Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
'என் இடம் காலியாத்தான் இருக்கு' - பாக்யராஜ்
[Sunday, 2012-08-19 21:06:39]
News Service

பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்த, 'திரைக்கதை திலகம் பாக்யராஜ், சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் களம் இறங்குகிறார். இதற்காக, அருமையான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். 'சினிமா நவீனமயமாகி விட்ட இந்த காலத்தில், உங்களோட பழைய பாணி எடுபடுமா? என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில்: ஏன் எடுபடாது. தற்போது தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

  

ஆனால், திரையுலகத்தையே திருப்பிப் போடுற மாதிரியோ, அசத்துற மாதிரியோ, யாரும் பெரிதாக, படம் எடுக்கவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு, கதை சொல்லும் திறமை வளரவில்லை. இப்போதைய சினிமா, செக்குமாடு போல தான், ஒரே மாதிரியா சுத்தி வருது. தமிழ் சினிமால என் இடம் அப்படியே தான் இருக்குது. நிச்சயம் மறுபடியும் ஜெயிப்பேன். இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சிந்து சமவெளி மாதிரி படங்களில் இனி நடிக்க மாட்டேன்: அமலாபால் சபதம்
[Sunday, 2013-05-26 12:12:50]

கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார். அறிமுகமான படத்தில் மாமனார், மருமகள் கள்ளக்காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் கணவனுக்கு துரோகம் செய்து அவன் தந்தையுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தது பெரிய தவறு என்றும் இனிமேல் அது மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் என்று அமலாபால் கூறினார். இதுகுறித்து அமலாபால் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு அனுபவம் இல்லை. கதை முழுவதையும் கேட்காமல் என் கதாபாத்திரத்தை மட்டுமே தெரிந்து கொண்டு நடித்தேன். அப்படி நான் நடித்த படம் தான் சிந்து சமவெளி. இதற்காக நிறைய விமர்சனங்கள் வந்தன வருத்தப்பட்டேன். ஆனால் இனிமேல் சர்ச்சைகளில் சிக்க மாட்டேன்.



அனிருத்தின் கதாநாயகன் கனவை கலைத்த ரஜினி..!
[Sunday, 2013-05-26 12:04:18]

விஜய், முருகதாஸ் இணையப்போகும் படத்திற்கு அனிருத் இசைமைப்பாளராகிவிட்டார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் சில பேருக்கு பெருங்காயத்தையும், சில பேருக்கு வெல்லத்தையும் கரைத்துக் கொடுத்திருக்கிறது. பெருங்காய பார்ட்டிகளை விடுங்கள்.. வெல்லக்கட்டி மனசுக்காரர்களை பார்ப்போம். முதலில் அனிருத்தை அழைத்து பாராட்டியவர் ரஜினிதானாம். "உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள்" என்றவர், அதற்கப்புறம் சொன்னதுதான் அனிருத் கைகட்டி வாய்பொத்தி கேட்க வேண்டிய விஷயம். "இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் இன்னும்னு பெரிய படங்கள் செய்யணும். அவ்வளவு ஏன்? நீ என் படத்திற்கு இசையமைக்கிற நேரமும் வந்து கொண்டேயிருக்கு. (பிளான் பண்ணிட்டாரோ) இந்த நேரத்தில் நானே ஹீரோவா நடிக்கிறேன்னு இறங்கி வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காதே. இறைவன் காட்ற ரூட்டுல சந்தோஷமா போகணும். நீயே இன்னொரு பாதையை டிசைட் பண்ணி, கிடைச்சிருக்கிறதையும் விட்ற கூடாது. யோசி" என்றாராம்.



தீபிகா படுகோனேயின் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள தென்னிந்திய நடிகைகள்..
[Sunday, 2013-05-26 11:54:50]

இந்தியில் நீண்டகாலமாகவே கைத்ரீனா கைப், கரீனா கபூர் போன்ற நடிகைகளின் ஆதிக்கம்தான் இருந்து வந்தது. அதையடுத்து சில இளவட்ட நடிகைகள் வந்தும் அவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. ஆனால், அதன்பிறகு என்ட்ரி கொடுத்த தீபிகா படுகோனே, சில ஆண்டுகளிலேயே மேற்படி நடிகைகளை பின்தள்ளி விட்டார். இதனால் தற்போது பாலிவுட்டில் தீபிகாவின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஷாரூக்கானுடன் அவர் நடித்து வரும் சென்னை எக்ஸ்பிரஸ் படம் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறதாம்.



சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவுடன் இணையவுள்ள மேலும் 2 சிங்கங்கள்..
[Sunday, 2013-05-26 11:47:39]

சிங்கம் படத்தை சூர்யாவைக்கொண்டு இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்த டைரக்டர் ஹரி, மீண்டும் அதே சூர்யாவை வைத்து சிங்கம்-2 படத்தை தற்போது இயக்கியுள்ளார். முந்தைய பாகத்தில் நடித்த அனுஷ்காவுடன் இப்படத்தில் ஹன்சிகா, சந்தானம் போன்றவர்களும் இந்த இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ விழா ஜூன் மாதம் 2-ந்தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்த ஆடியோ விழாவில், இந்தி சிங்கம் படத்தில் நாயகனாக நடித்த அஜய்தேவ்கன், அப்படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஆகியோருடன் கன்னட சிங்கம் படத்தில் நடித்த நான் ஈ சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். ஆக, சிங்கம்-2 இசை விழா களை கட்டும் என்று தெரிகிறது.



பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு : பாஜக மீது பழி போடும் நடிகை நக்மா
[Saturday, 2013-05-25 18:25:04]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான நக்மா ம.பியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது. 2004 முதல் 2012ம் ஆண்டு காலகட்டத்தில் மொத்தம் 27,104 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தினசரி சராசரியாக 9 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநிலத்தினை ஆளும் பாஜக அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. மலைவாழ், பழங்குடியின பகுதியில் வசிக்கும் 37,000 பெண்கள் இந்த கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 சதவிகித பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 73 சதவிகித பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாநில அரசு காகித அளவிலேயே பெண்களின் பாதுகாப்பிற்காக திட்டங்களை அறிவிக்கிறது என்று குற்றம் சாட்டினார் நக்மா.



திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் பணம் இன்றி தவிப்பு - வீடுகள் விற்பனை!
[Saturday, 2013-05-25 18:20:14]

பவர்ஸ்டார் என்றாலே பல பிரச்சனைகளுக்கு சொந்த்க்காரர்கள் தான். ஏன் எனில், கோலிவுட் திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் சீனிவாசன் பல நிதி மோசடி பிரச்சனைகளில் சிக்கி சிறைவாசம் சென்றுள்ளார். அதே போல் டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன் கல்யானுக்கும் மாபெரும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் பவர்ஸ்டார் பவன் கல்யாண். ஆந்திராவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலிலும் இருக்கிறார். பவன் கல்யாணுக்கு திடீர் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது வீடுகளை விற்க முடிவு செய்துள்ளார்.



கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்யாபாலனுக்கு தவளைக்கறி விருந்து..
[Saturday, 2013-05-25 18:16:25]

66வது கேன்ஸ் திரைப்படவிழா தற்போது பிரான்ஸி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் கனவுநாயகி வித்யாபாலன் நடுவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பித்துவருகிறார். நேற்று மதியம் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து நடுவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அனைவருக்கு தவளைக்கறி பரிமாறப்பட்டது. வித்யாபாலனுக்கு தவளை பரிமாறப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். தவளைக்கறியோடு சிக்கன் பிரெஸ்ட்,விக்டோரியோ ஒயிட் அண்ட் பைன் ஆப்பிள் கலந்த ரம், ரோஸ்டட் கோகனட் ஐஸ்கிரீம், மற்றும் லாலிபாப் சாக்லேட் ரம் ஆகியவை பரிமாறப்பட்டது. இதில் தவளை தவிற மற்ற அனைத்து வகைகளையும் வித்யாபாலன் ருசித்து சாப்பிட்டார்.



பகலவனில் நடிக்க மறுத்த விஜய் - பட வாய்ப்பு ஜெயம் ரவிக்கு போனது...
[Saturday, 2013-05-25 18:09:42]

சினிமாவில் ஒரு நடிகர் மறுத்த கதையில் இன்னொரு நடிகர் நடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அந்தவகையில் விஜய்க்காக சீமான் எழுதிய கதைதான் பகலவன். இதில் முதலில் நடிப்பதாகச் சொன்ன விஜய், பின்னர் தன்னை வைத்து முருகதாஸ், கெளதம்மேனன் என சில முன்னணி இயக்குனர்கள் படமெடுக்க முன்வந்ததால் சீமான் படத்தில் நடிக்க மறுத்தார். அதனால், பல மாதங்களாக அவருக்காகக் காத்திருந்த சீமான், பின்னர் ஜீவா உட்பட்ட சில நடிகர்களிடம் அந்தக் கதையைச் சொல்லி நடிக்கக் கேட்டார். விஜய் நடிக்க மறுத்த கதை என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பகலவன் கதையைக் கேட்டு ஜெயம் ரவி தான் நடிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். தற்போது சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மற்றும் 'பூலோகம்' படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அப்படங்களை முடித்ததும் சீமான் படத்தில் நடிக்கிறாராம்.



