Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
லேகா வாஷிங்டன் குறும்படத்தில் நடிக்க சம்மதித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு
[Thursday, 2012-11-01 20:42:54]
News Service

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த லேகா வாஷிங்டன் ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களில் தலை காட்டினார் இப்போது சுத்தமாக சினிமா வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் விளம்பர வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இப்போது குறும்படங்கள் இயக்க முயற்சி செய்து வருகிறாராம். சில ஸ்கிரிப்ட்களை எழுதி அதை நடிகர் சிம்புவிடம் காண்பித்தாராம்.

  

நன்றாக இருப்பதாக கூறிய சிம்பு தானே நடிப்பதாக லேகாவிடம் சொல்ல இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார் லேகா வாஷிங்டன். கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டனுக்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. ஆனால் இதில் லேகாவிற்கு நடிக்கத் தெரியவில்லை என்று இரண்டாவது நாளிலேயே படத்தில் இருந்து தூக்கினார் சிம்பு. எனினும் இது குறித்து இறுதிவரை வாய் திறக்க மறுத்து விட்டார் சிம்பு.

இப்போது லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்பு நடிப்பது எப்படி என்பதுதான் கோலிவுட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. விளம்பரமோ, சின்னத்திரையோ எங்கே போனாலும் சிம்புக்கு வம்பு வந்து சேரும். குறும்படத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்வாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஐதராபாத்தில் விருது வழங்கும் விழா - சூர்யா, காஜல் அகர்வாலுக்கு விருது Top News
[Tuesday, 2013-06-18 19:14:34]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தெரிவு செய்யப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக அவரை தெரிவு செய்தனர். சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தெரிவு செய்யப்பட்டார். இவர் துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெரிவு செய்தனர். இதுபோல் தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாண், சிறந்த நடிகையாக சமந்தாவும், சிறந்த வில்லன் நடிகராக சுதீப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விருதுகளை வழங்க, சூர்யாவும், காஜல் அகர்வாலும் மேடையில் ஏறி பெற்றுக் கொண்டனர். நாகர்ஜூனா, நித்யாமேனன் போன்றோரும் சிறந்த நடிகர், நடிகை விருதை பெற்றனர். விழாவையொட்டி நடிகர், நடிகைகள் நடனம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.



சித்தார்த்திடம் தோற்றுபோன சந்தானம்
[Tuesday, 2013-06-18 18:59:29]

பொதுவாக சந்தானம் தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள். ஆனால், அப்படிப்பட்ட சந்தானத்தையே சில நடிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் ஆர்யா, சித்தார்த் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஆர்யா, சந்தானத்தை நேரில் கலாய்ப்பதை விட போனில்தான் ஜாஸ்தியாக கலாய்ப்பாராம். சந்தானம் படங்களில் பேசிய டயலாக்குகளை கொண்டே, அதாவது அவர் வீசியெறிந்த பந்துகளையே அவர் மீது திருப்பி விடுகிறாராம். இதனால் ஆர்யாவின் போன் வருகிறது என்றாலே எமகண்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சே என்று அலறுகிறாராம் சந்தானம்.



தேடி வரும் வாய்ப்புக்களை ஏற்பேன் - நானாக யாரிடமும் கெஞ்ச மாட்டேன் சினேகா
[Tuesday, 2013-06-18 18:53:58]

எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகா, திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்கு பிறகு தான் அதன் ஷூட்டிங் முடிந்து வெளியானது. சினிமா வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நான் ஒரு எல்லை வகுத்திருக்கிறேன். எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வந்தால் தான் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.



12 கோடிக்கு வியாபாரமான சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'
[Tuesday, 2013-06-18 18:44:26]
சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ. 12 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம். இது இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக விற்பனையான முதல் படமாகும். இதனால், காலரை தூக்கிவிட்டபடி நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம். மேலும், சம்பள விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே படாதிபதிகளை மிரட்டும் வகையில் பேசும் அவர், இப்போது இன்னும் எகிறிப் பேசி வருகிறாராம். அதனால் சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு வட்டம் போட்டு வந்த பட்ஜெட் படாதிபதிகள், அவர் மேல்தட்டு ஹீரோவாகி விட்டார் என்று முடிவு செய்து டிராக்கை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.


