Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கிழக்கு மாகாண சபையை நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் ஒரு நாளாவது தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துள்ளார்களா என்பதைக் கூறமுடியுமா? பொன்.செல்வராசா
[Friday, 2012-08-17 12:03:14]
News Service

கிழக்கு மாகாண சபையை நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் ஒரு நாளாவது தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துள்ளார்களா? அபிவிருத்தி என்று கூறுவதைத் தவிர என்ன செய்துள்ளார்கள் என்பதைக் கூறமுடியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சவால் விடுத்துள்ளார்.

  

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து வாகரை பிரதேசத்தில் வேட்பாளர் ப.சிவநேசன் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்;

"2009ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நாட்டிலே இருக்கின்ற வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தலைவர்கள் யார் என்பதை நிர்ணயிக்கின்ற ஒரு தேர்தலாக 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் இருந்தது. அந்த தேர்தலிலே வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் எமது அரசியல் தலைமைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்று 14 பேரை பாராளுமன்றம் அனுப்பியதன் மூலம் நிருபித்துக் காட்டினார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே தெரிவு செய்யப்பட்ட அத்தனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்து தமிழ் தேசியத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிக்காட்டினார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் தேசிய கட்சிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும் கூட கிழக்கு மாகாணத் தமிழர்கள் முற்றிலுமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ததை உண்மையிலே எம்முடைய கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கின்றனர் என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம்.

அந்த அளவிற்கு தேசியத்திலே பற்றுக் கொண்டவர்களாக எமது மட்டக்களப்பு மக்களும் திருகோணமலை தமிழ் மக்களும் அம்பாறை தமிழ் மக்களும் இணைந்தார்கள் என்று சொன்னால் இந்த செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் அதே போன்று எங்கள் கிழக்கு மாகாணத்திலே நீங்கள் தெரிவு செய்ய இருக்கின்ற தமிழர்களின் பிரதிநிதிகள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த பேரினவாத கட்சிகளில் இருந்து தெரிவு செய்ய முடியாமைக்கு நீங்கள் ஊண்று கோலாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு கோரிக்கையாக விடுகின்றோம்.

இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற இந்த வடக்கு கிழக்கு மாகாணம் கடந்த போராட்ட காலங்களில் சோகை இழந்திருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சாராக வந்த எமது பகுதியைச் சேர்நதவர் நான்காண்டு காலமாக என்ன செய்தார்கள்? வெறும் அபிவிருத்தியை மட்டும் செய்தார்கள் என்று கூறுவதைத் தவிர தமிழ் மக்களின் உரிமைக்காக எங்காவது நான்காண்டு காலத்திலே ஒரு நாளாவது குரல் கொடுத்தார்களா? என்பதை அவர்களிடம் கேட்க விரும்புகின்றோம். நிச்சயமாக அவர்களால் முடியாது. கிழக்கு மாகாண சபையை கலைக்க மாட்டோம் என்று சொல்லி கையொப்பம் இட்டவர்கள் ஜனாதிபதி அவர்கள் கேட்டதும் அந்த வார்த்தைக்கு பதில் சொல்ல முடியாமல் உடனடியாக கலையுங்கள் என்று எழுதிக் கொடுத்த பெருமை எமது பிள்ளையானையே சாரும்.

கடவுளுக்கு மட்டும் பயப்படாத அவர்கள் ஜனாதிபதி கடவுள் கூட கேட்டுச் செய்யா விட்டாலும் ஜனாதிபதி இவர்களிடம் கேட்டால் எதுவித மறுப்புமின்றி கையெழுத்து விடுகின்ற பெருமை அந்த கட்சிகளில் இருக்கின்ற இன்றை வேட்பாளர்களுக்கு மட்டும்தான் முடியும்.

எமது இனங்கள் துன்பப்பட்ட பொழுது எங்களை தாங்க முடியாமல் மட்டக்களப்பு படுவான்கரையில் இருந்த மக்கள் எழுவான்கரைக்கு அகதிகளாக வந்த பொழுது செல் அடிகளை நிறுத்து என்று சொல்லி இந்த பிள்ளையானால் அல்லது பிரதியமைச்சர் முரளிதரனால் ஏன் சொல்லி நிறுத்த முடியாது. மக்கள் சாகும் வரை இருந்து விட்டு மக்களின் உடமைகள் மக்களின் பொருளாதாரம் அழிக்க மட்டும் இருந்து விட்டு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு மட்டும் கைவைத்த இந்த அரசியல் வாதிகளை நாங்கள் ஆதரிக்க முடியுமா? என்று ஒரு தடவை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

என்ன சொன்னது அரசாங்கம் இப்பொழுது எமது நாட்டின் மேல் இருக்கின்ற அபகீர்த்தியை போக்குவதற்காக சர்வதேசத்தின் குற்ற உணர்வை நீக்குவதற்காக இந்த மாகாண சபைத் தேர்தலை வைத்து மக்கள் எந்த பக்கம் இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக இந்த அரசாங்கம் துணிந்திருக்கின்றது.

தமிழ் மகன் குறிப்பாக முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள் இன்னும் ஒருவருடம் இருந்திருக்கலாம் என்று புரிந்து கொள்ளாமல் இந்த வருடத்துடன் கிழக்கு மாகாண சபையை கலைத்ததன் நோக்கம் என்ன? தமிழ் மகன் தொடர்ந்து முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பதை ஜனாதிபதி அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். அதன் காரணத்தால் தான் ஆயுட்காலம் முடிவதற்கிடையில் இந்த சபையை ஜனாதிபதி அவர்கள் கலைத்திருக்கின்றார்.

