Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வடகொரிய அதிபர் சீனாவுக்கு முதற்பயணம்!
[Saturday, 2012-08-25 14:39:47]
News Service

வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யூன் அடுத்த மாதம் சீனா செல்கிறார். அங்கு அவர் சீன தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதனை சீனா, வடகொரியா அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் சுற்றுப்பயணம் முழு விவரம் அறிவிக்கப்படவில்லை.

  

அதிபர் கிம் ஜாங்-யூன் தனது தந்தை மரணம் அடைந்ததை தொடர்ந்து டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அதன்பிறகு தனது முதல் வெளிநாடு சுற்றுப்பயணமாக சீனாவிற்கு செல்ல இருக்கிறார். வடகொரியாவின் நட்பு நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றம்.
[Wednesday, 2013-06-19 12:54:13]

அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு இந்த சட்ட மசோதாவுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில், எளிதாக மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த கட்டமாக செனட் குழுவுக்கு இந்த மசோதா செல்லும். செனட் குழுவில் இந்த சட்ட மசோதாவுக்கு ஏராளமான எதிர்ப்புகள் உள்ள நிலையில், அங்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு அதில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட பிறகே சட்டமாக்கப்படும்.



ஃபுகுஷிமா அணு உலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் STRONTIUM கதிர்வீச்சு!
[Wednesday, 2013-06-19 12:52:00]

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுவுலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் ஆபத்தான கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டிராண்டியம் (STRONTIUM), டிரைட்டியம் (TRITIUM) எனப்படும் கதிர்வீச்சு ரசாயனங்கள் கலந்திருப்பதாக டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. அணுவுலைகளிலும், அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் யூரேனியம் (URANIUM) மற்றும் புளுட்டோனியம் (PLUTONIUM) ஒன்றோடு ஒன்று கலக்கும் போது ஸ்டிராண்டியம் (STRONTIUM) வெளியேறுகிறது.



4500 படையினரை வீட்டுக்கு அனுப்புகிறது பிரிட்டன் - செலவைக் குறைக்கும் நடவடிக்கை!
[Wednesday, 2013-06-19 07:43:40]

செலவுக் குறைப்பு நடவடிக்கை காரணமாக பிரிட்டனில் 4,500 படை வீரர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள தகவல்:தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்க அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படும் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ராணுவத்தில் 20 சதவீதம் அளவுக்கு ஆள்குறைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.



சிரியப் பிரச்சினைக்கு ஜெனிவாவில் பேச்சு - அமெரிக்கா, ரஷ்யா விருப்பம்!
[Wednesday, 2013-06-19 07:36:44]

சிரியாவில் நிகழ்ந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசும், கிளர்ச்சியாளர்களும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவும், ரஷியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன. சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதின் ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. எனினும், ரஷியா இதை விரும்பவில்லை. அரபு நாடுகளில் தனது முக்கியமான தோழமை நாடான சிரியாவின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவே ரஷியா விரும்புகிறது.



ஈரானுடன் பேசத் தயார் - ஒபாமா அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 07:32:45]

ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஈரான் உள்ளானது. இப்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹசன் ரெஹானி புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார்.அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தயார் என்றும் ரெஹானி கூறியுள்ளார்.



ஆப்கானிஸ்தான் படைகளிடம் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்தது நேட்டோ படை!
[Wednesday, 2013-06-19 07:25:29]

ஆப்கானிஸ்தான் படைகளிடம், நேட்டோ படைகள், பாதுகாப்பு பொறுப்பை நேற்று முறைப்படி ஒப்படைத்தன. அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்தார். அவரை ஒப்படைக்க, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள் மறுத்ததால், 2001ல், அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த போரினால், தலிபான்கள் ஆட்சியை இழந்து, பாகிஸ்தான் எல்லையில் ஓடி ஒளிந்தனர்.அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தற்போது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த படைகளுக்கு எதிராக, தலிபான்கள் அடிக்கடி, தற்கொலை படை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.