ஒரே நைட்டில் நடக்கிற கதைகள் தமிழிலேயே தாராளமாக உண்டு! - மீரா கதிரவனின் கதை..
[Saturday, 2013-05-25 18:07:54]

ஒரே நாளில் நடக்கிற கதை, ஒரு மணி நேரத்தில் நடக்கிற கதை மாதி‌ரி ஒரே நைட்டில் நடக்கிற கதைகள் தமிழிலேயே தாராளமாக உண்டு. இன்றைய தேதியில் விடியும்முன் என்றொரு படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து தயாராகி வருகிறது. மீரா கதிரவனின் விழித்திரு படமும் ஒரு நைட் கதைதான். அவள் பெயர் தமிழரசியில் எந்த ஆச்ச‌ரியத்தையும் ஏற்படுத்தாதவர் விழித்திரு குறித்து சொல்லும் ஒவ்வொன்றுமே ஆச்ச‌ரியமானவை.



பிரியாணியின் முன்னோட்டம் வெளிவந்துவிட்டது... Top News
[Saturday, 2013-05-25 18:02:14]


சிறுமி கடத்தல் வழக்கில் சிக்கிய மெண்டல் பட நடிகை சனாகான் தலைமறைவு!
[Saturday, 2013-05-25 17:55:45]

சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான், தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக 15 வயதுச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் கடத்த முயன்றார் என்று சனாகான் மீது கடத்தல் வழக்கு பதியப் பட்டது. இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.



யுவனின் கனவு பலித்தது : கமல் படத்திற்கு இசை..
[Saturday, 2013-05-25 17:52:30]

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளரானவர் யுவன்ஷங்கர்ராஜா. அதையடுத்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இருப்பினும் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட யுவன், ரஜினி-கமல் நடித்த ஒரு படத்துக்குகூட இசையமைக்கவில்லை. அதனால், அவருக்கு அது ஒரு மனக்குறையாகவே இருந்து வந்ததாம். இந்த நிலையில், தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். லிங்குசாமி கம்பெனி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன்ஷங்கரை புக் பண்ணிவிட்டதாக அவர் கமலிடம் சொன்னபோது, யுவன் நல்ல இசையமைப்பாளர்தானே. அவருடன் பணியாற்றுவதில் எனக்கும் ரொம்ப சந்தோசம் என்று சொன்னாராம் கமல்.



கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள்: - போலீஸ் விசாரணை.
[Saturday, 2013-05-25 17:49:51]

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள் விவரங்களை போலீசார் சேகரிக்கிறார்கள். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஸ்ரீசாந்துடன் அதிக நெருக்கம் வைத்திருந்தவர் இந்தி நடிகை சுர்வின் சாவ்லா. இருவரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜோடியாக நடனம் ஆடினர். அதன் பிறகு அடிக்கடி சந்தித்து பேசினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. எனவே சுர்வின் சாவ்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பாரதிராஜாவின் புதுமை புரட்சி சின்னத்திரை சீரியலிலும் ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 17:30:30]
சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்கள் இயக்கி வருபவர் பாரதிராஜா. அவர் இயக்கிய சில படங்களுக்குக்காக தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். அதில் சிவாஜிகணேசன்-ராதா நடித்த முதல் மரியாதையும் ஒன்று. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கொடிகட்டிப்பறந்த பொற்காலம் அது. அந்த பாரதிராஜா தற்போது அன்னக்கொடி என்றொரு படத்தை இயக்கியிருந்தபோதும், அதற்கு முன்பு தெற்கத்தி பொண்ணு என்றொரு தொடரை கலைஞர் டி.விக்காக இயக்கி வந்தவர், இப்போது முதல்மரியாதை என்ற பெயரிலேயே ஒரு நெடுந்தொடரை இயக்கப்போகிறாராம். குடும்ப உறவுகள் பற்றிய செண்டிமென்டான தொடர் என்பதால், இதற்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். பாரதிராஜா செய்யப்போகும் இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.


