Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம் - இதில் ஒரு சதுர அங்குலம் பூமியைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை இத் தேர்தலிலே காட்டவேண்டும்: - செங்கலடியில் ஸ்ரீகாந்தா Top News
[Saturday, 2012-09-01 22:31:02]
News Service

வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழரின் தாயக பூமி இதில் ஒரு சதுர அங்குலம் நிலத்தை கூட சிங்கள மயமாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை பேரினவாத சக்திகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்டும் தேர்தலாக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைய வேண்டும் என முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

  

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து செங்கலடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டத்தரணி ஸ்ரீகாந்தா இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :

"தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் இறுதிவரை தங்களை அர்பணித்த அமரர்.மணிக்கவாசகம் அமரர்.சம்மந்தமூர்த்தி ஆகியோர் வாழ்ந்த செங்கலடி மண்ணிலே தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க நானும் வந்துள்ளேன். படை பலம் கொண்ட அதிகார பலம் கொண்ட இனவெறி கொண்ட ஒரு அரசாங்கம் நிறுத்தியிருக்கின்ற கூலிக் கும்பலுக்கும் தமிழ் தேசியத்தில் பாதையில் களமிறங்கியிருக்கியிருக்கும் சுயமரியாதை கொண்ட தமிழர்களுக்குமிடையிலான பல பரீட்சைதான் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.

எமது மக்கள் சுயமரியாதை கொண்ட எமது மண்ணின் மைந்தர்கள் அனைவரும் சுதந்திரத்தின் பேரால் விடுதலையின் பேரால் இந்த மண்ணிலே வாழ்ந்து மறைந்த எமது முன்னோர்களின் முச்சு பேச்சின் பேரால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

கிழக்கு மண்ணை வடக்கு மண்ணிலிருந்து பிரித்தெடுத்து எங்களுடைய பிரதேசத்தை வெட்டி பிளந்து கிழக்கு என்று எமது மண்ணிலே மேலும் சிங்க குடியேற்றத்தை செய்து சிங்கள மயமாக்கும் இந்த அரசுக்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைக் கருதவேண்டும். இந்த மண் எங்கள் சொந்த மண் நாங்கள் வந்தேறிய குடிகள் அல்ல.

நடந்து முடிந்த யுத்த காலத்திலே தமிழர் தாயகத்தில் வடக்கு பகுதி மக்களை விட கிழக்கு மக்கள் அதிக துன்ப துயரங்களை சந்தித்திருக்கிறார்கள்;. இந்த மண்ணிலே எத்தனை கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை இந்த மக்கள் அனுபவ ரீதியாக அறிவார்கள். கிழக்கு யுத்தம் முடிவடையும் வரை ஒரு வேட்டைக்களமாக தொடர்ந்து காணப்பட்டது. 1982 ஆம் ஆண்டிலிருந்து இடை இடையே வந்து போன சில சமாதான நடவடிக்கைகள் தவிர சுமார் 25 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மண் விலை மதிக்க முடியாத உயிர் இழப்புகளையும் சோசங்களையும் சந்தித்து வந்துள்ளது.

1958 ஆம் ஆண்டு இந்த மண்ணிலே ஸ்ரீபன் தம்பிராஜா இராஜேந்திரன் என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து 2008 ஆண்டு ஒட்டு மொத்த மக்களும் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டவரை எமது மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்திருக்கிறோம் இதற்கெல்லாம் ஒரு விடியலை பெற்றுத்தர உங்கள் கைகளில் வாக்குச் சீட்டு இருக்கிறது இந்த வாக்களிக்கும் உரிமையை யாராலும் தடுக்கவோ பறிக்கவோ முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த வகையிலாவது கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றிவிடும் என்ற பயத்தினால் எமது மக்களின் வாக்குகளை சிதரடிப்பதற்காக சுயேட்சைக் குழுக்களில் தமிழர்களை களமிறக்கியுள்ளார்கள். ஒவ்வொரு தமிழ் மகனும் நிதானமாக வாக்களிக்க வேண்டும் ஒவ்வொருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் கிழக்கு மாகாண சபையை கைபற்றலாம்.

