Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழனின் முதலமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் கிழக்கு மாகாண சபையைக் கலைத்தது: செங்கலடியில் யோகேஸ்வரன்.
[Saturday, 2012-09-01 12:04:30]
News Service

அரசாங்கத்துக்கு தன்னுடைய கட்சியில் ஒரு தமிழனுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கும் எண்ணம் இல்லாத காரணத்தினாலேயே ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்பு அவசரமாக கிழக்கு மாகாண சபையைக் கலைத்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:

"நாங்கள் எப்போதும் வடக்கு ,கிழக்கு இணைந்ததுதான் தமிழரின் தாயகம் என்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கோரி வருகிறது. கிழக்கிலே மாவிலாற்றில் யுத்தம் இறுதிக்கட்டம் ஆரம்பித்து வடக்கே முள்ளிவாய்க்காலில் முடிந்துள்ளது. இரண்டுமே நீரோட்டங்கள். எப்போதுமே நீரோட்டங்கள் முடிவற்றவையாகவே இருப்பது எமக்குத் தெரியும். இந்த யுத்தம் முடிவடைந்ததும் அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்கள்.

அதிலே தமிழ் மக்கள் ஜனாதிபதியின் பக்கம் இல்லை என சர்வதேசத்துக்கு நிரூபித்தார்கள். அப்போது சர்வதேசத்திடம் பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காட்டுகிறேன் என்று கூறித் தேர்தலையும் நடத்தினார். அந்தத் தேர்தலிலே கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்ந்த எந்தவொரு தமிழ் உறுப்பினரும் தெரிவு செய்யப்படாத நிலையை மக்கள் உருவாக்கி கிழக்கு மாகாணம் ஜனாதிபதியின் பக்கம் இல்லை என்பதை உணர்த்தினார்கள். இந்த சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்ததும் ஒரு வருடம் முன்பே மாகாண சபையைக் கலைத்திருக்கிறார்.

அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த ஒரு தமிழன் ஆட்சி புரிகின்ற மாகாண சபையை ஏன் ஒரு வருடம் முன்பாக கலைக்க வேண்டும். அரசாங்கத்துக்குத் தன்னுடைய கட்சியில் ஒரு தமிழனுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கும் நோக்கம் இல்லை. தமிழனின் முதலமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் கிழக்கு மாகாண சபையைக் கலைத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இந்த வருடம் பங்குனி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும் அதை ஒரு வருட காலம் நீடித்துள்ளது. ஏனெனில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் அத்தனை சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி விடும்.

2010ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஆட்சியை மாகாண சபையிடம் கொடுப்பேன் என்று கூறிய அரசாங்கம் 2010 கொடுக்கவில்லை. இப்போது 2013 என்று கூறிக் கொள்கிறது. காரணம் வட மாகாணத்திலே தேர்தலை நடத்தினால் ஒரு தமிழன்தான் முதலமைச்சராக வருவான்.

கிழக்கு மாகாணத்திலே அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தனது கட்சியைச் சார்ந்த ஒரு முஸ்லிமை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசாங்கதுக்கு ஏற்பட்டதன் காரணமாகத்தான் ஒரு வருடம் முன்பாகவே கிழக்கு மாகாண சபையைக் கலைத்துள்ளது.

அது மட்டுமன்றி எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைப் பேரவை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்கள் சார்பாக சரியானதொரு தீர்வுத் திட்டத்தைக் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்தி அதிலே வெற்றி பெற்று கிழக்கு மக்கள் எல்லாம் என்னுடன் தான் இருக்கிறார்கள், நான் செய்வதெல்லாம் சரி, எனக்கு வாக்களித்துள்ளார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வொன்றைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எதனையும் கோரவில்லை என்பதை காட்டுவதற்காக எடுக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கைதான் இந்தக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.

