Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஆப்பிள் நிறுவனத்துக்கு 1.05 பில்லியன் டொலர் நஷ்டஈடு செலுத்த சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு!
[Sunday, 2012-08-26 08:49:36]
News Service

தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட காப்புரிமை வழக்கில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

  

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது கம்ப்யூட்டர்கள், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களின் வடிவமைப்புத் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவனம் திருடுவதாக கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தான் காப்புரிமை பெற்றுள்ள இந்த மின்னணு சாதனங்களின் வடிவமைப்பைச் சட்டத்தை மீறிப் பயன்படுத்துவதால் சாம்சங் தனக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு ஆப்பிள் நிறுவனம் கோரியிருந்தது.

இவ்வழக்கில், தான் தயாரிக்கும் 28 வகையான சாதனங்களை சாம்சங் அதே வடிவமைப்பில் உருவாக்குவதாகக் கூறி அவற்றைப் பட்டியலிட்டிருந்தது. எனினும், தனது காப்புரிமையை மீறி ஆப்பிள் நிறுவனம் ஐபாட், ஐபோன் ஆகியவற்றைத் தயாரித்ததாக சாம்சங் தனது பதில் மனுவில் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சான் ஜோஸ் நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் விசாரித்தனர். அவர்கள் கடந்த மூன்று தினங்களாக தீவிர விவாதம் நடத்தி, ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமைகள் சட்டப்படி உள்ளதாகவும், சாம்சங்கின் காப்புரிமைகளை அவை மீறவில்லை என்றும் சனிக்கிழமை தீர்ப்பளித்தனர். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்புத் தொழில்நுட்பங்களைத் திருடியதற்காக அந்த நிறுவனத்துக்கு சாம்சங் 1.05 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

இத்தீர்ப்பு குறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் கூறுகையில் "திருடுவது என்பது சரியல்ல என்ற தெளிவான தகவலை இத்தீர்ப்பு அளித்துள்ளது. எங்களுக்குத் தெரிந்ததை விட அதிக அளவில் தொழில்நுட்பங்களை சாம்சங் திருடியிருப்பது, வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட மலையளவு ஆதாரங்களின் மூலம் தெரியவந்தது. பல்வேறு சாதனங்களை எங்களது வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்காகவே நாங்கள் உருவாக்குகிறோமே தவிர, எங்களது போட்டி நிறுவனங்கள் அவற்றின் தொழில்நுட்பங்களைத் திருடுவதற்கு அவை உருவாக்கப்படுவதில்லை' என்றார்.

தீர்ப்பு குறித்து சாம்சங் நிறுவனம் கூறுகையில், "இத்தீர்ப்பை மாற்றியமைக்கும்படி நீதிமன்றத்தை நாடுவோம். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இதுவே இறுதித் தீர்ப்பு அல்ல' என்று தெரிவித்துள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சீனாவில் தொடர்ந்து கொட்டும் மழை - 5 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் தவிப்பு!
[Saturday, 2013-05-25 08:32:00]

சீனாவில் புயல் மழையால் 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவின் தென் பகுதி குவாங்டாங் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் வேகம் அதிகரித்து பலத்த காற்றுடன் கூடிய புயல் மழையாக மாறியது. இதனால் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கனமழையால் குவாங்டாங்கை சுற்றியுள்ள 8 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மோசமாக பழுதடைந்தது. பாலங்கள் இடிந்து விழுந்தது. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.



வன்முறைகளால் ஆறாவது நாளாக இன்றும் பற்றியெரியும் ஸ்டொக்ஹோமின் புறநகர்ப்பகுதி!
[Saturday, 2013-05-25 08:29:14]

சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் வெளிநாட்டுக் குடியேறிகள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகளில் ஆறாவது இரவாக இன்றும் வன்முறைகள் நடந்துவருகின்றன. அதில் இரண்டு பள்ளிக்கூடங்களும், மாவட்ட காவல்துறை நிலையமொன்றும் ஏராளமான கார்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகள் பல இடங்களுக்கும் பரவியுள்ளது. தொழில் வாய்ப்புகள் இல்லாமையை காரணங்காட்டியே, இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.இந்த வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு உள்ளூர் சமூகத் தலைவர்களுடன் பேசிவருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.



ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடிப்பு!
[Saturday, 2013-05-25 08:15:23]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் நேற்று அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. காபூலில் உளவு அமைப்பான என்.டி.எஸ் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை, ஆப்கன் பொது பாதுகாப்புப் படை, இந்தியத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில், நேற்று மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) அடுத்தடுத்து இரு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பால், இந்தியத் தூதரகக் கட்டடத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அங்கு அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அவசியமே - நியாயப்படுத்துகிறார் ஒபாமா!
[Saturday, 2013-05-25 07:25:43]

பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானத் தாக்குதல் அவசியம்; மேலும் அது சட்டப்பூர்வமானதே என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்தரங்கில் ஒபாமா வெள்ளிக்கிழமை பேசியதாவது: இன்றைய சூழலில் பயங்கரவாதம் என்பது உலகை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவைக் குறிவைத்து பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் தற்காப்புக்காக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.



பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த முயற்சி - இருவர் கைது!
[Saturday, 2013-05-25 07:22:20]

பாகிஸ்தானில் இருந்து பிரிட்டன் சென்ற விமானத்தில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, அந்த விமானம் வேறு பகுதிக்குத் திருப்பி விடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 297 பயணிகளுடன் லாகூர் நகரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் நகருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் இருந்த இரு பயணிகள் திடீரென்று பைலட் அறையை நெருங்க முயற்சித்தனர். இதனால் சந்தேகமடைந்த பைலட்டுகள் இது குறித்து மான்செஸ்டரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.



அமெரிக்காவில் இடிந்து விழுந்தது பாலம் - வாகனங்கள் நீரில் மூழ்கின!
[Friday, 2013-05-24 18:21:57]

அமெரிக்காவின் மௌன்ட் வெர்னன் அருகே உள்ள உள்ளூர் சாலைகளை இணைக்கும் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. நேற்று இரவு நடந்த இவ்விபத்தில், வாகனத்தில் சென்ற மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளுக்குள் வாகனங்கள் சிக்கிக் கொண்டதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனினும், மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு அவர்களை மீட்டுள்ளனர்.



ரஷ்யாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Friday, 2013-05-24 18:10:52]

ரஷ்யா அருகே இன்று மதியம் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் கிழக்கே வட பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எஸ்ஸோ நகரின் தென்மேற்கில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஓகோட்ஸ்க் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. சுமார் 601.80 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கு கடற்கரை மற்றும் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.



அதிபர் ஆசாத் பதவி விலகியதும் சிரியா மீது பாரிய போர் தொடுக்கத் தயாராகிறது இஸ்ரேல்!
[Friday, 2013-05-24 18:05:45]

சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில் அதிபர் ஆசாத் பதவி விலகும் நிலை ஏற்பட்டு அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே ஆச்சரியப்படும் வகையிலான போர் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல் குழப்பங்கள் நீடித்தே வருகின்றன. அரபு வசந்தம் என்றழைக்கப்படும் இந்த புரட்சி சிரியாவில் உச்சகட்டம் அடைந்திருப்பதுடன் அப்பிராந்தியத்தில் போர்ச் சூழலை அதிகரித்து வருகிறது. சிரியாதான் பாலஸ்தீன ஆயுத் குழுவினருக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்டகால குற்றச்சாட்டு.



கேம்பிரிட்ஜ் நிகழ்ச்சிக்கு பயணிகள் பஸ்சில் வந்த எலிசபெத் மகாராணி!
[Friday, 2013-05-24 17:33:07]

கேம்பிரிட்ஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ராணி இரண்டாம் எலிசபெத், மக்களோடு மக்களாக பஸ்சில் பயணித்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சுமார் 212 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு, ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு ரயில் மூலம் வந்திருந்தார். விழா நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்சில் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, விழா நடக்கும் இடத்திற்கு ராணி மக்களோடு மக்களாக பஸ்சில் பயணம் செய்தார். இந்த காட்சியை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்தனர்.



பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்தில் தீ - அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால், ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன!
[Friday, 2013-05-24 16:52:02]

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தீ பரவியதை அடுத்து, ரன்வேக்கள் மூடப்பட்டுள்ளன.ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று ஓஸ்லோ புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில், தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள், உடனடியாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். அதில் இருந்த 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.



ஒளிந்துள்ள தீவிரவாதியைத் தேடி லண்டனில் வீடுவீடாகத் தேடுதல்!
[Friday, 2013-05-24 08:49:57]

லண்டனில் ராணுவ வீரரை தலைதுண்டித்து படுகொலை செய்த தீவிரவாதிகளில் ஒருவர் கிரீன்விச் மற்றும் லங்கன்ஷயர் பகுதியில் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அப்பகுதியில் வீடு, வீடாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உல்விச் சாலை யில் ராணுவ முகாம் உள்ளது. இப்பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த 2 தீவிரவாதிகள், அவரை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றனர்.வீரர் மற்றும் அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மற்ற வீரர்கள் ஓடிவந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போலீஸ்காரரை கொன்ற தீவிரவாதியுடன் மற்றொருவரும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார்.



