Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
எதையுமே செய்யாதவர்கள் இன்று வெற்றிலை வைக்கிறார்கள் இதை வெற்று இலையாக்குவோம்: வேட்பாளர் கி.துரைராஜசிங்கம் Top News
[Friday, 2012-08-17 12:58:05]
News Service

வடக்கு கிழக்கிலே சரியான தலைமைத்துவம் இருந்ததன்; காரணமாக நாம் தமிழர்களாகவும் எமது மொழியைப் பின்பற்றுபவர்களாக தமிழ் இனத்தைக் காப்பாற்றியவர்களாக இருக்கின்றோம் ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் வாழ்தமைக்கான அடையாளங்களே இல்லாமல் போயுள்ளதாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

  

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

தலைமை வேட்பாளர் கி.துரைராஜசிங்கம் தொடர்ந்து உரையாற்றுகையில்:

"அபிவிருத்தி என்பது நூற்றுக்கு நூறு வீதம் மனித விழுமியங்களில் செய்யப்படுகின்ற அபிவிருத்தியாக இருக்க வேண்டும். பத்து வீதம் இருக்கின்ற பௌதீக வள அபிவிருத்தி அபிவிருத்தியாகி விட முடியாது. மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும் கருத்துச் சுதந்திரம் பேணப்பட வேண்டும் ஒன்று கூடுகின்ற சுதந்திரம் இருக்க வேண்டும் மனித விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் மத சுதந்திரம் இருக்கவேண்டும் மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுதந்திரத்தை பெற்றுத் தர வேண்டும் இதுதான் முழுமையான அபிவிருத்தியாகும் இதைவிட்டு இங்கு செய்யப்படும் பௌதீக அபிவிருத்தி மட்டும் ஒரு நாட்டின் அபிவிருத்தியாக அமையாது.

அரசாங்கம் உங்களுக்கு செய்திருப்பது அபிவிருத்தியில் 10 வீதம் மட்டும்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அவர்களின் அபிவிருத்தியோடு 90 வீதத்தைக் கூட்டி 100 வீத அபிவிருத்தியை செய்யவுள்ளோம். நாங்கள் பெற்றுத்தரப்போகும் அபிவிருத்தி தான் உரிமையோடு ஒரு இனம் வாழப்போகின்ற அபிவிருத்தி.

அன்பர்களே! பாராளுமன்றத்திலே எம்முடைய பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானது இதனால் பெறுகின்ற அபிவிருத்தி மக்களுக்கு போதாது. அதனால் தான் எம்முடைய பிரதேசத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் 1956ஆம் ஆண்டு தொடக்கம் பிரதேச அபிவிருத்தி நோக்கிய சுயாட்சி என்று கூறப்படும் "சமஷ்டி முறையை" நாம் கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம்.

அதன் பயனாக இந்தியாவின் தலையீடு காரணமாக பெறப்பட்ட தீர்வுதான் இந்த மாகாண சபை. மாகாண சபையில் நாம் கேட்பது அதிகாரமற்றிருக்கின்ற வடக்கு கிழக்கு மக்களுக்கு அவர்கள் தங்களுடைய பிரதேசத்தை தாங்களே ஆளக்கூடிய விதத்திலேயான அமைப்பாக கேட்டதை வடக்கு கிழக்கு மாகாணசபை தவிர்ந்த எல்லா மாகாணங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். இது "பசியோடு இருப்பவர்களுக்கு சோற்றைக் கொடுத்து விட்டு சோற்றிலே மண்ணைப் போடுவது" போல் உள்ளது.

எனைய மாகாணங்களில் இருப்பவர்கள் மத்தியில் உள்ள எல்லா அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பதால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனையோருக்கு அதிகாரம் தேவையில்லை. பசிக்காதவனுக்கு சோற்றை கொடுப்பதுபோல் பசிக்கின்ற எங்களுக்கும் அதே சோற்றை தந்துவிட்டு அதிலே மண்ணைப் போட்டதுபோல் அதிகாரமில்லாத ஒரு மாகாண சபையை எமக்குத் தந்துள்ளார்கள். அனாலும் இந்த மாகாண சபையில் அதிகமான அதிகாரங்களை பெற்றெடுத்து எமது மக்களுக்குரிய சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம்.

தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தியானது "திருவிழாவில் பொம்மைகளுக்காக பெற்றோரைத் தொலைத்த குழந்தையின் கதை" போன்றதாகும். நம்மையும் ஜனாதிபதி அவர்கள் பொம்மைகளுக்கு ஆசைப்படும் பொம்மைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நமக்குத் தேவை பொம்மைகள் போன்ற அபிவிருத்தி அல்ல பெற்றோர்களே. உமக்குத் தேவை நம்முடைய பிரதேசமும் நம்முடைய உரிமைகளும் இந்த அபிவிருத்திக்கு மயங்கியவர்கள் நாளை தந்தையையும் தாயையும் இழந்து நிற்கும் நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இலங்கையில் பல பாகங்களிலும் தமிழர்கள் வாழ்வதற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விட்டது. கதிர்காமத்திலே "ஓம் முருகா" என்ற எழுத்து கூட இல்லாமல் போய்விட்டது. இங்கு முருகன் மட்டும் இருக்கின்றார் அந்தப் பிரதேசத்திலே வாழ்ந்த தமிழ் மக்கள் அங்கில்லை. சிலாபத்திலே முன்னேஸ்வரம் ஆலயம் உள்ளது அங்கிருந்த மக்கள் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள். நீர்கொழும்பிலே சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பெனார்டோபுள்ளே அமைச்சர் அவரது தாய்க்கு சிங்களம் தெரியாது அவருக்கு தமிழ் அரைகுறையாக தெரியும் அவரது பிள்ளைக்கு தமிழே தெரியாது. இவ்வாறு நம்முடைய இனம் அழிந்துகொண்டிருக்கிற வரலாறு கண்முன்னே உண்டு.

ஆனால் வடக்கு கிழக்கிலே சரியான தலைமைத்துவம் இருந்ததன்; காரணமாக நாம் தமிழர்களாக எமது மொழியைப் பின்பற்றபவர்களாக தமிழ் இனத்தைக் காப்பாற்றியவர்களாக இருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கிறது என்று கேட்கும் அன்பர்களுக்கு நான்; சொல்ல கூடிய ஒரு விடயம் இந்த நாட்டிலே மற்ற பகுதிகளில் எல்லாம் தமிழினம் தனது அடையாளங்களையெல்லாம் இழந்து நிற்கின்ற நிலையில் வடகிழக்கில்; தமிழினம் தங்கள் அடையாளத்தை வைத்துக்கொண்டிருக்குதென்றால் அது தமிழினத்துக்கு வழங்கப்பட்ட தந்தை செல்வாவை முன் நிறுத்திய தலைமைத்துவமும் அவர்கள் கொண்டுவந்த வழியும் தான் காரணம்.

ஆகவே நாங்கள் எமது பிரதேசத்தை ஆழக்கூடிய நிலையில் செல்லவேண்டுமென்றால் இந்த சலசலப்புகளை துக்கிப்போட வேண்டும். இவர்கள் பெற்றிலையைக் கொண்டு வருவார்கள் இந்த வெற்றிலை சிங்கள மக்களுக்கு "வெற்றி கொடுக்கின்ற இலை". நம்முடைய பகுதிகளில் இருக்கின்ற நண்பர்களுக்கு "வெற்றி இல்லை" என்று சொல்லுகின்ற இலை. தேர்தல் முடிந்த பின்பு இவர்கள் பார்க்கின்ற போது "வெற்று இலையாக" இது தெரியும்.

எமது மக்களின் அபிவிருத்தி என்பது எங்களுடைய கைகளுக்கு வருகின்ற பொழுது எந்த வித ஊழலும் அற்றதாக உண்மையான அபிவிருத்தியை நாங்கள் செய்வோம். எமது பிரதேசத்திலே செய்பட்டிருக்கின்ற அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலே 25 சதவீதம் நிதி கூட பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் நிதியும் ஒவ்வொரு வங்கிக் கணக்குகளில் போடப்பட்டிருக்கிறது.

இணைந்த வட கிழக்கிலே சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட இனமாக எங்களுடைய இனத்தை மாற்றுகின்ற வழியிலே எங்களுடைய தலைவரின் வழிகாட்டலிலே நாங்கள் சென்று விடுதலையைப் பெற்றெடுக்கும் ஒரு பலமாக இந்த மாகாண சபையை நாம் பயன்படுத்தப்போகிறோம். நீங்கள் எமது வீட்டுச் சின்னத்திற்க வாக்களியுங்கள். இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்களும் 13 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. வெறும் வம்புக்காக சுயேட்சைக் குழுக்களை களமிறக்கியுள்ளனர்.

எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது இந்த குறிப்பிட்ட காலத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை ஏதாவது அரசியல் கொள்கையைப் பின்பற்றாதவர்கள் இந்த நாட்டிலே இருப்பாரானால் அவர் "ஒன்றும் தெரியாத முட்டாளாகத்தான்" இருக்க வேண்டும். அரசியல் கட்சி இல்லாதவர்கள் இந்த சுயேட்சைக் குழுக்களிலே போட்டியிடுவது. அப்படியானால் இத்தனை காலம் அரசியலில் அனுபவமில்லாதவர்கள் தான் இந்த சுயேட்சைக் குழுக்களுக்கு வந்திருக்கிறார்கள். காத்தான்குடியின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைத் தவிர மற்றைய சுயேட்சைக் குழுக்கள் எல்லாம் வீணாக ஜனநாயகத்தை அவமதிப்பதற்காக வந்த சுயேட்சைக் குழுக்களே. அவர்கள் எங்களுடைய வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக வந்திருக்கிறார்கள்.