த்ரிஷாவை வென்ற அமலா பால்..
[Tuesday, 2013-06-18 18:39:25]
நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் படத்தின் நாயகி யார் என்பதில் த்ரிஷாவுக்கும், அமலா பாலுக்கும் இடையே போட்டி நிலவியது. இதன் பின்னர் நீண்ட விவாதம் நடத்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு எடுத்தார்களாம். அத்துடன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வியாபாரத்திற்கு பலமாக இருக்கும் என்றும் நினைத்தார்களாம். இந்நிலையில் இது குறித்து அமலா பாலிடம் பேசி ஓ.கே வாங்கி விட்டார்களாம். இதனையடுத்து தலைவா படம் முடிந்த பிறகு, சூர்யாவுடன் இணைகிறாராம் அமலா பால்.


பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கும் டி.ஆர் - பட்டைய‌‌ை‌ கிளப்பும் தாடிக்காரர்
[Tuesday, 2013-06-18 18:36:08]

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமானார் பவர்ஸ்டார் என்கிற டாக்டர் சீனிவாசன். இதில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி 'ஆர்யா சூர்யா' என்றொரு படத்தை இயக்கினார். படமும் வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், இப்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில், இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும், இதில் பவர் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டிஆருக்கு கிடைத்திருக்கிறது.



அம்மாவாக நடிக்கும் ரம்யா நம்பீசன்!
[Tuesday, 2013-06-18 18:28:31]

தமிழில் 'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'குள்ளநரி கூட்டம்', 'பீட்ஸா' உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ரம்யா நம்பீசன். இவர் மலையாளத்தில் 'பிலிப்ஸ் அண்ட் தி மொங்கி பென்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யா ஹீரோ. அவர் மனைவியாக வரும் ரம்யா, பத்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார். இதுபற்றி படக்குழு கூறும்போது, 'குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு பற்றிய படம் இது. சிறு வயதில் காதலித்து திருமணம் செய்யும் கேரக்டர் ஹீரோயினுக்கு. அதனால் இளம் வயதிலேயே குழந்தை பெறுகிறார். குழந்தைக்கு பத்து வயது ஆகும் போது நடக்கும் விஷயங்கள்தான் கதை' என்றனர்.



விஜய்யின் கண்டிசனால் ஒதுங்கும் சுந்தர்.சி
[Tuesday, 2013-06-18 18:23:45]

விஜய்யைப்பொறுத்தவரை ஒரு உறுதியான கொள்கை வைத்திருக்கிறார். அதாவது எந்த இயக்குனராக இருந்தாலும் தன்னிடம் முழுக்கதையையும் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் அந்த கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர். டைரக்டர் கெளதம்மேனன்கூட யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பே விஜய்யை புக் பண்ணியிருந்தார். ஆனால், கடைசிவரை அவரிடம் கதை சொல்லவில்லை. கதை சொன்னால்தான் நடிப்பேன் என்று விஜய் சொன்னபோது இவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் அப்படம் ட்ராப் ஆனது. அதையடுத்து, இப்போது விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் முன்னணி இயக்குனர்கள்கூட கதையை தெளிவாக வடிவமைத்து விட்டுதான் அவரை அணுகுகிறார்கள். இந்த நிலையில், விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தாலும், அவர் கதை கேட்பாரே என்று அவரிடம் கால்சீட் கேட்க தயங்கி நின்று கொண்டிருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி.



திரையுலக அபிமானிகளின் நெஞ்சில் பால் வார்த்த சமந்தா
[Tuesday, 2013-06-18 18:12:25]

அம்மாவாக ஆசைப்படுவதாக சமந்தா சொன்ன செய்தி மீடியாக்களுக்கு இனிப்பு செய்தியாக இருந்தாலும், அவரது திரையுலக அபிமானிகளுக்கு அது கசப்பு செய்தியாகி விட்டதாம். ஆளாளுக்கு போன் போட்டு, அப்படி என்ன உனக்கு வயதாகி விட்டது. இப்போது டீன்ஏஜ் பெண்தானே நீ. இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே என்று அவரது நலம்விரும்பிகள் போன்று அக்கறையோடு சொன்னார்களாம். அதைக்கேட்ட சமந்தா, சினிமாவில் பல ஆண்டுகளாக போராடி இப்போதுதான் ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். தெலுங்கில் எனக்கென கமர்சியல் வேல்யூ உருவாகியிருப்பதைப்போன்று அடுத்து தமிழிலும் ஒரு மார்க்கெட்டை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று அவர்களுக்கு பதிலுரைத்திருக்கிறார் சமந்தா. அம்மாவாக ஆசை வந்திருப்பதாக பேட்டி கொடுத்தது பற்றி அவர்கள் கேட்டதற்கு, பெண் என்றாலே என்றைக்காவது ஒருநாள் திருமணம் செய்து குழந்தைகளுக்கு அம்மாவாகித்தானே ஆக வேண்டும். அதிலும் எனக்கு அன்பு, பாசம் கொஞ்சம் ஜாஸ்தி.



