Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் - 30வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று ஆரம்பம்!
[Friday, 2012-07-27 13:49:57]
News Service

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விளையா ட்டுத் திருவிழாவான 30-வது ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. உலக விளையாட்டு ரசிகர்களால் மிகவு ம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் இன்று பிரமாண்டமாக துவங்க இருக்கிறது.

  

இந்த துவக்க நிகழ்ச்சி இங்கிலாந்து நா ட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் சிறப்பாக நடக்க இருக்கிற து. இதற்காக பிரமாண்டமான ஏற்பா டுகளை நிர்வாகம் செய்து உள்ளது.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போது இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு ம், ஒலிம்பிக் போட்டி துவக்கத்தை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி அணி வகுப்பும் நடைபெற உள்ளது.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை காண உலக நாடுகளின் பார்வை முழுவதும் லண்டன் நோக்கியே உள்ளது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த துவக்க விழா மூலம் இங்கிலாந்து நாட்டின் கலைநயமிக்க தொழில் நுணுக்கத்தை கண்டு ரசிக்க லாம்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் பொ றுப்பு பிரபல ஹாலிவுட் சினிமா டைர க்டரான டேனி பாய்ல் மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதில் லண்டன் மாநகரம் மற்றும் இங் கிலாந்தின் கலாசாரம் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தவிர, ஒவ்வொரு துவக்க விழா வின் போதும் சர்வதேச ஒலிம்பிக் சங்க த்தின் சார்பிலான கொடி மாற்றம் போன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான (2012)ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோ லாகலமாக துவங்குகிறது. அடுத்த மா தம் 12-ம் தேதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடக்கிறது.

இதில் 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரி வுகளில் போட்டி நடக்கிறது.

ஒலிம்பிக் ஸ்டேடியம் உள்பட 24 மை தானங்களில் போட்டி நடக்கிறது.

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார் பில் 13 விளையாட்டுகளில் இருந்து 81 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார் கள்.

இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மிண்ட ன், குத்துச் சண்டை, மல்யுத்தம், வில்வி த்தை ஆகிய விளையாட்டுகளில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங் கம் வென்று வரலாறு படைத்தார். அதோடு குத்துச் சண்டையில் விஜேந்த ர் சிங்கும், மல்யுத்தத்தில் சுஷில் குமா ரும் வெண்கலம் வென்றனர். மொத்த ம் 3 பதக்கம் கிடைத்தது.

இந்த ஒலிம்பிக்கில் அதை விட கூடுத லாக பதக்கம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது. அதிக பதக் கங்களை வெல்வதில் அமெரிக்கா, ரஷ்யா,சீனா இடையே போட்டி நிலவும்.

இன்றைய துவக்க விழா நிகழ்ச்சி மிகவு ம் பிரமாண்டமாக இருக்கும் என்று எதி ர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இருக்கும்.

ஸ்லம் டாக் மில்லியனர் புகழ் டேனி பாயல் மேற்பார்வையில் துவக்க விழா நடக்கிறது. 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். பிரபல இசைய மைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களும் துவக்க விழாவி ல் இடம் பெறுகின்றன. கால்நடைகளான ஆடு, கோழி மற்றும் குதிரைகள் ஆகியவற்றை வைத்தும் பிரமிப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி லண்ட னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒலிம்பிக், கிராமங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

லண்டனில் 3-வது முறையாக ஒலிம்பி க் போட்டிகள் நடக்க இருப்பது குறிப் பிடத்தக்கது. இதற்கு முன்பு 1908,1948 -ம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போ ட்டி நடந்தது. ஒலிம்பிக் போட்டி 3-வது முறையக நடைபெறும் முதல் நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்று உள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

குண்டுப் பயணிகளுக்காக பெரிய இருக்கைகளை அறிமுகம் செய்கிறது சமோ எயர் நிறுவனம்!
[Thursday, 2013-06-20 07:39:58]

நியூசிலாந்துக்கு அருகில் இருக்கும் சமோ என்ற சிறிய தீவு நாட்டில் 130 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் பயணிக்கும் போது அவர்களின் வசதிக்காக பெரிய இருக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று பேர் அமரக்கூடிய ஒரு இருக்கை எப்படி இருக்குமோ அவ்வகையில் இந்த விமான இருக்கைகள் இருக்கும் என சமோ ஏர் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது. உடல் பருமன் காரணமாக பெரிய இருக்கைகளை பதிவு செய்துள்ளவர்கள் விமானத்தில் ஏறவும் அதிலிருந்து இறங்கவும் உதவி செய்வதற்காக தரையிலிருந்து ஒரு சாய்வுதளப் பாதை அமைக்கப்படும் எனவும் அந்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.