எமது மக்கள் இம்முறை தேர்தலை சரியாக சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் மாகாண ஆட்சியை அமைக்கின்ற பலம் எமக்கு கிடைக்கும். எங்களது தம்பிமார் வாக்கு கேட்டு திரிகிறார்கள் அவர்கள் எங்கள் சொந்த உறவுகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் என்று பூசையும் விளக்கு கொளுத்தி வழிபட்ட புனித ஸ்தலங்களைக் கூட காப்பாற்ற முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

நீங்கள் வேறு ஒரு காரியமும் செய்ய வேண்டாம் "எங்கள் தோழர்களின் புதை குழியில் மண்போட்டு செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் காப்பது உறுதி" என்று சொல்லி அவர்களுடன் உண்டு உறவாடி அவர்களைப் புதைத்துச் சென்றவர்கள் அந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் மேலே இராணுவ வாகனங்கள் ஏறி மிதித்த வேளை எங்களுடைய இதயங்களெல்லாம் நொருங்கிய போது எங்களுடைய கண்களெல்லாம் புணமாக்கிக்கொண்டு எங்கிருந்தார்கள். "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" அவர்கள் அங்கிருந்து சௌக்கியமா" என்றார்கள் பெரிதாக ஒன்றும் செய்திருக்கத் தேவையில்லை இதையாவது தடுத்திருக்கலாம். எதையுமே செய்யாதவர்கள் இன்று வெற்றிலை வைக்கிறார்கள் இதை வெற்று இலையாக்குவோம்.

எனவே அன்பர்களே எமது தமிழர்களின் அரசியல் சக்தியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீடு சின்னத்துக்கு வாக்களித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 ஆசனங்களை பெற்று பெரும்பாண்மை பலத்தோடு ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும்" என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சொந்தங்களுக்காக கண்ணீர் சிந்தும் உரிமையும் இல்லையா? கஜேந்திரன் கைதுக்கு கூட்டமைப்பு கண்டனம்!
[Saturday, 2013-05-18 19:55:44]

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரரிடம் கூறுகையில்...



தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் கைது!
[Saturday, 2013-05-18 19:43:06]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.



பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும்: - விக்கிரமபாகு கருணாரட்ன
[Saturday, 2013-05-18 13:37:57]

பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும். இல்லையேல் ,இலங்கை ஆங்கிலேயரின் நாடு என்றும் கூட இன்னும் சில நாட்களில் சொல்லுவார்கள் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். "இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாது அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுகின்றனர்.



வவுனியாவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!Top News
[Saturday, 2013-05-18 13:34:14]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.



புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு செய்கின்றது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-18 13:31:16]

அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர் கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அவுஸ்திரேலியாவின் மத்திய காவல்துறைப் பிரிவினர் புகலிடக் கோரிக்கையாளர் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்களின் நடவடிக்கைகள் குறித்து ஜகர்த்தாவில் கடமையாற்றி வந்த அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 40 வீதமான காவல்துறையினர் அவுஸ்திரேலியாவிற்கு மீள அழைக்கப்படுவர்.



வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் இதயம் எனக்கு நன்கு தெரியும் - ஜனாதிபதி!
[Saturday, 2013-05-18 13:22:26]

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில் தமிழ் கனடிய சமூகத்திற்கு ஆதரவாக பல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் - பிரட் பட் எம்.பி.
[Saturday, 2013-05-18 11:24:16]

கனடாவில் வாழும் தமிழ் கனடிய சமூகம் இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவின் நான்காவது ஆண்டு நினைவை அனுஸ்டிக்கும் போது நாமும் அச்சமூகத்துடன் இணைந்து கொள்கிறோம். பல தசாப்த காலமாக போரில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை இவ்வாரத்தில் நினைவுகூர்வதுடன் இலங்கையில் வாழும் மக்களுக்கும் ஒரு சுபீட்சமான எதிர்காலம் அமையுமென எதிர்பார்க்கும் காலமாக அமைகிறது.



லண்டனில் இன்றைய பேரணிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் பூர்த்தி:
[Saturday, 2013-05-18 07:59:08]

லண்டனில் இன்று சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் பி.ப 1 மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) ஆரம்பிக்கும் பேரணி பி.ப 3 மணியளவில் Waterloo Place , (Closest station: Piccadilly Circus) நிறைவுறும். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றவிருப்பதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.



மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2013 - தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை
[Saturday, 2013-05-18 07:49:51]

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.



தயா மாஸ்டரின் கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
[Saturday, 2013-05-18 07:48:10]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணைத்து பல்வேறு சேறு பூசல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பில் முன்னாள் போராளிகள் இருவர் கைது!
[Saturday, 2013-05-18 07:43:41]

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து குறித்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் சில காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர். புறக்கோட்டை பஸ் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது - அரசு அறிவிப்பு!
[Saturday, 2013-05-18 07:41:56]

வட பகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ள முடியாது. வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளின் சில தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து இராணுவ முகாம்கள் பற்றி மக்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com