Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அடுத்து யாருக்கு படையலும் குளுத்தியும் வைக்கலாம்...
[Sunday, 2012-08-19 22:05:36]
News Service

ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது... எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்.. இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான் (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு கதை) அதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள்.

  

எனவே அவர்களின் வாரிசுகளுக்கு நாம் குளுத்தி வைக்க வேண்டும். அவர்களை மீண்டும் கோபம் படுத்தாமல் அவர்கள் அனுசரித்து நடந்து தமிழ் பிரதேசத்தில் அவர்கள் சுரண்ட நினைப்பதை சுரண்டியபின் கிடைப்பதை வைத்துக்கொண்டு நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்று ஒருசாராரும் மற்றெரு சாரார் அமெரிக்கா பெரியபிரித்தானியா போன்ற வல்லரசுவுகள் பெரிய மனது பண்ணி எப்போதாவது விடுதலை பெற்றுத் தரும் போது நாம் இருகரம் நீட்டி வேண்டிக்கொண்டால் போதுமானது.

அது மட்டும் அவர்களுக்கு எதோ காரணத்தால் (என்ன காரணம் என்றும் அறுதியாக எவர்களுக்கு தெரியாது) எங்களின் போராட்டத்தை நசுக்கியதால் இனி போராட்டம் தமிழீழம் என்றெல்லாம் கதைப்பதோ அல்லது அதன் குறியீடுகளாக உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட சின்னங்கள் கொடிகள் எல்லாவற்றை பிடித்து அவர்களின் கோபத்திற்கு மீண்டும் ஆளாவதோ இல்லாமல் அடிபெட்டிக்குள் வைத்து விட்டு வேண்டுமென்றால் இங்குள்ள (தமிழர்கள் மட்டுமே வரும்) கோயிலில் தாயகத்தில் உள்ள மக்களுக்காக (போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிக்காது பல்லின மக்களுக்கும் தெரியாத வகையில் தமிழ் இணைத்தளங்களில் மட்டும் படங்கள் தாரளமாக வரக்கூடிய வகையில்) சாந்தி பூசைகள் யாகங்கள் மற்றும் கூட்டுப்பிராத்தனை போன்றவற்றில் ஈடுபடுவது அவ்வல்லரசுகளுக்கு நல்ல படையல் வைப்பது போன்றது.

வல்லரசுகளை பகைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? நல்ல கேள்வி அதே நேரம் காலடியில் போய்நின்று பாதபூசை செய்து கொண்டிருப்போமேயானால் எங்களோடு கதைக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லாமல் போகிறது அல்லவா. காலை நக்கிக்கொண்டிருப்பவர்களை யாராவது தட்டி எழுப்பி கதிரையில் இருத்தி உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு தீர்த்து வைப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது. கொடுக்காவிட்டாலும் என்ன காலை நக்குவது என்ன குறையவா போகிறது?

ஒரு நாட்டுக்கும் பறந்து திரியாமல் ஒருவருடனும் தொலைபேசியில் அளவளவாத எங்கையே ஒரு உலகப்படத்தில் புள்ளி போல இருக்கும் நாட்டின் காட்டுக்குள் தனது மக்களும் அவர்களுக்கான போராட்டமும் என்று இருந்த எமது தேசிய தலைவனை காண ஆளுக்கு மேல் ஆள் என நாட்டுக்கு மேல் நாடு எனச் சொல்லப்பட்டவர்களும் அவர்களின் தூதுவர்களும் போய் சந்தித்தற்கு காரணம் என்ன?

மில்லியன் கணக்கில் அவர்களின் புலன்ஆய்வுத்துறைக்கு செலவழித்து எமது விடுதலை இயக்கத்தின் பலம் என்ன? பல்லாயிரக்கணக்கான வேறுவேறு நாடுகளில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் கூட அதிகம் இன்றி வாழும் ஈழத்தமிழ் மக்களை வாழ்க்கையில் ஒருதடவை கூட சந்தித்திராத மறைமுகமாக வாழும் ஒருவரின் பெயரை சொன்னதும் தெருவில் இறங்குகிறார்; பல லட்சம் பேர் ஒரு தொலைபேசி குறும் செய்தியில் கேள்வியின்றி அணிவகுக்கிறார்கள் அந்த கொடியை பார்த்துமே விடுதலை உணர்வும் தியாகமும் தன்மானமும் தூய்மை தன்னலமின்மை என்ன பல் உணர்ச்சிகளோடு தமிழன் என்ன ஒருமிக்கிறார்கள் என அதிசயம் இது எப்பிடி சாத்திமாகிறது.

