Untitled Document
April 19, 2024 [GMT]
சவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்!
[Thursday 2017-01-05 18:00]

மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இந்த நாட்டில் கடந்த 1938-ம் ஆண்டில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ் என பரலாக அழைக்கப்பட்டவர். பெட்ரோலிய வளத்தை முறையாகப் பயன்படுத்தி சவுதி அரேபியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வித்திட்டவர் இவர்தான். இரண்டாம் உலகப் போரின் போது, உலகம் முழுக்க பெட்ரோலின் தேவை அதிகமாக, அதைப் பயன்படுத்தி பாலைவனத் தேசத்தை பணக்கார பூமியாக மாற்றினார் கிங் அப்துல்லாசிஸ். இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு. இப்படிதான் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பம் உருவாகத் தொடங்கியது.


  

சவுதியின் இரண்டாம் அரசரான கிங் சாத்துக்கு (கிங் அப்துல்லாசிசின் மகன்) மகன்கள் மட்டும் 53 பேர். ஆயிரக்கணக்கில் உறவினர்கள். சவுதி அரேபிய மன்னர் குடும்பம் பற்றி, ஜோசம் ஏ. கென்சியன், 'சவுதி அரசமைப்பு வரலாறு ' என்ற புத்தகத்தில் சவுதி அரேபியாவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார். கிங் சாத்தின் மகள், இளவரசி பாஸ்மா பின் சாத், ராயல் நம்பர் 15000 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதியைப் பொறுத்தவரை 13 மாகாணங்கள் உள்ளன. அதனை நிர்வகிக்கும் உரிமைகள் பெரும்பாலும் மூத்த இளவரசர்கள் கையில் ஒப்படைக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளிலும் மூத்த இளவரசர்களே நியமிக்கப்படுகிறார்கள். சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர், அப்துல்லா 1963-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தேசிய பாதுகாப்புப் படைத் தலைவராக இருந்தவர்தான். பின்னர் மன்னராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்தப் பதவியைத் துறந்தார்.

தற்போது இந்த நாட்டின் மன்னராக கிங் சல்மான் இருக்கிறார். கிங் சல்மான், கடந்த 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்துள்ளார். மன்னர் அப்துல்லாசிஸின் 25-வது குழந்தை சல்மான். இவரது தாய், ஹாசா அல் சுதாரிதான் கிங் அப்துல்லாசிசின் ஃபேவரைட் மனைவி என்று சொல்லப்படுகிறது. கிங் அப்துல்லாசிஸ் - ஹாசா அல் சுதாரிக்கு இடையே 7 குழந்தைகள் உண்டு. கிங் சல்மான், சவுதியின் பாராம்பரியமான உடை அணிந்தாலும் இளம் பருவத்தில் மேற்கத்திய உடைகளை விரும்பி அணிவாராம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ரியாத் மாகாண கவர்னராக இருந்திருக்கிறார். இவரது காலத்தில்தான் ரியாத் நகரை ஒட்டிய பாலைவனங்களில் பிரமாண்டமான வானளவு உயர்ந்த கட்டங்கள் எழுப்பப்பட்டு மக்கள் வசிக்குமளவுக்கு புறநகர் பகுதியாக உருவாக்கப்பட்டது.

தற்போது நாட்டில் மொத்தம் 15 ஆயிரம் இளவரசர் - இளவரசிகள் இருக்கின்றனர். ராஜ குடும்பத்துக்கு இப்போது கிங் சல்மான்தான் தலைவர். தற்போது சவுதியே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றன. இதற்கிடையே சவுதி அரச குடும்பத்தினர் சுகபோக வாழ்க்கையில் வாழ்வதாக வெளிநாட்டு மீடியாக்கள் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன.

அரச குடும்பத்தினர் சுவிஸ் வங்கியில் பணம் போடுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஆடம்பரப் படகுகளில் உல்லாசமாக வலம் வருகின்றனர் என்ற செய்திகளைப் பார்க்க முடிகிறது. கிங் சல்மான் பெயர் கூட கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட பனமா பேப்பரில் இடம் பெற்றுள்ளது. லக்ஸ்ம்பர்க் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் நிறுவனங்கள், லண்டனில் சொத்துக்கள், பிரமாண்டமான படகுகள் வைத்திருக்கிறார் என பனாமா பேப்பர் சொல்கிறது.

