Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
நாவுறு தீவுக்குச் செல்வதா? அல்லது நாடு திரும்புவதா? - ஆசி சென்றவர்கள் குழப்பத்தில்!
[Tuesday, 2012-10-09 21:33:02]
News Service

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்து அங்கு தங்கியுள்ள இலங்கையர் பலர் நாவுறு தீவுக்குச் செல்வதா? அல்லது நாடு திரும்புவதா? என குழப்பத்தில் இருப்பதாக தனது சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்பிய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் கூறுகிறார்.

  

அவுஸ்ரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ் தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே அவுஸ்ரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த மாதம் 22ஆந் திகதி 18 பேரும் 29ஆந் திகதி 26 பேரும் 46 இலங்கையர்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு வழித்துணையுடன் நாடு திரும்பியுள்ளார்கள்.

இறுதியாக நாடு திரும்பியவர்களில் சிங்களவர்கள் 23 தமிழர்கள் 2 முஸ்லிம் 1 என்ற எண்ணிக்கை அடங்கும் இவர்களில் தமிழர்களில் ஒருவரான யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பயணம் தொடர்பாகவும் மேலும் கிறிஸ்மஸ் தீவிலுள்ள ஏனைய இலங்கையர் பற்றி தெரிவிக்கையில்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு பயண ஏற்பாட்டாளர்களால் கடல் பிரதேசமொன்றிற்கு 23ஆந் திகதி வாகனமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டோம். கொழும்பிலிருந்து நான்கு மணித்தியாலங்கள் வாகனத்தில் பயணம் இரவு நேரம் என்பதால் இடங்களை அடையாளம் காண முடியவில்லை. அதிகாலை ஒரு மணிக்கு எங்களை ஏற்றிய படகு தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்த பயணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி பிள்ளை உட்பட 66 பேர் பயணம் செய்தோம். 18 தொடக்கம் 19 நாட்கள் பயணத்தின் பின்னர் செப்டெம்பர் கொஸ்கோ தீவை சென்றடைந்தோம். கடல் பயணத்தின் போது வாந்தி மயக்கம் தலைவலி போன்ற பிரச்சினைகளை எதிர் நோக்கினார்கள் இந்த பயணத்தை ஏன் தான் நாடினோம் என எண்ணத் தோன்றியது.

எனது குடும்பத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டது. எனது தந்தையார் கூலி வேலை செய்து தான் எங்களை வளர்த்தார் அவரது கடின உழைப்பு நோய் காரணமாக தொடர்ந்தும் அவருக்கு தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை.

இந்நிலையில் எனது குடும்ப பொருளாதார நிலையைக் கருதியே சட்டவிரோத பயணமாக இருந்தாலும் இந்த பயணத்தை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனது வளவிலுள்ள காணியில் ஒரு பகுதியை மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்று பயண ஏற்பாட்டாளர்களுக்கு முற்பணமாகக் கொடுத்தேன்.

சட்டவிரோத பயணமாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான பயணமாக இருந்தாலும் அந்த நாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று ஒரு காலத்தில் நாடு திரும்பும் போது இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு தரும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

ஆகஸ்ட் மாதம் 23ஆந் திகதி கிறிஸ்மஸ் தீவில் நான் தங்க வைக்கப்பட்ட போது நாட்டுக்குள் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய தீர்மானம் பற்றி எமக்கு விளக்கமளித்தனர்.

அதாவது ஆகஸ்ட் 13ஆந் திகதிக்கு பின்னர் நாட்டுக்குள் நுழைபவர்கள் நாவுறு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு பின்னர் தான் புகலிடம் பற்றி தீர்மானிக்கப்படும். இப்படி அங்கு செல்லாதவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் வழித்துணையுடன் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். அந்த அமைப்பின் ஊடாக நாட்டில் தொழில் செய்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாவுறு தீவில் தங்க வைக்கப்படும் கால எல்லை பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் அது நீண்டகாலம் எடுக்கும் போல் தெரிந்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு உழைக்க வேண்டும் என சென்று என்னைப் பொறுத்தவரை இவ்வாறு நீண்டகாலம் தங்கியிருப்து என்னைப் பொறுத்தவரை முடியாத காரியம்.