சோமாலியாவில் ஐ.நா அலுவலகம் மீது தற்கொலைப்படையினர் தாக்குதல் - 20 பேர் பலி!
[Thursday, 2013-06-20 07:29:38]

சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் ஒரு வாகனத்தில் நேற்று சென்றனர். அலுவலகத்தின் வாயிலை குண்டுகள் வைத்து தகர்த்து உள்ளே நுழைந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.நா. அலுவலக அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பயங்கரவாதிகளும் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் சம்பவ இடத்திலேயே அவர்களும் உயிரிழந்தனர்.



11 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிக்கு சீனாவில் மரணதண்டனை!
[Thursday, 2013-06-20 07:25:40]

சீனாவில் 11சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹெனான் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் லீ ஜிங்காங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஹெனான் மாகாண உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் 11 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் லீ கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.



சிறப்புப் படைப்பிரிவுகளில் பெண்களை சேர்க்க அமெரிக்கா அனுமதி!
[Thursday, 2013-06-20 07:20:24]

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு முதல் கடற்படை கமாண்டோ உள்ளிட்ட சிறப்புப் படைப் பிரிவுகளில் பெண்கள் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பெண்டகன் தெரிவித்தது.இதன் மூலம் போர்க்களத்தின் முன் நின்று பணிபுரியக் கூடிய வாய்ப்புகளை பெண்கள் விரைவில் பெற உள்ளனர்.இது குறித்து பாதுகாப்பு துறை இயக்குநர் ஜூலியட் பெய்லர் கூறுகையில், தகுதியுடன் கூடிய திறமையானவர்களை பணியில் அமர்த்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே பாதுகாப்புத் துறையின் நோக்கம். அதற்கு பாலினம் பேதமில்லை' என்று தெரிவித்தார்.



அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுக்களை ரத்து செய்தார் ஆப்கான் அதிபர் - தலிபான்களுடன் பேச்சு நடத்த முயன்றதால் ஆத்திரம்!
[Thursday, 2013-06-20 07:15:45]

அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ரத்து செய்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் 2014-ஆம் ஆண்டு முழுமையாக வெளியேறுகின்றன. இருப்பினும் அமெரிக்கப் படைகள் மேலும் சில காலம் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்க வகை செய்யும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருந்தன.



கடந்த ஆண்டில் 80 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்வு - ஐ.நா தகவல்!
[Wednesday, 2013-06-19 18:04:22]

தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாகத் தப்பி ஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.



22 அணுகுண்டுகளை நெதர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளது அமெரிக்கா - முன்னாள் பிரதமர் பரபரப்புத் தகவல்!
[Wednesday, 2013-06-19 17:43:32]

அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார். நேஷனல் ஜியாக்ரபி என்ற சேனலின் செய்தி படத்திற்காக பேட்டியளித்த லுபர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். 1982 முதல் 94 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் பர்பண்ட் நகரில் உள்ள வோல்கெல் விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 2013 வரை அவை இங்கேயே இருக்கும் என நான் நினைத்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.



சந்திரனில் தூங்கிக் கொண்டிருக்கும் 280 எரிமலைகள் - அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Wednesday, 2013-06-19 17:38:23]

அவுஸ்ரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது,சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற் கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.



ரஷ்ய இராணுவத் தளபாடக் கிடங்கில் பாரிய வெடிவிபத்து!
[Wednesday, 2013-06-19 17:35:03]

ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள சமரா பகுதியில் ராணுவ பயிற்சி முகாம்கள் உள்ளன. அங்கு ராணுவத் தளவாடங்களுக்கான கிடங்கு ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று மாலை இந்தக் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ கிடங்கு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ராணுவ தளவாடங்கள் இருந்த கிடங்கில் தீ பிடித்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயினால் வெடித்து சிதறின.முதலில் ஐந்து வெடி சப்தங்கள் கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தீ மளமளவென பரவ தொடங்கியதாகவும் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ பிடித்து பல மணி நேரங்கள் கழிந்தும் வெடி சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் பலி!
[Wednesday, 2013-06-19 17:29:49]

ஆப்கானிஸ்தானில் பஹ்ராம் விமான தளம் மீது தலிபான்கள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏவுகணை அல்லது மோட்டார் தாக்குதலிலே இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதல் காபூல் நகரின் வடபகுதியிலிருந்து 30 மைல் தூரத்தில் நடந்துள்ளது.



அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றம்.
[Wednesday, 2013-06-19 12:54:13]

அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு இந்த சட்ட மசோதாவுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில், எளிதாக மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த கட்டமாக செனட் குழுவுக்கு இந்த மசோதா செல்லும். செனட் குழுவில் இந்த சட்ட மசோதாவுக்கு ஏராளமான எதிர்ப்புகள் உள்ள நிலையில், அங்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு அதில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட பிறகே சட்டமாக்கப்படும்.