படித்தவர்கள் படிக்காதவர்கள் பணத்தில் புரள்பவர்கள் ஒருநாள் கூலிக்கு வேலை செய்பவர்கள் தமிழ்ஈழத்தில் பிறந்தவர்கள் சிறீலங்காவில் கூட கால் பதிக்காத இங்கு பிறந்த அடுத்த தலைமுறை முதியவர்கள் இளைஞர்கள் ஏன் சிறுவர்கள் என எல்லோரும் இணைவதுவும் ஒரு கொடியின் கீழ் நிற்பதுவும் நடப்பதுவும் எப்பிடி சாத்தியமாகின்றது இந்த சிறிய பகுதி மக்களால் அதிசயத்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாத கொள்கைபற்றை பார்த்து பயந்தார்கள்.

விடுதலை அடையமுதலே இருக்கும் அரசியல் பொருளாதார இராணுவக்கட்டமைப்புகள் வெடிபொருள் கணிணி இலத்திரனியல் தொழில்பிரிவு போர்கருவி தொழிற்சாலை இராணுவ விஞ்ஞான கல்லூரி பரப்புரை பிரிவு பொறியியல் துறை விளையாட்டுத்துறை ஆங்கில கல்லூரி திரைப்படபுத்தக மொழிபெயர்ப்புத்துறை கல்வி மேம்பாட்டு கழகம் கலை பண்பாட்டு கழகம் சுகாதாரப்பபிரிவு சு10ழல் நல்லாட்சி ஆணையம் வனவள பாதுகாப்புப் பிரிவு பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பொருண்மிய மதியுரைகம் காலநிலை அவதானிப்பு நிலையம் ஒளிக்கலைப்பிரிவு என ஜம்பத்தாறு வகையான பிரிவுகளால் எதிர்காலத்தை திடமாக திட்டமிட்டு நடத்தியதோடு போரும் புரித்தார்கள்.

அவர்கள் கதிரைக்கு ஆசையுள்ளவர்களாகவோ மதிநுட்பம் இல்லாது தன்னிறைவை நோக்கிய தூர நோக்கில்லாதவர்களாக இருந்திருந்தால் நாடுகடந்த அரசை வளர்த்தெடுத்தது போல அவர்களையும் வளர்த்தெடுத்து தாங்கள் சொல்லும் போது வாலாட்டுவதற்கெனவும் மக்கள்சக்தியை இரண்டாக உடைப்பதற்கெனவும் வைத்திருந்திருப்பார்கள். கருணாவை கொண்டு உள்ளாட்டிலும் வெளிநாட்டில் கேபி போன்றவர்களிலும் கண்வைத்தார்கள். வெளிநாட்டு அரசாங்களுக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இல்லாதபோதும் எமது உறுதியையும் மக்கள் பலத்தையும் ஒருகுறியீடு ஓருகொடி என அவர்களைக்போல பகுத்தறிவுள்ள தேசியபற்றுள்ள இனமாக உள்ளதைப் பார்த்து பயந்தார்கள். இதை அழித்து விட்டு கொஞ்சம் அறிவு குறைந்த பதவி பட்டம் என ஆசைகள் உள்ள தமக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒன்றை கொண்டுவர எண்ணினார்கள்.

சில பயணங்களுக்கு ஒருவழி பாதை (one way) மட்டுதான். அதில் பயணம் செய்தால் சேரும் இடம் வரும் வரை பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும் இடையில் திரும்பமுடியாது ஏனெனில் அது போவதற்கு மட்டும் உரிய பாதை. விடுதலையை நோக்கிய பாதையும் அப்படித்தான். கிணறு தோண்டும் போது தண்ணி வருவது நிச்சயம் ஆனால் வருவதற்கு ஒரு அடிக்கு முன்னும் நாம் களைத்துப்போய் நிற்பாட்டி விடலாம். ஆனால் எம்மை தோண்டுவதற்கு உந்துசந்தியாக இருக்கும் சிங்கள பேரினவாதம் எம்மை நிற்கவிடாது. ஓன்றுமே இல்லாத வெளி நாட்டில் பயங்கரவாதம் என்று பயப்படுகிறார் உன்னுடைய மனைவியை அடுத்தவன் நடந்தை கெட்டவள் என்று சொன்னால் உடனே நீங்கள் தள்ளிவைத்து விடுவீர்களா? சொந்த புத்தி வேண்டாம்.