இந்நிலையில் எனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அவர்களும் நாடு திரும்ப சம்மதம் தெரிவித்தார்கள் 20 நாட்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருந்த நான் நாடு திரும்பினேன்.

அவுஸ்ரேலியா அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலம்பெயர்தோர் அமைப்பு வழித்துணையுடன் நாடு திரும்பினேன். விமான நிலயத்தில் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குடும்ப விபரம் மற்றும் பயணத்தின் நோக்கம் பற்றி கேட்டு பதிவு செய்தனர்.

குடும்பத்தின் பொருளாதாரம் கருதியே இந்த சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது என தெரிவித்த போது இனி இவ்வாறான பயணத்தை நாட வேண்டாம் எனக் கூறி விமான நிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்தனர். விசாராணைகளைப் பொறுத்தவரை எவ்வித கெடுபிடிகளுமின்றி சாதாரணமாகவே நடைபெற்றது.

விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது 29 ஆயிரம் 767 ரூபா பணத்தை யாழ்பாணம் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக வழங்கியது. அந்த அமைப்பின் யாழ் பிரதேச அமைப்பாளர்களால் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தருவர்கள் என கூறப்பட்டது.

கிறிஸ்மஸ் தீவைப் பொறுத்தவரை குடும்பங்கள் கொஸ்கோ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இலங்கையர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்கியுள்ளார்கள்.

அங்கு தங்கியிருந்த காலத்தில் பராமரிப்பு நன்றாக இருந்தது விசேட ஆங்கில வகுப்புகள் நடைபெறுகிறது. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைப் பணமும் கைச் செலவிற்கு வழங்கப்படுகிறது.

நாவுறு தீவைப் பொறுத்தவரை அங்கு இப்படியான வசதிகள் அங்கு எதிர்பாக்க முடியாதென அங்கு தங்கியுள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். காட்டுப் பிரதேசம் கூடாரங்களில் தான் தங்க வைக்கப்படுவார்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் அங்கு தங்கியிருப்பது என்று தெரியவில்லை என்ற காரணத்தினால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள பலரும் அங்கு செல்ல விரும்புவதாக இல்லை.

இலங்கையரைப் பொறுத்தவரை நாவுறு தீவுக்குச் செல்வதா? நாடு திரும்புவதா? என்ற நிலையிலுள்ளனர். அவர்களின் மனநிலையைப் பொறுத்தவரை பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் இலட்சக் கணக்கில் பணம் செலவளித்துவிட்டோம். நடப்பது நடக்கட்டும் நாவுறு தீவுக்குச் செல்வோம் என ஒரு சாரார் நிலைப்பாடு உள்ளது. மற்றவர்களைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பு விரைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்த நிலையில் நாடு திரும்புகிறார்கள்.

என்றாலும் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் ஏதாவது வழி கிடைத்து அவுஸ்ரேலியாவிற்குள் செல்ல அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்பும் உள்ளது ஆனாலும் இது எந்தளவு சாத்தியப்படும் என்று தெரியாது" என்றார்.

இதேவேளை இலங்கையிலிருந்து இந்த ஆண்டு சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவிற்குச் செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் மற்றும் கடற்படையினரால் சுமார் 2637 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

செப்டெம்பர் மாதத்திலேயே மிகக் கூடுதலானோர் 15 சந்தர்ப்பங்களில் பொலிஸாராலும் கடற்படையினராலம் கைது செய்யப்பட்டுள்ளர். அந்த மாதத்தில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024.

கிழக்கு தெற்கு மற்றும் மேல் மாகாண கடலிலும் கடலோரப் பிரதேசங்களிலும் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 1584 ஆகும்.

இம்மதம் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பிரதேசத்தில 6 பேரும் கடந்த இரண்டாம் திததி வெலிகம பிரதேசத்தில 14 தமிழர்கள் 7 சிங்களவர்கள 2 முஸ்லிம்கள் என 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com