|
|
பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு!
[Sunday 2023-01-29 20:00]
|
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள மதகுருமார், உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது!
[Sunday 2023-01-29 20:00]
|
கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது வழங்கி யாழ் இந்து சமயப் பேரவை கௌரவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
|
|
|
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022-2023!
[Sunday 2023-01-29 20:00]
|
யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் சிறந்த பொறிமுறைகளைக் கடைப்பிடித்து 28.01.2023 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது.
|
|
|
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நூலகத் திறப்பு!
[Sunday 2023-01-29 16:00]
|
ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பானது (Sri lanka unites) சிறுவர்களுக்கான நூலகம் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நூலகத் திறப்பு மேற்கொள்ளப்பட்டது.
|
|
|
தென்மராட்சி சர்வதேச ஒன்றியத்தின் கெளரவிப்பும் நிகழ்வு!
[Sunday 2023-01-29 16:00]
|
"கல்விக்கு கை கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
பல்கலைக்கழக மாணவர்கள், சேவையாளர் கெளரவிப்பும் உயர்தர மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கும் நிகழ்வும் யாழ். தென்மராட்சி அறவழி போராட்ட குழுவின் அலுவலகத்தில் நேற்று (28) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
|
|
|
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பொங்கல்!
[Sunday 2023-01-29 16:00]
|
யாழ். பல்கலைக்கழக வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாழின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
|
|
|
றகமா நிறுவனத்தின் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்த்திட்டம்!
[Saturday 2023-01-28 06:00]
|
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட நான்கு குளங்களிற்க்கு (ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம்) நேற்று (27.01.2023) நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு!
[Friday 2023-01-27 19:00]
|
இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு இந்திய கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 74 வது குடியரசு தின விசேட நிகழ்வு இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
|
|
|
இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது!
[Thursday 2023-01-26 16:00]
|
யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில், இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகியகுடியரசு தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ். இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களினால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ். இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டதோடு இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
|
|
|
யாழில் உயிரிழந்த ஓய்வுபெற்ற தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 வேட்டுக்கள் முழங்க மரியாதை!
[Thursday 2023-01-26 07:00]
|
யாழ். - கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலம் 21 வேட்டுக்கள் முழங்க இன்றையதினம் மரியாதை செலுத்தப்பட்டது. இவர் கடந்த 1958ஏஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த 23.01.2023 அன்று கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார்.
|
|
|
குருநகரில் ஆயிரக்கணக்கான மக்களின் பாராட்டை பெற்ற கலைவிழா!
[Thursday 2023-01-26 07:00]
|
குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 30வது ஆண்டடை முன்னிட்டு நடாத்திய கலைவிழா நேற்றையதினம் மாலை 5.30மணியளவில் குருநகர் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. குருநகர் யோசவ்வாஸ் இளையோர் மன்ற தலைவர் விக்ரர்குமார் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மனித முன்னேற்ற நடு நிலைய இயக்குனர் அருட்பணி இயூஜின் பிரான்சிஸ் அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநரும் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையுமான அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி தயதீபன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.
|
|
|
பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு!
[Tuesday 2023-01-24 18:00]
|
யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (22.01.2023) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்கா திடலில் இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
|
|
|
விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவசிலை திறப்பு!
[Tuesday 2023-01-24 18:00]
|
சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எற்பாட்டில் முன்ன உடுவில் கிராம சபைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் முதலாவது தலைவருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவசிலை திறப்பு நிகழ்வு இன்று சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.
|
|
|
ஹற்றன் நேஷனல் வங்கியினால் மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு உபகரணங்கள் கையளிப்பு!
[Tuesday 2023-01-24 18:00]
|
யாழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கிளையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு வருகை தந்திருந்த ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜொனதன் அலஸ் அவர்கள், இன்றைய தினம் காலை மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இருக்கும் மாற்று திறனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
|
|
|
நவ மங்கை நிவாசத்தில் கலை மன்றம் அறநெறி வகுப்புகள் ஆரம்பிப்பு!
[Monday 2023-01-23 18:00]
|
யாழில் அமைந்துள்ள நவமங்கை நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே இந்து சமய ஒழுக்கங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அறநெறி மற்றும் கலா மன்றம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
|
|
|
அமெரிக்கா பொங்கல் விழாவில் மாதிரி வாக்கெடுப்பு!
[Saturday 2023-01-21 21:00]
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், சங்கம் குளோபல் USA உம் இணைந்து நாடாத்திய பொங்கல் விழா மாலை 6.00மணிக்கு அகவணக்கம், தமிழ் தாய் வாழ்த்து, மங்கல விளக்கேற்றல் ஆகியவற்றுடன் ஆரம்பமானது. பாடல், நடனம், பேச்சு, கவிதை, தாயகப் பாடல்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன், சங்கம் குளோபல் USA சார்பாக திரு. ந. இராஜேந்திரா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றிருந்தன.
|
|
|
பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் தமிழ் மரபுத் திங்கள் - தை பொங்கல் நிகழ்வு!