அவ்வளவு அடக்கமுறைக்குள்ளும் அங்குள்ள மக்கள் இந்த வெளிநாட்டில் இருக்கும் வியாக்கியானம் கதைப்பவர்களின் தங்கியிருக்காது அங்கு நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறைக்கெதிராக உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுக்கிறார்கள். அடக்குமுறையால் போராட்டம் வந்ததா? போராட்டம் இருப்பதால் அடக்கு முறை வந்ததா? சீறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சாமரம் வீசுபவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் சிங்கள மக்களும் கூட தலைமுறையை போருக்கு அடகு வைக்காமல் சிந்திக்கும் நேரமிது.

வாழ்க சிங்கள பேரின அடக்கு வாதம்! வளர்க தமிழ் ஈழம்!!

ஒரு பேப்பருக்காக - சுகி

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஊடகவியலாளர சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் - முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்!
[Wednesday, 2013-06-19 18:11:18]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.



சிங்களவர்களால் லண்டனில் தமிழீழ மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கண்டனம்!
[Wednesday, 2013-06-19 17:48:32]

தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது. தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.



வடக்கு தேர்தலுக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் - அசாத் சாலி
[Wednesday, 2013-06-19 17:42:11]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மனைவியுடன் தகராறு - சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday, 2013-06-19 17:38:06]

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டவேளை, கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென்று கூறியுள்ளார்.



பஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி, 70 பேர் காயம்!
[Wednesday, 2013-06-19 17:19:14]

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றே இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் விபத்திற்குள்ளானது. இப்பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் நமுணுகல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!
[Wednesday, 2013-06-19 17:15:59]

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.



சிங்கள ராவயவின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தவும் - ஜனாதிபதியிடம் அசாத் சாலி கோரிக்கை!
[Wednesday, 2013-06-19 16:08:46]

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்: - எம்.ஏ. சுமந்திரன், நா.உ.
[Wednesday, 2013-06-19 10:46:32]

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.



இனமானக் கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி வணக்க நிகழ்வு Top News
[Wednesday, 2013-06-19 09:55:44]

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு பூவள்ளி தூவி வணங்கி நினைவெழுச்சி உரைகளில் எழுகை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் காசி ஆனந்தன் அண்ணாவின் சிறப்புரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. இனமானக் கலைஞர் மணிவண்ணன் அவர்களை நினைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களால் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி நிகழ்வுகள் வரிசையில் கனடிய மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.



இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - மன்மோகன் சிங் உறுதி மொழி
[Wednesday, 2013-06-19 09:42:31]

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். இதன் பின்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.



வடக்கு, மத்திய, வட மேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் இரண்டாம் வாரத்திற்கு பின்னதாக இடம்பெறும்!
[Wednesday, 2013-06-19 09:36:49]

வடக்கு, மத்திய, வட மேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் இரண்டாம் வாரத்திற்கு பின்னதாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நேற்று (18) பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து வடக்கு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தங்களை தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும்: - பா.ஜ.க
[Wednesday, 2013-06-19 09:18:45]

இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிராந்திய தலைவர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.



சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாண அரச காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் - கோத்தபாய
[Wednesday, 2013-06-19 09:18:15]

வடமாகாணத்தில் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும். சிங்களவர்கள் அங்கு தங்களது காணிகளை கொள்வனவு செய்யக்கூடிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களர்கள் சொந்த காணிகளை கொள்வனவு செய்து குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சிங்கள மற்றும் முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளும் வடமாகாண அரசாங்க காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



சாவகச்சேரியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காணியை மீட்டுத் தாருங்கள்: - பிரதேச செயலகத்திடம் பொதுமக்கள்
[Wednesday, 2013-06-19 08:57:52]

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.



ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை பயன்படுத்திய நபர் மீது விசாரணை
[Wednesday, 2013-06-19 08:47:34]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது. எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார். அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 08:39:51]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் முஸ்லிம்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகள் சில தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டலாம்? - பாட்டி வடை சுட்ட கதை என சக ஊழியர்கள் விசனம்
[Wednesday, 2013-06-19 08:05:41]

நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.



13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும்: - பா.ஜ.க
[Tuesday, 2013-06-18 21:36:53]

இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிராந்திய தலைவர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.



வாஸ் குணவர்த்தன பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம்!
[Tuesday, 2013-06-18 21:35:07]

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவருடைய பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன சுகயீனம் காரணமாக பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 15ம் திகதி இரவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்: - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா - அவுஸ்திரேலியா
[Tuesday, 2013-06-18 21:12:15]

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும் கலங்கவைக்கின்றது. அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.


INNSYS-20120930
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com