இம்மாதம் 21 - ந்தேதி வெளிவரும் ராஞ்சனா - பின்வாங்கும் மரியான்
[Tuesday, 2013-06-18 17:48:30]

இந்தியில் தனுஷ் நடித்துள்ள ராஞ்சனாவையும், தமிழில் நடித்துள்ள மரியான் படத்தையும் இம்மாதம் 21 - ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். மேலும், ராஞ்சனா தமிழ்ப்பதிப்பான அம்பிகாபதியை மரியான் ரிலீசாகி ஒரு வாரத்துக்குப்பிறகு ரிலீஸ் செய்வது என்றும் முடிவாகி இருந்தது. ஆனால், தணிக்கைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மரியான் படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறதாம். அதனால், ரிலீஸ் தேதியை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்போகிறார்களாம். அதனால், ராஞ்சனா மட்டும் வருகிற 21-ந்தேதி வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மரியான் வெளியாவது தாமதமாகியிருப்பதால், ராஞ்சனா வெளியாகும் அன்றே அம்பிகாபதியை வெளியிட யோசித்து வருகிறார்களாம். அதுமட்டுமின்றி, ராஞ்சனா படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்ட தனுஷ், இதுவரை மரியான் பட ப்ரமோஷன் வேலைகளை தொடங்காததால், ராஞ்சனா ரிலீசுக்குப்பிறகு விளம்பரங்கள் தொடங்கியபிறகுதான் மரியான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



இயக்குனரை மெய்சிலிர்க்க வைத்த பார்வதி..
[Monday, 2013-06-17 18:24:48]

சசி இயக்கிய பூ படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்திருந்தவர் பார்வதி. அவரை படத்தில் பார்த்து விட்டு நேரில் பார்த்தால் ஆள்அடையாளமே தெரியாது. அந்த அளவுக்கு நிஜத்தில் மாடர்ன் யுக பெண்ணாக இருப்பார் பார்வதி. அதேபோல் தனுசுடன் நடித்துள்ள மரியான் படத்திலும் அவருக்கு மீனவ பெண் வேடம். அவர் நினைத்துகூட பார்த்திராத மாறுபட்ட கதாபாத்திரம். வழக்கமான, காதலியாகத்தான் வருகிறார் என்றாலும், விரட்டி விரட்டியடிக்கும் தனுசை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளில் இதுவரை சினிமா ரசிகர்கள் பாத்திராத வகையில் மெய்யாலுமே தத்ரூபமாக நடித்துள்ளாராம் பார்வதி. அவரது நடிப்பு பார்த்து பட டைரக்டர் பரத்பாலா பல இடங்களில் மெய்சிலிர்க்க வைத்து விட்டதாம்.



பிரியாணிக்காக ஐபோனை பரிசளித்த கார்த்தி..!
[Monday, 2013-06-17 18:11:54]

பிரியாணி படத்தை நன்றாக இயக்கியதற்காக வெங்கட் பிரபுக்கு ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம் கார்த்தி. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் கார்த்தி. இதனையடுத்து மங்காத்தா வெற்றிக்கு பிறகு, கார்த்தி- ஹன்சிகாவின் நடிப்பில் பிரியாணி படத்தை இயக்கியுள்ளார். பருத்திவீரன் படத்திற்கு பிறகு சரியாக சொல்லிக் கொள்ளும் படி படம் ஒன்றும் கார்த்திக்கு அமையவில்லை என்பது தான் உண்மை. அடுத்தடுத்து வந்த சகுனி, அலெக்ஸ்பாண்டியன் என அனைத்தும் பிளாப் ஆகியதில் நொந்து நூடுல்ஸ் ஆனார் கார்த்தி. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கார்த்தி. ரசிகைகளின் எதிர்பார்ப்பிற்கேற்ப கார்த்தியை வித்தியாசமாக காட்டும் முயற்சியில் இறங்கிய வெங்கட்பிரபு, அதில் வெற்றியும் பெற்றார். படம் முடிவடையும் நிலையில், படத்தைப் பார்த்த கார்த்தி அப்படியே ஷாக் ஆயிட்டாராம். இயக்குர் வெங்கட் பிரபுவின் திறமையைப் பார்த்து மகிழ்ந்து அவருக்கு ஐபோன் 5 ஒன்றை பரிசாகவும் அளித்திருக்கிறார் கார்த்தி.



