Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பொறாமை குணத்திலிருந்து விடுபட்டு முன்னேற்றமான வாழ்வு வாழ சிறந்த வழிகள்..
[Sunday 2017-02-19 22:00]

மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக்குணம் இருப்பதைக் காணலாம். குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக்குணம் இருக்கும். பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்தக்குணம் காணப்படும். இந்தப்பொறாமைக்குணம் ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்துவிடக்கூடும். எனவே அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமைக்குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பொருத்த அளவில் தங்களது சகோதர சகோதரிகள் மீது பொறாமைக்குணம் ஏற்படுவதுண்டு. அப்பா எப்போதும் அக்காவுக்குத்தான் அதிக செல்லம் கொடுக்கிறார். தம்பி கேட்டால் எல்லாவற்றையும் அம்மா கொடுக்கிறார். நான் கேட்டால் மட்டும் தர மறுக்கிறார் என்று சில குழந்தைகள் நினைக்கலாம். இதேபோன்ற எண்ணம் சிறுவயதிலும், வாலிப வயதிலும் வளர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.

பாதுகாப்பு

பொறாமைக்குணத்தின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? என்பதை இங்கே நாம் காண்போம்:

1) பொறாமை என்பதன் பொருளை முழுவதும் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்க கூடாது. ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் கலந்துகொண்டு நாம் முதலில் வந்து வெற்றி பெற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இருக்கலாம். ஆனால் அடுத்தவன் ஜெயிக்கக் கூடாது, அவனை எப்படியாவது தள்ளிவிட்டு நாம் முதலில் வரவேண்டும் என்ற பொறாமைக்குணம் மட்டும் இருக்கக் கூடாது. நமக்கு கிடைக்காத ஒரு பொருள் அடுத்தவருக்கு கிடைக்க கூடாது என்று நினைப்பதும் பொறாமையின் ஒரு வடிவம் தான்.

2) இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் கவனமாக கையாள வேண்டும். பொறாமைக்குணம் ஏன் ஏற்படுகிறது, எதனால் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். பொறாமையின் அடிப்படையைக் கண்டுபிடித்து அதை அகற்ற முன்வரவேண்டும். உடல் ரீதியாக, மனரீதியாக, உணர்வுப்பூர்வமாக அல்லது சமூக ரீதியாக எந்த நிலையிலும் நாம் யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது. ஏன்என்றால் இதனால் பெரிய பாதிப்புகள் தான் ஏற்படும்.

உதாரணமாக, ஒருவர் மீது நாம் பொறாமை கொண்டால் உடனே நமது உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை: இதயதுடிப்பு அதிகரிக்கும், வியர்வை அதிகமாக வெளியேறும், அதிர்ச்சியில் உடல் துடிக்கும், உடலில் உள்ள தசைகள் இறுக்கம் அடையும்.

ஒருவர் மீது நாம் பொறாமை கொள்ளும்போது உணர்வு ரீதியாக கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். அவை: துக்கம், கோபம், மன அழுத்தம், அவநம்பிக்கை மற்றும் அழுகை.

ஒருவரிடம் பொறாமைக்குணம் அதிகரிக்கும் போது அவரது மனதில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். அவை: ஏக்கம், அன்பு செலுத்த யாருமே இல்லை என்ற மன நெருக்கடி, புறக்கணிப்பு, அதீத பாசம், அல்லது அதீத வெறுப்பு, உறவுகள், நட்புகளை துண்டித்து வாழும் நிலை போன்றவை ஏற்படும்.

பொறாமை கொண்ட மனிதர்கள் சமூகரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தங்களது மனைவி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகும் ஆபத்து இருக்கிறது. சில நேரங்களில் அவர்களது பொறாமைக்குணம் காரணமாக யாருமே அவர்களுடன் பழக விரும்புவதும் இல்லை.

வெற்றி கொள்வது எப்படி?

பொறாமைக்குணத்தில் இருந்து ஒருவர் தன்னைத்தானே பாதுகாத்து அதில் இருந்து வெற்றி கொள்வது எப்படி?