ஃபுகுஷிமா அணு உலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் STRONTIUM கதிர்வீச்சு!
[Wednesday, 2013-06-19 12:52:00]

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுவுலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் ஆபத்தான கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டிராண்டியம் (STRONTIUM), டிரைட்டியம் (TRITIUM) எனப்படும் கதிர்வீச்சு ரசாயனங்கள் கலந்திருப்பதாக டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. அணுவுலைகளிலும், அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் யூரேனியம் (URANIUM) மற்றும் புளுட்டோனியம் (PLUTONIUM) ஒன்றோடு ஒன்று கலக்கும் போது ஸ்டிராண்டியம் (STRONTIUM) வெளியேறுகிறது.



4500 படையினரை வீட்டுக்கு அனுப்புகிறது பிரிட்டன் - செலவைக் குறைக்கும் நடவடிக்கை!
[Wednesday, 2013-06-19 07:43:40]

செலவுக் குறைப்பு நடவடிக்கை காரணமாக பிரிட்டனில் 4,500 படை வீரர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள தகவல்:தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்க அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படும் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ராணுவத்தில் 20 சதவீதம் அளவுக்கு ஆள்குறைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.



சிரியப் பிரச்சினைக்கு ஜெனிவாவில் பேச்சு - அமெரிக்கா, ரஷ்யா விருப்பம்!
[Wednesday, 2013-06-19 07:36:44]

சிரியாவில் நிகழ்ந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசும், கிளர்ச்சியாளர்களும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவும், ரஷியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன. சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதின் ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. எனினும், ரஷியா இதை விரும்பவில்லை. அரபு நாடுகளில் தனது முக்கியமான தோழமை நாடான சிரியாவின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவே ரஷியா விரும்புகிறது.



ஈரானுடன் பேசத் தயார் - ஒபாமா அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 07:32:45]

ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஈரான் உள்ளானது. இப்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹசன் ரெஹானி புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார்.அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தயார் என்றும் ரெஹானி கூறியுள்ளார்.



ஆப்கானிஸ்தான் படைகளிடம் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்தது நேட்டோ படை!
[Wednesday, 2013-06-19 07:25:29]

ஆப்கானிஸ்தான் படைகளிடம், நேட்டோ படைகள், பாதுகாப்பு பொறுப்பை நேற்று முறைப்படி ஒப்படைத்தன. அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்தார். அவரை ஒப்படைக்க, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள் மறுத்ததால், 2001ல், அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த போரினால், தலிபான்கள் ஆட்சியை இழந்து, பாகிஸ்தான் எல்லையில் ஓடி ஒளிந்தனர்.அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தற்போது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த படைகளுக்கு எதிராக, தலிபான்கள் அடிக்கடி, தற்கொலை படை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.



அமெரிக்காவின் இரகசியங்கள் தொடர்ந்து வெளிவரும்! - சிஐஏ முன்னாள் பணியாளர் எச்சரிக்கை.
[Tuesday, 2013-06-18 19:18:52]

இணையதள தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்தது குறித்த விபரங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், இது போன்ற உண்மைகள் வெளிவருவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ஹாங்காங்கில் தஞ்சம் அடைந்துள்ள ஸ்னோடன் நேற்று கார்டியன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை ஜெயிலில் அடைப்பதன் மூலமோ அல்லது கொலை செய்வதன் மூலமோ அமெரிக்க அரசு இதனை மூடி மறைக்க முடியாது என்பதை கூறிக்கொள்கிறேன். உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.



மரடோனாவின் உருவம், கையெழுத்தை பயன்படுத்திய சீன நிறுவனத்துக்கு 3 மில்லியன் யுவான் அபராதம்!
[Tuesday, 2013-06-18 19:15:27]

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா. கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவரின் உருவம் மற்றும் கையெழுத்தை சீனாவைச் சேர்ந்த தி9 என்ற நிறுவனம் இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் பயன்படுத்தியுள்ளது. இதற்கு மரடோனாவிடம் இருந்து அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை. இதைபற்றி அறிந்த மரடோனா தனது படத்தையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தி விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும், இணையத்தில் வெளியிட்ட சினா நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார்.



தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்த முதல் டாக்டர்!
[Tuesday, 2013-06-18 19:10:44]

பனிப்பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்.



பறக்கும் மோட்டார் சைக்கிள் - இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
[Tuesday, 2013-06-18 19:05:46]

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 புரோபெல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன. 95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.


Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
Ramans2011
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com