Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தலிபான்கள் கடத்த முயன்றால் தப்பிப்பது எப்படி? இளவரசர் ஹாரிக்கு பயிற்சி!
[Wednesday, 2012-09-12 07:39:24]
News Service

தீவிரவாதிகள் கடத்த முயன்றால், அதை தடுப்பது எப்படி என்பது குறித்து இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகனான ஹாரி, அந்நாட்டு ராணுவத்தின் ஹெலிகாப்டர் பிரிவில் பயிற்சி பெற்று வருகிறார். தற்போது பயிற்சிக்காக அவர் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.

  

இந்நிலையில், நேட்டோ நாடுகளின் படையில் உள்ள இங்கிலாந்து ராணுவம் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், இளவரசர் ஹாரியை உயிருடனோ அல்லது கொலை செய்தோ பிடிப்போம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஹாரிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பில்லாமல் வெளியே செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீவிரவாதிகள் கடத்த முயன்றால், அவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி, ஒருவேளை தீவிரவாதிகளிடம் அகப்பட்டுவிட்டால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பது தொடர்பான பயிற்சிகள் ஹாரிக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று இங்கிலாந்தின் டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளிடம் ஹாரி அகப்பட்டாலும் அவரால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்ததாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அமெரிக்காவில் இடிந்து விழுந்தது பாலம் - வாகனங்கள் நீரில் மூழ்கின!
[Friday, 2013-05-24 18:21:57]

அமெரிக்காவின் மௌன்ட் வெர்னன் அருகே உள்ள உள்ளூர் சாலைகளை இணைக்கும் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. நேற்று இரவு நடந்த இவ்விபத்தில், வாகனத்தில் சென்ற மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளுக்குள் வாகனங்கள் சிக்கிக் கொண்டதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனினும், மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு அவர்களை மீட்டுள்ளனர்.



ரஷ்யாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Friday, 2013-05-24 18:10:52]

ரஷ்யா அருகே இன்று மதியம் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் கிழக்கே வட பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எஸ்ஸோ நகரின் தென்மேற்கில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஓகோட்ஸ்க் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. சுமார் 601.80 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கு கடற்கரை மற்றும் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.



அதிபர் ஆசாத் பதவி விலகியதும் சிரியா மீது பாரிய போர் தொடுக்கத் தயாராகிறது இஸ்ரேல்!
[Friday, 2013-05-24 18:05:45]

சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில் அதிபர் ஆசாத் பதவி விலகும் நிலை ஏற்பட்டு அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே ஆச்சரியப்படும் வகையிலான போர் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல் குழப்பங்கள் நீடித்தே வருகின்றன. அரபு வசந்தம் என்றழைக்கப்படும் இந்த புரட்சி சிரியாவில் உச்சகட்டம் அடைந்திருப்பதுடன் அப்பிராந்தியத்தில் போர்ச் சூழலை அதிகரித்து வருகிறது. சிரியாதான் பாலஸ்தீன ஆயுத் குழுவினருக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்டகால குற்றச்சாட்டு.



கேம்பிரிட்ஜ் நிகழ்ச்சிக்கு பயணிகள் பஸ்சில் வந்த எலிசபெத் மகாராணி!
[Friday, 2013-05-24 17:33:07]

கேம்பிரிட்ஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ராணி இரண்டாம் எலிசபெத், மக்களோடு மக்களாக பஸ்சில் பயணித்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சுமார் 212 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு, ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு ரயில் மூலம் வந்திருந்தார். விழா நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்சில் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, விழா நடக்கும் இடத்திற்கு ராணி மக்களோடு மக்களாக பஸ்சில் பயணம் செய்தார். இந்த காட்சியை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்தனர்.



பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்தில் தீ - அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால், ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன!
[Friday, 2013-05-24 16:52:02]

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தீ பரவியதை அடுத்து, ரன்வேக்கள் மூடப்பட்டுள்ளன.ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று ஓஸ்லோ புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில், தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள், உடனடியாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். அதில் இருந்த 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.



ஒளிந்துள்ள தீவிரவாதியைத் தேடி லண்டனில் வீடுவீடாகத் தேடுதல்!
[Friday, 2013-05-24 08:49:57]

லண்டனில் ராணுவ வீரரை தலைதுண்டித்து படுகொலை செய்த தீவிரவாதிகளில் ஒருவர் கிரீன்விச் மற்றும் லங்கன்ஷயர் பகுதியில் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அப்பகுதியில் வீடு, வீடாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உல்விச் சாலை யில் ராணுவ முகாம் உள்ளது. இப்பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த 2 தீவிரவாதிகள், அவரை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றனர்.வீரர் மற்றும் அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மற்ற வீரர்கள் ஓடிவந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போலீஸ்காரரை கொன்ற தீவிரவாதியுடன் மற்றொருவரும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார்.



நைஜரில் யுரேனிய சுரங்கம், யுரேனிய ஆலை மீது இரட்டை கார் குண்டுத் தாக்குதல்கள் - 25 பேர் பலி!
[Friday, 2013-05-24 08:38:46]

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வெவ்வேறு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் வியாழக்கிழமை 25 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர். பிரான்ஸுக்கு சொந்தமான யுரேனியப் பதப்படுத்தும் ஆலை ஒன்று நைஜரில் உள்ள அகாதேஸில் உள்ளது. ராணுவ முகாமில் உள்ள இந்த ஆலையின் மீது காரை மோதி வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் நைஜரின் புறநகர்ப்பகுதியான ஆர்லிட்டில் உள்ள யுரேனியச் சுரங்கம் ஒன்றிலும் மற்றொரு கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கர்கள் இரகசிய நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர் - அமெரிக்கா அறிவிப்பு!
[Friday, 2013-05-24 08:32:21]

அமெரிக்காவுக்கு எதிராக, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை, அமெரிக்க நீதித்துறை கமிட்டி வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில், பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள், வெளிப்படையாக இருக்க வேண்டும் என, அதிபர், ஒபாமா, சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, அட்டர்னி ஜெனரல், எரிக் ஹோல்டர், செனட் நீதிக்கமிட்டி தலைவர், பாட்ரிக் லீகேக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:



நான்கு பேரைக் கொலை செய்த தமிழர்கள் நால்வருக்கு மலேசியாவில் மரணதண்டனை!
[Friday, 2013-05-24 08:23:36]

மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில் அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது.



ஆப்கானில் பணியாற்றியதற்காக லண்டனில் கழுத்து அறுக்கப்பட்ட இராணுவ வீரர் - பரபரப்புத் தகவல்கள்!
[Friday, 2013-05-24 08:18:57]

ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார்.



எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ள 80 வயது ஜப்பானிய தாத்தா!
[Thursday, 2013-05-23 19:05:45]

எவ‌ரெஸ்ட் சிகரத்தில் ஏறி 80வயது ஜப்பான் தாத்தா சாதனை படைத்தார். ஜப்பானை சேர்ந்தவர் யூசீரோ மியூரா இவருக்கு வயது 80. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய உலகின் அதிக வயதான தாத்தா என சாதனையைப் படைத்துள்ளார் இவர்.முன்னதாக 2008ம் ஆண்டில் 76வயதான நேபாளி தாத்தா ஒருவர் இந்தச் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை ஜப்பானிய தாத்தா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் வாழ்ந்த டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
[Thursday, 2013-05-23 18:51:05]

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் வேகமாக ஓடத் தக்க இந்த டைனோசர் ஒரு பாய்ச்சாலில் 1.6 மீட்டர் தூரம் தாண்டக் கூடியது. சராசரியாக ஒரு பெரிய வான் கோழியின் அளவை ஒத்ததாக 16 கிலோ எடை வரை இது இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை தாவர உண்ணிகளாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



பாவம் இஸ்ரேல் இரண்டாவது அதிபர்! - அவரது சம்பளம் ட்ரைவரை விட 40 சதவீதம் குறைவாம்!
[Thursday, 2013-05-23 18:26:19]

இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபராக இருந்த இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார். கார் டிரைவரைவிட இரண்டாவது அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. தனது கார் டிரைவரைவிட அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டின் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 1962-ம் ஆண்டில் இஸ்ரேல் பார்லிமெண்டின் நிதிக்குழு இதுகுறித்து சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் துணை அதிபர் சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அதிபரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.



உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் - முதலிடத்தில் ஜேர்மனி அதிபர்,9வது இடத்தில் சோனியா!
[Thursday, 2013-05-23 18:13:55]

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சோனியா காந்தி 9வது இடத்தையும், இந்திரா நூயி 10வது இடத்தையும் பெற்றுள்ளார். ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மானைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.



பொஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் விசாரணையில் சுட்டுக்கொலை!
[Thursday, 2013-05-23 18:03:26]

அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் கடந்த மாதம் 15-ந் தேதி நடந்த மரத்தான் ஓட்டப்பந்தயத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய டேமர்லன் என்பவனை அமெரிக்க போலீசார் சுட்டு கொன்றனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய இப்ராஹிம் தோசேவ் (27) என்பவரை எவ்பிஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கும் அவனுக்கும் வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவனை சுட்டு கொன்றனர். அவனுடைய சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஓர் இன சேர்க்கை (செக்ஸ்) உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடைவிதிப்பு!
[Thursday, 2013-05-23 10:19:36]

பிற ஆண்களிடம் ஓர் இன சேர்க்க (செக்ஸ்) உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. Dana Devine, vice-president of medical, scientific and research affairs at Canadian Blood Services அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் வான்கூவர் நகரத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் பிற ஆண்களிடம் செக்ஸ் வைத்த ஆண்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதை தடை செய்வதாக அறிவித்தார்.



"ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம்!
[Thursday, 2013-05-23 08:21:28]

பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜே.கே. ரவ்லிங் எழுதிய, "ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் அதில் இடம் பெற்ற படங்கள் ஆகியவை, லண்டனில்,ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம் போயின. லண்டனில், புகழ்பெற்ற ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில், இவற்றை வாங்குவதற்காக, இரண்டு வர்த்தகர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியாக ஒன்றரை இலட்சம் பவுண்ட் வரை சென்றது.



குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமான மார்க்கங்களில் இணைக்கும் உடன்பாட்டில் சீனா - பாகிஸ்தான் கையெழுத்து!
[Thursday, 2013-05-23 08:14:33]

பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மேற்கு சீன நகரங்கள் வெகு அருகாமையில் அமைந்துள்ளதால் குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமானம் மார்க்கமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான்-சீனா அதிகாரிகள் நேற்று கையொப்பமிட்டனர்.



ஸ்வீடன் தலைநகரில் வரலாறு காணாத வன்முறைகள் - 30 கார்கள் தீக்கிரை!
[Thursday, 2013-05-23 08:09:17]

ஸ்வீடன் நாட்டில், என்றும் காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடந்தேறியுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும், மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு, ஜாகோப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.



புக்கர் பரிசை தட்டிச் சென்றார் அமெரிக்க எழுத்தாளர் - கன்னட எழுத்தாளர் ஏமாற்றம்!
[Thursday, 2013-05-23 07:50:27]

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸுக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச்சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸுக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. "தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி' மற்றும் "வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது. தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.


NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com