நைஜரில் யுரேனிய சுரங்கம், யுரேனிய ஆலை மீது இரட்டை கார் குண்டுத் தாக்குதல்கள் - 25 பேர் பலி!
[Friday, 2013-05-24 08:38:46]

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வெவ்வேறு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் வியாழக்கிழமை 25 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர். பிரான்ஸுக்கு சொந்தமான யுரேனியப் பதப்படுத்தும் ஆலை ஒன்று நைஜரில் உள்ள அகாதேஸில் உள்ளது. ராணுவ முகாமில் உள்ள இந்த ஆலையின் மீது காரை மோதி வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் நைஜரின் புறநகர்ப்பகுதியான ஆர்லிட்டில் உள்ள யுரேனியச் சுரங்கம் ஒன்றிலும் மற்றொரு கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கர்கள் இரகசிய நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர் - அமெரிக்கா அறிவிப்பு!
[Friday, 2013-05-24 08:32:21]

அமெரிக்காவுக்கு எதிராக, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை, அமெரிக்க நீதித்துறை கமிட்டி வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில், பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள், வெளிப்படையாக இருக்க வேண்டும் என, அதிபர், ஒபாமா, சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, அட்டர்னி ஜெனரல், எரிக் ஹோல்டர், செனட் நீதிக்கமிட்டி தலைவர், பாட்ரிக் லீகேக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:



நான்கு பேரைக் கொலை செய்த தமிழர்கள் நால்வருக்கு மலேசியாவில் மரணதண்டனை!
[Friday, 2013-05-24 08:23:36]

மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில் அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது.



ஆப்கானில் பணியாற்றியதற்காக லண்டனில் கழுத்து அறுக்கப்பட்ட இராணுவ வீரர் - பரபரப்புத் தகவல்கள்!
[Friday, 2013-05-24 08:18:57]

ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார்.



எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ள 80 வயது ஜப்பானிய தாத்தா!
[Thursday, 2013-05-23 19:05:45]

எவ‌ரெஸ்ட் சிகரத்தில் ஏறி 80வயது ஜப்பான் தாத்தா சாதனை படைத்தார். ஜப்பானை சேர்ந்தவர் யூசீரோ மியூரா இவருக்கு வயது 80. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய உலகின் அதிக வயதான தாத்தா என சாதனையைப் படைத்துள்ளார் இவர்.முன்னதாக 2008ம் ஆண்டில் 76வயதான நேபாளி தாத்தா ஒருவர் இந்தச் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை ஜப்பானிய தாத்தா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் வாழ்ந்த டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
[Thursday, 2013-05-23 18:51:05]

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் வேகமாக ஓடத் தக்க இந்த டைனோசர் ஒரு பாய்ச்சாலில் 1.6 மீட்டர் தூரம் தாண்டக் கூடியது. சராசரியாக ஒரு பெரிய வான் கோழியின் அளவை ஒத்ததாக 16 கிலோ எடை வரை இது இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை தாவர உண்ணிகளாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



பாவம் இஸ்ரேல் இரண்டாவது அதிபர்! - அவரது சம்பளம் ட்ரைவரை விட 40 சதவீதம் குறைவாம்!
[Thursday, 2013-05-23 18:26:19]

இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபராக இருந்த இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார். கார் டிரைவரைவிட இரண்டாவது அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. தனது கார் டிரைவரைவிட அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டின் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 1962-ம் ஆண்டில் இஸ்ரேல் பார்லிமெண்டின் நிதிக்குழு இதுகுறித்து சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் துணை அதிபர் சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அதிபரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.



உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் - முதலிடத்தில் ஜேர்மனி அதிபர்,9வது இடத்தில் சோனியா!
[Thursday, 2013-05-23 18:13:55]

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சோனியா காந்தி 9வது இடத்தையும், இந்திரா நூயி 10வது இடத்தையும் பெற்றுள்ளார். ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மானைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.



பொஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் விசாரணையில் சுட்டுக்கொலை!
[Thursday, 2013-05-23 18:03:26]

அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் கடந்த மாதம் 15-ந் தேதி நடந்த மரத்தான் ஓட்டப்பந்தயத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய டேமர்லன் என்பவனை அமெரிக்க போலீசார் சுட்டு கொன்றனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய இப்ராஹிம் தோசேவ் (27) என்பவரை எவ்பிஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கும் அவனுக்கும் வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவனை சுட்டு கொன்றனர். அவனுடைய சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com