அஞ்சலிக்கு எதிராக தீவிரமாக செயற்படும் அமலா பால்..
[Friday, 2013-05-24 18:42:37]

சித்தியுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, முழுநேர தெலுங்கு நடிகையாகி விட்டார், அஞ்சலி. கோலிவுட்டிலிருந்து, பட விஷயமாக யாராவது பேசினாலும், தெலுங்கில், நான் ரொம்ப பிசி. அப்புறம் பார்க்கலாம் என, போனை, கட் பண்ணி விடுகிறாராம்.தெலுங்கில் ஏற்கனவே, சமந்தா, அமலா பால், கைகள் ஓங்கியிருப்பதால், அவர்களை வீழ்த்தி விட்டு, முன்னணி நடிகையாகி விட வேண்டும் என, முண்டியடித்து வருகிறார். அஞ்சலியின் இந்த அதிரடி முயற்சி காரணமாக, அமலா பால் பேசி வைத்திருந்த, ஒரு படம், அஞ்சலிக்கு வந்து விட்டதாம். அதனால், இதுவரை சத்தமில்லாமல் நடித்து வந்த அமலா, அஞ்சலிக்கு எதிரான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளதோடு, பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, சம்பளம், கிளாமர் போன்ற விஷயங்களில், தாராளம் காட்டவும் முடிவு செய்துள்ளாராம்.



ஐ படத்தில் பாடிபில்டராக நடிக்கும் விக்ரம்
[Friday, 2013-05-24 18:38:05]

உடல் எடையை ஏற்றியும், இறக்கியும் ஷங்கரின் 'ஐ' படத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளில் பாடிபில்டராக விக்ரம் வருகிறார். தமிழ் நாடு பாடிபில்டிங் சாம்பியன் காமராஜ் வில்லனாகவும், முன்னாள் மிஸ்டர் இந்தியா அரசு நடுவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஐ படத்தின் நாயகன் வேடத்துக்காக விக்ரம் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உழைத்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் இருக்கிறார். படத்தில் 'பாடிபில்டிங்' சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஷங்கர் வைத்துள்ளார். முக்கியமான பாடிபில்டர்ஸ் படத்தில் வருகிறார்கள் என்கிறது பட வட்டாரம்.



'தீயா வேலை செய்யணும் குமாரு'விற்கு யு சான்றிதழ்..
[Friday, 2013-05-24 18:01:51]

கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தில் சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பின்பு சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுவிட்டன. தீயா வேலை செய்யணும் குமாரு யூன் 14ம் திகதி வெளியாகிறது. இதனிடையே படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. முழுப்படத்தையும் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தை யுடிவி நிறுவனம் விநியோகம் செய்யவிருக்கிறது.



இந்தியிலும் பாடல் பாடி கலக்கிய ரஜினி
[Friday, 2013-05-24 17:49:51]

கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்துக்காக ரஹ்மான் இசையில் தமிழில் ரஜினிகாந்த் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்தி பதிப்புக்காக தன் சொந்த குரலில் முதன் முறையாக ரஜினி பாடியுள்ளார். இந்த பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான். பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.



நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தமன்னா
[Friday, 2013-05-24 17:41:13]

கடந்தாண்டில், அனைவரையும் கவர்ந்த பெண்கள் பட்டியலை, பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் இடத்தை, தமன்னா பிடித்துள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து, மார்க்கெட் சரிவினால் சோர்ந்து போயிருந்த தமன்னா, மீண்டும் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகைகளும், இந்த பட்டியலில் பின் தங்கியிருப்பது தான், அந்த காரணம். அனுஷ்காவிற்கு மூன்றாவது இடமும், இலியானா, டாப்சிக்கு 5 மற்றும் 6 வது இடமும், அமலா பாலுக்கு ஏழாவது இடமும், ஹன்சிகாவிற்கு எட்டாவது இடமும், தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தாவுக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளதாம். இதுபோதாதா, தமன்னா சந்தோஷப்படுவதற்கு.



கெட்டப்பை மாற்றி புதிய பாணிககு மாறிய கெளதம்
[Friday, 2013-05-24 17:27:27]

மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கார்த்திக்கின் மகன் கெளதம். அப்படத்தில் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அவருக்கு நல்ல ட்ரெய்னிங் கொடுத்து நடிக்க வைத்திருந்தனர். இருப்பினும் படம் தோற்றுப்போனதால் கெளதமின் நடிப்பு பேசப்படவில்லை. அதோடு, மணிரத்னத்தின் அறிமுகம் என்பதற்காக அவரை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க காத்து நின்ற சில இயக்குனர்களும் அவரது முதல் தோல்வி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடாது என்று ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று மகனை தட்டிக்கொடுத்து வந்த கார்த்திக், அவருக்கான படவேட்டைகளிலும் தீவிரமடைந்தார். அவரது முயற்சியின் பலனாக இப்போது 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் கை ராஜா வை படத்திற்கு கமிட்டான கெளதம், இப்போது தெலுங்கில் வெளியான அலமொடலய்ண்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.


Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Ramans2011
NIRO-DANCE-100213
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com