எந்த ஒரு நபரின் மீதோ அல்லது பொருளின் மீதோ பொறாமைக்குணம் தோன்றுமானால் உடனே அந்தக்குணத்தை - மனதில் இருந்து அகற்ற முன்வர வேண்டும். பொறாமை கொள்வதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.

பொறாமைக்குணம் தோன்றும் போது அப்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை ஒரு காகிதத்தில் உடனே எழுதுங்கள். சில மணி நேரம் கழித்து அந்த பட்டியலில் உள்ளவற்றை படித்துப் பாருங்கள். அப்போது தான் பொறாமைக்குணம் எந்த அளவுக்கு உங்கள் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியவரும்.

ஒருவரின் மீது பொறாமை தோன்றுகிறது என்றால் அது ஏன் வருகிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். அவர் மீது ஏற்பட்ட பயமா? அல்லது கோபமா? அல்லது அவர் போல முன்னேற முடியவில்லை, நடந்துகொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமா?... இதில் எதன் காரணமாக பொறாமைக்குணம் தோன்றியது என்பதை கண்டுபிடியுங்கள். அதை ஆராய்ந்து அறிந்து அகற்றுவதன் மூலம் உங்கள் மனதில் உள்ள பொறாமைக்குணத்தை அகற்றமுடியும்.

பெற்றோர் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் மீது பொறாமைக்குணம் தோன்றினால் அதை வெளிப்படுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் மனம் விட்டுப்பேசுங்கள். மனம் விட்டு பேசினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

பொறாமைக்குணம் உங்கள் மனதில் தோன்றும் போதெல்லாம் உங்கள் தன்னம்பிக்கை திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது.

  
  
   Bookmark and Share Seithy.com



ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு!
[Thursday 2024-03-28 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-03-27 18:00]

பெரும்பாலானோர் இந்த கால கட்டத்தில் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.



உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
[Tuesday 2024-03-26 18:00]

தென்னிந்திய சமையலில் நல்லெண்ணெய்க்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது செரிமான அமைப்பு சீராக செயற்படுவதாக ஆய்வு ததகவல்கள் குறிப்பிடுகின்றது. அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது.இது இதய ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.



உடல் அலுப்பை போக்கும் ஆட்டுக்கால் பாயா!
[Sunday 2024-03-24 18:00]

தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் பாயா. இது பெரும்பாலும் காலை உணவாக இடியாப்பம், அப்பம் உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி இலகுவாகவும் சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
[Saturday 2024-03-23 18:00]

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட செட்டிநாடு மட்டன் குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள். ஆனால் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது.



நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?
[Friday 2024-03-22 18:00]

பொதுவாகவே ரமழான் மாதம் முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமாக மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் செய்யும் நன்மை தீமைகளுக்கு இரட்டிப்பபு பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்துக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி சிறப்புத் தொழுகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.



நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்!
[Thursday 2024-03-21 18:00]

நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுக்காய் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னனு தெரியுமா?
[Tuesday 2024-03-19 15:00]

இந்த அவசரமான கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். வீட்டையும் பார்க்க வேண்டும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் வெளியிலும் வேலை செய்ய வேண்டும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர்.



டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?
[Monday 2024-03-18 18:00]

பொதுவாக நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அந்த செல்லப்பிராணிகளில் அநேகமானோரின் வீட்டில் இருக்கும் பிராணி நாய் தான். நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளது. அந்த வகையில் டாபர்மேன் எனும் ஒரு நாய் இனம் உள்ளது. இந்த நாய் இனத்தின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.



மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?
[Sunday 2024-03-17 18:00]

பொதுவாக மின்மினி பூச்சிகள் வெயில் காலங்களில் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்ந்து திரிவதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அப்போது இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த மின்மினி பூச்சிகள் ஒளிர்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.



தொப்பையை குறைக்கும் அற்புத பானம்!
[Saturday 2024-03-16 18:00]

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.



சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா?
[Friday 2024-03-15 18:00]

தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.



திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
[Thursday 2024-03-14 18:00]

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.



நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்!
[Wednesday 2024-03-13 18:00]

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.



கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?
[Tuesday 2024-03-12 18:00]

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும். இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா