Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பாகா தமிழீழத்தில் இருந்தும் கூட்டறிக்கை வெளியிடு!
[Wednesday, 2012-09-19 10:59:31]
News Service

அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகள் கூட்டாகவிடுத்துள்ள கூட்டறிக்கை.

  

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன.

அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமான அச்சம், தன்னெழுச்சியிலான போராட்டமாக தினம்தினம் தீவிரம் பெற்றுவரும் சூழலில், அங்கிருந்துவரும் செய்திகளும் காட்சிகளும் மிகவும் மனச்சஞ்சலம் தருபவையாக உள்ளதுடன், துரதிஸ்டவசமாக அந்த மக்களது நியாயமான போராட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் சாதகமான அணுகுமுறையையும் கொண்டிருக்கவில்லையென்பது கவலையளிப்பதாக உள்ளது.

ஜனநாயகத்தில் அடித்தளத்திலமைந்த அவர்களது போராட்டம் எல்லா முனைகளிலும் நிராகரிக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதுடன், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடக்கூடிய ஆபத்துமுள்ளது.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக வயது வேறுபாடின்றி ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை வைத்து, அறவழியில் முன்னெடுக்கும் போராட்டங்களை அதிகாரத்திலிருப்பர்கள் எதிர்கொள்ளும் விதம் மிகுந்த அதிருப்தியளிப்பதாக உள்ளது.

கடந்த 10ம் திகதி போராட்டம் நடத்திய மக்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் தடியடிதாக்குதல்கள் நடந்ததும், ஒருவர் காவல்த்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் கண்டனத்திற்குரியதென்பதுடன், ஜனநாயக விழுமியங்களில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைப்பதுமாகும்.

தமிழகத்திலிருந்து வெகு தொலைவில், பல்வேறு நாடுகளில் வாழ்பவர்களாக இருந்த போதும், ஊடகங்களின் மூலமாக அங்கு நடப்பவற்றை தொடர்ந்து அவதானித்து வருபவர்களான நமக்கு, போராடும் மக்கள் குறித்த அச்சமும் அக்கறையும் இயல்பாகவே ஏற்படுகிறது.

இந்தியாவிற்கு எது தேவை எது தேவையற்றது என்பதை இந்தியாவே தீர்மானித்துக்கொள்ளும் தகுதியும் உரிமையும் உள்ளதனால் இந்த விடயம் குறித்த அறிவுரையெதனையும் முன்வைப்பது எமது நோக்கமல்ல. எமது அக்கறைகளிற்கான காரணம் தெளிவானது. கலை, பண்பாட்டு, வரலாற்று ரீதியிலான நெருங்கிய உறவுள்ள தமிழக மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயமான காரணங்களின் நிமித்தத்தினால் எமது ஆதரவை தெரிவிப்பது தவிர்க்கவியலாத கடமை.

சுற்றுச்சூழலிற்கும் அதன் விளைவுகளிற்கும் நில, தேச, இன எல்லைகள் கிடையாது. பூமிக்காக மனிதனே தவிர, மனிதனிற்காக பூமி கிடையாதென்பதை தீவிரமாக நம்புகிறோம். எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனுமான வளர்ச்சிகளில் நிகழும் விதிவிலக்கான ஒரு அசம்பாவிதமே நிவர்த்தி செய்யவே முடியாத இழப்புகளை மனிதர்களிற்கும், பூமிக்கும் உண்டாக்கிவிடுகிறதென்ற எளிய உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படைகளில் உருவான அணு உலை எதிர்ப்புப்போராட்டத்தின் நியாயத் தன்மையை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன், போராடும் மக்களுடன் கலந்தாலோசித்து, அவர்களிற்கு நீதி கிடைக்கத்தக்கதான தீர்வொன்றை எட்டுமாறு அரசுகளிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

அணுமின் நிலையங்களினால் பெற்றுக்கொள்ளவல்ல சாதகங்களை மட்டுமல்ல, ஏற்பட்ட பாதகங்களினால் வாழ்நாளில் நிவர்த்தியே செய்ய முடியாத துயரசாட்சிகளையும் இந்த உலகம் கொண்டிருக்கிறது. இதனால் அணுமின் நிலையங்கள் தொடர்பாக உலகம் சிந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில், அணுமின் நிலையத்திற்கெதிரான தமிழக எதிர்ப்புணர்வு நியாயமானதெனக் கருதுகிறோம்.

ஏதோ ஒரு காரணத்தினால் கூடங்குளத்தில் விபத்தொன்று ஏற்படும்பட்சத்தில் அதன் தாக்கத்திற்கு அயலகமக்களும் உட்பட வேண்டிய அபயமுள்ளதனையும் சுட்டிக்காட்டுகிறோம். வுhழ்வுரிமைக்காக போராடும் மக்கள் கூட்டமான நாம், வாழ்வுரிமைக்காக போராடும் இன்னொரு மக்கள் கூட்டத்தின் துயரைப் புரிந்து கொள்வதுடன், அவர்களிற்காக எங்கள் குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்குமென்பதையும் பதிவு செய்கிறோம்.

சிவஞானம் சிறீதரன் - பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்தேசியக்கூட்டமைப்பு

அப்பாத்துரை விநாயகமூர்த்தி - பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்தேசியக்கூட்டமைப்பு

சிவாஜிலிங்கம் அரசியல்த்தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

சீ.வி.கே. சிவஞானம் தலைவர், யாழ்மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் இணையம்

க.கஜீவன் தலைவர், வலி வடக்கு பிரதேசசபை

பொ.வியாகேசு தலைவர், வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபை

த.சதீஸ் உறுப்பினர், வல்வெட்டித்துறை நகரசபை

க.விந்தன் உறுப்பினர், யாழ்மாநகரசபை

பத்மினி சிதம்பரநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

வேழமாலிகிதன் தமிழ்தேசியகூட்டமைப்பு

க.தவரட்ணம் , வடமாகாண மீனவ சம்மேளனங்களின் தலைவர்

க.சூரியகுமாரன் , பிரதிநிதி, யாழ்மாவட்ட மீனவர் அமைப்பு

சு.பார்த்தீபன் , சட்டத்தரணி, யாழ்ப்பாணம்

கு.குருபரன் , சட்டத்துறை விரிவுரையாளர், யாழ்பல்கலைகழகம்

அ.மணிவண்ணன் , சட்டத்தரணி, யாழ்ப்பாணம்

கலாநிதி ந.ரவீந்திரன், கல்வியல்கல்லூரி

அருட்திரு. தமிழ்நேசன் அடிகள் , இயக்குனர், கலையருவி சமூகதொடர்பு நிலையம், மன்னார் மறைமாவட்டம்

மொஹமட் மகீர் மௌலவி , தாராபுரம் ஜூம்மா பள்ளிவாசல்

தர்மகுமார குருக்கள் , மன்னார் மாவட்ட இந்துகுருமார் பேரவை

மனோ ஐங்கரசர்மா , மன்னார்மாவட்ட இந்துகுருமார் பேரவை

பாபு சர்மா , மன்னார் மாவட்ட இந்துகுருமார் பேரவை

ச.தேவதாஸ்(தேவா) , மொழிபெயர்ப்பாளர், மன்னார்

பஸ்ரினா நாவண்ணன் , கவிஞர், மன்னார்

தா.அகிலன் , எழுத்தாளர்,கனடா

கருணைரவி , எழுத்தாளர்,யாழ்ப்பாணம்

யோ.கர்ணன் , எழுத்தாளர்,யாழ்ப்பாணம்

நந்தினி சேவியர் , எழுத்தாளர்,திருகோணமலை

கருணாகரன் , கவிஞர்,கிளிநொச்சி

ஞானதாஸ் , இயக்குனர்,கொழும்பு

அ.நிசாந்தன் , குறும்பட இயக்குனர், மன்னார்

இந்திரன் தேவஅபிரா , கவிஞர், பிரித்தானியா

றியாஸ் குரானா , கவிஞர், அக்கரைப்பற்று

தாட்சாயணி , எழுத்தாளர், யாழ்ப்பாணம்

திசேரா , எழுத்தாளர், மட்டக்களப்பு

கவியுவன் , எழுத்தாளர், திருக்கோவில்

த.மலர்ச்செல்வன் , எழுத்தாளர், ஆசிரியர் மறுகா சஞ்சிகை, மட்டக்களப்பு

பிகார் , எழுத்தாளர், மன்னார்

ஏஸ்.ஏ. உதயன் , எழுத்தாளர், மன்னார்

துறையூரான் எம்.சிவானந்தன் , எழுத்தாளர், மன்னார்

இராதேயன் , ஊடகவியலாளர்

இ.தயாபரன் , நிமலராஜன் ஞாபகர்த்த அமைப்பு

ஆ.சபேசன் , உதவி ஆசிரியர், தினக்கரல்

ந.பொன்ராசா , உதவி ஆசிரியர், தினக்குரல்

க.செல்வதீபன் , ஊடகவியலாளர்

ந.பரமேஸ்வரன் , ஊடகவியலாளர்

பு.வின்சலோ , ஊடகவியலாளர்

க.நிதர்சன் , ஊடகவியலாளர்

ந.குருபரன் , ஊடகவியலாளர், இலண்டன்

சி.வினோஜித் , ஊடகவியலாளர்

சர்தார் ஜமீல் , ஊடகவியலாளர்

பாரதி இராஜநாயகம் , ஊடகவியலாளர், தினக்குரல்

மக்கள் காதர் , ஊடகவியலாளர், மன்னார்

எஸ்.ஆர். லெம்பேட் , ஊடகவியலாளர், மன்னார்

ஜேம்ஸ் ஜோஸ் பெர்னான்டோ , ஊடகவியலாளர், வீரகேசரி

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மனைவியுடன் தகராறு - சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday, 2013-06-19 17:38:06]

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டவேளை, கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென்று கூறியுள்ளார்.



பஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி, 70 பேர் காயம்!
[Wednesday, 2013-06-19 17:19:14]

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றே இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் விபத்திற்குள்ளானது. இப்பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் நமுணுகல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!
[Wednesday, 2013-06-19 17:15:59]

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.



சிங்கள ராவயவின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தவும் - ஜனாதிபதியிடம் அசாத் சாலி கோரிக்கை!
[Wednesday, 2013-06-19 16:08:46]

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்: - எம்.ஏ. சுமந்திரன், நா.உ.
[Wednesday, 2013-06-19 10:46:32]

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.



இனமானக் கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி வணக்க நிகழ்வு Top News
[Wednesday, 2013-06-19 09:55:44]

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு பூவள்ளி தூவி வணங்கி நினைவெழுச்சி உரைகளில் எழுகை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் காசி ஆனந்தன் அண்ணாவின் சிறப்புரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. இனமானக் கலைஞர் மணிவண்ணன் அவர்களை நினைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களால் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி நிகழ்வுகள் வரிசையில் கனடிய மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.



இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - மன்மோகன் சிங் உறுதி மொழி
[Wednesday, 2013-06-19 09:42:31]

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். இதன் பின்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.



வடக்கு, மத்திய, வட மேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் இரண்டாம் வாரத்திற்கு பின்னதாக இடம்பெறும்!
[Wednesday, 2013-06-19 09:36:49]

வடக்கு, மத்திய, வட மேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் இரண்டாம் வாரத்திற்கு பின்னதாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நேற்று (18) பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து வடக்கு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தங்களை தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும்: - பா.ஜ.க
[Wednesday, 2013-06-19 09:18:45]

இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிராந்திய தலைவர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.



சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாண அரச காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் - கோத்தபாய
[Wednesday, 2013-06-19 09:18:15]

வடமாகாணத்தில் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும். சிங்களவர்கள் அங்கு தங்களது காணிகளை கொள்வனவு செய்யக்கூடிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களர்கள் சொந்த காணிகளை கொள்வனவு செய்து குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சிங்கள மற்றும் முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளும் வடமாகாண அரசாங்க காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



சாவகச்சேரியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காணியை மீட்டுத் தாருங்கள்: - பிரதேச செயலகத்திடம் பொதுமக்கள்
[Wednesday, 2013-06-19 08:57:52]

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.



ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை பயன்படுத்திய நபர் மீது விசாரணை
[Wednesday, 2013-06-19 08:47:34]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது. எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார். அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 08:39:51]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் முஸ்லிம்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகள் சில தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டலாம்? - பாட்டி வடை சுட்ட கதை என சக ஊழியர்கள் விசனம்
[Wednesday, 2013-06-19 08:05:41]

நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.



13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும்: - பா.ஜ.க
[Tuesday, 2013-06-18 21:36:53]

இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிராந்திய தலைவர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.



வாஸ் குணவர்த்தன பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம்!
[Tuesday, 2013-06-18 21:35:07]

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவருடைய பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன சுகயீனம் காரணமாக பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 15ம் திகதி இரவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்: - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா - அவுஸ்திரேலியா
[Tuesday, 2013-06-18 21:12:15]

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும் கலங்கவைக்கின்றது. அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.



இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரி வெலிங்டனில் இராணவ முகாம் முற்றுகை - 500 பேர் கைது!Top News
[Tuesday, 2013-06-18 20:52:27]

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.



இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பினர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை! Top News
[Tuesday, 2013-06-18 20:12:14]

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணசபைக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றவும் முயற்சி செய்து வருகிறது. ஒருவேளை அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவிற்கு ஆதரவு இல்லை என்றாலும், தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க மறுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தொடர்ந்து கண்டித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இந்தியா சென்றுள்னர். சம்பந்தன் தலைமையில் அவர்கள் இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினர். 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை பலவீனமாக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறது என்றும், இதனை இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.



நாட்டில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்தவே ஏற்றுக்கொண்டுள்ளார் - சரத்
[Tuesday, 2013-06-18 20:07:35]

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஜனாதிபதியே தொலைபேசியில் அழைத்து, நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டில் நீதியில்லை என்பது புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியையை உண்மையில் பிரதேச அரசியல்வாதி பாராட்டியிருக்க வேண்டுமே தவிர, தண்டித்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Ramans2011
INNSYS-20120930
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com