முதன்முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கும் அனுஷ்கா..
[Monday, 2013-06-17 18:07:39]

கொலிவுட்டில் சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது முதன் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நான் ஈ பட இயக்குநர் ராஜ மௌலி இயக்கும் பாஹூபாலி படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு தவிர பாலிவுட்டிலும் உருவாகிறது. இதன் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அனுஷ்கா. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு யூலை மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக பாரம்பரிய கத்திச் சண்டை பயிற்சிகளை அனுஷ்கா எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.



எந்த சூழ்நிலையிலும் விஜய்யை வைத்து படம் இயக்க போவதில்லை - சுந்தர்.சி
[Monday, 2013-06-17 18:02:11]

எந்த சூழ்நிலையிலும் விஜய்யை வைத்து படம் இயக்க போவதில்லை என தெரிவித்துள்ளார் சுந்தர்.சி. சமீபத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் ரசிகர்கள் காட்சியில் கலந்து கொண்டார் அப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி. அப்போது அவர் பேசுகையில், தல அஜித் நடிப்பில் நான் இயக்கும் படம் குறித்து அஜித்தே அறிவித்தால் நன்றாக இருக்கும். அவரிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியதை பற்றி வெளிப்படையாக கூறினார் அவருக்கு பிடிக்காது. விரைவில் இருவரும் இணையும் படம் பற்றி தகவல்கள் வெளிவரும். நகைச்சுவை நடிகர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் கவுண்டமணி. மீண்டும் அவரோடு இணையும் நாளை எதிர்பார்க்கிறேன்.



சித்தார்த் எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி - ஹன்சிகா: ஆடிப்போயுள்ள சமந்தா..
[Monday, 2013-06-17 17:54:52]

ரசிகர்கள் மட்டுமின்றி, நாயகர்களாலும் அதிகம் விரும்பப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஹன்சிகா. நாயகி என்ற பந்தாவும், ஏனோ தானோ என்றும் இல்லாமல் தனது முழுதிறமையையும் வெளிப்படுத்தி நடிப்பதால் இயக்குனர்களாலும் அதிகம் விரும்பப்படும் நாயகியாகி விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த காட்சியாக இருந்தாலும் நான் முழு திருப்தி அடையும் வரை நடிப்பேன். அதற்காக ஓவர் ஆக்டிங் செய்ய மாட்டேன். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளேன். சித்தார்த் எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி. படத்தில் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சீனை சொன்னதும் கமெரா முன்பு வந்து நிற்பவர், எந்தவித தயக்கமும் இல்லாமல் எள் என்றால் எண்ணெய்யாக நடிப்பை பொறிந்து தள்ளி வருகிறார் என இயக்குனர் சுந்தர்.சி புகழாரம் சூட்டியுள்ளார்.



யுவன் - இசைஞானி இசையில் இளையதளபதியின் ஹாலிவுட் படம்..!
[Monday, 2013-06-17 17:44:22]

இசைஞானி இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளார்கள். இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கர்ரி இன் லவ் என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் விஜய் - சோனம் கபூரை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கர்ரி இன் லவ் படத்தின் கதை திரைக்கதையை அமெரிக்க தமிழரான ராஜ் திருச்செல்வன் எழுதியுள்ளார். இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நம்பர் ஒன் நாற்காலியில் மீண்டும் ஹாயாக அமர்ந்திருக்கும் ஹன்சிகா!
[Monday, 2013-06-17 17:34:34]

