Untitled Document
March 28, 2024 [GMT]
ஒரு நாள்... ஒரு லட்சம் விதைகள்: - பறவையைப் போல தூவிச் செல்லும் தனிஒருவன்
[Wednesday 2017-06-28 06:00]

ட்ரோன்கள். சில வருடங்களுக்கு முன்னால் வரை அவை எதிர்கால தொழில்நுட்பமாக இருந்தன. உலகின் முன்னேறிய நாடுகளின் கைகளில் மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ராணுவ பயன்பாட்டிற்காகவே அதிகமாக ட்ரோன்களை பயன்படுத்தின. ஆனால் இன்றோ ட்ரோன்களின் நிலைமை வேறு. சினிமா எடுப்பது முதல் டோர் டெலிவரி செய்வது, கால்நடைகளை மேய்ப்பது, அவசர உதவி என அனைத்துத் துறைகளிலும் கோலோச்சத் தொடங்கிவிட்டன ட்ரோன்கள். இதுவரை மனிதர்களுக்காக உதவி செய்த ட்ரோன்கள் அடுத்து இயற்கைக்கு உதவி செய்யப்போகின்றன. ஆம், இனி ட்ரோன்கள் மரம் நடப்போகின்றன. அதற்கு விதைகள் தூவப்போகின்றன


  

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சூசன் கிரகாம் என்பவருக்கு இப்படி ஒரு யோசனை தோன்ற உலகின் மிகப்பெரிய ட்ரோன்கள் தயாரிக்கும் BioCarbon engineering என்ற நிறுவனத்தோடு இணைந்து வடிவமைத்ததுதான் விதைகளைத் தூவும் ட்ரோன். இந்த ட்ரோன் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் விதைகளை நிலத்தில் விதைக்க முடியும் என்கிறார்கள். அதை செயல்படுத்தி நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.மரம் நடுவது பார்ப்பதற்கு வேண்டுமானால் எளிதான காரியமாகத் தெரியலாம். ஆனால் மிகப்பெரிய பரப்பளவில் விதைகளைத் தூவுவதற்கு பெரியளவில் மனிதஉழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த ட்ரோன்கள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் விதையைத் தூவி வேலையை எளிதாக்கி விடும்.

முதலில் ஒரு நிலத்தை அளவிட ட்ரோன்களை பறக்க விட்டு நிலத்தின் பரப்பளவு, எத்தனை வரிசைகள் விதைகளைத் தூவலாம், எவ்வளவு விதைகள் தேவைப்படும் என்பது போன்ற அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த டேட்டா கிடைத்தவுடன் விதைகள் தயார் செய்யப்படுகின்றன. விதைகளைப் பொறுத்தவரை நமது ஊரில் தற்போது பயன்படுத்தப்படும் விதைப்பந்து தொழில்நுட்பத்தைதான் அவர்களும் பின்பற்றுகிறார்கள், ஆனால் சற்று வித்தியாசமாக. விதைகள் முதலிலே முளைக்க வைக்கப்பட்டு, செடி வளர தேவையான சத்துகள் அடங்கிய ஒருவித ஜெல்லால் மூடப்பட்டு இந்த விதைப்பந்துகள் உருவாக்கப்படுகின்றன.பின்பு விதைகளைத் தூவும் ட்ரோன்கள், ஏற்கெனவே உருவாக்கி வைத்த பாதையில் சென்று விதைகளைத் தூவுகின்றன. மண்ணில் விழுந்த விதைகள் ஜெல்லுக்குள் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கின்றன. தேவையான சத்துகளையும் ஈரப்பதத்தையும் கொண்டிருப்பதால் அதிலிருந்து செடி வளர்கிறது. ஒரு முறை பறந்தால், 150 விதைகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விதைகளைக் கூட விதைத்து விடுகிறது இந்த ட்ரோன் . நிலக்கரி சுரங்கங்கள், கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்கள், மனிதர்களால் கைவிடப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் கூட இந்த ட்ரோன்களால் சென்று விதைகளைத் தூவ முடியும்.