கிழக்கு மாகாண சபையிலே இருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தமிழ் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? ஆரையம்பதியிலே எமது மக்களின் காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அதை எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக பல அமைப்புகள் போராடின. முன்னாள் முதலமைச்சரின் 35ஆவது பிறந்தநாள் நிகழ்வை ஆரையம்பதியிலே கொண்டாடி இந்த காணி பிரச்சினைக்கு ஒரு தடையை ஏற்படுத்துமாறு ஒரு மகஜரை கொடுத்தார்கள். அதை நன்றாக படித்துவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஆரையம்பதியில் முஸ்லிம்கள் குடியேறுவதை எந்தவொரு தமிழனாவது தடுக்க முற்பட்டால் நான் பழைய பிள்ளையானாக மாற வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார். இவருக்குத்தானா மீண்டும் முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமீர் அலி இவர் ஓட்டமாவடி பிரதேசத்தை நகர சபையாக மாற்ற வேண்டும் என்பதற்காக வாகரைப் பிரதேசத்தில் 17 தமிழ்க் கிராமங்களையும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 தமிழ் கிராமத்தையும் தங்களோடு இணைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்துள்ளார். இதற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் துணை போயுள்ளார். இந்த விடயம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. அரசாங்கத்துக்கு வாக்களித்தால் அமீர் அலி முதலமைச்சராக வருவார். எமது தமிழ் கிராமங்களை அநியாயமாக தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மாவட்ட செயலகத்திலே எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதிலே அரச தரப்பு இன்னுமொரு முதலமைச்சர் வேட்பாளரும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளருமான அலிசாஹிர் மௌலானா ஏறாவூர் நகரை மாநகர சபையாக மாற்ற வேண்டும் என்பதற்காக பெரிய ஒரு வரைபடத்துடன் வந்திருந்தார். அதிலே தமிழ் பிரதேசங்களான ஆயித்தியமலை தொடக்கம் தன்னாமுனை மற்றும் தளவ? சவுக்கடி போன்ற பாரிய நிலப்பரப்பை ஏறாவூருடன் இணைக்க வேண்டும் என்று பாரிய திட்டத்துடன் வந்திருந்தார். இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தோம். எமது மண்ணை எவரும் கொண்டு போக அனுமதிக்கமாட்டோம் எனக் கூறினோம். அரசாங்கத்துக்கு வாக்களித்து அவர் முதலமைச்சராக வந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

சந்தனமடு ஆற்றிலே பெரும்பான்மை இனத்தவர் மண்ணை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவர் பிரதியமைச்சர் கருணா அம்மான் அவர்கள். அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடுத்து நடவடிக்கை எடுத்த போது ஆற்றிலே எல்லோரும் மண்ணை ஏற்றலாம் என்று பெரும்பான்மையினருக்கு வழியமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சர் பிள்ளையான். எதிர்வரும் காலங்களிலே மழை பெய்யுமாகவிருந்தால் சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி போன்ற பிரதேசங்கள் நீரில் மூழ்குவதை எவராலும் தடுக்க முடியாது.

கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரை என எமது மக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை பெரும்பான்மை இனத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும்.

சிறுபான்மை இனத்தைப் பாதிக்கக்கூடிய வகையிலும் எமது காணிகளை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்த்துக் கொடுக்கக்கூடிய வகையிலும் அமையும். நாடு நகர அபிவிருத்தி திருத்த சட்ட மூலம் கிழக்கு மாகாணத்திலே கொண்டுவரப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் எதிர்க்காமல் பின்போட்டுக் கொண்டு வந்தார். ஏன் அதை எதிர்த்து பிரேரணையைக் கொண்டு வரவில்லை. ஆனால், ஒரு சிங்கள மாகாண சபை அதை எதிர்த்து பிரேரணையைக் கொண்டு வந்த காரணத்தினால் அந்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் தாங்களும் எதிர்ப்பதாகக் கூறினார்கள். இப்படிப்பட்டவர்களுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்?

எமது மக்கள் உரிமையுடன் வாழ வேண்டும் என்று ஒரு விடுதலையைப் பெற்றுத் தருவதற்காக மடிந்த எமது தியாகிகளுக்காக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என்றார்.

-வீரகேசரி-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்: - சுரேஷ்பிரேமச்சந்திரன்
[Saturday, 2013-05-25 07:57:33]

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Ramans2011
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com