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப்பிறகு வெற்றிப்பட நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதன்பிறகு அவரே நினைத்துப்பார்க்காத அளவுக்கு மளமளவென்று முன்னணி நடிகர்களின் படங்களாக அவரது பாக்கெட்டிற்குள் எகிறி குதித்தன. இதனால் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை அந்தஸ்தை பெற்றார் ஹன்சிகா. ஆனால் அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் ஊத்திக்கொண்டன. அதிலும் சேட்டை படத்தின் தோல்வி ஹன்சிகாவை ஆட்டம் காண செய்து விட்டது. இப்படியே இன்னும் இரண்டு படங்கள் ஓடவில்லை என்றால் மார்க்கெட் காலியாகி மும்பைக்கு வண்டியை பிடித்து விட வேண்டியதான் என்று மன பயத்தில் அவர் நடித்து வந்த நேரம்தான் தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றி பெற்று ஹன்சிகாவின் பயம் நீக்கியுள்ளது. இதனால் மீண்டும் உற்சாகம் அவரை தொற்றிக்கொண்டுள்ளது.



விரதமிருந்து அசைவம் சீண்டாமல் அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!
[Monday, 2013-06-17 17:29:22]

மனோரமாவிற்கு பிறகு அம்மா வேடம், காமெடி வேடம், குணசித்ர வேடம் என்று கலக்கிக்கொண்டிருப்பவர் கோவை சரளா. லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் அம்மா வேடத்தில் நடித்த கோவை சரளாவிற்கு அதன்பிறகு தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் எகிறி விட்டது. அதனால் ஒரு வருடமாக ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வந்தவர், இப்போதுதான் தமிழ்நாட்டுப்பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். வாலு டைட்டீல் எங்களுக்குத்தான். நாங்கள்தான் அந்த டைட்டீலை முதலில் பதிவு செய்தோம் என்று சிம்புவுடன் மல்லுக்கட்டிய இன்னொரு வாலு படத்தில் தற்போது மாமியார் வேடத்தில் நடித்துள்ளார் கோவை சரளா. (அப்படமும் இப்போது ரெட்ட வாலு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதில் படம் முழுக்க தனது மருமகன் தம்பி ராமைய்யாவை காய்ச்சி எடுக்கும் வேடத்தில் நடித்துள்ள சரளா, ஒரு காட்சியில் சாமியார் கோலத்தில் தன்னுடன் மோதும் தம்பிராமைய்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும் அம்மன் கெட்டப்பில் மாறி நடித்துள்ளாராம்.



பி.வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நாயகனாக விஜய்..!
[Monday, 2013-06-17 17:23:23]

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் பி.வாசு, ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார். தனது முதல்படத்தையே த்ரில்லிங்கான பேய் படமாக உருவாக்குகிறார். பணக்காரன், உழைப்பாளி, சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது முதன்முதலாக ஹாலிவுட்டில் ஒரு படம் இயக்க உள்ளார். படத்திற்கு "கரி இன் லவ்" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வாசு கூறியதாவது, நான் புதிய படத்துக்கான கதை‌ விவாதத்தில் இருந்தபோது, அமெரிக்க வாழ் தமிழர் ராஜ்திருச்செல்வம் என்பவர் என்னிடம் பேசினார். அப்போது தங்களது சந்திரமுகி படத்தை பார்த்தேன், அதேப்போன்று பேய் படம் ஒன்றை ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளேன், அப்படத்தை நீங்கள் டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.



முனி பாகம் - 3இல் நாயகியாக அஞ்சலி!
[Monday, 2013-06-17 17:16:06]

முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை பெரிய ஹிட் படமாக கொடுத்த ராகவா லாரன்ஸ், அப்படத்தின் மூன்றாம் பாகமான கங்கா படத்தை இன்னும் பெரிய அளவில் வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான், இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு மூன்றாம் பாகத்தின் வேலைகளில் இறங்காமல், பல மாதங்களாக அதற்கான கதை விவாதத்தை நடத்தி வந்தார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்கும் லாரன்ஸ், தமிழ்ப்பதிப்பில் ஹீரோயினியாக நடிக்க டாப்ஸியை புக் பண்ணிவிட்டவர், தெலுங்கில்தான் சில மாதங்களாக தனது கதைக்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தார். ஆனால், இவர் கால்சீட் கேட்க நினைக்கும் நடிகைகள் வருடக்கணக்கில் தங்கள் கால்சீட் டைரியை புல் பண்ணி வைத்திருக்கிறார்களாம். அதனால், இப்போது அஞ்சலியை தெலுங்கு பதிப்புக்கு புக் பண்ணி விட்டாராம் லாரன்ஸ்.


TamilsGuid-191012-2013
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
Ramans2011
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com