Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 84 இலங்கைத் தமிழர்கள் மங்களூருவில் கைது!
[Sunday, 2012-09-09 04:49:49]
News Service

மங்களூரு பழைய துறைமுகத்திலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த ஆண், பெண், குழந்தைகள் என, இலங்கை தமிழர், 84 பேர் பிடிபட்டனர். இதில், பெரும்பாலானோர், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்தவர்கள். இவர்களை அனுப்ப திட்டம் வகுத்த, புரோக்கர்கள், 13 பேர் கைது செய்யப்பட்டனர். 11.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகு பிடிபட்டது.

  

கர்நாடகா மாநிலம், மங்களூருவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா மாநிலம், மங்களூரு பழைய துறைமுகத்திலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக, இலங்கை தமிழர் குழுவினர், படகு மூலம் செல்ல உள்ளதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து, மங்களூரு மாவட்ட போலீஸ் எஸ்.பி., கவிதா தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், 22 பெண்கள், 56 ஆண்கள், ஆறு குழந்தைகள் என, இலங்கை தமிழர்கள், 84 பேர் பிடிபட்டனர்.

இவர்களை ஏமாற்றிய, தமிழகத்தை சேர்ந்த தினேஷ் குமார்- 27, ராஜீவ் காந்தி என்ற கந்தன்- 28, மரியா ஜம்சன்- 22, ரவிசந்திரன்- 30, மகேந்திரன்-41, யாகூப்- 40, சலீம்- 28, மதுரை சிவகுமார் என்ற சிவா- 28, பாலக்காடு ஷாஜான்- 33, புதுக்கோட்டை சுரேஷ்- 26, மரியா சிரன்- 33, கோயம்புத்தூர் ஷீரஜ்- 37, இலங்கை தவராசா- 46, ஆகிய, 13 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவரில் ஒருவர் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, பத்து மொபைல் போன், இலங்கை தமிழர்களுக்கான அடையாள அட்டை, இரண்டு லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உணவு மற்றும் டீசல் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, பாலார், திருநெல்வேலி, ஓசூர் பகுதிகளிலுள்ள, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த, 84 பேர், சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதற்காக, ஒவ்வொருவரிடமிருந்தும், தலா, 30 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, பெற்றுள்ளனர். அவர்களுக்கு தங்கும் வசதி, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கித் தருவதாகவும், ஆஸ்திரேலியாவிலுள்ள, கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விடுவதாகவும் புரோக்கர்கள் உறுதியளித்ததுள்ளனர். இவர்கள் செல்வதற்காக, சித்ரதுர்காவை சேர்ந்த மாதவ் சுவர்ணா என்பவரிடமிருந்து, ஸ்ரீரக்ஷா என்ற படகை, 11.50 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர். பிடிபட்ட படகில், 6,000 லிட்டர் டீசல், அதிகளவில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், ஏற்கனவே, கொல்லாம், பொன்னம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த போது, தமிழக போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். முதன் முறையாக, கர்நாடகாவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது, போர்ஜரி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்ட மேலும் சில இலங்கை தமிழர்கள், கொல்லூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதும், சிலர் லாட்ஜ்களில் தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிடிபட்டவர்கள் குறித்து, தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மங்களூரு வந்தவுடன், பிடிபட்டவர்கள் ஒப்படைக்கப்படுவர். ஆஸ்திரேலியா பயணத்துக்காக எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர் என்பது குறித்தும், இலங்கை தமிழர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்தியப் பொருட்களுக்கு சீன சந்தையைத் திறந்துவிட சீனப்பிரதமர் இணக்கம்!
[Tuesday, 2013-05-21 18:27:16]

சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளார். மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். பின்னர் அவருக்கு பிரதமர் விருந்தளித்தார். இன்று டில்லியில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் சீனப்பிரதமர் லீ கெகியாங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வர்த்தகம் தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள கவலைகள் தீர்க்கப்படும். இந்திய பொருட்களை, சீன சந்தைகள் பயன்படுத்த மேலும் பல வசதிகள் செய்து தரப்படும்.



சீனப் பிரதமரைக் கவர்ந்த 3 இடியட்ஸ் இந்திப்படம்!
[Tuesday, 2013-05-21 18:16:34]

சீனப் பிரதமர் லீ கெகியாங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை 2-வது முறையாக சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைப் பற்றி பேசினார்கள். இரு நாடுகள் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள், ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேசினார்கள். பின்னர் சீனப் பிரதமர் இந்திய குழுவினருடன் இயல்பான முறையில் பேசினார். அப்போது சீனாவில் இந்திப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.



வரும் ஜுனில் இந்தியாவுக்கு கிடைக்கிறது புதிய இன்டர்நெட் முகவரி!
[Tuesday, 2013-05-21 18:07:06]

வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு புதிய இன்டர்நெட் முகவரி கிடைக்க உள்ளது. இந்தியாவில் டொமைன் நேம்களின் மிகப் பெரிய வினியோகஸ்தரான டைரக்டி குழுமம் டாட் இன் டாட் நெட் (.IN.NET) என்ற புதிய இன்டர்நெட் முகவரியை அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது முகேஷ்அன்ட்சன்ஸ்.இன் அல்லது .காம் என்று பதிவு செய்வதற்கு பதிலாக முகேஷ்.இன்.நெட் என்று பதிவு செய்யலாம். உலக அளவில் இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 3 மில்லியன் டொமைன் நேம்கள் மற்றும் இன்டர்நெட் முகவரிகள் பயன்பாட்டில் உள்ளன. டாட் இன் டாட் நெட் முகவரியை முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி முதல் செய்யலாம்.



யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? - சீமான் ஆவேசக் கேள்வி!
[Tuesday, 2013-05-21 17:50:01]

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? பிரதமர்களும் அரசு அதிகாரிகளும் அழைத்துப் பேச்சு நடத்தும் யாசின் மாலிக் தமிழகத்துக்கு வரக்கூடாதா.. இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள்அரங்குக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.



சென்னையில் தாய், மனைவி, மகளைக் கொன்று விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்!
[Tuesday, 2013-05-21 17:27:19]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவைச் சேர்ந்தவர் இலங்கை தமிழர் சுந்தரேசன்(52). இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார். அவர் தன்னுடன் தனது தாயையும் அழைத்து வந்தார். ஆதம்பாக்கத்தில் அவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி சித்ரா(45). அவர்களுக்கு சமீரா(12) என்ற மகள் இருந்தார். அவர் நங்கநல்லூரில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லாபத்தில் சென்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் ஓடியது.



23 ஆயிரம் உடி உயரத்தில் பறக்கக் கூடிய ஹெலிகளை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறது இந்தியா!
[Tuesday, 2013-05-21 08:00:59]

ரஷ்யா நிறுவனத்துடன் இணைந்து, பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களை தயாரிக்க உள்ளது என, பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன மேலாண்மை இயக்குனர் சவுந்திரராஜன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஷ்யா நிறுவனம், பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் இணைந்து, ஹெலிகாப்டர்களை தயாரிக்க உள்ளது. ஹெலிகாப்டர் தயாரிப்பு பணிக்கு, இந்தியாவில் இருந்து 50 பொறியாளர்கள் ரஷ்யா செல்ல உள்ளனர். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட, வி.ஐ.பிக்கள் பயன்படுத்தும் வகையில், சிறப்பு வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள், தயாரிக்கப்பட உள்ளன.



திருப்பதி ஏழுமலையானுக்கு உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு 1 இலட்சம் கோடி ரூபா!
[Tuesday, 2013-05-21 07:36:52]

திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார். இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.



இந்திராகாந்தியின் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பேர்த்தி பிரியங்கா!
[Tuesday, 2013-05-21 07:28:05]

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்தி பிரதிநிதித்துவம் செய்த ரே பரேலி தொகுதி அவரது குடும்பத்தின் விருப்பத் தொகுதியாக விளங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதனால், ரே பரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தனர்.



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு எட்டு மணிநேரம் இதய அறுவைச் சிகிச்சை!
[Tuesday, 2013-05-21 07:19:10]

பாமக நிறுவனர் ராமதாஸ், 8 மணிநேர இதய அறுவைச் சிகிச்சைக்கு பிறகு வார்டுக்கு கொண்டுவரப்பட்டார்.கடந்த ஏப்ரல் 30ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மே 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அன்று பிற்பகல் தைலாபுரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இரவு 7 மணியளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 14ம் தேதி ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டது.நேற்று காலை 7 மணியளவில் ராமதாஸ் அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்து செல்லப்பட்டார்.



ஐபிஎல் சூதாட்டக் கும்பலின் தலைவர் சரண் - கைதான கிரிக்கெட் வீரர் வீட்டில் 20 இலட்சம் ரூபா சிக்கியது!
[Tuesday, 2013-05-21 07:08:58]

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சென்னை சூதாட்ட கும்பல் தலைவர் பிரசாந்த் நேற்று சரணடைந்தார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சென்னையில் தீவிரமாக சோதனை நடத்தி 6 பேரை கைது செய்தனர். ஆனால் சென்னையில் சூதாட்ட கும்பலின் தலைவராக செயல்பட்ட அயனாவரம் மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் தலைமறைவாகி விட்டார். இதில் பிரசாந்த் கார் சென்னை விமான நிலையத்தில் நின்றதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது.



திரிபுராவில் நாளிதழ் அலுவலகத்தில் மர்மநபர்கள் வெறியாட்டம் - மூன்று ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொலை!
[Monday, 2013-05-20 17:46:19]

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் தைனிக் ஞானதூத் என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது.நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த புரூஃப் ரீடர் மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் முதல் மாடிக்கு சென்றனர்.



சீமானை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்!
[Monday, 2013-05-20 17:41:34]

புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார்.அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம்.



சீமானைக் கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!
[Monday, 2013-05-20 17:34:35]

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது-கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பேசி உள்ளார். தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர்தான் இந்த யாசின் மாலிக்.இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அவர் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.



அதிருப்தியில் ஜெயலலிதா - அமைச்சரவை மாற்றம் எந்தநேரமும் நிகழலாம் என்பதால் கலக்கத்தில் அமைச்சர்கள்!
[Monday, 2013-05-20 17:27:54]

தமிழக அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தியில் உள்ளதால், விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், விரைவில் லோக்சபா தேர்தல் வருவதால், அதை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டவர்களில் சிலர் மீண்டும் அமைச்சர்களாக்கப்படலாம் என்பதால், அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.



மும்பை ஹோட்டலில் பெண்களுடன் தனியாக இருந்ததை படம்பிடித்து ஸ்ரீசாந்தை வளைத்துப் போட்ட தரகர்கள்!
[Monday, 2013-05-20 17:08:49]

மும்பை ஹோட்டலில் பெண்களுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் பெண்களை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. அதுபோல், ஸ்ரீசாந்த் பெண்களுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதனைக் காட்டி மிரட்டி அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தவும் தரகர்கள் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது.



நத்தையை விடவும் மெதுவாக சென்ற தபால் - 31 ஆண்டுகள் கழித்து உரியவரிடம் போய் சேர்ந்தது!
[Monday, 2013-05-20 07:52:44]

குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்து நவ்சாரி நகருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று தபால் துறையினரின் அலட்சியத்தால் 31 வருடம் கழித்து பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு வந்த கடிதம் குறித்து கடிதத்தைப் பெற்றவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டாக்டர் அசோக் ஷெராப் (63) என்ற கண் மருத்துவர் நவ்சாரி நகரில் வாழ்ந்து வருகிறார். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று, அவரது நண்பர் டாக்டர் ஷ்யாம்குமார் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் தபால்துறை கடந்த வியாழன் அன்று அவருக்கு கொடுத்துள்ளது.



குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக சீமான் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு!
[Monday, 2013-05-20 07:50:19]

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை விளம்பர போஸ்டர்களில் பயன்படுத்தியதாகக் கூறி போலீஸார், பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு தடைவிதித்தனர்.



மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களைக் கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி!
[Monday, 2013-05-20 07:32:52]

பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை. "கெப்லர் 22 எச்' மற்றும் "கிலிசென் 667 சி' என்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ள இவர், அந்த இரண்டு கோள்களும், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கொண்டவை என, அறிவித்து, மனிதர்கள் வாழ, இன்னும் இரண்டு கோள்கள் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.சூரிய குடும்பத்தைச் சேராத இந்த, இரண்டு கோள்களும், எளிதில் சென்று வரக் கூடிய, 122 ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கிறது எனத் தெரிவித்து, இந்தியர்களின் விண்வெளிப் பயணப் பசியைத் தூண்டி உள்ளார், சிவதாணுப்பிள்ளை.



தமிழகத்தில் அடியோடு படுத்துவிட்ட இலங்கையர்களின் சுற்றுலா!
[Monday, 2013-05-20 07:27:10]

அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசமான காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உள்ளிட்ட நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை கோவில்களில் தரிசனம் செய்வது இலங்கை தமிழர்களின் வழக்கம். இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், தஞ்சை பூண்டி மாதா கோவில், நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களுக்கு செல்வதுடன், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஒன்பது நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாக வருகின்றனர். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தமிழக சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம்.



கடலூரில் பொலிசாருக்கு கண்கட்டிவித்தை காட்டிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக்!
[Monday, 2013-05-20 07:18:05]

கடலூரில், "நாம் தமிழர்' கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானார். அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக் பங்கேற்பதாக தகவல் கிடைத்ததால், இரவோடு இரவாக ஐ.ஜி.கண்ணப்பன், டி.ஐ.ஜி. முருகன் தலைமை யில் கடலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட போலீசார், கண்காணிப்புக்காக கடலூரில் குவிக்கப்பட்டனர்.


INNSYS-20120930
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
Ramans2011
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com