அமெரிக்காவின் இரகசியங்கள் தொடர்ந்து வெளிவரும்! - சிஐஏ முன்னாள் பணியாளர் எச்சரிக்கை.
[Tuesday, 2013-06-18 19:18:52]

இணையதள தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்தது குறித்த விபரங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், இது போன்ற உண்மைகள் வெளிவருவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ஹாங்காங்கில் தஞ்சம் அடைந்துள்ள ஸ்னோடன் நேற்று கார்டியன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை ஜெயிலில் அடைப்பதன் மூலமோ அல்லது கொலை செய்வதன் மூலமோ அமெரிக்க அரசு இதனை மூடி மறைக்க முடியாது என்பதை கூறிக்கொள்கிறேன். உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.



மரடோனாவின் உருவம், கையெழுத்தை பயன்படுத்திய சீன நிறுவனத்துக்கு 3 மில்லியன் யுவான் அபராதம்!
[Tuesday, 2013-06-18 19:15:27]

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா. கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவரின் உருவம் மற்றும் கையெழுத்தை சீனாவைச் சேர்ந்த தி9 என்ற நிறுவனம் இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் பயன்படுத்தியுள்ளது. இதற்கு மரடோனாவிடம் இருந்து அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை. இதைபற்றி அறிந்த மரடோனா தனது படத்தையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தி விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும், இணையத்தில் வெளியிட்ட சினா நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார்.



தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்த முதல் டாக்டர்!
[Tuesday, 2013-06-18 19:10:44]

பனிப்பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்.



பறக்கும் மோட்டார் சைக்கிள் - இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
[Tuesday, 2013-06-18 19:05:46]

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 புரோபெல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன. 95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.



சீன அதிபருடனான பேச்சு விபரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது அமெரிக்கா!
[Tuesday, 2013-06-18 17:54:56]

சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து இந்திய அதிகாரிகளிடம் அமெரிக்கா விளக்கம் அளித்தது. சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.அதிபராக ஒபாமா பொறுப்பேற்றவுடன், இது போன்ற முக்கிய கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தனது நட்பு நாடுகளிடமும், கூட்டாளி நாடுகளிடமும் அந்நாட்டு அரசு விளக்கமளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.



இருகால்களும் செயலிழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!
[Tuesday, 2013-06-18 07:34:15]

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து, அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர், சூ ஆஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால், இவரது இரு கால்களும் செயல் இழந்தன. எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின், தான் கற்றிருந்த நீச்சல் மீது, அலாதியான காதல் கொண்டிருந்தார். இதனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார். இதையடுத்து, தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைத்தார். இதன் மூலம், மீண்டும் நீச்சல் பழகிய ஆஸ்டின், கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.



சுமாத்ரா காட்டுத் தீயால் புகைமூட்டத்தில் சிக்கிய சிங்கப்பூர், மலேசியா - பாடசாலைகளுக்கு விடுமுறை!
[Tuesday, 2013-06-18 07:30:29]

சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட தீயால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் புகை சூழ்ந்துள்ளது. இதனால், பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் உள்ள காடுகளில், தீ பிடித்துள்ளது. இதனால், இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம், மலேசியாவிலும் பரவி வருகிறது. கடும் புகை மண்டலத்தால், மக்கள் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் ஏற்படும் புகையினால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும், என அஞ்சப்படுகிறது.



பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின் தலையை சீவியெறிந்தார் மகள்!
[Tuesday, 2013-06-18 07:25:10]

பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த இளம் பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின், தலையை துண்டித்துள்ளார். இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவு பப்புவா நியூ கினியா. இங்குள்ள ஒரு கிராமத்தில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது மூத்த மகளை, தந்தை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபட முயன்ற தந்தையின் தலையை, 18 வயது மகள், அரிவாளால் வெட்டினார். இதில் தந்தை பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், இளம் பெண்ணை கைது செய்ய முயன்றனர்.ஆனால், கொடுர தந்தையை தீர்த்து கட்டிய மகளை கைது செய்ய, அந்த கிராமத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். கிராம பெரியவர்களும், பாதிரியாரும் கேட்டு கொண்டதற்கிணங்க, அந்த பெண் கைது செய்யப்படவில்லை.



உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சாதனை படைத்தது சீனா!
[Tuesday, 2013-06-18 07:23:05]

உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய முயற்சியில் டியானே-2 என்ற அதிவேக கணினி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் விநாடிக்கு 54.9 குவாடிரில்லியன் வேகத்தில் செயல்படும் ஆற்றல் கொண்டது என சீனாவின் தேசிய தொழில்நுட்பப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 2011 வரை சீனாவின் டியானே-1ஏ கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக வளங்கியது. அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானின் கே கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக இருந்தது.



ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை உளவு பார்த்தது பிரிட்டன்! - முன்னாள் சிஐஏ பணியாளர் பரபரப்புத் தகவல்.
[Tuesday, 2013-06-18 07:15:03]

பிரிட்டனில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.அம்மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ், மாஸ்கோவில் உள்ள தலைவர்களுடன் செயற்கைக்கோள் தொலைபேசியில் பேசியதை இடைமறித்துக் கேட்க அமெரிக்க உளவுத் துறையும் முயற்சி மேற்கொண்டுள்ளது.



நடுவானில் இயந்திரக் கோளாறு - முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!
[Monday, 2013-06-17 18:20:29]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிலடெல்பியாவில் இருந்து டல்லாஸ் நகருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். நடுவானில் சென்றபோது விமானத்தின் என்ஜினில் இருந்து வித்தியாசமான நெடி வீசியது. இதனால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கும் என சந்தேகம் அடைந்த விமானி இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே விமான நிலையத்தில் உடனே தரை இறக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து புஷ் பயணம் செய்த விமானம் அங்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.



ஊழல், அவதூறு குற்றச்சாட்டுகளால் பதவி விலகினார் செக் பிரதமர்!
[Monday, 2013-06-17 18:11:24]

உறவினர் ஒருவரின் ஊழல் மற்றும் அவதூறு மோசடிகளால் எழுந்த பிரச்சினைகளில் செக் குடியரசு பிரதமர் பெடர் நேகாஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டு அரசியல் அமைப்பின்படி, அரசின் அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.மாற்று அரசு அமைப்பதில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி மற்றும் அந்நாட்டு அதிபர் ஆகியோரிடையே குதிரை பேரத்திற்கும் இது வழிவகுக்கும். பிரதமரின் உறவினரும், அவரது அலுவலக நிர்வாகியுமான ஜனா நக்யோவா பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களிடையே உளவு பார்க்கும் வேளையில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.



வைர மோதிரத்தை திருடிவிட்டார் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க தொழிலதிபரின் குற்றச்சாட்டினால் பரபரப்பு!
[Monday, 2013-06-17 18:05:15]

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்தில் உள்ள பாட்ரியாட்ஸ் அமெரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளர் ராபர்ட் கிராப்ட் (72). இவர் அமெரிக்காவில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த விழாவில் புதின் கலந்து கொண்டார். அதில் நானும் பங்கேற்றேன். அப்போது நான் அணிந்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழற்றி நான் அவரிடம் காட்டினேன்.



ஜப்பானிய விஞ்ஞானி தயாரித்துள்ள மனித வடிவிலான புதிய ரோபோ!
[Monday, 2013-06-17 17:59:57]

எந்திரன் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னைப்போன்று உருவமுள்ள எந்திர மனிதனை தயாரித்து இருப்பார். அது மனிதர்களை போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும். அதுபோன்று புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானி தயாரித்துள்ளார். அவரது பெயர் ஹிரோஷி இஷிகுரோ. இவர் ஒசாகா பல்கலைக்கழகத்தில் இன்டலி ஜென்ட் ரொபாடிக் ஆய்வக இயக்குனராக உள்ளார். இவர் தான் உருவாக்கியுள்ள எந்திர மனிதனை ஆண் போன்றும், பெண் போன்றும் உருவ மாற்றம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளார்.


Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Ramans2011
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
TDE_Computers2011
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com