|
|
வெலிக்கடைப் படுகொலை நினைவுகூரல்!
[Saturday 2020-07-25 17:00]
|
வெலிகடை படுகொலைகளின் 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
|
|
|
இராணுவ அதிகாரியை தெரிவு செய்தால் எமது இருப்பு கேள்விகுறியாகும்!
[Saturday 2020-07-25 17:00]
|
இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
|
|
|
சென்னையில் இருந்து திரும்பிய 4 பேருக்கு கொரோனா!
[Saturday 2020-07-25 17:00]
|
மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2768 ஆக அதிகரித்துள்ளது.
|
|
|
இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது!
[Saturday 2020-07-25 17:00]
|
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
|
|
|
இந்திய தூதரக இரண்டாவது செயலாளரின் வீடு உடைக்கப்பட்டு திருட்டு!
[Saturday 2020-07-25 17:00]
|
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாவது செயலாளராகப் பணியாற்றும் இராஜதந்திரியின் வீடு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் திருட்டப்பட்டுள்ளது.
பொறளை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்று பிற்பகல் 1 மணியளவில் நுழைந்த திருடன் 2000 அமெரிக்க டொலர்களையும், 10 ஆயிரம் ரூபா இலங்கை நாணயத்தையும் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
|
|
|
நல்லைக் கந்தன் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
[Saturday 2020-07-25 17:00]
|
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
|
|
|
மன்னாரில் மேலும் 45 கிலோ கஞ்சா மீட்பு!
[Saturday 2020-07-25 17:00]
|
மன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
|
வெலிக்கடைப் படுகொலைகளின் 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!
[Saturday 2020-07-25 07:00]
|
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட, 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்படுகிறது.
|
|
|
சர்வதேசமே சம்பந்தனுடன் வந்தாலும் கிடைக்காது சமஷ்டி!
[Saturday 2020-07-25 07:00]
|
இந்தியா, அமெரிக்கா என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
|
|
|
கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் போத்தல் வீசி தாக்குதல்!
[Saturday 2020-07-25 07:00]
|
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் இனந்தெரியாத நபர்களால் போத்தல் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தின் போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
|
|
|
பெண்களை இழிவுபடுத்திய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
[Saturday 2020-07-25 07:00]
|
பெண்களை வேதனைப்படுத்தும் விதமாக தேர்தல் மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
|
|
|
“என்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லாதவர் சுமந்திரன்”!
[Saturday 2020-07-25 07:00]
|
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லாத ஒருவர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
|
|
|
கொழும்புக்கு ஆபத்து இல்லை!
[Saturday 2020-07-25 07:00]
|
முல்லேரியா ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று மீண்டும் பிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் மூலம் கொழும்புக்கு ஆபத்து இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
|
|
|
முன்னாள் போராளிக்கு கிடைத்த 75 இலட்சம் ரூபாவை பிடுங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர்!
[Saturday 2020-07-25 07:00]
|
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
|
|
|
சிறைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை!
[Saturday 2020-07-25 07:00]
|
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மறை மாவட்ட பேராயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
நல்லூருக்கு அடையாள அட்டையுடன் வரவும்! - சோதனைக்குப் பின்னரே அனுமதி
[Friday 2020-07-24 17:00]
|
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவுக்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று பொலிசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
விக்னேஸ்வரனிடம் சிஐடி விசாரணை!
[Friday 2020-07-24 17:00]
|
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
|
|
|
வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு!
[Friday 2020-07-24 17:00]
|
முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாக, இன்று காலை 10 மணியளவில், கண்டுபிடிக்கப்பட்டார்.
|
|
|
இன்றும் 10 பேருக்கு கொரோனா!
[Friday 2020-07-24 17:00]
|
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள கைதிகள் என்றும், ஒருவர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது, இதையடுத்து இதுவரை இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 2763 ஆக அதிகரித்துள்ளது.
|
|
|
ஜெயபுரம் விபத்தில் ஒருவர் பலி!
[Friday 2020-07-24 17:00]
|
கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
|
|
|
கடலில் தவறி விழுந்த மீனவரின் சடலம் காங்கேசன்துறையில் கரையொதுங்கியது!
[Friday 2020-07-24 17:00]
|
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறிவீழ்ந்த மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.
|
|
|
ராஜாங்கனையில் மூன்றாவது அலை!
[Friday 2020-07-24 17:00]
|
இராஜாங்கனை பகுதியில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
|
|
|
தேர்தல் வன்முறைகள் இடம்பெறக் கூடிய மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்!
[Friday 2020-07-24 17:00]
|
தேர்தலின் போது வன்முறைகள் இடம்பெறக் கூடிய மாவட்டங்களில் ஒன்றாக, யாழ்ப்பாண மாவட்டமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, கபே எனப்படும், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
|
|
|
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
[Friday 2020-07-24 17:00]
|
வவுனியா - கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.
|
|
|
தபால் மூலம் வாக்களிக்க நாளையே கடைசி நாள்!
[Friday 2020-07-24 17:00]
|
தபால்மூல வாக்களிக்க நாளையே கடைசி வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்களிக்க தவறிய அரச பணியாளர்களுக்காக இன்று காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணி வரையும், நாளை காலை எட்டு 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால்மூல வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவு கூர்ந்து கனடியப் பிரதமர் அறிக்கை!
[Friday 2020-07-24 09:00]
|
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவுகூர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
|
|
|
இந்திய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுத்தவர் சாரா?
[Friday 2020-07-24 09:00]
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களை நீர்கொழும்பு தேவாலய தாக்குதல்தாரியின் மனைவியான சாரா ஜெஸ்மினே இந்திய புலனாய்வுத்துறைக்கு வழங்கியிருக்கலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த அரச புலனாய்வுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா?
[Friday 2020-07-24 09:00]
|
முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.பொதுத்தேர்தலினை தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
|