Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
M.S.Office 2013 வெளியாகிறது...
[Monday, 2012-08-06 21:49:26]
News Service

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன.

  

இதனை http://www.microsoft.com/office/preview/en என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள உங்களிடம் விண்டோஸ் லைவ் ஐ.டி. ஒன்று தேவை. இல்லாதவர்கள் உடனே ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பில், எந்த சாதனம் வழி நுழைந்தாலும், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ், நிலைகள் கிடைக்கும். எனவே எங்கிருந்து இதனை இயக்கினாலும், உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் உருவாக்கிய நிலைகள் கிடைக்கும்.

ஆபீஸ் 2013 தொகுப்பு வர்த்தக ரீதியாக என்று விற்பனைக்கு வரும் என இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரக் கூடும் என உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், ஹோம் அண்ட் ஸ்டூடண்ட் ஆபீஸ் 2013 (Office Home and Student 2013) இலவசமாக இணைந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இதில் வேர்ட், எக்ஸெல், ஒன் நோட், பவர்பாய்ண்ட் ஆகியவை இருக்கும். மைக்ரோசாப்ட் தர இருக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசிக்களில், ஆபீஸ் 2013 பதிப்பு இலவசமாகவே பதிந்து தரப்பட இருப்பதால், இந்த முடிவினையும் மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது இயற்கையே.

ஆபீஸ் 2013 தொகுப்பு இயக்க தேவையான ஹார்ட்வேர் கூறுகள் பின்வருமாறு. ஒருகிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் அல்லது SSE2 இன்ஸ்ட்ரக்ஷன் செட்டுடன் கூடிய x86/x64 ப்ராசசர், 32 பிட் இயக்கமாக இருப்பின் 1 ஜிபி ராம் நினைவகம், 64 பிட் இயக்கமாக இருந்தால் 2 ஜிபி ராம், விண்டோஸ் 7 அல்லது பின்னர் வந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது விண்டோஸ் சர்வர் 2008/2012 ஆகியவை தேவைப்படும்.

எனவே விஸ்டா அல்லது எக்ஸ்பியில் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், புதிய ஆபீஸ் 2013 தொகுப்பு வேண்டும் என்றால், உயர்நிலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஆபீஸ் 2003, 2007 அல்லது ஆபீஸ் 2010 இயக்கிக் கொண்டிருப்பவர்கள், அதனை சிஸ்டத்திலிருந்து நீக்க வேண்டியதில்லை. ஆபீஸ் 2013 பதிந்த பின்னர், இரண்டையும் தனித்தனியே இயக்கி வேலைகளை மேற்கொள்ளலாம்.

வழக்கமான எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீனத் தொகுப்பாகத்தான், ஆபீஸ் 2013 வெளியிடப்படுகிறது. ஆபீஸ் 365 தொகுப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனால், ஆபீஸ் 365 பிளாட் பார்மில் இயங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர்களுக்கு, ஆபீஸ் 2013 கூடுதல் வசதியாகத் தரப்படுகிறது.

ஆபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்படும். எனவே எங்கிருந்தும், எந்த சாதனம் மூலமாகவும், உங்கள் பைல்களை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முற்றிலுமான ஒரு மாறுதலுக்குக் கொண்டு வந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் ஆபீஸ் தொகுப்பிலும் அதே வேகத்துடன் மாற்றங்களையும் கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது. எக்ஸெல், வேர்ட் மற்றும் பவர்பாய்ண்ட் ஆகிய அனைத்தும் முழுமையான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. தொட்டு இயக்கு:

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொட்டு இயக்கு தொழில் நுட்பத்திற்கேற்ப ஆபீஸ் 2013 தொகுப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் டாகுமெண்ட்டைக் கிள்ளி விரிக்கலாம். படங்களை விரல்களால் ஸூம் செய்திடலாம். ஸ்டைலஸ் வைத்து முதலில் கிறுக்கலாம்; பின்னர் அதனையே டெக்ஸ்ட்டாக மாற்றி பதிந்து வைக்கலாம்.

ஸ்டைலஸ் பேனாவினை, பிரசன் டேஷன் காட்டுகையில் லேசர் பாய்ண்ட்டர் போலப் பயன்படுத்தலாம். வண்ணம் தீட்டலாம். நம் தவறுகளைத் திருத்தலாம். இவற்றுடன் மவுஸ் மற்றும் கீ போர்டும் செயல்படும்.

வேர்ட் புரோகிராமில், புதிய மெனு மற்றும் ரிப்பன்கள் கொண்டு வந்த பின்னர், எந்தவிதமான பெரிய மாற்றமும் ஏற்படுத்தப்படாமல் இருந்தன. இப்போது மிக அதிகமான இடம், தேவையற்ற எதுவும் இல்லாமல் சுத்தமான கிளீன் ஸ்லேட் போன்ற தளம் தரப்படுகிறது.

பயனாளர்கள் விருப்பப்பட்டால், ரிப்பன் இன்டர்பேஸையும் மறைத்து வைத்து இயக்கலாம். ஆபீஸ் இப்போது அனைத்து வகை சாதனங்களிலும் இயங்குவதால், டாகுமெண்ட்கள் திரையின் அளவிற்கேற்ப சுருங்கி விரிந்து படிக்க எளிதாக அமைக்கப்படுகின்றன.

ஆபீஸ் 2013 தொகுப்பின் மிகப் பெரிய வசதியாக, அதில் தரப்பட்டிருக்கும் பி.டி.எப். பைல் படிக்கும், உருவாக்கும் வசதியினைக் கூறலாம். பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்ட் தொகுப்பிலேயே எடிட் செய்திடலாம். பி.டி.எப். பைலை இதிலேயே திறக்கலாம். அதன் ஹெடர், வரிசைப் பத்தி, புட்நோட் என அனைத்தையும் காணலாம். அதன் கிராபிக்ஸ் வரை எடிட் செய்திடலாம். டேபிள்களைக் கூட, நீங்களே அவற்றை உருவாக்கியது போல எடிட் செய்திடலாம்.

ஆபீஸ் 2013 தொகுப்பில், நெட்வொர்க் இணைப்பினை எளிதாகப் பெறலாம். விண்டோஸ் டேப்ளட், பி.சி., அல்லது விண்டோஸ் போன் என எந்த சாதனத்தில் இதனை இயக்கினாலும், ஸ்கை ட்ரைவ் மூலமாக, ஆபீஸ் பைல்களைப் பெற்று இயக்கலாம். மாறா நிலையில் இந்த ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவில் உங்கள் பகுதிக்குச் செல்கின்றன.

டாகுமெண்ட்களைப் பார்க்க புதியதாக Reader என்னும் வியூ தரப்படுகிறது. இந்த வியூவில் டாகுமெண்ட்களைப் பார்க்கையில், ஒவ்வொரு பத்தியின் முன்னரும் ஒரு சிறிய முக்கோணம் காணப்படுகிறது. இந்த முக்கோணம் சார்ந்த பத்தியினைப் படித்த பின்னர், பாரா சுருக்கப்பட்டு தொடர்ச்சி காட்டப்படுகிறது. அடுத்த பக்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

டாகுமெண்ட் ஒன்றைப் படித்து செயல்படுத்துகையில், எதுவரை நீங்கள் எடிட் செய்தீர்களோ, அந்த இடம் புக் மார்க் போல குறித்து வைக்கப்படுகிறது. அடுத்த முறை அந்த டாகுமெண்ட்டினை வேறு எந்த சாதனத்தில் திறந்தாலும், இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்தில் திறக்கப்பட்டு காட்டப்படுகிறது.

டாகுமெண்ட்டில், இணையதளத்திலிருந்து பெறுபவற்றை அப்படியே இணைக்கலாம். அதற்கான லிங்க் அமைக்கலாம். அவற்றை டாகுமெண்ட்டை மூடாமலேயே பார்க்கலாம். பதிக்கப்பட்ட வீடியோ அளவில் சிறியதாக இருந்தால், அதனை விரித்துப் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆபீஸ் 2013 தொகுப்புடன் ஸ்கைப் வசதியும் கிடைக்கிறது. ஆபீஸ் தொகுப்பின் சந்தாதாரர் ஆனவுடன், ஒவ் வொரு மாதமும் 60 நிமிடங்கள் ஸ்கைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் தொகுப்பில் டிஜிட்டல் நோட் டேக்கிங் வசதி கிடைக்கிறது. தொடுதிரை, ஸ்டைலஸ் பென், கீ போர்ட் என எதனைப் பயன்படுத்தியும் குறிப்புகளை நினைத்த மாத்திரத்தில் அமைக்கலாம்.

பவர் பாய்ண்ட் தொகுப்பிலும் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய வியூ கொடுக்கப்பட்டு, அதில் அடுத்து நீங்கள் பெறும் ஸ்லைடுகள், பிரசன்டேஷன் நேரம், ஸ்பீக்கர் நோட்ஸ் ஆகியவற்றைத் தனியே பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பல புதிய அம்சங்களை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மைக்ரோசாப்ட் இந்த வகைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளோடு போட்டியில் இறங்கியுள்ளது எனலாம். ஆப்பிள் தங்கள் புரோகிராம்கள் அனைத்து வகைகளிலும் தனித்தன்மை பெற்றவை என்றும், அதே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது எளிது என்றும் கூறி வருகிறது.

'நான் மட்டும் என்ன சளைத்தவனா! பார் என் புரோகிராமினை' என விண்டோஸ் 8 ஓ.எஸ். மற்றும் ஆபீஸ் 2013 தொகுப்பினை மைக்ரோசாப்ட் களம் இறக்குகிறது. இன்னும் என்ன புதிய வசதிகள் கிடைக்கின்றன என்று போகப் போகத் தெரியவரும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அதிவேகம் மற்றும் அதிக தூரத்திற்கு சமிக்ஞையை கொண்டு செல்லும் WiFi Router!
[Monday, 2013-05-20 15:29:49]

வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றி கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கனவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும்? இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோ மீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆமாமுங்கோ - வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.



8வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது யூ டியூப் - புதிய மென்பொருளும் அறிமுகம்!
[Monday, 2013-05-20 15:17:18]

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.



போக்குவரத்து பொலிசார் வண்டியின் மீட்டரைப் பார்க்காமலே வேகத்தை கணிப்பது எப்படி என்று தெரியுமா?
[Sunday, 2013-05-19 21:32:57]

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.



குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்!Top News
[Sunday, 2013-05-19 12:31:10]

முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!
[Sunday, 2013-05-19 11:46:29]

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.



கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.



Lenovo அறிமுகப்படுத்தும் IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்!Top News
[Saturday, 2013-05-18 13:43:48]

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணினியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.



விதைகளின் ராஜாவான பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Saturday, 2013-05-18 13:09:52]

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Saturday, 2013-05-18 12:51:52]

"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.



புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!



உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
[Friday, 2013-05-17 17:22:45]

பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.



கரு முட்டை மூலம் உயிர்ப் பிரதியாக்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 2013-05-17 14:24:50]

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



துல்லியமாக இலக்கு வைக்க பயன்படும் ஸ்மார்ட் ரைபிள்ஸ்!Top News
[Friday, 2013-05-17 13:19:08]

ஸ்மார்ட் ரைஃபில்ஸ் - இந்த அதி நவீன துப்பாக்கி மூலம் வைக்கப்படும் டார்கெட்டை துல்லியமாக நீங்கள் மட்டுமல்ல உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவரும் கணிக்க முடியும், இதன் வீடியோ டார்கெட் லென்ஸ் மூலம் அதன் மூலம் அந்த டார்கெட்டை கரெக்டாய் சுட முடியும் மற்றும் அதை உடனே வீடியோவாக வெப் தளத்திர்க்கும் சேர்க்கவும் முடியும். இப்படி உங்கள் துப்பாக்கியின் டார்க்கெட்டை இன்னொருவரும் பார்த்து அஸிஸ்ட் செய்வதனால் தவறு செய்ய வாய்ப்பில்லை.



LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்! Top News
[Thursday, 2013-05-16 18:17:38]

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



நடிகர் தனுஷுக்கு 3 படத்தில் இருந்த நோய் உங்களுக்கு இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது? இதை படியுங்கள்...
[Thursday, 2013-05-16 18:12:08]

"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார். இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும். நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும். இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!



Gmail தரும் புத்தம் புதிய வசதி - மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!Top News
[Thursday, 2013-05-16 15:27:51]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.



மலேரியா நோய்க்காவி நுளம்புகளே மனித மணத்தால் அதிகம் கவரப்படுகின்றன - ஆய்வில் தகவல்!
[Thursday, 2013-05-16 15:16:31]

மலேரியா நோய்க் கிருமிகளை காவி வருகின்ற நுளம்புகள் (கொசுக்கள்) மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலேரியா நோய்க் கிருமியைக் காவி வரும் நுளம்பு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் நுளம்பைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த கிருமிகளை காவி வருகின்ற நுளம்பினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறு நோய்க்கிருமிகளை காவிவரும் அந்த நுளம்புகள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.



பெண்களின் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்!
[Wednesday, 2013-05-15 22:22:07]

பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. 'பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்' என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.


Canada Kanthasamy Kovil
Ramans2011
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
TDE_Computers2011
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com