நாங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினோம் இன்னும் ஒருவருட காலம் பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியது. அதற்காக தேர்தல் நடாத்தக் கூடாது சபையைக் கலைத்தது பிழை என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றோம். ஆனால் நாங்கள் அந்த நீதிமன்றத்திலே தோல்வி அடைந்தோம்.

நாங்கள் என்ன செய்ய முடியும் எங்கள் மேல் குறை சொல்லி பிள்ளையானுக்கு என்ன பிரையோசனம் வரப்போகின்றது. இந்த தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலே சரி கிழக்கு மாகாணத்திலே போட்டியிடக் கூடாது என்பதற்காக தமிழ் பிரமுகர்களை நாடி அவர்களுடன் கதைத்து இந்த தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பை குதிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று மன்டியிட்டிருக்கின்றார் அதுகூட நிறைவேறவில்லை.

இந்த நிலையில் தான் நாங்கள் போட்டியிட்டு இருகின்றோம். எங்களுக்கு உரிமை இருக்கின்றது. ஏனென்றால் நாங்கள் தான் கறை படியாதவர்கள். தமிழ் மக்கள் சோதனைக் காலங்களிலே அவர்களை தவிக்கவிடாது. காப்பாற்றுகின்ற அன்புக் கரங்கள் இந்தக் கரங்கள் அவர்கள் அப்படியல்ல. செல் அடி அடிக்கின்ற பொழுது பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தவர்கள்.

இவர்களுக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை அரசியல் விளக்கம் அரசியல் சித்தாந்தம் கட்சியின் கொள்கை இந்த விடயங்களை இவர்களால் சொல்ல முடியாது. இவர்களுக்கு உள்ள ஒரே தாரக மந்திரம் அபிவிருத்தி மட்டும்தான். கல்குடா தொகுதி மக்கள் அபிவிருத்தியைக் காணவில்லையா? பல அமைச்சர்களை உருவாக்கியவர்கள் கல்குடா தொகுதி மக்கள். நல்லையா மாஸ்டர் தேவநாயகம் போன்ற மதிப்புமிக்க அமைச்சர்களை உருவாக்கியவர்கள் கல்குடா தொகுதி மக்கள்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் இந்த நாட்டிலே செய்யாத அபிவிருத்தியா? நல்லையா மாஸ்டர் இந்த கல்குடா தொகுதியில் செய்யாத அபிவிருத்தியா? வந்தறுமூலை மத்திய கல்லூரியை ஸ்தாபித்தது யார்? வாழைச்சேனையிலே காகித ஆலையை நிறுவியது யார்? இவ்வாறு பல அபிவிருத்தியை கண்டும் அஞ்சாத கிழக்கு மாகாண மக்கள் இவர்கள் செய்த அபிவிருத்தியைக் கண்டா ஏமாரப்போகிறார்கள்?

தமிழ் மக்கள் ஜனநாயக வழி மற்றும் ஆயுதவழிப் போராட்டங்களை 60 ஆண்டுகளுக்கு மேலாக அங்கிகரித்துள்ளதன் மூலம் அபிவிருத்திக்கு எப்பவும் அடிபணியமாட்டார்கள் என்பதை கடந்தகால வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாறன நிலையில் வெளிநாட்டு அரசாங்கள் கொங்கிறீட் வீதிகளையும் ஹாப்பட் வீதிகளையும் பாலங்களையும் அமைத்துக் கொடுக்க அதற்குப் பின்னால் நின்று நாங்கள் தான் அதையெல்லாம் செய்தோம் என சொல்லிக் கொண்டு திரிவதையிட்டு நாங்கள் மன வேதனையடைகிறோம்.

எதிர்வரும் 3 ஆந் திகதி ஜனாதிபதி மண்முனைப் பாலத்திற்கு கல் வைக்க வருகிறார். இந்த பாலம் அமைக்க நிதி வந்த கதை தெரியாத அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அரசியல் வாதிகள் சிலர் தாங்கள் தான் கட்டப்போவதாக கூறிக்கொண்டு திரிகிறார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தியில் தெரிவு செய்யப்பட்ட பாலங்களில் இதுவும் ஒன்று.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் பிரதியமைச்சர் கருணாவும் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பே மண்முனைப் பாலம் அமைக்க வேண்டும் என்பதை அன்று ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்தது. இதை தாங்கள் தான் செய்கின்றோம் என்று சொன்னால் இதைப்போன்ற முட்டாள்தனம் எதுவுமாக இருக்க முடியாது.

எந்த தமிழ் அரசியல் வாதியாவது அரசாங்கத்துடன் இருந்து கொண்டு தமிழ் உரிமைக்காக போராடிய வரலாறு கிடையாது. இவர்களுக்கு சரித்திரத்தில் இடமே இல்லை. அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் இந்த வெட்கம் கெட்ட இந்த அரசியல் கூட்டத்தை நாங்கள் ஆதரிக்க முடியுமா?

நன்றாக சிந்தியுங்கள் அப்போது ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்ற தெளிவான விளக்கம் உங்களுக்கு கிடைக்கும்." என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-


Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com