இதை வடிவமைத்த பொறியாளர் இதற்கு முன்னால் நாசாவின் முக்கியத் திட்டமான செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இருந்தவர். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் எதிர்காலத்தில் நமது பூமிக்கும் அத்தகைய ஆராய்ச்சி தேவைப்படலாம் என யோசித்தவர் உடனடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கிவிட்டார்.இந்த ட்ரோன்கள் மூலமாக அதிகளவில் வேகமாக மரங்களை வளர்க்க முடியும். மரங்களை வளர்ப்பதன் மூலமாக வளமையை மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.நம் ஊரில் விதைப்பந்துகள் மூலமாக காடுகளை உருவாக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. ஆனால் விதைப்பந்தை தூவுவதற்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். மேலும் சில இடங்களுக்கு நம்மால் சென்று விதைகளை வீச முடியாது. எனவே விதைப்பந்துகளை வீசுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் அருமையாகப் பயன்படக்கூடியது. இதன் மூலம் அதிகப் பரப்பளவிலும் மிக விரைவாக விதைப்பந்துகளைத் தூவுவதற்கும் பயன்படுத்தலாம்.இயற்கையாகவே பறவைகள் விதைகளை நெடுந்தொலைவு சுமந்துச் சென்று, பரப்பும் தன்மை உடையவை. அந்தப் பறவைகளின் எண்ணிக்கையும் மனிதர்களால் குறைந்துக்கொண்டே வருகிறது. இந்த ட்ரோன், பறவைகளின் வேலையைச் செய்யும். நிச்சயம், பறவைகளுக்கு மாற்றாக இந்த ட்ரோன் இருக்க முடியாது. ஆனால், விதைகளைத் தூவும் முக்கிய வேலையைச் செய்ய உதவுவதால் இந்த ட்ரோன் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

  
   Bookmark and Share Seithy.com


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.


உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!
[Sunday 2024-02-18 18:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.


பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
[Tuesday 2024-02-13 16:00]

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.


அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!
[Friday 2024-02-09 18:00]

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.


நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
[Tuesday 2024-02-06 18:00]

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.


எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!
[Sunday 2024-01-28 16:00]

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.


இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி பாதுகாக்கும் தம்பதி!
[Saturday 2024-01-20 16:00]

அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத மகளின் சாம்பலை கற்களாக மாற்றி அமெரிக்க தம்பதி பாதுகாத்து வருகின்றனர். கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க வணிக வளாகத்திற்குள் ஏலியன்கள் புகுந்ததா?
[Monday 2024-01-08 18:00]

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.


புத்தாண்டை முதலாவதாக வரவேற்ற பசிபிக் தேசம்!
[Sunday 2023-12-31 17:00]

பசிபிக் நாடான Kiritimati atoll புத்தாண்டை முதலாவதாக வரவேற்றுள்ளது. இரண்டாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நியூசிலாந்தை அடுத்து டோங்கா மற்றும் சமோவா ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கின்றன. அத்துடன் பல மில்லியன் மக்கள் வரும் மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்கும் நபர்!
[Saturday 2023-12-30 16:00]

பணம் சம்பாதிக்கவும் எதிர்காலம் கருதியும் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கும் நிலையில், எந்த வேலையும் செய்யாமலே பிறக்கும் புத்தாண்டு முதல் ஒருவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்க இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Steve Ballmer என்பவரே, எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க இருக்கிறார்.


100 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாடிய நாடு!
[Tuesday 2023-12-26 18:00]

முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, மக்கள் நேற்று (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபடும் கிராம மக்கள்!
[Wednesday 2023-12-20 18:00]

முன்னோர்களின் வழியில் டைனோசர்களின் முட்டையை குலதெய்வமாக கிராமத்தினர் வழிபடும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டம் பட்லியா கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய் (40). இவர், ஒரு உருண்டையான பொருளை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்.


கனடாவில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகத்தின் உடல் பாகங்கள் மீட்பு!
[Monday 2023-12-11 18:00]

கனடாவில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் ஒன்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. டைரானோசர் (tyrannosaur)எனப்படும் வகை டைனோசர் ஒன்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடனாவின் அல்பேர்ட்டாவில் இந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா