Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்கா: சீக்கியர்களை சுட்டுக்கொன்றவர் முன்னாள் இராணுவ அதிகாரி!
[Tuesday, 2012-08-07 08:25:50]
News Service

அமெரிக்காவில் குருத்வாராவில் புகுந்து 6 சீக்கியர்களை சுட்டுக் கொன்றவன், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி டிஸ்மிஸ் ஆனவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த முன்னாள் ராணுவ வீரரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதால், கொலைக்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

  

விஸ்கான்சின் நகரத்தையொட்டி ஓக் கிரீக் பகுதியில் 17,000 சதுர அடியில் பிரமாண்ட குருத்வாரா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஏராளமான சீக்கியர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு திடீரென குருத்வாராவுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி, இரண்டு கைகளிலும் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 6 சீக்கியர்கள் பலியாயினர். அப்பகுதியில் சுற்றிய பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து குருத்வாராவுக்குள் புகுந்து மர்ம ஆசாமியை சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்க போலீஸ் படையான எப்பிஐ, கொலையாளி குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், அவன் முன்னாள் ராணுவ வீரர் வாடே மைக்கேல் பேஜ்(40) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கொலையாளி தீவிரவாதி அல்ல. அவர் முன்னாள் ராணுவ வீரர் வாடே மைக்கேல். அவரது கைகளில் நிறைய டாட்டூ வரையப்பட்டிருந்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 9/11 சம்பவத்தை குறிப்பிடும் டாட்டூவும் அதில் ஒன்று. அவருக்கு சீக்கியர்கள் மீது ஏதோ வெறுப்பு இருந்துள்ளது. எனினும், இந்த கொடூர கொலைகளுக்கான நோக்கம் என்னவென்று இன்னும் தெரியவில்லை' என்றனர்.

இதற்கிடையே, அமெரிக்காவில் நடந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

கொலையாளி வாடே மைக்கேல், கடந்த 1992 முதல் 1998ம் ஆண்டு வரை அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். அவர் ராணுவத்தில் திறமைகளுக்காக 5 மெடல்களும், நன்னடத்தைக்காக 2 மெடல்களும், தேசிய பாதுகாப்பு பணிக்கான மெடல் மற்றும் மனிதநேய சேவைக்கான மெடலும் பெற்றிருக்கிறார். எனினும், கடைசியாக அவர் ராணுவத்தில் முறைகேடாக நடந்ததாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் ஏதோ காரணத்தால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

நான்கு பேரைக் கொலை செய்த தமிழர்கள் நால்வருக்கு மலேசியாவில் மரணதண்டனை!
[Friday, 2013-05-24 08:23:36]

மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில் அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது.



ஆப்கானில் பணியாற்றியதற்காக லண்டனில் கழுத்து அறுக்கப்பட்ட இராணுவ வீரர் - பரபரப்புத் தகவல்கள்!
[Friday, 2013-05-24 08:18:57]

ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார்.



எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ள 80 வயது ஜப்பானிய தாத்தா!
[Thursday, 2013-05-23 19:05:45]

எவ‌ரெஸ்ட் சிகரத்தில் ஏறி 80வயது ஜப்பான் தாத்தா சாதனை படைத்தார். ஜப்பானை சேர்ந்தவர் யூசீரோ மியூரா இவருக்கு வயது 80. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய உலகின் அதிக வயதான தாத்தா என சாதனையைப் படைத்துள்ளார் இவர்.முன்னதாக 2008ம் ஆண்டில் 76வயதான நேபாளி தாத்தா ஒருவர் இந்தச் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை ஜப்பானிய தாத்தா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் வாழ்ந்த டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
[Thursday, 2013-05-23 18:51:05]

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் வேகமாக ஓடத் தக்க இந்த டைனோசர் ஒரு பாய்ச்சாலில் 1.6 மீட்டர் தூரம் தாண்டக் கூடியது. சராசரியாக ஒரு பெரிய வான் கோழியின் அளவை ஒத்ததாக 16 கிலோ எடை வரை இது இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை தாவர உண்ணிகளாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



பாவம் இஸ்ரேல் இரண்டாவது அதிபர்! - அவரது சம்பளம் ட்ரைவரை விட 40 சதவீதம் குறைவாம்!
[Thursday, 2013-05-23 18:26:19]

இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபராக இருந்த இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார். கார் டிரைவரைவிட இரண்டாவது அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. தனது கார் டிரைவரைவிட அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டின் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 1962-ம் ஆண்டில் இஸ்ரேல் பார்லிமெண்டின் நிதிக்குழு இதுகுறித்து சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் துணை அதிபர் சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அதிபரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.



உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் - முதலிடத்தில் ஜேர்மனி அதிபர்,9வது இடத்தில் சோனியா!
[Thursday, 2013-05-23 18:13:55]

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சோனியா காந்தி 9வது இடத்தையும், இந்திரா நூயி 10வது இடத்தையும் பெற்றுள்ளார். ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மானைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.



பொஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் விசாரணையில் சுட்டுக்கொலை!
[Thursday, 2013-05-23 18:03:26]

அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் கடந்த மாதம் 15-ந் தேதி நடந்த மரத்தான் ஓட்டப்பந்தயத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய டேமர்லன் என்பவனை அமெரிக்க போலீசார் சுட்டு கொன்றனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய இப்ராஹிம் தோசேவ் (27) என்பவரை எவ்பிஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கும் அவனுக்கும் வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவனை சுட்டு கொன்றனர். அவனுடைய சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஓர் இன சேர்க்கை (செக்ஸ்) உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடைவிதிப்பு!
[Thursday, 2013-05-23 10:19:36]

பிற ஆண்களிடம் ஓர் இன சேர்க்க (செக்ஸ்) உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. Dana Devine, vice-president of medical, scientific and research affairs at Canadian Blood Services அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் வான்கூவர் நகரத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் பிற ஆண்களிடம் செக்ஸ் வைத்த ஆண்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதை தடை செய்வதாக அறிவித்தார்.



"ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம்!
[Thursday, 2013-05-23 08:21:28]

பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜே.கே. ரவ்லிங் எழுதிய, "ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் அதில் இடம் பெற்ற படங்கள் ஆகியவை, லண்டனில்,ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம் போயின. லண்டனில், புகழ்பெற்ற ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில், இவற்றை வாங்குவதற்காக, இரண்டு வர்த்தகர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியாக ஒன்றரை இலட்சம் பவுண்ட் வரை சென்றது.



குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமான மார்க்கங்களில் இணைக்கும் உடன்பாட்டில் சீனா - பாகிஸ்தான் கையெழுத்து!
[Thursday, 2013-05-23 08:14:33]

பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மேற்கு சீன நகரங்கள் வெகு அருகாமையில் அமைந்துள்ளதால் குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமானம் மார்க்கமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான்-சீனா அதிகாரிகள் நேற்று கையொப்பமிட்டனர்.



ஸ்வீடன் தலைநகரில் வரலாறு காணாத வன்முறைகள் - 30 கார்கள் தீக்கிரை!
[Thursday, 2013-05-23 08:09:17]

ஸ்வீடன் நாட்டில், என்றும் காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடந்தேறியுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும், மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு, ஜாகோப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.



புக்கர் பரிசை தட்டிச் சென்றார் அமெரிக்க எழுத்தாளர் - கன்னட எழுத்தாளர் ஏமாற்றம்!
[Thursday, 2013-05-23 07:50:27]

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸுக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச்சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸுக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. "தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி' மற்றும் "வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது. தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.



லண்டனில் பயங்கரவாத தாக்குதல் - படைச்சிப்பாயை வெட்டிக் கொன்றவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 07:17:17]

லண்டனில் நேற்று நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவம் பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் இந்த அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக பிரிட்டிஷ் காவல்துறை கருதுகிறது. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



ஒரு கோடி சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க செனெட் ஒப்புதல்!
[Wednesday, 2013-05-22 19:09:35]

2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



சீன வெடிபொருள் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து - 23 பேர் பலி!
[Wednesday, 2013-05-22 19:05:36]

சீனாவின் ஷண்டாங் பகுதியில் உள்ள வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். அதில் பலியானவர்களில் 10 பேரை அவர்களது டி.என்.ஏ.வை கொண்டு அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரை மட்டமாகி உள்ளது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காந்தியின் இரத்தம் கடைச்சரக்கா? - கொதிக்கிறார் கொள்ளுப்பேரன்!
[Wednesday, 2013-05-22 18:49:57]

மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி உள்ளிட்ட பொருட்கள் கடைசரக்காக ஏலம் விடுவதை தடுக்க முடியவில்லையே என என் ரத்தம் கொதிக்கிறது என காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி வேதனையோடு கூறியுள்ளார். நேற்று, காந்தியின் ரத்தம், செருப்பு போன்ற உடமைகள் லண்டனில் சுமார் 3 இலட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. இது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி. மேலும் அவர் கூறியதாவது. தேசப்பிதா காந்தியின் ரத்தம் வேற்று நாட்டில் கடை சரக்கைப் போல் ஏலம் விடப்பட்டதை அறிந்து எனது ரத்தம் கொதிக்கிறது.



சீனப்பிரதமர் வருகையால் பாகிஸ்தானில் செயலிழந்தன செல்போன்கள்!
[Wednesday, 2013-05-22 18:43:30]

சீனப் பிரதமர் இன்று பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அருகில் உள்ள ராணுவத்தளமான ராவல்பிண்டியிலும் அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று மதியம் அந்நாட்டு நேரப்படி 1 மணி வரை அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிக்கை விடுத்தது. போராளிகள் செல்போன்கள் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சொக்கலேட்டில் இரும்பு ஆணி - நட்டஈடு வழங்க காட்பரி நிறுவனம் இணக்கம்!
[Wednesday, 2013-05-22 18:39:09]

இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரி நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் அனைத்தும் உலக பிரசித்தி பெற்றவை. பாலிலேயே செய்யப்படும் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சுவையும், தரமும் மிகுந்தவை. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு காட்பரிஸ் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அந்த குழந்தை சாப்பிட ஆரம்பித்தபோது, அதில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனேயே நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்தார்.



கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சிரியாவுக்கு இஸ்ரேலிய தளபதி எச்சரிக்கை!
[Wednesday, 2013-05-22 08:06:28]

இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஜீப் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அந்த ஜீப்பின் மீது குண்டுகளை வீசி சிரியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். எங்களது எல்லைக்குள் இஸ்ரேல் ஜீப் நுழைந்ததால் நாங்கள் தாக்கினோம் என்று சிரியா விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பென்னி கேண்ட்ஸ், எங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரியா அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.



காந்தியின் இரத்தம் 7 ஆயிரம் பவுண்டுக்கே ஏலம் - தேய்ந்து போன காலணி, ஜெபமாலை, உயிலை விட மதிப்புக் குறைவு!
[Wednesday, 2013-05-22 08:01:12]

மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில், காந்தி தனது கைப்பட எழுதிய உயில் 40 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 55 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த உயில் ஏலம் போனது. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி 10 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 7 ஆயிரம் பவுண்டுகளுக்கே ஏலம் போனது. காந்தியின் கைப்பட நூற்ற நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட சால்வை, 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.


TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Ramans2011
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com