[Friday 2023-01-20 18:00]
|
தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழாவினை கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில் 17 ஜனவரி 2023 அன்று பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் நிகழ்த்தப்பட்டது. உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரித்தானியாவிற்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி சிறிலங்காவில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேசம் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்.
|
|
|
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!
[Thursday 2023-01-19 06:00]
|
யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறையினரால் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் நேற்று காலை 9மணியளவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வரலாற்றுத்துறையின் நான்கு வருட மாணவர்களுக்கிடையிலும் கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்று இறுதியாக துறைபேராசிரியர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
|
|
|
எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது!
[Thursday 2023-01-19 06:00]
|
மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், அக் கழகத்தின் தலைவர் செல்வகுமாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
|
|
|
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது!
[Wednesday 2023-01-18 06:00]
|
இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா திங்கட்கிழமை (16.01.2023) அன்று மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் 'பயன் அறிந்து உண்க' என்ற நூலும் வெளியிடப்பட்டது.
|
|
|
தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள், தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி!
[Tuesday 2023-01-17 20:00]
|
கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும் வெய்யோனின் செங்கதிரேந்தி சிரந்தாழ்த்தித் தமிழரெல்லாம் நன்றி சொல்வர். தை அவளை வரவேற்கத் தமிழர் மனமெங்கும் மகிழ்வு பொங்கும். பழையன கழித்துப் புதியன பூண்டிடுவர். ஆதிமுதற் சோதியன் அரங்குவரும் முன்னாலே, முற்றம் பெருக்கிச் சாணியினால் மெழுகிடுவர். மாக்கோலம் போட்டு நிறைகுடம் வைத்தே மங்கலம் பொங்கிடவே சுடரேற்றிடுவர். மாவிலையும் மஞ்சள் இலையும் புது மண்பானையிலே கட்டி, நீர்நிறைத்து அடுப்பினிலேற்றி பொங்கலிடும் அழகோடு, தமிழர் புத்தாண்டு பொலிவுபெறும்.
|
|
|
யாழில் இடம்பெற்ற கோ பவனி!
[Tuesday 2023-01-17 20:00]
|
பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கோமாதா உற்சவமும் கோ பவனியும் இன்று யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பவனியானது ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து மின்சார சபை வீதி, பெரியகடை, பேருந்து நிலைய மேற்கு வீதியூடாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
|
|
|
நல்லூர் வாயிலில் பொங்கல் விழா!
[Tuesday 2023-01-17 20:00]
|
சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ். நாவற்குழி செம்மணி வாயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்றையதினம் தைப்பொங்கல் நிகழ்வு முதன்முறையாக இடம்பெற்றது.
|
|
|
காசி புனித தீர்த்தம் வட்டுக்கோட்டை - அராலி குளத்தில் கலப்பு!
[Tuesday 2023-01-17 20:00]
|
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்றையதினம் உலகலாவிய ரீதியாக நடைபெற்றது. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்றையதினம், உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டை - அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
|
|
|
நூறாவது வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் செய்து முடித்த நெல்மணி உதவும் கரங்கள்!
[Tuesday 2023-01-17 20:00]
|
நூறாவது வேலைத்திட்டங்களை ஒரு குறுகிய காலத்தில் செய்து முடித்த யாழ்பெருமாள் நெல்மணி உதவும் கரங்கள் ஊடாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் தினத்தை சிறப்பாககொண்டாடுவதற்காக யாழ் நவாலி கேலம் பகுதியில் ஒரு பகுதியாகவும், வவுனியாசிதம்பரநகர்,கற்குலம்,மதுராநகர்,சிவபுரம், கிடாச்சூரி,தவசிபுரம் ஆகியகிராமப்பகுதிகளில் இன்னொரு பகுதியாகவும் மொத்தம் நூறு பொங்கள்பொதிகள் வழங்கபட்டது என்பதை தெரிவிக்கின்றோம்.
|
|
|
நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு பரிமாற்றச் சங்கம் பொங்கல் பொதிகள் வழங்கல்!
[Friday 2023-01-13 21:00]
|
சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக , உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது குடும்பங்களுக்கும் மற்றும் வருமானம் குடும்பங்களுக்கும் உணவுகளை பகிர்ந்து வழங்குதலுமாகும்.
|
|
|
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு!
[Thursday 2023-01-12 16:00]
|
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 12.01.2023 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.
|
|
|
யாழ் பல்கலைக்கழக நூல் வெளியீடு!
[Thursday 2023-01-12 16:00]
|
யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தமிழியற்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி முல்லை முகுந்தினியின் இடர் சுமந்த மேனியர் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ் பல்கலைக்கழக தமிழியற்துறை தலைவி ஜெயா தலைமையில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
|
|
|
|