ஒரு காலத்திலே கிழக்கு மாகாணத்தை நாங்கள் பெரும்பாண்மையாக இருந்தோம் ஆனால் இன்று எமது மக்களுடைய சனத்தொகை 41 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 41 வீதமான மக்களும் ஒரே அணியாக தமிழன் என்ற உணர்வோடு ஒரு கற்பாறையைப் போல துணிந்து வீட்டுக்கு வாக்களிக்க முடியுமாக இருந்தால் இந்த கிழக்கு மண் வடக்கு மண்ணுடன் இணைந்திருப்பதை தமிழர்களுடைய தாயகம் பிரிக்கப்படாத ஒன்று என்ற உண்மையை அரசாங்கம் மற்றும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழர்களின் விடுதலை எழுச்சி அகிம்சை வழில் இருந்து விடுதலை இயக்கங்களின் கைகளில் இருந்து ஒரு விடுதலை இயக்கத்தின் கைகளிலிருந்து தற்போது ஒட்டு மொத்த தமிழர்களின் கைகளுக்கு வந்துள்ளது. இதுதான் தமிழ் மக்களுடைய ஜனநாயக எழுச்சி என்பது உண்மையான விடுதலை எழுச்சி என்பதை ஒட்டு மொத்த சமூகமும் இணைந்து நிற்கும் ஒரு மக்கள் எழுச்சியாகத்தான் இது இருக்கவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊர்வலங்கள் நடத்த வாருங்கள் பொதுக் கூட்டங்கள் நடத்த வாருங்கள் அல்லது சிறைகளில் இருக்க வாருங்கள் என்று கேட்கவில்லை நாங்கள் கேட்பதெல்லாம் உங்களுடைய வாக்குரிமையை அடிப்படை உரிமையை பகிஷ்கரிக்க முடியாத உரிமையை பாவித்து நீங்கள் நாங்கள் இந்த மண்ணிலே எங்கள் சொந்த மண்ணிலே தாயக பூமியிலே இன்னும் எவருக்கும் அடிமைகளாக வாழ நாங்கள் தயாரில்லை என்று வீட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள் இது தான் தமிழ் மக்களுக்கு விடுக்கின்ற அறை கூவல்.

எங்கள் மக்கள் சுதந்திரமாக வாழத் துடிக்கிறார்கள் அற்ப சொற்ப சலுகைகளை காட்டி எங்களை ஏமாற்றிவிட முடியாது. ஒரு சமூகம் சுதந்திரமாக வாழத் தீர்மானித்து விட்டால் அதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு சொல்லுங்கள்.

எமது மண்ணிலே எத்தனை துன்பங்களை நாம் அனுபவித்தோம் அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இவற்றையெலல்hம் எதிர்கால சந்ததியினர் விட்டுச் செல்ல தயாரில்லை என்று உங்கள் வாக்கினூடாக எடுத்துச் சொல்லுங்கள்.

ஒன்றுபட்ட இலங்கை தீவுக்குள்ளே ஒரு சமாதான தீர்வுக்கு தயார் என்று மீண்டும் மீண்டும் இந்த யுத்தம் நடக்கும் போதும் முடிவடைந்த நாள் முதலாய் கூறிவருகிறோம். ஆனால் அரசாங்கம் யத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்த பின்பும் என்ன செய்கிறது.

இந்த தேர்தலில் எமது கடமையைச் செய்ய வேண்டும் கடமையைச் செய்ய தவறிவிட்டு கவலைப் பட முடியாது எமது இனம் அடங்கி வாழ்ந்த இனம் அல்ல ஒரு நீண்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் எமது முதியோரின் ஆண்ட பரம்பரையில் வாரிசுகள் நாங்கள்;. அந்த வெறி அந்த பெருமை அந்த வைராக்கியம் அந்த நேர்மை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்; இல்லாதவர்களை இந்த தேர்தலிலே தூக்கிடியறியுங்கள்.

வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம் இதில் ஒரு சதுர அங்குலம் பூமியைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை நாங்கள் இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டவேண்டும். தமிழர் தாயகத்தில் புதைக்கப்பட்டுள்ள எமது போராளிகளின் மண்டையோடுகளும் எழும்புக் கூடுகளும் சிதைக்கப்பட்ட அந்த ஜதார்த்தத்தை சுயமரியாதை கொண்ட எந்த தமிழனும் மறக்க மாட்டான். இந்த ஜதார்ததத்தின் பின்பும் எங்கள் இனம் எழுந்து நிற்க தயாராகி விட்டோம் என்பதை இந்த தேர்தலின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டும்.

ஒரு சுதந்திர சமூகமாக நாங்கள் உலகறிய அங்கீகரிக்கப்படுகின்ற நிலையிலே ஒரே நாட்டுக்குள்ளே நாங்கள் விரும்புகின்ற சுயாட்சியை வடகிழக்கு இணைந்த மாநில சுயாட்சியை எங்கள் சொந்த மண்ணை நாங்களே கூடிய வகையில் வேண்டும் என்பதை இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டுங்கள் இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிடம் கேட்கிறது" என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Ramans2011
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com