுபடுத்தும் நோக்கில் 16 தொகுதிகளாக தொகுத்த தற்கால சோழன் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறுவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு சிட்னியில் கௌரவம் வழங்கப்பட்டது.
|
|
|
தஞ்சாவுர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் வகுப்புகள்!
[Tuesday 2023-05-30 06:00]
|
தமிழுக்கு என்று உலகத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உள்ளது. சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரில் அமைந்துள்ளது தமிழ்ப் பல்கலைக்கழகம். கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாய் இயங்கி வரும் கனடா தமிழ்க் கல்லூரியும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் கடந்த ஆண்டு இணைந்து பணியாற்றும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர்.
|
|
|
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பாரம்பரிய உணவு திருவிழா!
[Monday 2023-05-29 19:00]
|
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்றையதினம் (29) பிரதேச செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது சிறு முயற்சியாளர்களின் பாரம்பரிய உணவுகளான தோசை, அப்பம், ஒடியல் கூழ், குரக்கன் பிட்டு, பலகார வகைகள், பழங்கள், இளநீர், தானிய உணவுகள், நுங்கு, பழச்சாறுகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
|
|
|
ஈழத் தமிழர்கள் யாரையும் தாங்கி வாழத் தேவையில்லை ; கலைப்பீடம் எமது மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கிறது - துணைவேந்தர் சிறிசற்குணராஜ புகழாரம்!
[Saturday 2023-05-27 21:00]
|
யாழ். பல்கலைக்கழகத்தில் பல பீடங்கள் இருந்தாலும் கலைப்பீடம் எமது மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு பீடமாக காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழத்தில் திறந்து வைக்கப்பட்ட கலாநிதி கா. இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சிய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு!
[Friday 2023-05-26 06:00]
|
இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் ஈழத்தமிழர்கள் பங்காளிகளாக மாறவேண்டும்-பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான 9வது அரசவை அமர்வு மே மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் அமெரிக்கா நியுயோக் நகரில் நடைபெற்றது.
|
|
|
வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன!
[Friday 2023-05-26 06:00]
|
ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் தரம் எட்டு முதல் பதினொன்று வரை கல்விகற்கின்ற 125 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
|
|
|
கொலை குற்றவாளிக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியா - வெடித்தது போராட்டம்!
[Friday 2023-05-26 06:00]
|
தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த 22ஆம் திகதியில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதி, ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஒன்பதுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
|
|
|
வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு!
[Friday 2023-05-26 06:00]
|
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (25.05.2023) கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் கடமையேற்பு!
[Monday 2023-05-22 18:00]
|
வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
|
|
|
"ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை" - அகம் மனிதாபிமான வளநிலைய தலைவர் கண்டுமணி லவகுகராசா!
[Monday 2023-05-22 18:00]
|
கடந்த 70 வருடமாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு அரசியல் தீர்வு இன்று வரை எட்டாக்கனியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்களுக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மீளப் பெறமுடியாத ஒரு சமஷ;டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை என அகம் மனிதாபிமான வளநிலைய தலைவர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார்.
|
|
|
தமிழின அழிப்பின் உச்சநாள் மே18 நினைவேந்தல் நிகழ்வு – ஸ்ருட்காட் யேர்மனி!
[Sunday 2023-05-21 17:00]
|
சிறிலங்கா இனவாத அரசினால் கொத்துக்கொத்தாகத் தமிழினம் இனவழிப்புச் செய்யப்பட்ட மே 18 நாளை நினைவு கூர்ந்து யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உபஅமைப்புகளால் மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது.
|
|
|
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண ரீதியிலான கறுவா பயிற்சி பட்டறை!
[Sunday 2023-05-21 17:00]
|
இன்றையதினம் காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்றது.
|
|
|
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு!
[Friday 2023-05-19 18:00]
|
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு!
|
|
|
கல்லடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Friday 2023-05-19 18:00]
|
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை, மட்டக்களப்பு, கல்லடியில் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி மாணவர்களின் பங்கேற்புடன் இன்று முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
[Friday 2023-05-19 18:00]
|
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
|
|
|
|