சவுதியின் முக்கிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் முழுவதுமே சவுதி அரசக் குடும்பத்தினர் செலவுக்காகத்தான் ஒதுக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதாவது தினமும் 10 லட்சம் பேரல்கள் குரூட் ஆயில் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இளவரசர்கள் - இளவரசிகள் செலவுக்காக ஒதுக்கப்படுகிறதாம். அரசக் குடும்பத்திலும் நேரடி இளவரசர்களுக்கும் உறவுமுறையில் வலம் வருபவர்களுக்கும் வழங்கப்படும் படிகள் உள்ளிட்ட விஷயங்களில் அனேக வித்தியாசங்கள் இருக்கின்றன. நேரடி உறவுகளுக்கும் மறைமுக உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்...நேரடி உறவுகள் லம்போகினி, புகாட்ரி ரக கார்களில் வந்தால், மறைமுக உறவுகள் ரேஞ்ச் ரோவர், மெர்சிடெஸ் பென்ஸ் கார்களில் வருவார்கள்.

அரசரின் நேரடி மகனுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மாதம் ஒன்றுக்கு செலவுக்காக வழங்கப்படும். பேரக்குழந்தைகளுக்கு மாதம் 8 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். அரச வாரிசுகளுக்குத் திருமணம் நடந்தால் 3 மில்லியன் டாலர்கள் வரை அரண்மனைக் கட்டிக் கொள்ள திருமணப் பரிசாக வழங்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் இது.

சவுதி அரேபியாவின் மொத்த பட்ஜெட் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில், 2 பில்லியன் டாலர்கள் அரசக் குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிலும் முன்னுரிமை. அரசு துறைகளில் நல்ல பணிகள் ஒதுக்கப்படும், நிர்வாக ரீதியிலான பதவிகள் வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்களில் கௌரவத் தலைவர்கள் பதவியில் இருப்பார்கள். அதில் இருந்து படிகள் கிடைக்கும். மற்றபடி செல்போன் பில்லில் இருந்து சவுதி ஏர்லைன்சில் நினைத்த நேரம் பயணம் செய்யும் வசதி வரை உண்டு.

ஆனால் இந்தத் தகவல்களை சவுதி அரசின் செய்தித் தொடர்பாளர் குவாசேயர் மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,'' மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே ஆண்டுக்கு 2.7 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என சொல்லப்படுவது தவறானது. சவுதியின் அரச பரம்பரையின் அமைப்பைத் தெரிந்தவர்களுக்கு அதனை விளக்கத் தேவையில்லை. நாட்டின் பல மாகாணங்களில் பூர்வக் குடிகள் உள்ளனர். அந்த பூர்வக்குடித் தலைவர்களுக்கு பெரும் தொகை போய் சேர்கிறது'' எனக் கூறியுள்ளார்.

தற்போதைய சவுதி மன்னர் சல்மான் செலவுகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அமைச்சர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மன்னரால் நியமிக்கப்படும் சவுரா கவுன்சில் உறுப்பினர்களின் சம்பளத்தில் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் படிகள் உள்ளிட்ட இதர செலவுகளையும் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.


உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!
[Sunday 2024-02-18 18:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.


பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
[Tuesday 2024-02-13 16:00]

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.


அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!
[Friday 2024-02-09 18:00]

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.


நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
[Tuesday 2024-02-06 18:00]

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.


எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!
[Sunday 2024-01-28 16:00]

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.


இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி பாதுகாக்கும் தம்பதி!
[Saturday 2024-01-20 16:00]

அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத மகளின் சாம்பலை கற்களாக மாற்றி அமெரிக்க தம்பதி பாதுகாத்து வருகின்றனர். கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க வணிக வளாகத்திற்குள் ஏலியன்கள் புகுந்ததா?
[Monday 2024-01-08 18:00]

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா