Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கோவாவில் நடைபெற்ற நிமிர்ந்து நில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
[Monday, 2012-09-03 09:21:53]
News Service

நிமிர்ந்து நில் படத்தின் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் சொல்லியபடியே ஜெயம் ரவியும், அமலா பாலும் காதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடிக்கும் படம் நிமிர்ந்து நில். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சாலக்குடியில் சுமார் 12 நாட்கள் நடந்தன.

  

அதிலும் கோவாவில் கடற்கரையோரம் அழகிய மர வீடு கட்டி அதில் ஷூட்டிங் எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வைத்து ஜெயம் ரவி, அமலா பால் டூயட் படமாக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடு்க்க அதை அப்படியே திருப்பி ஆடியுள்ளனர் ஹீரோவும், ஹீரோயினும். மர வீட்டில் எடுத்துள்ள இந்த பாடல் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக ரவி அவரது உடலை சும்மா கும்மென்று ஆக்கியுள்ளார். அவரது புது கெட்டப்புக்கு எக்கச்ச பாராட்டுகள் வந்து குவிகிறதாம். வேலை வேலை என்று ஓடியதால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு ரவி தனது மனைவியுடன் கோவாவில் பொழுதைக் கழித்துவிட்டு வந்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தமன்னா
[Friday, 2013-05-24 17:41:13]

கடந்தாண்டில், அனைவரையும் கவர்ந்த பெண்கள் பட்டியலை, பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் இடத்தை, தமன்னா பிடித்துள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து, மார்க்கெட் சரிவினால் சோர்ந்து போயிருந்த தமன்னா, மீண்டும் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகைகளும், இந்த பட்டியலில் பின் தங்கியிருப்பது தான், அந்த காரணம். அனுஷ்காவிற்கு மூன்றாவது இடமும், இலியானா, டாப்சிக்கு 5 மற்றும் 6 வது இடமும், அமலா பாலுக்கு ஏழாவது இடமும், ஹன்சிகாவிற்கு எட்டாவது இடமும், தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தாவுக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளதாம். இதுபோதாதா, தமன்னா சந்தோஷப்படுவதற்கு.



கெட்டப்பை மாற்றி புதிய பாணிககு மாறிய கெளதம்
[Friday, 2013-05-24 17:27:27]

மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கார்த்திக்கின் மகன் கெளதம். அப்படத்தில் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அவருக்கு நல்ல ட்ரெய்னிங் கொடுத்து நடிக்க வைத்திருந்தனர். இருப்பினும் படம் தோற்றுப்போனதால் கெளதமின் நடிப்பு பேசப்படவில்லை. அதோடு, மணிரத்னத்தின் அறிமுகம் என்பதற்காக அவரை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க காத்து நின்ற சில இயக்குனர்களும் அவரது முதல் தோல்வி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடாது என்று ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று மகனை தட்டிக்கொடுத்து வந்த கார்த்திக், அவருக்கான படவேட்டைகளிலும் தீவிரமடைந்தார். அவரது முயற்சியின் பலனாக இப்போது 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் கை ராஜா வை படத்திற்கு கமிட்டான கெளதம், இப்போது தெலுங்கில் வெளியான அலமொடலய்ண்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.



சித்தார்த்தின் படத்தில் கௌரவ வேடத்தில் சமந்தா
[Friday, 2013-05-24 17:18:34]

சித்தார்த், ஹன்சிகா இணைந்து நடிக்கும், 'தீயா வேலை செய்யணும் குமாரு' என்ற படம், விரைவில் வெளிவருகிறது. காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற, சுந்தர்.சி தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, இந்த படத்தை பற்றிய போனஸ் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர், ராணா டகுபாட்டியும், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்களாம். 'தெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா, இந்த படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க, எப்படி சம்மதித்தார் என, விசாரித்தபோது, மேலும் ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்தது. சித்தார்த் இந்த படத்தின் ஹீரோ என்பதால் தான், சமந்தா, இந்த படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம்.



ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் மலையாள படம்
[Friday, 2013-05-24 17:16:08]

மலையாளத்தில் கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி உருவாகி வந்த மதுவில்லினட்டம்வரே என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வந்தார் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த். ஆனால் இப்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படத்தில் இருந்த அவர் நடித்த காட்சிகளை நீக்கியுள்ளனர். ஆனால், அதே மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டத்தை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது. அந்த படத்துக்கு கிரிக்கெட் என்றும் பெயர் வைத்து விட்டனர். அதில் முக்கிய கதாபாத்திரம் ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்டதுதானாம். அவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்த கிரேஸ், அவர் ஆட்டத்தில் காட்டிய வேகம் தொடங்கி கடைசியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் வீணடித்து விட்டார் என்ற கோணத்தில் கதை செல்கிறதாம்.



படப்பிடிப்பின் போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்
[Friday, 2013-05-24 17:10:35]

சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தின் தெலுங்கு, இந்தி என இரண்டு பதிப்புகளிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பல படங்களில இவர் பிசியாக நடித்து வருவதால், ஸ்ருதி கால்சீட் தரும் நாட்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகவேகமாக படமாக்கி வருகிறாராம் பிரபுதேவா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகளை ஐதராபாத்தில் நடத்தியிருக்கிறார் பிரபுதேவா. ஒரு நீச்சல் குளத்தில் நின்றபடி அவர்கள் பேசிக்கொண்டிருப்பது போல் காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து விட்டாராம் ஸ்ருதிஹாசன். இதனால் அவரது கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம் வழிந்திருக்கிறது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ஸ்ருதி, அன்று ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மறுநாள் படப்பிடிப்பு கலந்து கொண்டாராம்.



தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சித்தார்த் - சந்தானத்தின் காமெடி கூட்டணி வெற்றி..
[Friday, 2013-05-24 16:29:07]

காமெடி ட்ரேக் ரெடி பண்ணும் விசயத்தில் மற்ற காமெடியன்களை விட சந்தானம் கூடுதலாக மெனக்கெடுவார். அதிலும் தனது அபிமானத்திற்குரிய ஹீரோக்கள் நடிக்கும் படமென்றால், தூங்காமல் உட்கார்ந்து காமெடி சீன்களை யோசிப்பார். அப்படி யோசித்தது தனக்கு நன்றாக இருப்பது போல் தெரிந்தால் உடனே அப்படத்தில் நடிக்கும் ஆர்யாவோ, சிம்புவோ, உதயநிதியோ யாராக இருந்தாலும் உடனே அவர்களுக்கு போன் போட்டு சீனை சொல்லுவார். அதைக்கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால் அந்த காட்சியை ஓ.கே செய்வார். இல்லையேல் ஓரங்கட்டி விடுவார். இதேபாணியில்தான் சித்தார்த்துடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்காகவும் கடுமையாக மெனக்கெட்டுள்ளாராம் சந்தானம். சித்தார்த்தும் ஒரளவு காமெடி சென்ஸ் உள்ளவர் என்பதால், இவர் சொல்லும் காட்சிகளுக்கு அவரும் தனது கருத்துக்களையும் உள்ளே திணிக்க, இப்படத்தில் எதிர்பார்த்ததைவிட சித்தார்த் - சந்தானத்தின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி உள்ளதாம்.



பூனை குறுக்கே பாய்ந்ததால் அலறிய வித்யாபாலன்..
[Thursday, 2013-05-23 20:46:44]

தி தர்ட்டி பிக்சர், கஹானி போன்ற வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களில் நடித்த, வித்யா பாலன், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, தினமும் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, எதிரில், யாராவது வருகிறார்களா, என்பதை கவனித்தப் பிறகே வெளியேறுவார். அப்படிப்பட்ட வித்யா பாலன், சமீபத்தில் தன் கணவர் சித்தார்த்துடன், ஆஷிகி என்றொரு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற போது, ஒரு பூனை, தியேட்டர் வாசலில், அவருக்கு குறுக்கே பாய்ந்து விட்டதாம். இதனால் அலறிய அவர், சகுனம் சரியில்லை என, கூறி, வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். கணவர், சமாதானப்படுத்தியதால், ஒரு வழியாக, தியேட்டருக்கு சென்றார். இருப்பினும், யாரிடமாவது வாய் கொடுத்தால், அது வம்பில் முடியக்கூடும் என, நினைத்து, படம் முடிந்து, வீட்டிற்கு வந்து சேரும் வரை, யாரிடமும், வாய் திறக்கவே இல்லையாம்.



தாய்லாந்தில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு...
[Thursday, 2013-05-23 19:27:31]

கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த விஸ்வரூபம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் இந்தப் படம் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்தப் படி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முதல் பாகத்தில் எந்த கதாபாத்திரங்களில் நடித்தார்களோ, அதே கதாபாத்திரங்களில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஸ்வரூபம் படத்தில் இல்லாத காதல் மற்றும் சென்டிமென்ட் விஸ்வரூபம் 2 வில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விஸ்வரூபம் 2 திரைக்கதை இந்தியாவில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஐரோப்பிய நாடுகளிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்.



நவீன காலத்து சினிமாவை ரசிகர்களுக்கு கொடுப்பேன் : ஸ்ரீப்ரியா உறுதிமொழி
[Thursday, 2013-05-23 19:21:01]

25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளுள் ஸ்ரீப்ரியாவும் குறிப்பிடத்தக்கவர். இவரும் ஸ்ரீதேவியும் சம காலத்து நடிகைகள். அந்த சமயத்தில் சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த ஸ்ரீப்ரியா, கவர்ச்சி கதாநாயகியாகவும் திகழ்ந்தவர். அதனால் அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் இருந்தது. அப்படி பிசியாக நடித்து வந்தவர், படவாய்ப்புகள் குறைந்தபோது நானே வருவேன், சாந்தி முகூர்த்தம் ஆகிய படங்களையும இயக்கினார். அதன்பிறகு சினிமா விட்டு விலகியிருந்த ஸ்ரீப்ரியா, சின்னத்திரைகளில் முகம் காட்டி வந்தவர், இப்போது மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஆனால் நடிகையாக அல்ல, இயக்குனராக. தானே கதை உருவாக்கி ரிஸ்க் எடுக்காமல், மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டயம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போகிறாராம். பகத்பாசில், ரீமா கல்லிங்கல் நடித்த இப்படம் அங்கு வெற்றி பெற்றதோடு, ரீமா கல்லிங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுத்தந்தது.



அஜித்தின் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லை
[Thursday, 2013-05-23 19:16:53]

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார். படப்பிடிப்பிற்காக அஜித் டெல்லியிலிருந்து குலுமனாலி புறப்பட்டுச் சென்றார். இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா, டாப்சியும் அங்கு சென்றார்கள். எல்லோருக்கும் மலையின் அழகை ரசிக்கும் ஆர்வமும் இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டு காய்ச்சலிலும் அவதிப்பட்டார். ஆனால் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாத சூழலில் இயக்குனர் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை தொடங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று அஜித் முடிவுசெய்து காய்ச்சல் மற்றும் முதுகுவலியை பொருட்படுத்தாமல் நடித்தார். கிளைமாக்சும் மேலும் சில காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. அனைத்தையும் முடித்து கொடுத்தார். அஜித்தின் தொழில் ஈடுபாட்டை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 'வலை' என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



நயன்தாராவும், டாப்சியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்..
[Thursday, 2013-05-23 19:08:31]

அஜீத் நடிக்கும் புதிய படத்தில், ஆர்யா, நயன்தாரா, டாப்சி என, ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதனால், படப்பிடிப்பு தளத்தில், ஒரே ஜாலியும், அரட்டையுமாக, எப்போதும், உற்சாகம் களை கட்டுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள், இமாச்சல பிரதேசத்தில் உள்ள, அடர்ந்த மலைப் பகுதியில், ஜில் ஜில் சீதோஷ்ண நிலையில், படமாகின்றன. இதற்காக, நட்சத்திர குழு, அங்கு முகாமிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்ததன் மூலம், நயன்தாராவும், டாப்சியும், ரொம்பவும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த தோழிகள், அரட்டை அடிக்க தயங்குவது இல்லை. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், நயன்தாராவும், டாப்சியும், மலைப் பிராந்தியத்தில், ஜாலியாக, 'பைக் ரைடிங் செய்தார்களாம்.



மரியானில் தனுஷ் உயிர பணயம் வச்சு நடிச்சாராம்...
[Thursday, 2013-05-23 19:01:59]

துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வந்தவர் தனுஷ். மீசை முளைக்காத பையனாக வந்தவர், இப்போது சிறகு முளைத்த நடிகராகி விட்டார். எந்த மாதிரி கதை என்றாலும் புகுந்து விளையாடுகிறார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சிறந்த நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் தனுஷ்.ஆனால் அப்படிப்பட்ட தனுஷ் மரியான் படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடியுற வரைக்கும் திகிலோடுதான் நடித்துக்கொண்டிருந்தாராம். முதலில் எனக்கு நீச்சலே தெரியாது. அப்படிப்பட்ட நான் நடுக்கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டும். இந்த அனுபவம் எப்படி இருக்கும் நீங்களே நினைத்துப்பாருங்கள் என்கிறார். அடுத்து, நபீபியா பாலைவனத்தில் சுடும் மணலில் காலில் செருப்பே போடாமல் நடித்தேன். அப்போதெல்லாம் இந்த பரத்பாலாகிட்ட இப்படி வந்து சிக்கிக்கிட்டோமே என்று பீல் பண்ணினேன். இதற்கெல்லாம் மேலாக சிறுத்தையுடன் கூண்டுக்குள் அடைத்துப்போட்டு படமாக்கியது ரொம்ப கொடுமையான அனுபவம். எப்ப சிறுத்தைக்கு இரையாகப்போறோமோன்னு பயந்து நடுங்கிக்கிட்டே நடிச்சேன். இப்படியெல்லாம் உயிர பணயம் வச்சி ஒரு படத்துல நடிக்குனுமான்னு முதல்முறையா என்னை நானே கேட்டுக்கிட்டே நடிச்சேன்.



மீண்டும் இணையும் சித்தார்த் - சமந்தா!
[Thursday, 2013-05-23 18:58:18]

சித்தார்த் - சமந்தா காதல் விவகாரம் கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்த கதையாகி விட்டபோதும், இன்னமும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் மறுத்து வருகிறார்கள் அவர்கள். மேலும், இந்த அளவுக்கு பிரச்னை பூதாகரமாக வெடித்தபோதிலும், அவர்கள் இருவரும் ரொம்ப கேசுவலாக இருக்கிறார்கள். அடிக்கடி ஐதராபாத் ஒட்டல்களில் சந்தித்துக்கொள்வது. தாங்கள் நடித்த படங்களின் ரஷ் பார்க்க அழைப்பது என்று மீட்டிங் போட்டுதான் வருகிறார்கள். இந்த நிலையில், சித்தார்த் தமிழில் நடித்துள்ள தீயா வேலை செய்யனும் குமாரு படம் தெலுங்கிலும் ரிலீசாகிறது. தற்போது சமந்தாவின் மார்க்கெட் தெலுங்கில் உச்சத்தில் இருப்பதால், அவரையும் இப்படத்தில் இணைத்தால் படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நினைத்த சித்தார்த், அப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சமந்தாவிடம் கேட்டாராம். அதற்கு, மறுபேச்சின்றி சம்மதம் சொன்ன சமந்தா, விரைவில் அப்படத்தில் நடிக்கிறாராம்.



இரவு நேரங்களில் இசையமைப்பதை நிறுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்
[Thursday, 2013-05-23 18:53:26]

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க வேண்டுமென்றால் இரவு நேரங்களில்தான் முடியும் என்பார்கள். காரணம், இரவு நேரத்தில் இடையூறுகள் அதிகமாக இருக்காது என்பதால் அந்த சமயத்தில்தான் கம்போஸிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகளை நடத்துவார் அவர். இப்படி பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை செயல்பட்டு வந்த ரஹ்மான், ஹாலிவுட்டுக்கு சென்றபோது எல்லாமே மாறிவிட்டது. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இசையமைக்கத் தொடங்கினாராம். அதன்காரணமாக, இப்போது மீண்டும் சென்னையில் குடியேறியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முன்பு மாதிரி இரவு நேரங்களில் இசையமைக்காமல் பகல் நேரங்களில் இசையமைக்கத் தொடங்கி விட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆரம்ப காலங்களில் அந்த நேரத்தை நான் தேர்வு செய்தேன். எனக்கு அந்த அமைதி அப்போது தேவைப்பட்டது. அதோடு, இரவு தூக்கமின்றி இசையமைப்பது கடினமாகவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நிறைய ஓய்வு தேவைப்படுகிறது.



என்னோட மார்க்கெட் கடுகளவும் குறையவில்லை - த்ரிஷா பெருமிதம்
[Thursday, 2013-05-23 18:48:50]

மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது. ஆனால் அவரோ, எனக்கான மார்க்கெட்டும், மவுசும் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது என்கிறார். முன்பு நான் செல்லும் இடங்களில் என்னை எப்படி சூழ்ந்து கொண்டார்களோ அதே மாதிரி இப்போதும் நான் பப்ளிக்கில் செல்வதைப்பார்த்தால் என்னை ரசிகர்கள் மொய்த்துக்கொள்கிறார்கள்.ஆக எனக்கான கிரேஸ் கடுகளவும் குறையவில்லை என்று சொல்லி உணர்ச்சி வசப்படுகிறார் த்ரிஷா. ஆனால் முன்னணி நாயகன்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் இல்லையே? என்றால், என்னதான் நடிகைகள் சிறப்பாக நடித்தாலும் குறிப்பிட்ட சில வருடங்களோடு அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் தொடர்ந்து நடந்து வருகிறது.அப்படித்தான் நானும் ஓரங்கட்டப்பட்டுள்ளேன் என்றாலும், என் திறமை மீது நம்பிக்கை வைத்து இப்போதும் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதிலும் இரண்டு படங்களில் என்னை மையமாக வைத்தே கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக, இப்போது நான் ஹீரோக்களுக்கு இணையான நடிகையாகி விட்டேன். அதனால் இது எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான் என்கிறார் த்ரிஷா.



மலையாள படத்திலிருந்து ஸ்ரீசாந்த நடித்த காட்சிகள் நீக்கம்
[Thursday, 2013-05-23 18:42:06]

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கு சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற படத்திலே நடித்திருந்தார். 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்ட சர்ச்சையில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம் பெற்றவுடன் அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டதாக படத்தின் இயக்குநர் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி கூறுகையில், ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவிற்கு வரும் போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார்.



கேன்ஸ் திரைப்பட விழா பற்றி வித்யா பாலனின் பேட்டி
[Wednesday, 2013-05-22 18:37:18]

'குரு', 'பா', 'ஹே பேபி' போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி..!



'தனது கதாபாத்திரத்தை உயிர் துடிப்போடு செய்திருக்கிறார்' : தனுஷுக்கு ஸ்ரீதேவியின் பாராட்டு
[Wednesday, 2013-05-22 18:29:15]

முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து வாலிபனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் ஸ்ரீதேவி பார்த்தார். பின்னர் அவர் டுவிட்டர் பக்கத்தில் அதுபற்றி கூறும்போது :-



ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற சினிமா நடிகையின் படம்
[Wednesday, 2013-05-22 17:55:42]

டெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், பிரியங்காவின் குடும்ப படங்கள், மற்றும் 2000-ஆம் ஆண்டில் அவர் உலக அழகி பட்டம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, தன்னுடைய வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றிருப்பதை கண்டு வியந்து போனார். ராணுவத்தில் பணிபுரிவோரின் குழந்தைகள் சிறுவயதில் பல இடங்களில் வசிக்கும் சூழ்நிலை ஏற்படுவதை குறித்த பாடமும், பிரியங்காவின் வாழ்க்கையை ஒத்து காணப்படுகிறது. பிரியங்காவின் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றலாக நேரிடும். எனவே, பிரியங்கா தனது சிறுவயதில், இந்தியாவில் பரேலி, லக்னோ, மும்பை ஆகிய இடங்களிலும், அமெரிக்காவில் நியூட்டன், மசாசுசெட்ஸ், அயோவா போன்ற இடங்களிலும் தனது வாழ்நாளைக் கழித்துள்ளார். இத்தகைய வாழ்க்கை முறையை குறிக்கும் பாடத்தில்தான் பிரியங்காவின் குடும்ப புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



விஸ்வரூபம் 100வது நாளை எட்டியது: கமலுக்கு பெயின்டிங் பரிசு
[Wednesday, 2013-05-22 17:51:02]

விஸ்வரூபம் படம் 100 நாட்கள் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் அவருக்கு ஒரு பெயின்டிங் பரிசளித்துள்ளார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர். கமல்ஹாஸன் நடித்து தயாரித்து இயக்கிய படம் விஸ்வரூபம். நேற்று முன்தினம் இந்தப் படம் சத்யம் மற்றும் பிவிஆரில் நூறாவது நாளைத் தொட்டது. இந்த சிறப்பு நிகழ்வையொட்டி, கமலுக்கு அவரின் விஸ்வரூப கெட்டப்பை ஓவியமாக வரைந்து பரிசாக அளித்தார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்.


Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com